Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 10—பைபிள்—நம்பகமானது, உண்மையானது

ஆராய்ச்சி எண் 10—பைபிள்—நம்பகமானது, உண்மையானது

ஆராய்ச்சி எண் 10—பைபிள்​—நம்பகமானது, உண்மையானது

பைபிளில் உள்ள சரித்திரம், புவியியல் மற்றும் மனிதத் தொடக்கம்; அறிவியல், பண்பாடு, பழக்கவழக்கங்களை குறித்தவற்றில் அதன் திருத்தமானத் தன்மை; அதன் எழுத்தாளர்களின் ஒளிவுமறைவற்றத் தன்மையும், ஒத்திசைவும், நேர்மையும்; அதன் தீர்க்கதரிசனமும்.

பைபிள் தலைசிறந்த கவிதை அழகு வாய்ந்த பெரும் இலக்கிய மேன்மையுடைய படைப்பு எனவும் அதன் எழுத்தாளர்கள் தனிச்சிறப்புக்குரிய சாதனை படைத்தனர் எனவும் பொதுவாக ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால் பைபிள் அதைப் பார்க்கிலும் மிக அதிகத்தை குறிக்கிறது. தாங்கள் எழுதியவற்றிற்கு சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவே ஊற்றுமூலர் என்பதாக பைபிளின் எழுத்தாளர்களே சாட்சிபகர்ந்தனர். பைபிளின் சொல்லமைப்பின் அழகிற்கு இதுவே அடிப்படையான காரணம். முக்கியமாக, அது ஜீவனளிக்கும் அறிவையும் ஞானத்தையும் கொண்டுள்ள புத்தகமாக விலைமதிக்க முடியாதளவுக்கு மதிப்புவாய்ந்ததாக இருக்கிறது. கடவுளுடைய குமாரனாகிய இயேசு, தாம் பேசிய வார்த்தைகள் ‘ஆவியாகவும் ஜீவனாகவும்’ இருக்கின்றன என்று சாட்சிபகர்ந்து, பூர்வ எபிரெய வேதாகமத்திலிருந்து ஏராளமான மேற்கோள்களை குறிப்பிட்டார். ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்; எபிரெய வேதவாக்கியங்களை ‘கடவுளுடைய பரிசுத்த அறிவிப்புகள்’ என்பதாக பேசினார்.​—யோவா. 6:63; 2 தீ. 3:16, NW; ரோ. 3:1, 2.

2கடவுளுடைய தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டார்கள் என்பதாக அப்போஸ்தலனாகிய பேதுரு சாட்சிபகர்ந்தார். அரசன் தாவீது எழுதினார்: “யெகோவாவின் ஆவியே என் மூலம் பேசியது, அவருடைய வார்த்தை என் நாவிலே இருந்தது.” (2 சா. 23:2, NW) தாங்கள் உரைத்தவை யெகோவாவுடையது என்பதாக தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். யெகோவாவால் தனக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த வார்த்தைகளோடு எதையாகிலும் கூட்டுவதற்கு அல்லது எடுத்துப்போடுவதற்கு எதிராக மோசே எச்சரித்தார். பவுலுடைய எழுத்துக்கள் தேவாவியால் ஏவப்பட்டதாக பேதுரு கருதினார்; மேலும் பேதுருவின் வாசகத்தை தேவாவியால் ஏவப்பட்ட அதிகாரத்துவமாக யூதா மேற்கோள் காட்டியதாக தெரிகிறது. கடைசியாக, வெளிப்படுத்துதலின் எழுத்தாளராகிய யோவான், கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்பட்டபடி எழுதி, இந்தத் தீர்க்கதரிசன வெளிப்படுத்துதலில் யாராவது எதையாவது கூட்டினால் அல்லது எடுத்துப்போட்டால், அப்படிப்பட்டவர் மனிதனுக்கல்ல, கடவுளுக்கே நேரடியாக கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.​—1 பே. 1:​10-12; 2 பே. 1:​19-21; உபா. 4:2; 2 பே. 3:​15, 16; யூ. 17, 18; வெளி. 1:​1, 10; 21:5; 22:​18, 19.

3பைபிள் தேவாவியால் ஏவப்பட்டது, உண்மையுள்ளது என்று கடவுள் பக்தியுள்ள இந்த அடிமைகள் யாவரும் சாட்சிபகர்ந்தனர். பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத் தன்மைக்கு வேறு பல நிரூபணங்களும் இருக்கின்றன, அவற்றில் சிலவற்றை பின்வரும் 12 தலைப்புகளின்கீழ் ஆராய்வோம்.

4(1சரித்திரப்பூர்வமாக திருத்தமாயிருத்தல். பூர்வ காலங்களிலிருந்தே, எபிரெய வேதாகமத்தின் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள், தேவாவியால் ஏவப்பட்டவையாகவும் முழுமையாக நம்பத்தக்க படிவங்களாகவும் யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு, தாவீதின் நாளில், ஆதியாகமத்திலிருந்து ஒன்று சாமுவேல் வரை பதிவுசெய்யப்பட்ட சம்பவங்கள், அந்த ஜனத்தின் உண்மையான சரித்திரமாகவும் கடவுள் அவர்களோடு கொண்ட செயல்தொடர்புகளாகவும் முழுமையாக ஏற்கப்பட்டன. இது 78-வது சங்கீதத்தில் விளக்கிக் காட்டப்படுகிறது; அதில் இந்த விவரங்களில் 35-க்கும் மேற்பட்டவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

5பைபிளின் எதிரிகள் ஐந்தாகம தொகுப்பை​—முக்கியமாக அதன் நம்பகத் தன்மையையும் அதன் எழுத்தாளரையும்​—கடுமையாக தாக்கியுள்ளனர். எனினும், மோசேயை ஐந்தாகமத்தின் எழுத்தாளராக யூதர்கள் ஏற்றது மட்டுமல்லாமல் பூர்வ எழுத்தாளர்களும் அதற்கு சாட்சியளித்திருக்கின்றனர்; இவர்களில் சிலர் யூதர்களின் எதிரிகள். அப்டெராவின் ஹெக்கடேயஸ், எகிப்திய வரலாற்றாசிரியர் மனேத்தோ, அலெக்ஸாந்திரியாவின் லைஸிமாக்கஸ், யூப்போலிமஸ், டாஸிட்டஸ், ஜூவெனல் போன்றவர்கள், யூதரை மற்ற ஜனத்தாரிலிருந்து வேறுபடுத்தும் சட்டங்களின் தொகுப்பை மோசே அமைத்ததாக கூறுகின்றனர். மோசே சட்டங்களை எழுதிவைத்ததாகவும் இவர்களில் அநேகர் தெளிவாக குறிப்பிடுகின்றனர். பித்தகோரிய தத்துவஞானி நூமினியஸ், எகிப்திய பூஜாரிகளான யந்நேயும் யம்பிரேயும் மோசேயை எதிர்த்து நின்றனர் என்று குறிப்பிடுகிறார். (2 தீ. 3:8) இந்த எழுத்தாளர்கள், யூத சரித்திரத்தைப் பற்றி கிரேக்கர் முதன்முதலாக கவனிக்க தொடங்கிய (பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டு) அதாவது அலெக்ஸாண்டரின் காலத்திலிருந்து, பேரரசன் அரிலியன் காலம் (பொ.ச. மூன்றாவது நூற்றாண்டு) வரை நிகழ்ந்த சம்பவங்களை குறிப்பிடுகின்றனர். அநேக பூர்வ எழுத்தாளர்கள் மோசேயை தலைவராக, அதிபதியாக, அல்லது சட்டமளித்தவராக குறிப்பிடுகின்றனர். a முந்தின ஆராய்ச்சியில் நாம் பார்த்தபடி, தொல்பொருள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் கடவுளுடைய மக்கள் சுற்றுப்புறத்திலிருந்த தேசங்களோடு கொண்டிருந்த தொடர்புகளாக பைபிளில் பதிவுசெய்யப்பட்ட சம்பவங்களின் சரித்திரப்பூர்வமான, திருத்தமான தன்மையை அநேக தடவை ஆதரிக்கின்றன.

6ஆனால் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை பற்றியதென்ன? எபிரெய வேதாகம விவரத்தை உண்மைதான் என்பதாக நிரூபிக்கிறது; அதோடு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சரித்திரப்பூர்வமாக திருத்தமானதாகவும் நம்பகமானதாகவும், எபிரெய வேதாகமத்தைப்போல் தேவாவியால் ஏவப்பட்டதாகவும் இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறது. அதன் எழுத்தாளர்கள், தாங்கள் பதிவுசெய்த சம்பவங்களுக்கு கண்கூடான சாட்சிகளும் பெரும்பாலும் அவற்றில் பங்குகொண்டவர்களுமாக இருந்ததால், தாங்கள் கேட்டவற்றையும் கண்டவற்றையும் நமக்கு அறிவிக்கிறார்கள். அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் அவற்றை நம்பினார்கள். அவர்களுடைய சாட்சியங்களுக்கு ஏராளமான நிரூபணங்கள் பூர்வ எழுத்தாளர்களின் குறிப்புகளில் இருக்கின்றன. ஜூவனல், டாசிட்டஸ், செனேக்கா, சூச்சோனியஸ், பிளைனி இளையவர், லூசியன், செல்ஸஸ், மற்றும் யூத சரித்திராசியரான ஜொஸிபஸ் ஆகியோர் அப்படிப்பட்ட பூர்வ எழுத்தாளர்களில் சிலர்.

7 தி யூனியன் பைபிள் கம்பானியன் என்பதில் எஸ். ஆஸ்ட்டின் அலிபோன் இவ்வாறு சொல்கிறார்: “சர் ஐசக் நியூட்டனுங்கூட . . . பூர்வ எழுத்துக்களை திறனாய்வதில் சிறந்தவராக இருந்து, பரிசுத்த வேதாகமத்தை மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்தார். இது சம்பந்தமாக அவருடைய முடிவு என்ன? ‘எந்த [உலகப்பிரகாரமான] சரித்திரத்தில் இருப்பதை பார்க்கிலும் புதிய ஏற்பாட்டிலேயே அதிக நிச்சயமான நம்பகத் தன்மைக்குரிய அடையாளங்களை நான் காண்கிறேன்,’ என்று அவர் சொல்கிறார். ஜூலியஸ் சீஸர் கேப்பிடோலில் மரித்தார் என்பதற்கு அத்தாட்சிகள் இருப்பதைப் பார்க்கிலும், சுவிசேஷங்களில் சொல்லப்பட்டபடி, இயேசு கிறிஸ்து கல்வாரியில் மரித்தார் என்பதற்கே அதிக அத்தாட்சிகள் நமக்கிருக்கின்றன என்று டாக்டர் ஜான்ஸன் சொல்கிறார். நிச்சயமாகவே நமக்கு மிக அதிக அத்தாட்சிகள் உள்ளன. சுவிசேஷ சரித்திரத்தின் சத்தியத்தைச் சந்தேகிப்பதாக கூறுகிற எவரிடமாவது, ஸீஸர் கேப்பிடோலில் மரித்தார் என்பதற்கு அல்லது பேரரசன் சார்லமென் மேற்கு பகுதிக்கு பேரரசனாக போப் லியோ III-ஆல் 800-ல் முடிசூட்டப்பட்டார் என்று நம்புவதற்கு என்ன காரணம் என்று கேளுங்கள். . . . சார்ல்ஸ் I என்பவர் எப்போதாவது வாழ்ந்து, சிரச்சேதம் செய்யப்பட்டார் என்றும், அவருக்கு பதிலாக ஆலிவர் கிராம்வெல் அரசரானார் என்பதும் உங்களுக்கு எப்படி தெரியும்? . . . சர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது . . . இவர்களை குறித்து இப்போது கூறப்பட்ட எல்லாவற்றையும் நாம் நம்புகிறோம்; ஏனெனில் அவற்றின் உண்மையை பற்றிய சரித்திரப்பூர்வ அத்தாட்சிகள் நமக்கு இருக்கின்றன. . . . இதைப்போன்ற நிரூபணத்தை அளித்தும், இன்னும் எவராவது நம்ப மறுத்தால், அவர்கள் முட்டாள்தனமாக உண்மைக்கு முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள் அல்லது ஐயோ பாவம்! அறியாமையில் மூழ்கியுள்ளனர் என்பதாக நினைத்து விட்டுவிடுவோம். அப்படியானால், பரிசுத்த வேதாகமத்திலிருந்து நம்பகத் தன்மைக்கு ஏராளமான அத்தாட்சிகள் இப்போது அளித்தும், இவை உண்மையானவை என்று இன்னும் ஏற்கமுடியவில்லை என்பவர்களைக் குறித்து என்ன சொல்வோம்? . . . அவர்களுக்கு தலையில் அல்ல, மாறாக இருதயத்திலேயே கோளாறு இருக்கிறது​—தங்களுடைய பெருமையை விட்டுவிட்டு தாழ்மையோடு இருப்பதையும், வேறுபட்ட வாழ்க்கையை நடத்தும்படி தங்களை வற்புறுத்துவதையும் நம்ப அவர்கள் விரும்பவில்லை என்ற நிச்சயமான முடிவுக்கு வர நமக்கு காரணம் இருக்கிறது.” b

