“ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப்” பிரசங்கிப்பீர்!
பாட்டு 193
“ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப்” பிரசங்கிப்பீர்!
1. ராஜ்யசெய்தி எங்கும் பிரசங்கிக்கவேண்டும்.
தேசமெங்கும் சொல்லிடவேண்டும்.
தேவனின் பெயரைப் பிரஸ்தாபிக்கவேண்டும்.
அதன்புகழ் பரவவேண்டும்.
(பல்லவி)
2. நாட்கள் பொல்லாதவை, வீணாக்கிடவேண்டாம்.
சுயஇச்சைக்கு நேரம் வேண்டாம்.
ராஜ்யமும் சேவையும் முதலில்தேடுவீர்.
நித்தியபரிசையும் பெறுவீர்
(பல்லவி)
3. செய்திசொல்லும்போது கலங்கிடவேண்டாம்.
எதிர்ப்பு வந்தால் சோர்வுவேண்டாம்.
ஆனால்கனிவும் சாதுரியமுமேவேண்டும்.
ஊழியத்தில் நிலைத்திடவேண்டும்.
(பல்லவி)
எவ்விடமும் செய்தி சொல்வீர்.
தேவன் பக்கம் நிலைக்கச் செய்வீர்.
சிறியோர், பெரியோருக்கு உதவுவீர்.
யெகோவாவை வணங்கச்செய்வீர்.