நம் பிதாவின் பெயர்
பாட்டு 52
நம் பிதாவின் பெயர்
1. யெகோவா பிதாவே,
உம்பேர் பரிசுத்தப்படட்டும்.
உம்பரிசுத்த நோக்கமும்
நிறைவேற்றப்படட்டும்.
உம் சொந்த வெற்றிகள் மூலம்
மெய்ப்பித்துக் காட்டிடுவீர்.
எல்லாரும் உம்மகத்துவம்
அறிந்து கொள்ளச் செய்வீர்.
(பல்லவி)
2. பரிசுத்தப் படுத்துவோம்,
ஈடற்ற உம்பெயரை.
தைரியத்துடன் பேசுவோமே,
உம்நோக்கத்தை, புகழை.
விசுவாசம், தைரியத்தோடு
கனப்படுத்துவோமே.
உம் பெயருக்காக வாழ்வோம்.
பரிசுத்தப் பிதாவே.
(பல்லவி)
3. எங்கள் யெகோவா தேவனே,
உன்னதமானவரே.
எங்களுக்கு மிகமுக்கியம்,
உம்பேரைப் புகழ்வதே.
உம்பெயரை ஏற்றோராக
விளங்கப்பண்ணுவோமே.
நீர் நோக்கமுள்ள கடவுள்;
என்றென்றும் துதிப்போமே.
(பல்லவி)
கர்த்தாவே, எம்சிருஷ்டிகரே,
அனைத்தையும் படைத்தீர்.
நோக்கமுள்ளகடவுளே,
எண்ணங்கள் மெய்ப்பிக்கிறீர்.
சர்வவல்லயெகோவாவே,
உம்குமாரனைத் தந்தீர்.
உம்ராஜ்யம் மூலம் பூமியில்,
சித்தம் நிறைவேற்றுவீர்.