8கிறிஸ்தவ மதத்தின் மேன்மையும் அதைப் பின்பற்றுவோர் சத்தியத்தின்படி வணக்கம் செலுத்துவதும் ஜார்ஜ் ராலின்ஸனால் முக்கியப்படுத்தி காட்டப்படுகிறது, அவர் எழுதினார்: “கிறிஸ்தவம்​—இதற்குள் பழைய ஏற்பாட்டின் வகைமுறையும் அடங்கியுள்ளது. அதுவே இதன் முதல் நிலையாயிருந்தது​—அதன் குறிக்கோளில் அல்லது சரித்திரப்பூர்வ இயல்பில் உலகத்தின் மற்ற மதங்களிலிருந்து தனிப்பட்டு விளங்குகிறது. கிரேக்க, ரோம, எகிப்திய, இந்திய, பெர்சிய, மற்றும் கிழக்கத்திய மதங்கள் பொதுவாக ஊகத்தின் அடிப்படையிலானவை; முக்கியமாக சரித்திரப்பூர்வ ஆதாரத்தின் அவசியத்தைக்கூட அவை எண்ணவில்லை. . . . ஆனால் பைபிளின் மதத்தை குறித்ததில் இது மாறாக உள்ளது. பழைய ஏற்பாட்டிலோ அல்லது புதிய ஏற்பாட்டிலோ, யூத ஒழுங்குமுறையிலோ அல்லது கிறிஸ்தவத்திலோ நாம் எதில் பார்த்தாலும், உண்மைகளோடு இணைந்துள்ள கோட்பாட்டு திட்டத்தை காண்கிறோம்; அவற்றின்மீதே அது முற்றிலும் சார்ந்துள்ளது; அவை இல்லாமல் அது பொருளற்றதாகவும் பயனற்றதாகவும் உள்ளது; அவற்றை ஏற்றுக்கொள்ளும்போது அவை நடைமுறையான எல்லா நோக்கங்களுக்கும் உபயோகமானவையே என்பதாக கருதலாம்.” c

9(2புவியியல் மற்றும் மண்ணியல் பூர்வமாக திருத்தமாயிருத்தல். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தையும் சுற்றுப்புற பிராந்தியங்களையும் பற்றிய பைபிள் விவரிப்பின் கவனிக்கத்தக்க திருத்தமான தன்மையின் சம்பந்தமாக அநேக எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். உதாரணமாக, கிழக்கத்திய பயணியாகிய டாக்டர் ஏ. பி. ஸ்டான்லி, இஸ்ரவேலரின் வனாந்தர பயணத்தை குறித்து சொன்னார்: “அவர்கள் சென்ற வழி நுட்பமாக தெரியவில்லை என்றாலும், அந்த நாட்டின் தனித்தன்மைவாய்ந்த அம்சங்கள் அவ்வளவு ஒத்தவையாக இன்றும் இருப்பதால், சரித்திரம் கவனிக்கத்தக்க பல விளக்கங்களை இன்னும் பெறும். . . . இடையிடையேயுள்ள நீரூற்றுகளும், கிணறுகளும், நீரோடைகளும், குறிப்பிடப்பட்டுள்ள மேரிபாவின் ‘தண்ணீர்கள்’; எலீமின் ‘நீரூற்றுகள்’; ஓரேபின் ‘நீரோடை’; மீதியானில் எத்ரோவின் குமாரத்திகளுடைய ‘கிணறு,’ அதோடு சேர்ந்த அதன் ‘தொட்டி’ அல்லது நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றோடு பொருந்துகின்றன. தாவர வர்க்கம், மோசே எழுதின சரித்திரத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளும் வண்ணமாக இன்னும் உள்ளது.” d எகிப்தைப் பற்றிய விவரத்தில், இந்த திருத்தமான தன்மை, அந்தப் பிராந்தியத்தின் பொது விவரிப்பில் மட்டும் காட்டப்படவில்லை. அதாவது, அதன் செழுமையான தானிய நிலங்கள், அதன் நைல் நதி ஓரங்களின் நாணற்புல் (ஆதி. 41:​47-49; யாத். 2:​3), ‘வாய்க்கால்கள், நதிகள், குளங்கள், தண்ணீர் தேக்கங்கள்’ ஆகியவற்றிலிருந்து பெறும் அதன் தண்ணீர் (யாத். 7:19), அதன் ‘சணல், வாற்கோதுமை, கோதுமை, கம்பு’ (யாத். 9:​31-32) ஆகியவற்றில் மாத்திரமல்ல, பட்டணங்களின் பெயர்கள், அவை அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றைக் குறித்ததிலும்கூட மிகத் திருத்தமான குறிப்புகள் காணப்படுகின்றன.

10தற்கால அறிவியலாளர் சிலருக்கு, பைபிளிலுள்ள மண்ணியல் மற்றும் புவியியல் சம்பந்தப்பட்ட பதிவில் அந்தளவு நம்பிக்கை இருந்ததால், அதை அவர்கள் வழிகாட்டியாக பின்பற்றியிருக்கின்றனர். அதன் விளைவாக அவர்கள் நல்ல பயனும் அடைந்திருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னால், பிரசித்திபெற்ற நிலவியலாளர் டாக்டர் பென் டோர், பின்வரும் வேதவசனத்தின்படி ஆய்வுசெய்தார்: “உன் கடவுளாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே கொண்டுவந்து சேர்க்கிறார்; . . . அதன் கற்கள் இரும்பு.” (உபா. 8:​7, 9, தி.மொ.) பெயெர்செபாவிலிருந்து சில மைல்களுக்கு அப்பால், மிகப்பரந்த செங்குத்தான பாறைகள் செந்நிறக் கருமையான உலோகக் கலவையால் நிரம்பியிருப்பதை கண்டார். இங்கே 1.5 கோடி டன் தரம்குறைந்த இரும்பு உலோகக் கலவை இருந்ததாக மதிப்பிடப்பட்டது. பின்னால், 60 முதல் 65 சதவீத தூய்மையான இரும்பைக்கொண்ட மிகச் சிறந்த உலோகக் கலவை பாறையில் 1.5 கிலோமீட்டர் தூரமளவு இருப்பதை பொறியியலாளர்கள் கண்டுபிடித்தனர். மீண்டும் காடுகளை உருவாக்கும் திட்டத்தில் பெயர்பெற்ற இஸ்ரவேலின் நிபுணராகிய டாக்டர் ஜோஸஃப் உவீட்ஸ் சொன்னார்: “பெயெர்செபாவின் மண்ணில் ஆபிரகாம் நட்ட முதல் மரம் தாமரிஸ்க்கே.” “அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, நாங்கள் அதே நிலப்பகுதியில் இருபது லட்சம் மரங்களை நட்டோம். ஆபிரகாம் சரியாகவே செயல்பட்டிருந்தார். ஆண்டுதோறும் ஆறு அங்குலத்திற்கும் குறைவாகவே மழை பெய்யும் தெற்கில் செழித்து வளரும் சில மரங்களில் ஒன்று தாமரிஸ்க் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.” e நோகா ஹரியுவேனி என்பவருடைய நம் பைபிள் பாரம்பரியத்தில் மரமும் புதர்ச்செடியும் என்ற ஆங்கில புத்தகம் மேலும் கூறுகிறது: “கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாம் பெயெர்செபாவுக்கு வந்து சேர்ந்தபோது வெறுமனே ஏதாவது ஒரு மரத்தை நடவில்லை என்று தெரிகிறது. . . . மற்ற மரங்களைப் பார்க்கிலும் அதிக குளுமையான நிழல்தரும் அந்த மரத்தையே ஆபிரகாம் தேர்ந்தெடுத்தார். மேலும், நிலத்தடியிலுள்ள தண்ணீரை தேடி இதன் [தாமரிஸ்க்] வேர்கள் கீழே அதிக ஆழம் செல்வதால் வெப்பத்தையும் நீண்ட வறட்சிகளையும் இது தாங்கி நிற்கிறது. இந்த மரங்கள் பெயெர்செபாவின் சுற்றுப்புறத்தில் இந்நாள்வரை அழியாதிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. fஆதி. 21:33.

11பைபிளிலுள்ள காலவரிசை மற்றும் புவியியல் போன்றவற்றின் நுட்பவிவரங்களை குறித்தவற்றில், பழைய ஏற்பாட்டின் ஓர் அறிவியல் ஆராய்வு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் பக்கங்கள் 213-14-ல் பேராசிரியர் ஆர். டி. வில்சன் எழுதுகிறார்: “பைபிளில் கொடுக்கப்படும் காலவரிசை மற்றும் புவியியல் கூற்றுகள், வேறு எந்தப் பூர்வ படிவங்கள் அளிப்பவற்றை பார்க்கிலும் அதிக திருத்தமாகவும் நம்பகமாகவும் இருக்கின்றன; வாழ்க்கை வரலாறு மற்றும் வேறு சரித்திர சம்பந்த கூற்றுகள் மற்ற பைபிள் சம்பந்த படிவங்கள் அளிக்கும் அத்தாட்சிகளோடு வியப்புண்டாக்கும் முறையில் ஒத்திசைகின்றன.”

12(3மனிதகுலத்தின் இனங்களும் மொழிகளும். அதனதன் வகையின்படி (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், பைரன் சி. நெல்சன் சொல்கிறார்: “நீக்ரோவோ, சீனரோ, ஐரோப்பியரோ அல்ல, மனிதனே உண்டாக்கப்பட்டான். ஆதாம் ஏவாள் என்று பைபிள் சொல்லும் இரண்டு மானிடர் படைக்கப்பட்டனர்; அவர்களிலிருந்து இயற்கையான பரம்பரையின் மூலமும், படிப்படியான மாறுபாட்டின் மூலமுமே பூமியின்மீதுள்ள மனிதரின் வகைகளெல்லாம் வந்திருக்கின்றன. நிறமும் உருவமும் வித்தியாசமாக இருந்தாலும் மனிதரின் இனங்களெல்லாம் ஒரே வகைதான். அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி சிந்திக்கின்றனர், உணருகின்றனர். அவர்கள் உடலமைப்பில் ஒரே மாதிரி இருக்கின்றனர், தங்களுக்குள் தடையின்றி திருமணம் செய்துகொள்கின்றனர், அதே இயல்போடு பிள்ளைகளை பிறப்பிக்கின்றனர். சிருஷ்டிகரின் கையிலிருந்து முழுமையாக படைக்கப்பட்ட பொதுவான இரண்டு முற்பிதாக்களிலிருந்தே எல்லா இனங்களும் தோன்றின.” g இதுவே ஆதியாகமம் 1:​27, 28; 2:​7, 20-23; 3:20; அப்போஸ்தலர் 17:26; மற்றும் ரோமர் 5:​12-லுள்ள சாட்சியம்.

13பூர்வ மொழிகள் எந்த மையத்திலிருந்து பரவத் தொடங்கின என்பதை பற்றிய பைபிள் விவரம் சம்பந்தமாக தொல்பொருள் ஆராய்ச்சியாளராகிய சர் ஹென்ரி ராலின்ஸன் சொன்னார்: “வேதப்பூர்வ பதிவுக்கு எந்த கவனமும் செலுத்தாமல், மொழி பாதைகள் ஒன்றோடொன்று சேருவதை பின்பற்றி செல்வோம் என்றால் நாம் சிநேயார் சமவெளிகளையே வந்தடைவோம்; இங்கிருந்துதான் பல்வேறு மொழிபாதைகள் சிதறியிருக்கின்றன என்ற முடிவுக்கு வருவோம். hஆதி. 11:​1-9.

14(4நடைமுறைக்கு ஏற்றது. நம்பகத் தன்மைக்கு வேறு எந்த நிரூபணங்களும் இல்லையென்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது பைபிள் கடவுளுடைய படைப்புதான் என்பதை அதன் நீதியான நியமங்களும் ஒழுக்க தராதரங்களும் நிரூபிக்கும். மேலுமாக, அதன் நடைமுறையான தன்மை அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுகிறது. மனித இனம் உட்பட, எல்லா காரியங்களின் தொடக்கத்தையும், பூமி மற்றும் மனிதன் சம்பந்தமாக சிருஷ்டிகரின் நோக்கத்தைப் பற்றியும் பகுத்தறிவுக்கு பொருத்தமான கருத்தை வேறு எந்தப் புத்தகமும் நமக்கு அளிப்பதில்லை. (ஆதி., அதி. 1; ஏசா. 45:18) மனிதன் ஏன் சாகிறான், பூமியில் ஏன் அக்கிரமம் நிறைந்திருக்கிறது என்பதற்கான காரணத்தை பைபிள் நமக்கு சொல்கிறது. (ஆதி., அதி. 3; ரோ. 5:12; யோபு, அதி. 1, 2; யாத். 9:16) நீதிக்குரிய மிக உயர்ந்த தராதரத்தை அது குறிப்பிடுகிறது. (யாத். 23:​1, 2, 6, 7; உபா. 19:​15-21) வியாபார நடவடிக்கைகளின்பேரில் சரியான அறிவுரையை அளிக்கிறது (லேவி. 19:​35, 36; நீதி. 20:10; 22:​22, 23; மத். 7:12); சுத்தமான ஒழுக்க நடத்தை (லேவி. 20:​10-16; கலா. 5:​19-23; எபி. 13:4); மற்றவர்களோடு கொள்ளும் உறவு (லேவி. 19:18; நீதி. 12:15; 15:1; 27:​1, 2, 5, 6; 29:11; மத். 7:12; 1 தீ. 5:​1, 2); திருமணம் (ஆதி. 2:​22-24; மத். 19:​4, 5, 9; 1 கொ. 7:​2, 9, 10, 39); குடும்ப உறவுகளும் கணவன், மனைவி, மற்றும் பிள்ளைகளின் கடமைகளும் (உபா. 6:​4-9; நீதி. 13:24; எபே. 5:​21-33; 6:​1-4; கொலோ. 3:​18-21; 1 பே. 3:​1-6); ஆட்சி செலுத்துபவர்கள் சம்பந்தமாக சரியான மனப்பான்மை (ரோ. 13:​1-10; தீத். 3:1; 1 தீ. 2:​1, 2; 1 பே. 2:​13, 14); நேர்மையான வேலையும் அதோடுகூட எஜமான்-அடிமை மற்றும் வேலைக்கு அமர்த்தியவர்-வேலையாள் உறவுகள் (எபே. 4:28; கொலோ. 3:​22-24; 4:1; 1 பே. 2:​18-21); சரியான கூட்டுறவு (நீதி. 1:​10-16; 5:​3-11; 1 கொ. 15:33; 2 தீ. 2:22; எபி. 10:​24, 25); சச்சரவுகளை தீர்த்தல் (மத். 18:​15-17; எபே. 4:26); மற்றும் நம் அன்றாட வாழ்க்கையை முக்கியமாக பாதிக்கிற மற்ற அநேக காரியங்களின்பேரிலும் அறிவுரைகளை அளிக்கிறது.

