Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் வீட்டின்பேரில் பற்றார்வம்

யெகோவாவின் வீட்டின்பேரில் பற்றார்வம்

பாட்டு 31

யெகோவாவின் வீட்டின்பேரில் பற்றார்வம்

(யோவான் 2:17)

1. யெகோவாவின் வீட்டின்பேரில்

இயேசு பற்றார்வம் கொண்டார்.

தம்முள் பற்றியெறிந்தது,

தவறுகள் கண்டித்தார்.

இரட்சிப்பை ராஜ்ய

சத்தியத்தை வெளிப்படுத்த வந்தார்.

பிதாவின் நற்பெயர் ஓங்கபட்சிக்கும்

ஆர்வம் கொண்டார்.

2. அப்போஸ்தலர்கள், சீஷர்கள்

அப்பற்றார்வம் கொண்டார்கள்.

பரிசுத்த ஆவியினால்

வளர்ந்தது சபைகள்!

பிரசங்கிக்கத் தயங்காமல்

வீடு வீடாய்ச் சென்றார்கள்.

மனந்திரும்பச் சொன்னார்கள்,

மீட்பை அறிவித்தார்கள்.

3. நீதிக்குப் பற்றார்வம் கொண்ட

மக்களும் இன்று உண்டு.

இந்தப் பொல்லாத உலகில்

அவ்வார்வம் தணியாது.

யெகோவாவால் தூண்டப்பட்டு

ஊழியம் செய்கிறார்களே.

பிரசங்கிப்பதில் ஆர்வமாய்

முன்னேறுகிறார்களே.