யெகோவா தம் மக்களை வழிநடத்துகிறார்
பாட்டு 203
யெகோவா தம் மக்களை வழிநடத்துகிறார்
1. மெய்யறிவை தேவன் அளிக்கிறார்.
போதித்துப் பொறுமையாக நடத்துகிறார்!
தயவாய் சுயாதீனம் அளித்தார்.
இதயத்தில் சத்தியத்தை ஊன்றநாடுகிறார்.
2. தம்ஆவிமூலம் தம்வழியிலே
மேலானவற்றை வெளிப்படுத்துகிறாரே.
“உக்கிராணக்காரன்” அறிவிக்கவே,
இவ்வக்கறையால் இதயம் மகிழ்கிறதே.
3. நற்போதனை திருத்துகிறது.
நீதியுள்ளோரைப் பலப்படுத்துகிறது.
கீழ்ப்படிந்து நாம்திருந்தினாலே
தேவன் தம்நாமத்திற்கென நடத்துவாரே.
4. அவர் உதவி நன்றியாய் ஏற்போம்.
முன்னேறும் சத்திய ஒளியைப்புரிந்துகொள்வோம்.
யெகோவா நம் சிறந்தசிநேகிதர்;
முடிவுகாலத்தில் வழிநடத்துபவர்.