15உடல்நலத்தையும் மன ஆரோக்கியத்தையும் பற்றிய பயனுள்ள ஆலோசனைகளையும் பைபிள் அளிக்கிறது. (நீதி. 15:17; 17:22) ஒருவரின் மனநிலை அவரின் உடல்நலத்தை உண்மையிலேயே பாதிப்பதாக, சமீப ஆண்டுகளில் மருத்துவ ஆராய்ச்சி நிரூபித்திருக்கிறது. உதாரணமாக, கோபத்தை வெளிகாட்டும் ஆட்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன. மேலுமாக, கோபமானது, இருதய வலி, தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், மயக்கம், அல்லது பேச முடியாமல் போதல் ஆகியவற்றை ஏற்படுத்தியதாக சிலர் அறிவித்திருக்கின்றனர். எனினும் வெகுகாலத்திற்கு முன்பே பைபிள் இவ்வாறு விளக்கியது: ‘சாந்தமான இருதயம் மாம்ச உடலுக்கு ஜீவன்.’​—நீதி. 14:​30, NW; மத்தேயு 5:​9-ஐ ஒப்பிடுக.

16(5அறிவியல் பூர்வமாக திருத்தமானது. பைபிளில் அறிவியல் சம்பந்தமான ஆய்வு கட்டுரைகள் இல்லை என்பது உண்மைதான்; இருந்தபோதிலும் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிப்பிடுகையில், அவை திருத்தமாகவும், உண்மையான அறிவியல் கண்டுபிடிப்போடும் அறிவோடும் ஒத்திசைந்தும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. படைப்பைப் பற்றிய வரிசைமுறை, மிருக உயிரினத்தின் வரிசைமுறை (ஆதி., அதி. 1); பூமி உருண்டையாக, அல்லது கோள வடிவுடையதாக இருப்பது (ஏசா. 40:22); மேலும் பூமி விண்வெளியில் “அந்தரத்திலே” தொங்கிக்கொண்டிருப்பது போன்ற உண்மைகளை அறிவியல் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பைபிள் குறிப்பிட்டது. (யோபு 26:7) “எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல,” என்ற இந்த வேதாகம கூற்றின் உண்மையை தற்கால உடலியங்கியல் நிரூபித்துள்ளது. ஒரு வகை மாம்சத்தினுடைய உயிர்மங்களின் அமைப்பு மற்றொன்றின் அமைப்பிலிருந்து வேறுபட்டுள்ளது; மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வித்தியாசப்பட்ட ‘மாம்சத்தை’ கொண்டிருக்கிறான். (1 கொ. 15:39) i விலங்கியல் துறையை பற்றியதென்ன? லேவியராகமம் 11:6 முயலை அசைபோடும் மிருகங்களுடன் வகுக்கிறது. இது ஒரு காலத்தில் ஏளனம் செய்யப்பட்டது, ஆனால் இப்போது, முயல் அதன் உணவை திரும்பவும் அசைபோட்டு ஜீரணிப்பதாக அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. j

17“மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்ற இந்தக் கூற்று, தற்காலங்களில் மருத்துவ அறிவியலின் அடிப்படையான உண்மையாக ஏற்கப்பட்டிருக்கிறது. (லேவி. 17:​11-14) எந்தெந்த மிருகங்களும், பறவைகளும், மீன்களும் மனிதன் சாப்பிடுவதற்கு ‘சுத்தமானவை’ என்று மோசேயின் நியாயப்பிரமாணம் குறிப்பிட்டு, ஆபத்தான உணவு வகைகளை விலக்கியது. (லேவி., அதி. 11) பாளையமிறங்கும் இடத்தில், மனித மலம் மூடப்பட வேண்டுமென நியாயப்பிரமாணம் கட்டளையிட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஈக்களால் பரவுகிற சீதபேதி, டைஃபாய்டு போன்ற கொள்ளைநோய்களிலிருந்து போதியளவு பாதுகாப்பு கிடைத்தது. (உபா. 23:​9-14) இன்றுங்கூட சில நாடுகளில், மனித மலம் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் இருப்பதால், ஆரோக்கியம் மிகமோசமாக பாதிக்கப்படுகிறது. அத்தகைய நாடுகளிலுள்ள ஜனங்கள், சுகாதாரம் சம்பந்தமாக பைபிளின் அறிவுரையை பின்பற்றினால் மேலும் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள்.

18“வயிற்றிற்காகவும்,” ‘நோய்க்காகவும்’ கொஞ்சம் திராட்சமதுவை அருந்தும்படி பைபிள் சிபாரிசு செய்கிறது. (1 தீ. 5:23) கலிபோர்னியா மருத்துவ பள்ளியின் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியரான டாக்டர் சல்வடோர் பி. லூசியா எழுதுகிறார்: “திராட்ச மதுவானது, மனிதகுலச் சரித்திரம் முழுவதிலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவரும் மிகப் பூர்வகால பானமாகவும் மிக முக்கியமான மருந்தாகவும் இருக்கிறது.” k

19(6பண்பாடும் பழக்கவழக்கங்களும். நவீன கண்டுபிடிப்பும் பைபிளும் என்பதில் ஏ. ரெண்டல் ஷார்ட், அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “வெகுதூரம் பரவியுள்ள தங்கள் பேரரசின் மாகாணங்களைத் தங்களால் கூடிய வரையில் அந்தந்த இடத்தின் நிர்வாக ஒழுங்கின்படி தொடர்ந்து ஆளுவது ரோமப் பழக்கமாயிருந்தது. இதன் காரணமாக வெவ்வேறு மாகாணங்களிலிருந்த அதிகாரிகள் வெவ்வேறுபட்ட பெயர்களால் அறியப்பட்டனர். ஒருவர் கூர்ந்து கவனிக்கும் பயணியாக அல்லது பதிவுகளை ஆராயும் கடும் முயற்சியெடுக்கும் ஒரு மாணாக்கனாக இருந்தால் தவிர, இந்த எல்லா ஆளுநர் வகுப்பினருக்கும் சரியான அலுவலகப் பெயரைக் கொடுக்க முடியாது. இதனால் சரித்திர விஷயங்களை துல்லியமாக சொல்லவேண்டும் என்ற லூக்காவின் விருப்பத்திற்கு இது ஒரு பரீட்சைதான்; அதில் அவர் முழுமையாக திருத்தமாக எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். பல காரியங்களில், அவருடைய தகவலைச் சரிபார்ப்பதற்கு, ஒரு நாணயத்தின் அல்லது எழுத்துப்பொறிப்பின் அத்தாட்சி மாத்திரமே தேவைப்பட்ட தகவலை நமக்கு அளித்திருக்கிறது; அங்கீகரிக்கப்பட்ட ரோம சரித்திராசிரியர்கள்கூட அத்தகைய கடினமான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்துகிறதில்லை. லூக்கா ஏரோதையும் லிசானியாவையும் காற்பங்கு தேசாதிபதிகளாக அழைக்கிறார்; ஜொஸிபஸும் அவ்வாறே அழைக்கிறார். யாக்கோபை பட்டயத்தால் கொன்று பேதுருவை சிறையில் தள்ளிய ஏரோது அகிரிப்பா அரசனென அழைக்கப்படுகிறான்; இவன் ரோமில் காயு ராயனுடன் (காலிகுலா) எவ்வாறு சிநேகமாகி, காலிகுலா பேரரசனானபோது அரசப் பட்டம் அளிக்கப்பட்டான் என்பதை ஜொஸிபஸ் நமக்குச் சொல்கிறார். சீப்புருவின் தேசாதிபதி, செர்கியுபவுல் அதிபதியென [புறமாகாணத் தலைவர்] அழைக்கப்படுகிறான். . . . சிறிது காலத்திற்கு முன்னால் சீப்புரு, பேரரசுக்குரிய மாகாணமாக இருந்துவந்தது, துணை மாநில ஆளுநரால் அல்லது அரசப் பிரதிநிதியால் ஆளப்பட்டது. ஆனால், பவுலின் காலத்தில் சீப்புரு நாணயத்தில் காட்டப்படுகிறபடி, கிரேக்கிலும் லத்தீனிலும் சரியான பட்டப் பெயரானது புறமாகாணத் தலைவர் என்பதே. சீப்புருவின் வட கரையோரத்தில் சோலோயில் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்க எழுத்துப்பொறிப்பு ஒன்று ‘பவுலின் புறமாகாண ஆட்சியின்போது’ என்று தேதி குறிப்பிட்டிருக்கிறது. . . . தெசலோனிக்காவில் நகரப் பெரியோர்கள் போலிட்டார்க்ஸ் [நகர ஆளுநர், அப். 17:​6, NW, அடிக்குறிப்பு] என்ற அசாதாரண பட்டப்பெயரை ஏற்றனர். இது உயர்தர இலக்கியத்தில் அறியப்படாதப் பெயர். லூக்கா இதைப் பயன்படுத்தினார், அதேபோல எழுத்துப்பொறிப்புகளில் இது காணப்படுகிறது; இவர்களும் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் இது நமக்கு அறியப்படாதிருக்கும். . . . அகுஸ்துவின்கீழ் அகாயா, ஆட்சிப் பேரவைக்குரிய மாகாணமாயிருந்தது; திபேரியுவின்கீழ் இது நேரடியாகப் பேரரசனின்கீழ் இருந்தது, ஆனால் கிலவுதியுவின்கீழ், டாஸிட்டஸ் நமக்குச் சொல்கிறபடி, இது ஆட்சிப் பேரவையினிடம் திருப்பப்பட்டது, ஆகவே கல்லியோனின் திருத்தமான பட்டப்பெயர் [அப். 18:12] புறமாகாணத் தலைவர் (“proconsul,” NW) என்பதே. . . . லூக்கா, புவியியல் சம்பந்தப்பட்ட தனது பதிவிலும் தன் பயண அனுபவங்களிலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் திருத்தமாகவும் இருக்கிறார்.” l

20பவுலின் நிருபங்கள் அவருடைய காலத்தின் சூழ்நிலையை திருத்தமாக பிரதிபலித்து, எழுதப்பட்ட காரியங்களின் கண்கூடான சாட்சியாக அவர் இருந்தாரென காட்டுகின்றன. உதாரணமாக, பிலிப்பி ஓர் இராணுவ குடியமைப்பாக இருந்தது. அதன் குடிமக்கள் தங்கள் ரோம குடியுரிமையைப் பற்றி முக்கியமாக பெருமைப்பட்டனர். பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுடைய குடியுரிமை பரலோகங்களில் இருந்தது என்பதை பவுல் நினைப்பூட்டினார். (அப். 16:​12, 21, 37; பிலி. 3:20) எபேசு மந்திர வித்தைகளுக்கும் பொல்லாத ஆவித்தொடர்பு நடவடிக்கைகளுக்கும் பெயர்பெற்ற நகரம். பேய்களின் பிடியில் சிக்கிவிடாதபடி அவற்றிற்கு எதிராக தாங்கள் எவ்வாறு போர் கவசங்களைத் தரித்துக்கொள்வது என்பதைக் குறித்துப் பவுல் அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்குப் போதனை கொடுத்தார். அதேசமயம், ரோமப் போர்ச்சேவகனின் போர்க்கவசங்களை பற்றிய திருத்தமான விவரத்தையும் கொடுத்தார். (அப். 19:19; எபே. 6:​13-17) ரோமர்களின் வெற்றி பவனியில், வெற்றி வீரர்கள் முன்செல்ல போர்க் கைதிகளில் சிலர் நிர்வாணமாக ஊர்வலத்தில் பின்தொடர்ந்தனர். இந்த பழக்கத்தை அவர் உதாரணமாக பயன்படுத்தினார். (2 கொ. 2:14; கொலோ. 2:15) யூதருக்கும் கிரேக்கருக்கும் இருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் 1 கொரிந்தியர் 1:​22-ல் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய காரியங்களில் கிறிஸ்தவ எழுத்தாளர்கள், ஐந்தாகம எழுத்தாளராகிய மோசேயின் திருத்தமான தன்மையை பிரதிபலிக்கின்றனர். இதைப்பற்றி ஜார்ஜ் ராலின்ஸன் சொல்கிறார்: “பொதுவாக கிழக்கத்திய நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்களை குறித்தவற்றில் ஐந்தாகமத்தின் திருத்தமான சிறப்பியல்பு ஒருபோதும் சந்தேகிக்கப்படவில்லை.” a

