Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் யாருக்குச் சொந்தம்?

நாம் யாருக்குச் சொந்தம்?

பாட்டு 207

நாம் யாருக்குச் சொந்தம்?

(1 கொரிந்தியர் 6:20)

1. நீயாருக்குச் சொந்தம்?

யாருடன் உன்பந்தம்?

நீயார் முன்னால் பணிகிறாய்,

அவர்க்கடிமையாகிறாய்.

இருவர் தொழாதே.

உழைப்பதரிதே.

ஈரெஜமானரை நேசிப்பது

முழுமையாகாது.

2. நீ யாரைச் சேர்ந்தவன்?

யாரைத்தொழுபவன்?

மெய்யர் பொய்யர் இன்றிருக்க

நீயே தீர்மானிப்பாயாக.

யாருக்கு உன்பக்தி?

இராயனுக்கா பக்தி?

மெய்த்தேவனுக்குக் கீழ்ப்படியாயோ?

நீ ஒப்புக்கொடாயோ?

3. நான்யாருக்குச் சொந்தம்?

யெகோவாவின் சொந்தம்.

மெய்த்தேவனையே சேவிப்பேன்.

நேர்ந்தபடி நான் நடப்பேன்.

கிரயத்துக்குக்கொண்டார்,

அவர் என்னை மீட்டார்.

அவர் சேவையைவிடவேமாட்டேன்

மனிதர்நம்பிடேன்.

4. யெகோவாவின் சொந்தம்!

நெருங்கிய சொந்தம்.

முன்கூறின ஐக்கியம் உண்டு,

அவர் தொழுவத்திலுண்டு.

ஆசாரியன் தலைமேல்

தைலவாசனைபோல்

அதுபோல் ஒன்றாககூடுவது

இன்பம் மிகுந்தது.