Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வானங்கள் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது

வானங்கள் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது

பாட்டு 175

வானங்கள் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது

(சங்கீதம் 19:1)

1. யெகோவா மகிமை கூறும் வானங்கள்.

காண்கிறோம் அவர்கரத்தின் கிரியைகள்.

பகல் துதியைப்பொழியும்;

இரவுக்கிரவறிவை மொழிந்திடும்.

2. சட்டங்கள் பூரணம், ஜீவனைத் தரும்

கற்பனைகள் பேதையை ஞானியாக்கிடும்.

இதயத்தை மகிழ்விக்கும்

கட்டளைகளால் கண்களும் பிரகாசிக்கும்.

3. யெகோவாவின் பயம் சுத்தமுள்ளது.

நியாயங்கள் தேவனின் நீதி நிறைந்தது.

பொன்னிலும் விரும்பத்தகும்.

தெளிதேனிலும் மதுரம் உள்ளதாகும்.

4. பிரமாணம், சட்டத்திற்கு எம் நன்றிகள்.

ஊழியர்க்கிவற்றினால் மிகுந்த நன்மைகள்.

எம்செயல்சிந்தை எல்லாமே

உமக்குப் பிரியமாக இருக்கவே.