21(7பைபிள் எழுத்தாளர்களின் ஒளிவுமறைவற்றத் தன்மை. பைபிள் முழுவதிலும், அதன் எழுத்தாளர்களின் ஒளிவுமறைவற்றத் தன்மை, அது நம்பகமாக இருப்பதற்கு உறுதியான நிரூபணமாக இருக்கிறது. உதாரணமாக மோசே, தனது பாவத்தையும், அவரும் அவருடைய சகோதரன் ஆரோனும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கப் போவதில்லை என்ற கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பையும் ஒளிவுமறைவின்றி சொல்கிறார். (எண். 20:​7-13; உபா. 3:​23-27) இரண்டு சந்தர்ப்பங்களில் தாவீதின் பாவங்களும், அவருடைய குமாரனாகிய சாலொமோன் உண்மை வணக்கத்தைவிட்டு விலகியதும் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளன. (2 சா., அதி. 11, 12, 24; 1 இரா. 11:​1-13) யோனா தனது கீழ்ப்படியாமையையும் அதன் விளைவையும் எழுதுகிறார். கடவுளுக்கு கீழ்ப்படியாததற்காக இஸ்ரவேல் ஜனம் ஏறக்குறைய எபிரெய வேதாகமத்தின் எல்லா எழுத்தாளர்களாலும் கண்டனம் செய்யப்பட்டது. அவர்கள் எல்லாரும் யூதராயிருந்தனர், கடவுளுடைய அறிவிப்புகளாகவும் தங்கள் ஜனத்தின் உண்மையான சரித்திரமாகவும் யூதர்கள் மதித்துப் போற்றிய அதே பதிவில் அவர்கள் கண்டனம் செய்யப்பட்டனர். கிறிஸ்தவ எழுத்தாளர்களும் ஒளிவுமறைவற்றவர்களாகவே இருந்தனர். கிறிஸ்துவை பேதுரு மறுதலித்ததை சுவிசேஷ எழுத்தாளர்கள் நால்வரும் வெளிப்படுத்தினர். அந்தியோகியாவில் கிறிஸ்தவ சபையில் யூதருக்கும் புறஜாதியாருக்கும் இடையில் வேறுபாடு ஏற்படுவதற்கு பேதுரு காரணமானார்; எனவே பேதுருவின் விசுவாசத்தில் ஏற்பட்ட வினைமையான தவறை பவுல் வெளிப்படுத்தினார். பைபிளின் எழுத்தாளர்கள் உண்மையான பதிவை எழுதுவதில் அக்கறை செலுத்தினர்; அவர்கள் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. தங்களுடைய தவறுகளையும் அவர்கள் வெளிப்படுத்தினர் என்பதை நாம் உணருகையில், பைபிள் உண்மையிலேயே சத்தியம் என்பதில் நம் நம்பிக்கை வளருகிறது.​—மத். 26:​69-75; மாற். 14:​66-72; லூக். 22:​54-62; யோவா. 18:​15-27; கலா. 2:​11-14; யோவா. 17:17.

22(8எழுத்தாளர்களின் ஒத்திசைவு. பைபிள் 1,600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு காலப்பகுதியில் ஏறக்குறைய 40 எழுத்தாளர்களால், எந்த முரண்பாடுமில்லாமல் எழுதப்பட்டது. கடுமையான எதிர்ப்புக்கும், அதை அழிக்கும்படியான கடும் முயற்சிகளுக்கும் மத்தியிலும் பைபிள் ஏராளமான எண்ணிக்கையில் விரிவாக எங்கும் விநியோகிக்கப்பட்டது. பைபிள் உரிமை பாராட்டுகிறபடி, அது சர்வவல்லமையுள்ள கடவுளின் வார்த்தையே என்றும், நிச்சயமாகவே, “கற்பிப்பதற்கும் கடிந்துகொள்வதற்கும் காரியங்களைச் சீர்திருத்துவதற்கும் நீதியில் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது” என்றும் நிரூபிப்பதற்கு இந்த உண்மைகள் உதவிசெய்கின்றன.​—2 தீ. 3:16, NW. b

23கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள ராஜ்யத்தின் மூலம் யெகோவாவுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படும். இந்தப் பொருளை பைபிள் மாறாமல் நிலையாக அறிவுறுத்துகிறது. இதிலிருந்து பைபிள் தேவாவியால் ஏவப்பட்டது என்பதாக நிரூபிக்கப்படுகிறது. பின்வரும் சில முக்கியமான எடுத்துக்காட்டுகளை கவனிக்கலாம்:

ஆதி. 3:15 சர்ப்பத்தை அழிக்கப்போகிற வித்தைப் பற்றிய வாக்குறுதி

ஆதி. 22:​15-18 ஆபிரகாமின் வித்தின் மூலமாக சகல ஜாதியாரும் தங்களை

ஆசீர்வதித்து கொள்வார்கள்

யாத். 3:15; 6:3 யெகோவா என்ற பெயரைக் கடவுள் அறிவுறுத்துகிறார்

யாத். 9:16; ரோ. 9:17 தம்முடைய பெயர் அறிவிக்கப்படும்படியான

நோக்கத்தை கடவுள் கூறுகிறார்

யாத். 18:11; ஏசா. 36:​18-20; 37:​20, யெகோவா மற்ற எல்லா கடவுட்களைப்

36-38; எரே. 10:​10, 11 பார்க்கிலும் பெரியவர்

யாத். 20:​3-7 கடவுள் தமது பெயரை மதிக்கிறார், தனிப்பட்ட பக்தியை

உரிமையுடன் கேட்கிறார்

யோபு அதி. 1, 2 யெகோவாவின் நேர்மையான ஆட்சி உரிமை, அதைப் பற்றி

மனிதனின் மனப்பான்மையும் உத்தமத் தன்மையும்

யோபு 32:2; 35:2; 36:24; 40:8 கடவுளுடைய நியாயநிரூபணம் முன்கொண்டுவரப்படுகிறது

ஏசா. 9:7 கடவுள் தம்முடைய குமாரனின் நித்திய ராஜ்யத்தை

ஆர்வத்துடன் ஆதரிக்கிறார்

தானி. 2:44; 4: 17, 34; 7:​13, 14 ‘மனுஷகுமாரன்’ மூலமான கடவுளுடைய

ராஜ்யத்தின் முக்கியத்துவம்

எசே. 6:10; 38:23 ஜனங்கள் ‘நானே யெகோவா என்று அறிந்துகொள்ள

வேண்டும்.’ இந்த கூற்று எசேக்கியல் தீர்க்கதரிசனத்தில்

60-க்கு மேற்பட்ட தடவை தோன்றுகிறது

மல். 1:11 கடவுளுடைய பெயர் தேசங்களுக்குள் மகத்துவமாயிருக்க வேண்டும்

மத். 6:​9, 10, 33 கடவுளுடைய ராஜ்யத்தால் அவருடைய பெயர்

பரிசுத்தப்படுத்தப்படுவதே முதலாவது முக்கியமானது

யோவா. 17:​6, 26 இயேசு கடவுளுடைய பெயரை அறிவித்தார்

அப். 2:21; ரோ. 10:13 இரட்சிப்படைய யெகோவாவின் பெயர்

உபயோகிக்கப்பட வேண்டும்

ரோ. 3:4 ஒவ்வொரு மனிதனும் பொய்யனாகவும் கடவுள்

உண்மையுள்ளவராகவும் நிரூபிக்கப்பட வேண்டும்

1 கொ. 15:​24-28 ராஜ்யம் கடவுளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட

வேண்டும்; கடவுளே எல்லாருக்கும் எல்லாமாக இருப்பார்

எபி. 13:15 கிறிஸ்தவர்கள் யெகோவாவின் பெயரை யாவரறிய

அறிவிக்க வேண்டும்

வெளி. 15:4 சகல ஜாதியாரும் யெகோவாவின் பெயரை

மகிமைப்படுத்துவார்கள்

வெளி. 19:6 மகா பாபிலோன் பாழாக்கப்பட்ட பின்பு யெகோவாவின்

பெயர் துதிக்கப்படுதல்

24(9சாட்சிகளின் உத்தமம். பூர்வ கிறிஸ்தவர்களைப் பற்றி கிறிஸ்தவ வேதவாக்கியங்களை எழுதியவர்களும் மற்றவர்களும் சாட்சி அளித்திருக்கின்றனர். இந்த சாட்சியங்களைப் பற்றி ஜார்ஜ் ராலின்ஸன் சொல்வதாவது: “தொடக்கக் காலத்தில் மதமாறியவர்கள், தங்கள் மதத்தின் காரணமாக எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என அறிந்திருந்தனர். . . . கிறிஸ்தவத்தை ஆதரித்தப் பூர்வ எழுத்தாளர் ஒவ்வொருவரும், தான் ஆதரித்து எழுதியதற்காக, அரசாங்கத்தின் அதிகாரத்தை எதிர்த்தவர் என்று கருதப்பட்டார்; அதைப்போன்ற தண்டனை அவர்களுக்கும் வரும் நிலை ஏற்பட்டது. ஒரு மனிதனுக்கு தன்னுடைய விசுவாசத்தினால், வாழ்வா சாவா என்ற நிலை ஏற்படும்போது, அவன் தன் விருப்பத்தைக் கவரும் முதல் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். துன்புறுத்தப்படும் ஒரு குழுவின் சார்பாக தன்னை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவும் மாட்டான். உண்மை என்பதாக குறிப்பிடப்படும் அந்த மதத்தின் உரிமை பாராட்டல்களை நன்றாக சீர்தூக்கி பார்த்து, அது சத்தியம் என்பதாக நம்பினால் தவிர, ஒரு மனிதன் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க மாட்டான். தொடக்க காலத்தில் மதமாறியவர்களுக்கு கிறிஸ்தவ கூற்றின் சரித்திரப்பூர்வ உண்மையை உறுதிசெய்துகொள்ள நமக்கிருப்பதைப் பார்க்கிலும் அதிக வாய்ப்பிருந்தது. கண்கூடான சாட்சிகளை அவர்கள் விசாரித்து குறுக்குக் கேள்விகளினால் நுணுக்க விவரங்களை கேட்டிருக்க முடியும். அவர்கள் எழுதிய விவரங்களை ஒப்பிட்டு பார்த்திருக்க முடியும். அவர்களுடைய கூற்றுகளை எதிரிகள் எவ்வாறு கருதினர் என்பதை விசாரித்திருக்க முடியும். அன்றைய புறமத எழுத்துக்களை கவனித்து ஆராய்ந்திருக்க முடியும். அத்தாட்சியை முற்றுமுழுக்கவும் நிறைவாகவும் ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்ளவும் முடிந்திருக்கும். . . . இவை எல்லாவற்றோடும் அந்த அத்தாட்சி அதிகரித்து வருகிறது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். நெடுங்காலத்திற்கு முன்பு நடந்த எந்தச் சம்பவங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றிற்கு மிக அரிதாகவே ஆதாரம் இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவ சரித்திரத்தின் சத்தியம் நியாயமான எல்லா சந்தேகத்துக்கும் இடமின்றி ஸ்தாபிக்கப்படுகிறது. எந்த அம்சத்திலும் . . . இது கற்பனை கதையாக இல்லை. இது உண்மையான ஒரு கதை, மாறுபாடில்லாமல் சொல்லப்பட்டது, கற்பனை கதைகளோ நிலையற்று மாறுபட்டிருக்கின்றன. அன்றைய சமுதாயச் சரித்திரத்தோடு விடுவித்துக்கொள்ள முடியாத வகையில் அது ஒன்றிணைந்துள்ளது, அதை திருத்தமாக எங்கும் பிரதிநிதித்துவம் செய்கிறது. கற்பனை கதைகளோ சமுதாயத்தின் சரித்திரத்தைப் புரட்டி அல்லது மாற்றிக் கூறுகின்றன. கிறிஸ்தவ சரித்திரத்தின் உரைநடையில் உண்மைகள் நிறைந்துள்ளன, கற்பனை கதைகளோ அவற்றை வேண்டுமென்றே தவிர்க்கின்றன. அது மிகத் தெளிவாகவும் எளிதாகவும் நடைமுறையில் பயனுள்ள போதனையால் நிரம்பியுள்ளது, கற்பனை கதைகளோவெனில் உருவகக் கதையைக்கொண்டு கற்பிக்கின்றன. . . . உண்மையான ஆர்வம், கடமைத்தவறாமை, திருத்தமாயிருப்பதற்குக் கடுமுயற்சியெடுத்தல், சத்தியத்தின்பேரில் தூய்மையான அன்பு ஆகியவை புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்களுடைய தனித்தன்மை வாய்ந்த பண்புகள். இவர்கள் தெளிவாகவே உண்மை நிகழ்ச்சிகளைக் கையாளுகிறார்கள், கற்பனை கதைகளையல்ல . . . ‘விஷயங்களை முழு நிச்சயமாக நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று’ அவர்கள் எழுதுகிறார்கள், அவை அவர்களுடைய நாளில் ‘அதிக நிச்சயமாக நம்பப்பட்டன.’ cலூக்கா 1:​1, 4-ஐ ஒப்பிடுக.

