Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு ஆனந்தத் துதி

யெகோவாவுக்கு ஆனந்தத் துதி

பாட்டு 75

யெகோவாவுக்கு ஆனந்தத் துதி

(சங்கீதம் 63:5)

1. ஆனந்த உதடுகளால்

களிப்போடு துதிப்போமே.

யெகோவா தேவையனைத்தும்

முழுமையாய்க் கொடுத்தாரே.

ஆனந்த இதயத்தோடு

தேவனைப் பாடிடுவோமே.

ஆத்துமா அவரில் களிகூர

நன்றி என்றும் அவருக்கே.

2. அன்பாய்க் குமாரனை

தந்து மீட்பின்வழி திறந்தாரே.

கரம் உயர்த்தி அவர்

பேர்மகிமைக்கு ஜெபிப்போமே.

அவருடன் நம் உறவை

பொக்கிஷமாய் எண்ணுவோமே.

அவரில் நம் அன்பு அழியாது;

நம் உள்ளத்தால் நேசிப்போமே.

3. அவர் மாட்சிமை காண்கிறோம்,

அவர் வழிநடக்கிறோம்!

முழு ஆத்துமாவோடு நாம்

அவரை வணங்குகிறோம்.

அவர் செட்டையின் நிழலில்

நாம் பாதுகாப்பு காண்கிறோம்!

இதயம் போற்றிப்பாடுகிறது;

நாம் அவரை நேசிக்கிறோம்.