நற்குணத்தின் கனி
பாட்டு 95
நற்குணத்தின் கனி
1. யெகோவாவே நித்தியத்திற்கு ராஜா.
நற்குணத்தின் சாயலுமான ராஜா.
மனிதரை மன்னிக்க விரும்பினார்.
தம் குமாரனை பூமிக்கனுப்பினார்.
2. தேவ நற்குணம் விடுவிக்கிறது,
மகாபாபிலோன் கட்டவிழ்க்கிறது.
சரி, தவறை விளக்குகிறதே.
அதிக வெளிச்சம் கொடுக்கிறதே.
3. நற்குணக் கனியைப் பொருத்திடுவோம்;
அதை நாமெல்லாரும் வளர்த்திடுவோம்.
நாமும் பெருந்தன்மையுள்ளோராவோமே.
யெகோவாவை, கிறிஸ்துவை நம்புவோமே.
4. நற்குணத்தில் வளர என்னசெய்வோம்?
படிப்பும் ஊழியமும், ஜெபமும் செய்வோம்.
நற்குணத்தில் பூரணப்படுவோமே.
சபைக் கூட்டங்களை விடமாட்டோமே.