25பைபிளில் அடங்கியுள்ள கவனத்தை கவரும் ஒரு அம்சம் கடவுளின் தீர்க்கதரிசனமாகும். பைபிளின் நம்பகத் தன்மை அதனுடைய தீர்க்கதரிசனங்கள் அநேகம் நிறைவேற்றமடைவதில் மெய்ப்பித்து காட்டப்படுகிறபடி வேறு எவ்வகையிலும் காட்டப்படவில்லை. இவை யாவும் எதிர்காலத்தை முன்னறிவிப்பதில் யெகோவாவின் குறிப்பிடத்தக்க திறனை காட்டுகின்றன. இந்தத் தீர்க்கதரிசன வார்த்தை நிச்சயமாகவே ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்காக’ உள்ளது. ராஜ்ய தீர்க்கதரிசனம் முழுவதும், கடவுளுடைய நீதியுள்ள நித்திய புதிய உலகத்தில் நிறைவேற்றமடையும் வரை தப்பிப்பிழைத்திருக்க விரும்புவோரின் விசுவாசத்தை இது பலப்படுத்தும். எனவே இதற்கு கவனம் செலுத்துவது அவசியம். பின்தொடரும் மூன்று அட்டவணைகளும் பைபிளின் நம்பகத் தன்மைக்கு அதிக நிரூபணத்தை அளிக்கின்றன. இவை இந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள் பலவற்றையும், எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமங்களின் ஒத்திசைவையும் காட்டுகின்றன. மெய்யாகவே ‘கடவுளால் ஏவப்பட்டதும் பயனுள்ளதுமான’ பைபிள் காலம் கடந்து செல்லச்செல்ல அதிகமாக பிரகாசிக்கிறது.​—2 பே. 1:19; 2 தீ. 3:16, NW.

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமப் பதிவுகளின் உண்மையைப் பற்றிய சரித்திரப்பூர்வ அத்தாட்சிகள் (ஆங்கிலம்) 1862, ஜார்ஜ் ராலின்ஸன், பக்கங்கள் 54, 254-8.

b 1871, பக்கங்கள் 29-31.

c வேதாகமப் பதிவுகளின் உண்மையைப் பற்றிய சரித்திரப்பூர்வ அத்தாட்சிகள், பக்கங்கள் 25-6.

d சீனாயும் பலஸ்தீனாவும் (ஆங்கிலம்) 1885, பக்கங்கள் 82-3.

e ரீடர்ஸ் டைஜஸ்ட், மார்ச் 1954, பக்கங்கள் 27, 30.

f 1984, பக்கம் 24.

g 1968, பக்கங்கள் 4-5.

h கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் ராயல் ஏஷியாட்டிக் சொஸையிட்டியின் பத்திரிகை, (ஆங்கிலம்) லண்டன், 1855, புத். 15, பக்கம் 232.

i வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 246.

j வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 555-6, 1035.

k திராட்சமது உணவாகவும் மருந்தாகவும் (ஆங்கிலம்) 1954, பக்கம் 5.

l 1955, பக்கங்கள் 211-13.

a வேதாகமப் பதிவுகளின் உண்மையைப்பற்றிய சரித்திரப்பூர்வ அத்தாட்சிகள், பக்கம் 290.

b பைபிள்​—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?, (ஆங்கிலம்) பக்கங்கள் 12-36.

c வேதாகமப் பதிவுகளின் உண்மையைப் பற்றிய சரித்திரப்பூர்வ அத்தாட்சிகள், பக்கங்கள் 225, 227-8.

[கேள்விகள்]

1. (அ) பொதுவாக பைபிள் என்னவாக ஏற்கப்பட்டிருக்கிறது? (ஆ) அதன் ஒப்பற்ற மேன்மைக்கு அடிப்படை காரணம் என்ன?

2, 3. பைபிள் தேவாவியால் ஏவப்பட்டது என்பதற்கு பைபிளின் எழுத்தாளர்கள் எவ்வாறு சாட்சிபகர்ந்தனர்?

4. எபிரெய வேதாகமத்தின் புத்தகங்களை யூதர்கள் எல்லா சமயத்திலும் எவ்வாறு கருதினர்?

5. மோசேயையும் யூதர்களின் நியாயப்பிரமாண தொகுப்பையும் குறித்து பூர்வ எழுத்தாளர்கள் என்ன சாட்சியளித்திருக்கின்றனர்?

6. கிரேக்க வேதாகமம் சரித்திரப்பூர்வமாக திருத்தமாயிருப்பதை என்ன சாட்சியம் ஆதரிக்கிறது?

7. (அ) பைபிளின் நம்பகத் தன்மைக்குரிய மேம்பட்ட உரிமை பாராட்டல்களை குறித்து என்ன விவாதத்தை எஸ். ஏ. அலிபோன் அளிக்கிறார்? (ஆ) இந்த அத்தாட்சியை ஏற்க மறுப்பவர்களிடத்தில் எது தவறாயிருப்பதாக அவர் சொல்கிறார்?

8. எவ்வகையில் பைபிளின் கிறிஸ்தவம் மற்ற எல்லா மதங்களிலிருந்தும் மேன்மையானதாக காட்டப்பட்டிருக்கிறது?

9. பைபிளின் புவியியல் குறிப்புகளின் திருத்தமான தன்மையை விளக்கவும்.

10. பைபிள் பதிவை பின்பற்றியதில் தற்கால அறிவியலாளர்கள் எவ்வாறு பயனடைந்திருக்கின்றனர்?

11. பைபிளின் திருத்தமான தன்மையைக் குறித்து பேராசிரியர் வில்சன் எவ்வாறு சாட்சிபகருகிறார்?

12. மனித இனத்தின் தொடக்கத்தைப் பற்றிய பைபிள் பதிவுடன் உண்மை நிகழ்ச்சிகள் எவ்வாறு பொருந்துகின்றன?

13. பூர்வ மொழிகள் எந்த மையத்திலிருந்து பரவின என்பதை குறித்து ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் என்ன சொன்னார்?

14. (அ) பைபிள் கடவுளால் ஏவப்பட்டது என்பதை எது மட்டுமே நிரூபிக்கும்? (ஆ) பகுத்தறிவுக்கு பொருத்தமான என்ன நோக்குநிலை பைபிளில் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எட்டுகிறது?

15. மன மற்றும் உடல் ஆரோக்கியத்தின்பேரில் பைபிளின் என்ன அறிவுரை நடைமுறையானதாக காட்டப்பட்டிருக்கிறது?

16. அறிவியல் கண்டுபிடிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே பைபிள் குறிப்பிட்டுள்ள சில உண்மைகள் யாவை?

17. மருத்துவ ரீதியிலும் பைபிள் தெளிவான கருத்துக்களை அளிக்கிறது என்று எவ்வாறு சொல்லலாம்?

18. அறிவியலின்படி பைபிளின் திருத்தமான தன்மைக்கு வேறு என்ன உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது?

19. லூக்காவுடைய எழுத்துக்களின் திருத்தமான தன்மையை எவ்வாறு உதாரணத்துடன் விளக்கலாம்?

20. எவ்வாறு பவுலின் எழுத்துக்கள் அவர் வாழ்ந்ததும் எழுதியதுமான காலங்களை திருத்தமாக பிரதிபலிக்கின்றன?

21. (அ) பைபிள் எழுத்தாளர்களின் ஒளிவுமறைவற்றத் தன்மைக்கு உதாரணங்களை கொடுங்கள். (ஆ) பைபிள் உண்மையிலேயே சத்தியம் என்பதற்கு இது எவ்வாறு நம்பிக்கை அளிக்கிறது?

22. பைபிள் நிச்சயமாகவே கடவுளுடைய வார்த்தை என்று வேறு எதுவும் நிரூபிக்கிறது, என்ன நோக்கத்துடன் இது எழுதப்பட்டது?

23. மாறாமல் நிலையாக சொல்லப்படும் எந்தப் பொருள், பைபிள் தேவாவியால் ஏவப்பட்டதை நிரூபிக்கிறது? உதாரணத்துடன் விளக்குங்கள்.

24. (அ) ‘கிறிஸ்தவ சரிதையின்’ சத்தியத்தை பூர்வ கிறிஸ்தவர்களின் உத்தமத்தன்மை எவ்வாறு நிரூபிக்கிறது? (ஆ) பைபிள் எழுத்தாளர்கள், கற்பனைகளையல்ல, உண்மையான நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்தனர் என்பதற்கு வேறு என்ன நிரூபணம் உள்ளது?

25. பைபிளின் நம்பகத் தன்மையை எது தெளிவாக மெய்ப்பித்துக் காட்டுகிறது?

[பக்கம் 343344-ன் அட்டவணை]

(10) இயேசுவைப் பற்றிய முக்கிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றமும்

தீர்க்கதரிசனம் சம்பவம் நிறைவேற்றம்

ஆதி. 49:10 யூதாவின் கோத்திரத்தில் பிறந்தார் மத். 1:​2-16;

லூக். 3:​23-33; எபி. 7:14

சங். 132:11; ஈசாவின் குமாரனாகிய தாவீதின் மத். 1:​1, 6-16; 9:27;

ஏசா. 9:7; குடும்பத்தைச் சேர்ந்தவர் மத்15:22;

ஏசா11:​1, 10 மத்20:​30, 31;

மத்21:​9, 15; 22:42;

மாற். 10:​47, 48;

லூக். 1:32; 2:​4, 5;

லூக்3:​23-32; 18:​38, 39; அப். 2:​29-31; 13:​22, 23; ரோ. 1:4,5; 15:​8, 12

மீ. 5:2 பெத்லகேமில் பிறந்தார் லூக். 2:​4-11; யோவா. 7:42

ஏசா. 7:14 கன்னியிடம் பிறந்தார் மத். 1:​18-23; லூக். 1:​30-35

எரே. 31:15 அவருடைய பிறப்புக்குப்பின் மத். 2:​16-18

குழந்தைகள் கொல்லப்பட்டனர்

ஓசி. 11:1 எகிப்திலிருந்து அழைக்கப்பட்டார் மத். 2:15

மல். 3:1; முன்னாக வழி மத். 3:​1-3; 11:​10-14;

மல்4:5; ஆயத்தப்படுத்தப்பட்டது மத்17:​10-13; மாற். 1:​2-4;

ஏசா. 40:3 லூக். 1:​17, 76; 3:​3-6;

லூக்7:27;

யோவா. 1:​20-23; 3:​25-28; அப். 13:24; 19:4

தானி. 9:25 69 ‘வாரங்களின்’ முடிவில் முழுக்காட்டப்படுவதற்கு தம்மை

மேசியாவாகத் தோன்றினார் அளித்து முன்குறிக்கப்பட்ட காலத்தில்,

பொ.ச. 29-ல் அபிஷேகம்

செய்யப்பட்டார்

(லூக். 3:​1, 21, 22)

ஏசா. 61:1, 2 பொறுப்பளித்து அனுப்பப்பட்டார் லூக். 4:​18-21

ஏசா. 9:​1, 2 ஊழியம், நப்தலியிலும் மத். 4:​13-16

செபுலோனிலுமிருந்த ஜனங்கள்

பெரிய வெளிச்சத்தைக் காண

உதவியது

சங். 78:2 உவமைகளைக்கொண்டு பேசினார் மத். 13:​11-13, 31-35

ஏசா. 53:4 நம்முடைய நோய்களைச் சுமந்தார் மத். 8:​16, 17

சங். 69:9 யெகோவாவின் வீட்டுக்காகப் மத். 21:​12, 13;

பக்திவைராக்கியமுள்ளவராக இருந்தார் மாற். 11:​15-18;

லூக். 19:​45, 46;

யோவா. 2:​13-17

ஏசா. 42:​1-4 யெகோவாவின் ஊழியராக, வீதிகளில் மத். 12:​14-21

உரக்க வாதாட மாட்டார்

ஏசா. 53:1 நம்பப்படவில்லை யோவா. 12:​37, 38;

ரோ. 10:​11, 16

சக. 9:9; கழுதைக் குட்டியின்மீதேறி மத். 21:​1-9;

சங். 118:26 எருசலேமுக்குள் பிரவேசித்தார்; மாற். 11:​7-11;

அரசரென்றும் யெகோவாவின் பெயரில் லூக். 19:​28-38;

வருகிறவரென்றும் வாழ்த்தப்பட்டார் யோவா. 12:12-15

ஏசா. 28:16; ஏற்கப்படவில்லை, மத். 21:​42, 45, 46;

ஏசா53:3; ஆனால் மூலைக்குத் அப். 3:14; 4:11;

சங். 69:8; தலைக்கல்லாகிறார் 1 பே. 2:7

சங்118:​22, 23

ஏசா. 8:​14, 15 இடறல் கல்லாகிறார் லூக். 20:​17, 18;

ரோ. 9:​31-33; 1 பே. 2:8

சங். 41:9; 109:8 ஒரு அப்போஸ்தலன் உண்மையற்றவன்; மத். 26:​47-50;

இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறான் யோவா. 13:​18, 26-30;

யோவா17:12; 18:​2-5;

அப். 1:​16-20

சக. 11:1230 வெள்ளிக்காசுகளுக்கு மத். 26:15; 27:​3-10;

காட்டிக்கொடுக்கப்படுகிறார் மாற். 14:​10, 11

சக. 13:7 சீஷர்கள் சிதறிப்போகின்றனர் மத். 26:​31, 56;

யோவா. 16:32

சங். 2:​1, 2 யெகோவாவின் அபிஷேகம் மத். 27:​1, 2;

பண்ணப்பட்டவருக்கு எதிராக ரோம மாற்.15:​1, 15;

அதிகாரிகளும் இஸ்ரவேலின் லூக். 23:​10-12;

அதிபதிகளும் ஒன்றுசேர்ந்து அப். 4:​25-28

செயல்படுகின்றனர்

ஏசா. 53:8 விசாரணைசெய்து கண்டனம் மத். 26:​57-68;

செய்யப்படுகிறார் மத்27:​1, 2, 11-26;

யோவா. 18:​12-14,

யோவா 18:19-24,

யோவா 18:28-40;

யோவா19:​1-16

சங். 27:12 பொய்ச் சாட்சிகளைப் பயன்படுத்துதல் மத். 26:​59-61;

மாற். 14:​56-59

ஏசா. 53:7 குற்றஞ்சாட்டுவோர் முன்பாக மத். 27:​12-14;

மௌனமாயிருக்கிறார் மாற். 14:61; 15:​4, 5;

