நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!
பாட்டு 100
நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!
1. புகழ்வீர்! யெகோவாவையே!
மகத்துவத்தைச் சொல்லுவீர்!
மகிழ்வீர்! துதிபாடுவீர்! வானம்,
பூமியும் அவருக்கே. காணும்,
காணாதவை படைத்தார்.
அன்பு வல்லமை காண்பித்தார்.
அவர் ஞானம், நீதி விளங்கும்;
வல்லமை, வைராக்கியம் சேரும்!
புகழ்வீர்! யெகோவாவையே!
மகத்துவத்தைச் சொல்லுவீர்!
2. புகழ்வீர்! யெகோவாவையே!
அவர் நற்குணம் சொல்லுவீர்!
துதிப்பீர்! தயவைக் காண்பீர்!
எல்லாரும் அவர் அன்பைக் காண்பீர்.
போரில் வல்லவரே என்றாலும்,
தாழ்ந்தோர்க்கு தயவுள்ளவர்.
தம்மைத் தேடுவோரைக் காப்பாரே.
அவர் தயவைக் காண்பரே.
புகழ்வீர்! யெகோவாவையே!
அவர் நற்குணம் சொல்லுவீர்!
3. புகழ்வீர்! யெகோவாவையே!
அவர் ராஜ்யத்தைச் சொல்லுவீர்!
போற்றுவீர்! யெகோவாவையே!
பூமியெல்லாம் புகழ் வீசுவீர்!
கிறிஸ்து ஆளும் காலம் வந்தது!
நம் துதியெகோவாவுக்கு.
ஆகவெற்றிக்கீதம் பாடலாம்,
தேவன் பக்கமாய் நிற்கலாம்.
புகழ்வீர்! யெகோவாவையே!
அவர் ராஜ்யத்தைச் சொல்லுவீர்!