Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகிழ்ச்சியான ஊழியம்

மகிழ்ச்சியான ஊழியம்

பாட்டு 130

மகிழ்ச்சியான ஊழியம்

(சங்கீதம் 32:11)

1. தேவராஜனைக்களிப்பாய் சேவிப்போம்.

தேவசேவைக்கே தாலந்தைக் கொடுப்போம்.

ஊழியம் சிறிதாயினும் உண்மை காப்போம்.

அன்புடன் உள்ளான பக்தி காண்பிப்போம்.

2. எல்லாரும் செய்யலாம் யெகோவா சேவை.

அறுப்புகாலமிது ஊழியர் தேவை.

தேவன் அளித்தாரே திவ்விய சிலாக்கியத்தை.

சேவைமூலம் ஈந்தார் ஆசீர்வாதத்தை.

3. பொய்யர் சத்தியத்தை மறுதலித்தாரே.

அறிவோம் “தேவன் பொய் சொல்லமாட்டாரே.”

அவர்சொல்லை ஊக்கமாய்ப் பிரசங்கிப்போம்.

அதில் முழுநம்பிக்கை கொண்டிருப்போம்.

4. இனிய சேவையில் நாம் பங்குகொள்வோம்.

எல்லாருக்கும் சாட்சி பகர்ந்திடுவோம்.

தேவன் நமக்கு தயை காண்பிக்கிறார்,

தம்மையே துதிக்கும்படி செய்கிறார்.