பூமியின் புதிய அரசரை அங்கீகரித்தல்
பாட்டு 168
பூமியின் புதிய அரசரை அங்கீகரித்தல்
1. பூமி முழுவதிலும் பார்,
காட்சியில் கவர்ச்சி பார்
யெகோவாவின் போர்வீரர்கள்
சேர்ந்து முன்செல்கிறார்கள்.
தலைச்சீராக்கள் ஜொலிக்க,
அறியாமை, குற்றம் நீங்க,
“கிறிஸ்துஆள்கிறார், ஏற்பீரே!”
என்று முழங்கினாரே.
(பல்லவி)
2. அரசர் இயேசு முன்செல்ல,
அவர் ஜனம் பின்செல்ல;
அவர் சொல் கேட்டு நடப்பர்.
வருத்தமற்றிருப்பர்.
பைபிள் பட்டயம் பிடித்து,
பாதம் நற்செய்தி தொடுத்து,
எஜமான் பாதையில் செல்வர்;
சாகும்மட்டும் தொடர்வர்.
(பல்லவி)
3. இதோ காலம் கிறிஸ்துவுக்கு,
ஆளுகை செய்வதற்கு.
பகைவரை ஒடுக்குவார்,
இவரே வெற்றிகொள்வார்.
தேவபுயம் காட்டுகிறார்,
எச்சரிப்பு ஒலிக்கிறார்.
தீங்கு வேண்டாம் அரசரே.
கிறிஸ்து ஆட்சி ஏற்பீரே.
(பல்லவி)
மைந்தனை முத்தம் செய்வோரே.
அழிவில் தப்பிப்பாரே.
அவரை நம்பினவரே
சந்தோஷிப்பரே!