யெகோவா, “சகலவிதமான ஆறுதலின் தேவன்”
பாட்டு 58
யெகோவா, “சகலவிதமான ஆறுதலின் தேவன்”
1. தேவன் பேராறுதல் அளிக்க,
அவர்பாசம் பெறுவோம்.
பிறரைக் கிறிஸ்துவின் வழியில்
வசனத்தால் தேற்றுவோம்.
2. இன்றுமிகும் துன்பம் துயரில்,
நமக்கும் பங்குள்ளதே.
தேவன் நம் உள்ளத்தைத் தேற்றுவார்,
நாம் அவர் சாட்சிகளே.
3. ஆறுதல் தரும் தேவனுக்கு
நன்றி தெரிவிக்கிறோம்.
நாம் சகித்து நிலைப்போமானால்,
நல் போஷாக்குப் பெறுவோம்.
4. இன்னல்கள் சந்தித்தாலும்
உண்டு மனசமாதானமும்
கிறிஸ்து ராஜாகற்பித்த சத்தியம்:
தேவ அன்பு அணைக்கும்.