லூக். 23:9; யோவா. 19:9

சங். 69:4 காரணமில்லாமல் பகைக்கப்பட்டார் லூக். 23:​13-25;

யோவா. 15:​24, 25;

1 பே. 2:22

ஏசா. 50:6; அடித்து, துப்பப்படுகிறார் மத். 26:67;

மீ. 5:1 மத்27:​26, 30;

யோவா. 18:22; 19:3

சங். 22:​16, NW, கழுமரத்தில் அறையப்பட்டார் மத். 27:35;

அடிக்குறிப்பு மாற். 15:​24, 25;

லூக். 23:33;

யோவா. 19:​18, 23;

யோவா20:​25, 27

சங். 22:18 வஸ்திரங்களுக்காகச் மத். 27:35;

சீட்டு போடப்பட்டது யோவா. 19:​23, 24

ஏசா. 53:12 பாவிகளோடு எண்ணப்பட்டார் மத். 26:​55, 56; 27:38;

லூக். 22:37

சங். 22:​7, 8 கழுமரத்தில் அறையப்பட்டிருக்கையில் மத். 27:​39-43;

தூஷிக்கப்பட்டார் மாற். 15:​29-32

சங். 69:21 கசப்புக் கலந்த காடி மத். 27:​34, 48;

கொடுக்கப்பட்டது மாற். 15:​23, 36

சங். 22:1 கடவுளால் சத்துருக்களிடம் மத். 27:46;

கைவிடப்பட்டார் மாற். 15:34

சங். 34:20; எலும்புகள் ஒன்றும் யோவா. 19:​33, 36

முறிக்கப்படவில்லை யாத். 12:46

ஏசா. 53:5; குத்தப்பட்டார் மத். 27:49;

சக. 12:10 யோவா. 19:​34, 37;

வெளி. 1:7

ஏசா. 53:​5, 8, 11, 12 பாவங்களைச் சுமந்து தீர்க்கவும், மத். 20:28;

கடவுளுடன் நீதியுள்ள யோவா. 1:29;

நிலைநிற்கைக்கு வழியைத் திறக்கவும் ரோ. 3:24; 4:25;

பலியாக மரிக்கிறார் 1 கொ. 15:3;

எபி. 9:​12-15;

1 பே. 2:24; 1 யோ. 2:2

ஏசா. 53:9 ஐசுவரியவான்களோடு அடக்கம் மத். 27:​57-60;

செய்யப்பட்டார் யோவா. 19:​38-42

யோனா 1:17; 2:10 மூன்று நாட்களின் பகுதிகள் மத். 12:​39, 40;

கல்லறையில் இருந்து, மத்16:21; 17:23;

பின்பு உயிர்த்தெழுப்பப்பட்டார் மத்20:19; 27:64;

மத்28:​1-7;

அப். 10:40;

1 கொ. 15:​3-8

சங். 16:​8-11, NW, மாம்சம் அழிவதற்கு முன்னால் அப். 2:​25-31;

அடிக்குறிப்பு எழுப்பப்பட்டார் அப்13:​34-37

சங். 2:7 ஆவியால் பிறப்பிப்பதாலும் மத். 3:​16, 17;

உயிர்த்தெழுப்புவதாலும் யெகோவா மாற். 1:​9-11;

அவரைத் தம்முடைய குமாரனென லூக். 3:​21, 22;

அறிவிக்கிறார் அப். 13:​32, 33;

ரோ. 1:4, 5;

எபி. 1:5; 5:5

“இயேசுவைப் பற்றிய முக்கிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றமும்” என்ற அட்டவணையின்பேரில் கேள்விகள்:

(அ) இயேசுவின் பிறப்பை குறித்த என்ன தீர்க்கதரிசனங்கள் அவரே மேசியானிய பதவிக்குரியவர் என்று உறுதிசெய்தன?

(ஆ) இயேசுவின் ஊழியத் தொடக்கத்தில் என்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடைந்தன?

(இ) இயேசு தம்முடைய ஊழியத்தை செய்த முறையால் தீர்க்கதரிசனத்தை எவ்வாறு நிறைவேற்றினார்?

(ஈ) இயேசுவின் விசாரணைக்கு முன்னான கடைசி சில நாட்களின்போது என்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடைந்தன?

(உ) அவருடைய விசாரணையின்போது தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?

(ஊ) கழுமரத்தில் உண்மையில் அறையப்படுதலையும், அவருடைய மரணத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் என்ன தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டின?

[பக்கம் 344-346-ன் அட்டவணை]

(11) பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதற்கு உதாரணங்கள்

தீர்க்கதரிசனம் சம்பவம் நிறைவேற்றம்

ஆதி. 9:25 கானானியர் இஸ்ரவேலருக்கு யோசு. 9:​23, 27;

வேலைக்காரர்களாக வேண்டும் நியா. 1:28; 1 இரா. 9:​20, 21

ஆதி. 15:​13, 14; அடிமைப்படுத்தும் தேசத்தைக் யாத். 12:​35, 36;

யாத். 3:​21, 22 கடவுள் நியாயந்தீர்க்கையில் சங். 105:37

இஸ்ரவேல் மிகுந்த பொருட்களுடன்

எகிப்திலிருந்து வெளியேற வேண்டும்

ஆதி. 17:20; இஸ்மவேல் 12 பிரபுக்களைப் ஆதி. 25:​13-16;

ஆதி21:​13, 18 பெற்று பெரிய ஒரு ஜனமாக 1 நா. 1:​29-31

வேண்டும்

ஆதி. 25:23; ஏதோமியர் செழுமையான ஆதி. 36:8;

ஆதி27:​39, நிலங்களிலிருந்து விலகிய உபா. 2:​4, 5;

ஆதி 27:40, தி.மொ. இடத்தில் வாழ்வார்கள், 2 சா. 8:14;

இஸ்ரவேலரைச் சேவிப்பார்கள், 2 இரா. 8:20;

சிலசமயங்களில் எதிர்த்துக் 1 நா. 18:13;

கலகஞ்செய்வார்கள் 2 நா. 21:​8-10

ஆதி. 48:​19, 22 எப்பிராயீம் மனாசேயைப் எண். 1:​33-35;

பார்க்கிலும் பெரியவனாவான், உபா. 33:17;

ஒவ்வொரு கோத்திரமும் யோசு. 16:​4-9; 17:​1-4

பரம்பரை சொத்துடையதாக இருக்கும்

ஆதி. 49:7 சிமியோனும் லேவியும் இஸ்ரவேலில் யோசு. 19:​1-9;

சிதறியிருப்பர் யோசு21:​41, 42

ஆதி. 49:10 அரசத் தலைமைவகிப்பு யூதாவிலிருந்து 2 சா. 2:4;

வரவேண்டும் 1 நா. 5:2;

மத். 1:​1-16;

லூக். 3:​23-33;

எபி. 7:14

உபா. 17:14 இஸ்ரவேலர் முடியாட்சியை கேட்பார்கள் 1 சா. 8:​4, 5,

1 சா19, 20

உபா. 28:​52, 53, உண்மையற்றுப்போவதற்காக இஸ்ரவேல் பொ.ச.மு. 740-ல்

உபா64-66, தண்டிக்கப்படும்; நகரங்கள் சமாரியாவின்மீதும்

முற்றுகையிடப்படும், அடிமைத்தனத்துக்குள் (2 இரா. 17:​5-23),

உபா68 அனுப்பப்படுவார்கள் பொ.ச.மு. 607-ல்

எருசலேமின்மீதும்

(எரே. 52:​1-27),

பொ.ச. 70-ல்

மறுபடியுமாக

எருசலேமின்மீதும் நிறைவேறின

யோசு. 6:26 எரிகோவைத் திரும்பக் கட்டுவோருக்கானத் 1 இரா. 16:34

தண்டனை

1 சா. 2:​31, 34; ஏலியின் வம்சாவழி சபிக்கப்பட்டது 1 சா. 4:​11,

1 சா3:​12-14 1 சா17, 18;

1 இரா. 2:​26, 27, 35

1 இரா. 9:7, 8; இஸ்ரவேலர் விசுவாசத் 2 இரா. 25:9;

2 நா. 7:​20, 21 துரோகிகளாகிவிட்டால் ஆலயம் 2 நா. 36:19;

அழிக்கப்படும் எரே. 52:13;

புல. 2:​6, 7

1 இரா. 13:​1-3 யெரொபெயாமின் பலிபீடம் 2 இரா. 23:​16-18

தீட்டுப்படுத்தப்படும்

1 இரா. 14:15 இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யம் 2 இரா. 17:​6-23;

கவிழ்க்கப்படுதல் 2 இரா18:​11, 12

ஏசா. 13:​17-22; பாபிலோனின் அழிவு; தானி. 5:​22-31;

ஏசா45:​1, 2; பாபிலோனின் கதவுகள் மூடாமல் உலகப்பிரகாரமான

எரே. 50:​35-46 விடப்பட்டிருக்கும்; கோரேசின்கீழ் சரித்திரம்

எரே51:​37-43 மேதியரும் பெர்சியரும் அதைக் உறுதிப்படுத்துகிறது.

கைப்பற்றுவார்கள் கதவுகள் திறந்தவையாக

விடப்பட்டிருந்தபோது

கோரேசு பாபிலோனைக்

கைப்பற்றினார் d

ஏசா. 23:​1, 8, 13, 14; தீரு பட்டணம் நேபுகாத்நேச்சாரின் அந்நகரத்தின்

எசே. 26:​4, 7-12 தலைமையின்கீழ் கல்தேயரால் பெருநிலப்பகுதி

அழிக்கப்படும் அழிக்கப்பட்டதென்றும்

தீவுப்பகுதி 13-ஆண்டு

முற்றுகைக்குப்பின்

நேபுகாத்நேச்சாரிடம்

சரணடைந்ததென்றும்

உலகப்பிரகாரமான

சரித்திரம்

பதிவுசெய்திருக்கிறது. e

ஏசா. 44:​26-28 திரும்பிவரும் நாடுகடத்தப்பட்ட 2 நா. 36:​22, 23;

யூதர்களால் எருசலேமும் ஆலயமும் எஸ்றா 1:​1-4

திரும்பக் கட்டப்படும்; அதில்

கோரேசின் பாகம்

எரே. 25:11; 29:10 70 ஆண்டு பாழ்க்கடிப்புக்குப் பின்பே தானி. 9:​1, 2;

மீதியானோர் திரும்ப சக. 7:5;

நிலைநாட்டப்படுவர் 2 நா. 36:​21-23

எரே. 48:​15-24; மோவாப் பாழாக்கப்படும் மோவாப் இப்போது

எசே. 25:​8-11; ஒழிந்து

செப். 2:​8, 9 இல்லாமற்போன

தேசம் f

எரே. 49:2; அம்மோனியர் பட்டணங்கள் அம்மோன் இப்போது,

எசே. 25:1-7; பாழ்மேடுகளாகும் ஒழிந்து இல்லாமற்போன

செப். 2:​8, 9 ஒரு தேசம் g

எரே. 49:​17, 18; ஏதோம் ஒருபோதும் இருக்கவில்லை பொ.ச. 70-ல்

எசே. 25:​12-14; என்பதுபோல் ஒழிக்கப்படும் எருசலேமின் அழிவுக்குப்பின்

எசே35:​7, 15; ஏதோம் ஒரு

ஒப. 16, 18 தேசமாக இல்லாமல்

அற்றுப்போயிற்று h

தானி. 2:​31-40; நான்கு ராஜ்யங்கள் உருப்படுத்திக் உலகப்பிரகாரமான

தானி7:​2-7 காட்டப்பட்டன: பாபிலோன், பெர்சியா, சரித்திரம் இந்த

கிரீஸ், ரோம். தீர்க்கதரிசன வல்லரசுகளின்

நுட்பவிவரங்கள் பல எழுச்சியிலும் வீழ்ச்சியிலும்

முன்னறிவிக்கப்பட்டன நிறைவேற்றங்களை

உறுதிப்படுத்துகின்றன i

தானி. 8:​1-8, 20-22; பெர்சிய ராஜ்யத்துக்குப் பின், பலத்த மகா அலெக்ஸாண்டர்

தானி11:​1-19 கிரீஸ் பேரரசாக ஆளும். அந்த பெர்சிய பேரரசை

ராஜ்யம் நான்காகப் பிரிக்கப்படும், வென்று கைப்பற்றினார்.

அவற்றிலிருந்து இரண்டு வல்லரசுகளான அவருடைய மரணத்துக்குப்

வடதேசத்து ராஜா தென்தேசத்து ராஜா பின் நான்கு தளபதிகள்

எழும்புவர் ஆண்டனர். முடிவில்

செலூஸிய மற்றும்

டாலமேய வல்லரசுகள்

தோன்றி

ஒருவரோடொருவர்

தொடர்ந்து

போரிட்டனர் j

தானி. 11:​20-24, NW குடிமதிப்பெழுதும்படி அரசன் அகுஸ்து ராயனின்

கட்டளையிடுவான். அவனுக்குப்பின் ஆட்சியின்போது

வருபவனின் நாட்களில், பலஸ்தீனாவில் பெயர்ப்பதிவு

‘உடன்படிக்கையின் தலைவர்’ செய்யும்படியானக்

முறிக்கப்படுவார் கட்டளை; அவருக்குப்

பின் பதவியேற்ற

திபேரியு ராயனின்

ஆட்சியின்போது இயேசு

கொல்லப்பட்டார் k

செப். 2:​13-15; நினிவே பாழாகும் குப்பை

நாகூ. 3:​1-7 மேடாயிற்று l

சக. 9:3, 4 தீருவின் தீவு பட்டணம் அழிக்கப்படும் பொ.ச.மு. 332-ல்

அலெக்ஸாண்டரால்

நிறைவேற்றப்பட்டது a

மத். 24:​2, 16-18; எருசலேம் கூர்க் கம்ப பொ.ச. 70-ல்

லூக். 19:​41-44, NW மதில்கள் அமைத்து சூழப்பட்டு ரோமர்

அழிக்கப்படும் நிறைவேற்றினர் b

மத். 24:​7-14; இந்தக் காரிய ஒழுங்குமுறையின் 1914-ல் முதல் உலகப்

மாற். 13:8; பூரண முடிவுக்கு முன் கொடிய காலம் போர் முதற்கொண்டு

லூக். 21:​10, 11, முன்னறிவிக்கப்பட்டது; போர், உணவு பூமியில்

லூக் 21:25-28; குறைபாடு, பூமியதிர்ச்சி, கொள்ளைநோய், முன்னொருபோதுமிராத

2 தீ.  3:​1-5 அக்கிரமம், ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி கொடிய காலம்.

