Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்பு 2

இயல்பாகப் பேசுவது

இயல்பாகப் பேசுவது

2 கொரிந்தியர் 2:17

சுருக்கம்: செயற்கையாகப் பேசாமல் மனதிலிருந்து பேசுங்கள்.

எப்படிச் செய்வது?

  • ஜெபம் செய்துவிட்டு, கவனமாகத் தயாரியுங்கள். உங்களைப் பற்றியே யோசிக்காமல், உங்கள் செய்தியைப் பற்றி யோசியுங்கள்; அதைச் செய்வதற்குக் கடவுளிடம் உதவி கேளுங்கள். சொல்ல வேண்டிய முக்கியக் குறிப்புகளை உங்கள் மனதில் பதிய வையுங்கள். அவற்றைச் சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பாருங்கள். எழுத்தில் இருப்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை சொல்லாதீர்கள்.

  • இதயத்திலிருந்து பேசுங்கள். நீங்கள் சொல்லும் செய்தியை மற்றவர்கள் ஏன் கேட்க வேண்டும் என்று யோசியுங்கள். அவர்களை மனதில் வைத்தே பேசுங்கள். அப்போதுதான், நீங்கள் இதயப்பூர்வமாகவும் நட்போடும் பேசுகிறீர்கள் என்பதை நீங்கள் நிற்கிற/உட்கார்ந்திருக்கிற விதமும் உங்கள் சைகைகளும் முகபாவனைகளும் காட்டும்.

  • கேட்பவர்களைப் பார்த்துப் பேசுங்கள். கேட்பவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்; உங்கள் கலாச்சாரத்தில் அநாகரிகமாகக் கருதப்பட்டால் மட்டும் அதைத் தவிருங்கள். பேச்சு கொடுக்கும்போது, கூடிவந்திருக்கிற எல்லாரையும் மொத்தமாகப் பார்ப்பதற்குப் பதிலாகத் தனித்தனி நபர்களைச் சில விநாடிகள் பாருங்கள்.