Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா நம் அடைக்கலம்

யெகோவா நம் அடைக்கலம்

பாட்டு 85

யெகோவா நம் அடைக்கலம்

(சங்கீதம் 91:1, 2)

1. யெகோவா அடைக்கலம்,

நம்பு அவர்பலம்.

அவர் நிழல் நாம்

தங்கும்புகலிடமாகும்.

வேடனுக்கும் தப்புவிப்பார்,

கொள்ளை நோயினின்று காப்பார்.

நம்கோட்டையும் அவரே.

புகலிடமாவாரே.

2. ஆயிரம்பேர் விழுவர்,

பத்தாயிரம் ஆவர்.

தீங்குன்னை அணுகாது,

அபாயம் நேராது.

ஆபத்தென்று எண்ணவேண்டாம்,

பயத்தால் நடுங்க வேண்டாம்.

உன்கண்களால் பார்ப்பாயே.

காப்பாற்றப்படுவாயே.

3. பொல்லாப்பு நேரிடாது,

வாதை அணுகாது.

தூதர்கள் மூலம் காப்பார்,

பாதுகாப்பளிப்பார்.

மிதிப்பாய் பாலசிங்கத்தை,

அத்துடன் வலுசர்ப்பத்தை.

உண்மையாய் சேவைசெய்வாய்,

நீஇடறலடையாய்.

4. யெகோவாவைப் போற்றுவோம்.

அவர் நீதி சொல்வோம்.

குணங்கள் அறிவிப்போம்.

குற்றமறக் காப்போம்.

முழுமையாய் சேவிப்போமே,

தேவஇரட்சிப்பறிவோமே.

யெகோவா அடைக்கலம்.

அவர் நாமம் நம்பலம்.