சகல ஜாதியாருக்கும் பிரசங்கித்தல் ராஜ்ய பிரசங்கம்

இப்போது 230-க்கு

மேற்பட்ட நாடுகளில்

செய்யப்பட்டு வருகிறது

[அடிக்குறிப்புகள்]

d ஹெரோடொட்டஸ் I, 191, 192; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 567.

e மக்ளின்டாக் அண்ட் ஸ்டிராங்ஸ் ஸைக்ளோப்பீடியா, 1981 மறுபதிப்பு, தொ. X, பக்கம் 617; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 531, 1136.

f வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 421-2.

g வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 95.

h வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 681-2.

i “உம்முடைய சித்தம் பூமியிலேயும் செய்யப்படுவதாக,” (ஆங்கிலம்) பக்கங்கள் 104-25, 166-77, 188-95, 220-9.

j “உம்முடைய சித்தம் பூமியிலேயும் செய்யப்படுவதாக,” பக்கங்கள் 121-2, 172-4, 194-5, 220-63; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 70-1.

k “உம்முடைய சித்தம் பூமியிலேயும் செய்யப்படுவதாக,” பக்கங்கள் 248-53; வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 220.

l பக்கம் 159, பாராக்கள் 5, 6, பாருங்கள்.

a மக்ளின்டாக் அண்ட் ஸ்டிராங்ஸ் ஸைக்ளோப்பீடியா, 1981 மறுபதிப்பு, தொ. X, பக்கங்கள் 618-19.

b பக்கம் 188, பாரா 9 பாருங்கள்.

“பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதற்கு உதாரணங்கள்” என்ற அட்டவணையின்பேரில் கேள்விகள்:

(அ) முன்னறிவிக்கப்பட்ட என்ன சம்பவங்கள் இஸ்ரவேல் ஜனம் கானான் தேசத்துக்குள் வந்தப் பின் நடந்தன?

(ஆ) இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் எதிரான நியாயத்தீர்ப்புக்குரிய என்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, எப்போது?

(இ) திரும்ப நிலைநாட்டப்படுவதைப்பற்றி என்ன முன்னறிவிக்கப்பட்டது? இது நிறைவேறியதா?

(ஈ) எந்த தேசங்களுக்கு எதிராக தனிப்பட்ட நியாயத்தீர்ப்பு செய்திகள் அறிவிக்கப்பட்டன, இந்தத் தீர்க்கதரிசன ஆக்கினைத் தீர்ப்புகள் எவ்வாறு நிறைவேறின?

(உ) தானியேல் முன்னறிவித்த சரித்திர முக்கியமான சம்பவங்கள் சில யாவை? இயேசு குறிப்பிட்டவை யாவை?

[பக்கம் 346-349-ன் அட்டவணை]

(12) கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் எபிரெய வேதாகமத்திலிருந்து எடுத்த சில மேற்கோள்களும் பொருத்தங்களும்

(குறிப்பு: முந்தைய பக்கங்களில், ‘இயேசுவைப் பற்றிய முக்கியமான தீர்க்கதரிசனங்கள்,’ என்பதில் குறிப்பிடப்பட்ட வசனக் குறிப்புகளை இந்தப் பட்டியல் சேர்க்கிறதில்லை.)

தீர்க்கதரிசனம் சம்பவம் நிறைவேற்றம்

ஆதி. 1:3 வெளிச்சம் பிரகாசிக்கும்படி கடவுள் 2 கொ. 4:6

கட்டளையிடுகிறார்

ஆதி. 1:​26, 27 மனிதர்கள் கடவுளின் சாயலில், யாக். 3:9;

ஆணும் பெண்ணுமாக மாற். 10:6

உண்டாக்கப்பட்டார்கள்

ஆதி. 2:2 பூமிக்குரிய படைப்பு வேலையிலிருந்து எபி. 4:4

கடவுள் ஓய்ந்திருக்கிறார்

ஆதி. 2:7 ஆதாம் உயிருள்ள 1 கொ. 15:45

ஆத்துமாவாக்கப்பட்டான்

ஆதி. 2:24 மனிதன் தன் பெற்றோரை விட்டு மத். 19:5;

தன் மனைவியோடு இசைந்திருப்பான்; மாற். 10:​7, 8;

இருவரும் ஒரே மாம்சமாகிறார்கள் 1 கொ. 6:16; எபே. 5:31

ஆதி. 12:3; 18:17 ஆபிரகாம் மூலமாக சகல ஜனத்தாரும் கலா. 3:8

ஆசீர்வதிக்கப்படுவர்

ஆதி. 15:5 ஆபிரகாமுடைய வித்து அநேகமாயிருக்கும் ரோ. 4:18

ஆதி. 15:6 விசுவாசம் ஆபிரகாமுக்கு நீதியாக ரோ. 4:3; கலா. 3:6;

எண்ணப்பட்டது யாக். 2:23

ஆதி. 17:5 “திரளான ஜாதிகளிலிருந்து” வரும் ரோ. 4:​16, 17

விசுவாசமுள்ளோருக்கு ஆபிரகாம் தகப்பன்

ஆதி. 18:​10, 14 சாராளுக்கு ஒரு குமாரன் ரோ. 9:9

வாக்களிக்கப்படுகிறான்

ஆதி. 18:12 சாராள் ஆபிரகாமை “ஆண்டவன்” 1 பே. 3:6

என்றழைக்கிறாள்

ஆதி. 21:10 சாராள், ஆகார், ஈசாக்கு, மற்றும் இஸ்மவேல் கலா. 4:30

உட்பட்ட அடையாளக் குறிப்பான நாடகம்

ஆதி. 21:12 ஆபிரகாமின் வித்து ஈசாக்கின் மூலம் வரும் ரோ. 9:7; எபி. 11:18

ஆதி. 22:​16-18 ஆபிரகாமை ஆசீர்வதிப்பதாக கடவுள் எபி. 6:​13, 14

தம்மைக்கொண்டு ஆணையிடுகிறார்

ஆதி. 25:23 ஏசாவுக்கு மேலாக யாக்கோபிடமே ரோ. 9:12

கடவுளுடைய தயவு முன்னறிவிக்கப்பட்டது

யாத். 3:6 கடவுள், மரித்தோருக்கல்ல, உயிருள்ளோருக்கே மத். 22:31, 32;

கடவுளாயிருக்கிறார் மாற். 12:26;

லூக். 20:37

யாத். 9:16 பார்வோன் தொடர்ந்திருக்கும்படி ரோ. 9:17

கடவுள் அனுமதித்ததற்கு காரணம்

யாத். 13:​2, 12 முதற்பேறு யெகோவாவுக்கு லூக். 2:23

ஒப்புக்கொடுக்கப்பட்டது

யாத். 16:18 மன்னாவை கூட்டிச்சேர்ப்பதில் கடவுள் 2 கொ. 8:14

எல்லாருக்கும் சரிசமமாக்குகிறார்

யாத். 19:​5, 6 இஸ்ரவேல் ஆசாரிய ராஜ்யமாகும் நிலையில் 1 பே. 2:9

இருந்தது

யாத். 19:​12, 13 சீனாய் மலையில் யெகோவா வெளிப்படுத்திய எபி. 12:​18-20

வியக்கத்தக்க காட்சி

யாத். 20:​12-17 ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, மத். 5:​21, 27;

ஒன்பதாவது, பத்தாவது கற்பனைகள் மத் 15:4; 19:​18, 19;

மாற். 10:19; லூக். 18:20;

ரோ. 13:9;

எபே. 6:​2, 3; யாக். 2:11

யாத். 21:17 ஐந்தாம் கற்பனையை மீறுவதற்கு மத். 15:4;

தண்டனை மாற். 7:10

யாத். 21:24 கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் மத். 5:38

யாத். 22:​28, தி.மொ. “உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாதே” அப். 23:5

யாத். 24:8 நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்தல் எபி. 9:20;

​—“உடன்படிக்கையின் இரத்தம்” மத். 26:28; மாற். 14:24

யாத். 25:40 ஆசரிப்பு கூடாரத்தின் மற்றும் அதன் எபி. 8:5

தட்டுமுட்டு பொருட்களின் மாதிரி

மோசேக்கு போதிக்கப்பட்டது

யாத். 32:6 இஸ்ரவேலர் களியாடி, மிதமீறிய 1 கொ. 10:7

இன்பமனுபவிக்க எழுந்தனர்

யாத். 33:19 கடவுள் தமக்குப் பிரியமான ரோ. 9:15

எவர்மீதும் இரக்கமாயிருக்கிறார்

லேவி. 11:44 “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் 1 பே. 1:16

பரிசுத்தராயிருப்பீர்களாக”

லேவி. 12:8 ஒரு குமாரனின் பிறப்புக்குப்பின் லூக். 2:24

ஏழை செலுத்தும் பலி

லேவி. 18:5 நியாயப்பிரமாணத்தை கைக்கொள்கிறவன் கலா. 3:12

அதனால் பிழைப்பான்

லேவி. 19:18 உன்னைப்போல் பிறனிலும் அன்புகூருவாயாக மத். 19:19; 22:39;

மாற். 12:31;

ரோ. 13:9;

கலா. 5:14;

யாக். 2:8

லேவி. 26:12 யெகோவா இஸ்ரவேலின் கடவுளாக இருந்தார் 2 கொ. 6:16

எண். 16:5 யெகோவா தம்முடையவர்களை அறிந்திருக்கிறார் 2 தீ. 2:19

உபா. 6:​4, 5 யெகோவாவை முழு இருதயத்தோடும் மத். 22:37;

ஆத்துமாவோடும் நேசி மாற். 12:29, 30;

லூக். 10:27

உபா. 6:​13, NW “உன் கடவுளாகிய யெகோவாவையே மத். 4:10;

நீ வணங்க வேண்டும்” லூக். 4:8

உபா. 6:​16, தி.மொ. “உன் கடவுளாகிய யெகோவாவை மத். 4:7;

சோதிக்க வேண்டாம்” லூக். 4:12

உபா. 8:3 மனிதன் அப்பத்தினால் மாத்திரமே மத். 4:4;

வாழ முடியாது லூக். 4:4

உபா. 18:​15-19 மோசேயைப்போன்ற ஒரு தீர்க்கதரிசியை அப். 3:​22, 23

கடவுள் எழுப்புவார்

உபா. 19:15 ஒவ்வொரு காரியமும் இரண்டு அல்லது யோவா. 8:17;

மூன்று சாட்சிகளால் நிலைவரப்பட வேண்டும் 2 கொ. 13:1

உபா. 23:​21, தி.மொ. ‘யெகோவாவுக்கு உன் பொருத்தனைகளை மத். 5:33

செலுத்த வேண்டும்’

உபா. 24:1 மணவிலக்குக்கான மோசேயின் மத். 5:31

நியாயப்பிரமாண ஏற்பாடு

உபா. 25:4 “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக” 1 கொ. 9:9;

1 தீ. 5:18

உபா. 27:26 நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாத கலா. 3:10

இஸ்ரவேலர் சபிக்கப்பட்டனர்

உபா. 29:4 யூதரில் பலர் நற்செய்திக்கு செவிகொடுக்கவில்லை ரோ. 11:8

உபா. 30:​11-14, NW ‘விசுவாசத்தின் வார்த்தையை’ ஒருவன் ரோ. 10:​6-8

இருதயத்தில் வைத்து அதை

பிரசங்கிக்க வேண்டும்

உபா. 31:​6, 8 கடவுள் தம் ஜனத்தை ஒருபோதும் கைவிடார் எபி. 13:5

உபா. 32:​17, 21 புறஜாதியாரை வரவழைப்பதன்மூலம் கடவுள் ரோ. 10:19;

யூதருக்கு எரிச்சல் மூட்டினார் இஸ்ரவேலர் 1 கொ. 10:20-22

விக்கிரகாராதனையின் மூலம் யெகோவாவுக்கு

எரிச்சல் மூட்டினர்

உபா. 32:​35, 36 பழிவாங்குவது யெகோவாவுக்குரியது எபி. 10:30

உபா. 32:43 “ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் ரோ. 15:10

களிகூருங்கள்”

1 சா. 13:​14; 16:1 தாவீது கடவுளுடைய இருதயத்துக்கு ஏற்றவர் அப். 13:22

1 சா. 21:6 தாவீதும் அவருடைய மனிதரும் சமுகத்தப்பங்களை மத். 12:​3, 4;

சாப்பிடுகிறார்கள் மாற். 2:​25, 26;

லூக். 6:​3, 4

1 இரா. 19:​14, 18 யூதரில் மீதிபேர் மாத்திரமே கடவுளுக்கு ரோ. 11:​3, 4

உண்மையுள்ளோராக நிலைத்திருந்தனர்

2 நா. 20:7 ஆபிரகாம் கடவுளுடைய ‘நண்பர்’ (“அன்பர்”) யாக். 2:23

என்றழைக்கப்பட்டார்

யோபு 41:11 “முந்தி [கடவுளுக்கு] கொடுத்தவன் யார்”? ரோ. 11:35

சங். 5:9 “அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி” ரோ. 3:13

சங். 8:2 “குழந்தைகள் பாலகர் வாயினால்” கடவுள் மத். 21:16

துதியுண்டாக செய்கிறார்

சங். 8:​4-6 “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், . . . அவன் எபி. 2:​6, 7;

எம்மாத்திரம்”? கடவுள் சகலத்தையும் கிறிஸ்துவின் 1 கொ. 15:27

பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினார்

சங். 10:7 ‘அவர்கள் வாய் சபிப்பினால் நிறைந்திருக்கிறது’ ரோ. 3:14

சங். 14:​1-3, NW ‘நீதிமான் ஒருவனாகிலும் இல்லை’ ரோ. 3:​10-12

சங். 18:49 தேசங்களின் ஜனங்கள் கடவுளை ரோ. 15:9

மகிமைப்படுத்துவார்கள்

சங். 19:​4, NW, சிருஷ்டிப்பு முழுவதும் கடவுள் இருப்பதற்கு ரோ. 10:18

அடிக்குறிப்பு சாட்சியளிப்பதால் சத்தியத்தைக் கேட்பதற்கான

வாய்ப்பு குறைவுபடுவதில்லை

சங். 22:22 ‘உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவிப்பேன்’ எபி. 2:12

சங். 24:1, தி.மொ. பூமி யெகோவாவுக்கு சொந்தம் 1 கொ. 10:26

சங். 32:​1, 2, தி.மொ. “எவன் அக்கிரமத்தை யெகோவா ரோ. 4:​7, 8

எண்ணாதிருக்கிறாரோ, . . . அவன்

பாக்கியவான்”

சங். 34:​12-16, தி.மொ. ‘யெகோவாவின் கண்கள் நீதிமான்கள்மேல் 1 பே. 3:​10-12

நோக்கமாயிருக்கிறது’

சங். 36:1 ‘அவர்கள் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை’ ரோ. 3:18

சங். 40:​6-8 நியாயப்பிரமாணத்தின்கீழ் செலுத்தப்படும் எபி. 10:​6-10

பலிகளை கடவுள் இனிமேலும் ஏற்பதில்லை;

கடவுளின் சித்தத்தின்படியான, இயேசுவின்

சரீரத்தின் ஒரே பலியே பரிசுத்தமாகுதலை

கொண்டுவருகிறது

சங். 44:22 “அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” ரோ. 8:35

சங். 45:​6, 7 ‘கடவுளே என்றென்றும் [கிறிஸ்துவின்] எபி. 1:​8, 9

சிங்காசனமாக இருக்கிறார்’

சங். 51:4 கடவுள் தம்முடைய வார்த்தைகளிலும் ரோ. 3:4

நியாயத்தீர்ப்புகளிலும் நியாயமுள்ளவராக

நிரூபிக்கப்படுகிறார்

சங். 68:18 கிறிஸ்து உன்னதத்திற்கு ஏறியபோது, மனிதரில் எபே. 4:8

வரங்களை கொடுத்தார்

சங். 69:​22, 23 இஸ்ரவேலரின் சமாதான பந்தி ஒரு ரோ. 11:​9, 10

கண்ணியாகிறது

சங். 78:24 வானத்திலிருந்துவரும் அப்பம் யோவா. 6:​31-33

சங். 82:6 “நீங்கள் தேவர்கள்” யோவா. 10:34

சங். 94:​11, தி.மொ. “யெகோவா மனுஷன் யோசனைகளை 1 கொ. 3:20

அறிவார்; அவைகள் வீணென்று

அவருக்குத் தெரியும்”

சங். 95:​7-11 கீழ்ப்படியாத இஸ்ரவேலர் கடவுளுடைய எபி. 3:​7-11;

இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவில்லை எபி4:​3, 5, 7

சங். 102:​25-27 “நீர் . . . பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்” எபி. 1:​10-12

சங். 104:​4, NW ‘தம்முடைய தூதர்களை ஆவிகளாக்குகிறார்’ எபி. 1:7

சங். 110:1 கர்த்தர் யெகோவாவின் வலதுபாரிசத்தில் மத். 22:​43-45;

உட்காருவார் மாற். 12:​36, 37;

லூக். 20:42-44;

எபி. 1:13

சங். 110:4 கிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையின்படி எபி. 7:17

என்றென்றும் ஆசாரியர்

சங். 112:9 ‘வாரியிறைத்திருக்கிறார் . . . அவருடைய

நீதி என்றென்றைக்கும் தொடருகிறது’ 2 கொ. 9:9

சங். 116:10 ‘விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன்’ 2 கொ. 4:13

சங். 117:​1, தி.மொ. “புறஜாதிகளே, எல்லாரும் யெகோவாவைத் ரோ. 15:11

துதியுங்கள்”

சங். 118:​6, தி.மொ. “யெகோவா என் பட்சத்தில் இருக்கிறார், எபி. 13:6

நான் பயப்படேன்”

சங். 140:3 “அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் ரோ. 3:13

பாம்பின் விஷம் இருக்கிறது”

நீதி. 26:11 ‘நாயானது தான் கக்கினதைத் தின்பதற்கு 2 பே. 2:22

திரும்பிவிட்டது’

ஏசா. 1:9 மீதிபேரைத் தவிர, இஸ்ரவேல் சோதோமைப் ரோ. 9:29

போலாகியிருக்கும்

ஏசா. 6:​9, 10 இஸ்ரவேலர் நற்செய்திக்கு கவனம் மத். 13:​13-15;

செலுத்தவில்லை மாற். 4:12;

லூக். 8:10;

அப். 28:​25-27

ஏசா. 8:​17, 18, தி.மொ. “இதோ, நானும் யெகோவா எனக்குக் எபி. 2:13

கொடுத்த பிள்ளைகளும்”

ஏசா. 10:​22, 23 இஸ்ரவேலின் ஒரு மீதிபேர் மாத்திரமே ரோ. 9:​27, 28

காக்கப்படுவர்

ஏசா. 22:13 “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் 1 கொ. 15:32

சாவோம்”

ஏசா. 25:​8, தி.மொ. “மரணத்தை என்றுமாக விழுங்குவார்” 1 கொ. 15:54

ஏசா. 28:​11, 12 “அந்நிய பாஷையினால்” பேசினாலுங்கூட 1 கொ. 14:21

ஜனங்கள் நம்பவில்லை

ஏசா. 28:16 சீயோனின் அஸ்திபாரமாகிய கிறிஸ்துவில் 1 பே. 2:6;

விசுவாசம் வைப்போருக்கு ஏமாற்றம் இல்லை ரோ. 10:11

ஏசா. 29:13 வேதபாரகருடைய மற்றும் பரிசேயர்களுடைய மத். 15:​7-9;

மாய்மாலம் விவரிக்கப்பட்டது மாற். 7:​6-8

ஏசா. 29:14 ஞானிகளின் ஞானம் அழியும்படி 1 கொ. 1:19

கடவுள் செய்கிறார்

ஏசா. 40:​6-8, NW யெகோவாவால் பேசப்பட்ட வார்த்தை 1 பே. 1:​24, 25

என்றென்றும் நிலைத்திருக்கிறது

ஏசா. 40:13 ‘யெகோவாவின் ஆலோசனைக்காரனானவன் ரோ. 11:34

யார்?’

ஏசா. 42:6; 49:​6, தி.மொ. “உன்னைப் புறஜாதியாருக்கு வெளிச்சமாக அப். 13:47

ஏற்படுத்தினேன்”

ஏசா. 45:23 முழங்கால் யாவும் யெகோவாவுக்கு முடங்கும் ரோ. 14:11

ஏசா. 49:8 ‘இரட்சணிய நாளில்,’ செவிகொடுப்பதற்குரிய 2 கொ. 6:2

அநுக்கிரக காலம்

ஏசா. 52:7 நற்செய்தியை சுமந்து செல்வோரின் பாதங்கள் ரோ. 10:15

அழகானவை

ஏசா. 52:11 ‘அவர்கள் நடுவிலிருந்து வெளியேறி, 2 கொ. 6:17

பிரிந்திருங்கள்’

ஏசா. 52:15 புறஜாதிகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது ரோ. 15:20

ஏசா. 54:1 “பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு” கலா. 4:27

ஏசா. 54:​13, தி.மொ. “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் யோவா. 6:45

போதிக்கப்படுவார்கள்”

ஏசா. 56:7 யெகோவாவின் வீடு சகல ஜாதியாருக்கும் மத். 21:13;

ஜெபவீடாயிருக்கும் மாற். 11:17;

லூக். 19:46

ஏசா. 59:​7, 8 மனிதரின் அக்கிரமம் விவரிக்கப்படுகிறது ரோ. 3:​15-17

ஏசா. 65:​1, 2 புறஜாதிகளுக்கு யெகோவா வெளிப்பட்டார் ரோ. 10:​20, 21

ஏசா. 66:​1, 2 “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி அப். 7:​49, 50

எனக்குப் பாதபடி”

எரே. 5:21 கண்கள் இருந்தும் காணாமலிருப்பது மாற். 8:18

எரே. 9:​24, NW ‘பெருமைபாராட்டுகிறவன், யெகோவாவில் 1 கொ. 1:30;

பெருமைபாராட்டக்கடவன்’ 2 கொ. 10:17

எரே. 31:​31-34 கடவுள் புதிய உடன்படிக்கை செய்வார் எபி. 8:​8-12;

எபி10:​16, 17

தானி. 9:27; 11:31 “பாழாக்கும் அருவருப்பு” மத். 24:15

ஓசி. 1:10; 2:23 புறஜாதியாரும் கடவுளுடைய ஜனங்களாவார்கள் ரோ. 9:​24-26

ஓசி. 6:6 “பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” மத். 9:13; 12:7

ஓசி. 13:14 “மரணமே, உன் வாதைகள் எங்கே?” 1 கொ. 15:​54, 55

யோவே. 2:​28-32, NW ‘யெகோவாவின் பெயரின்பேரில் அப். 2:​17-21;

கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப்படுவர்’ ரோ. 10:13

ஆமோ. 9:​11, 12 தாவீதின் கூடாரத்தை கடவுள் திரும்பவும் அப். 15:​16-18

கட்டுவார்

ஆப. 1:5 பரியாசக்காரரே நீங்கள், அதை “நோக்கிப் அப். 13:​40, 41

பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்”

ஆப. 2:4 “என் நீதிமானோ விசுவாசத்தால் எபி. 10:​38, தி.மொ.;

பிழைப்பான்” ரோ. 1:17

ஆகா. 2:6 வானங்களும் பூமியும் அசைக்கப்படும் எபி. 12:​26, 27

மல். 1:​2, 3 யாக்கோபு நேசிக்கப்பட்டார், ரோ. 9:13

ஏசா வெறுக்கப்பட்டார்

“கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் எபிரெய வேதாகமத்திலிருந்து எடுத்த சில மேற்கோள்களும் பொருத்தங்களும்” என்ற அட்டவணையின்பேரில் கேள்விகள்:

(அ) கிரேக்க வேதாகமத்தில் ஆதியாகமத்திலிருந்து குறிப்புகள் எடுத்துக் கூறுவது, படைப்பை எவ்வாறு ஆதரிக்கிறது?

(ஆ) ஆபிரகாமையும் ஆபிரகாமின் வித்தையும் பற்றி ஆதியாகமத்திலுள்ள குறிப்புகளுக்கு என்ன பொருத்தங்கள் செய்யப்படுகின்றன?

(இ) பத்துக் கற்பனைகளையும் நியாயப்பிரமாணத்தின் மற்ற அம்சங்களையும் குறித்து யாத்திராகம புத்தகத்திலிருந்து என்ன மேற்கோள்கள் குறிப்பிடப்படுகின்றன?

(ஈ) யெகோவாவை முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நேசிக்கும்படியும் தன்னைப்போல் பிறனை நேசிக்கும்படியுமான இந்த இரண்டு பெரிய கட்டளைகள் முதலாவது அறிவிக்கப்பட்டதை எங்கே காண்கிறோம்?

(உ) ஐந்தாகமங்களில் கூறப்பட்டு, கிரேக்க வேதாகமத்தில் மேற்கோள்களாக குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையான நியமங்கள் சிலவற்றை கூறுங்கள். அவை எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன?

(ஊ) சங்கீதங்களிலிருந்து கிரேக்க வேதாகமத்தில் மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ள என்ன பகுதிகள் யெகோவாவை பின்வருமாறு மேன்மைப்படுத்துகின்றன: (1) சிருஷ்டிகராகவும் பூமியின் சொந்தக்காரராகவும்? (2) நீதிமான்களில் அக்கறை காட்டுகிறவரும் அவர்களை கவனிப்பவராகவும்? (எ) ஏசாயாவிலிருந்தும் மற்ற தீர்க்கதரிசிகளிலிருந்தும் எடுக்கும் பகுதிகளை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் பின்வருபவற்றிற்கு எவ்வாறு பொருத்துகிறது: (1) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு? (2) நற்செய்தியைச் சிலர் ஏற்காதது? (3) இஸ்ரவேலின் மீதிபேரோடுகூட, புறஜாதியாரின் ஜனங்கள் விசுவாசிகளாவது? (4) நற்செய்தியில் விசுவாசம் காட்டுவதன் நன்மைகள்?