Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 3—கால ஓட்டத்தில் நிகழ்ச்சிகளை அளவிடுதல்

ஆராய்ச்சி எண் 3—கால ஓட்டத்தில் நிகழ்ச்சிகளை அளவிடுதல்

ஆராய்ச்சி எண் 3—கால ஓட்டத்தில் நிகழ்ச்சிகளை அளவிடுதல்

பைபிள் காலத்தைக் கணக்கிடுதலும், எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமங்களின் முக்கிய நிகழ்ச்சிகளின் காலவரிசையை பற்றிய ஆய்வுரையும்.

“வடதிசை ராஜா”வையும் ‘தென்திசை ராஜா’வையும் பற்றிய தரிசனத்தை தானியேலுக்கு அளிக்கையில் யெகோவாவின் தூதன் ‘குறித்த காலம்’ என்ற சொற்றொடரை பல தடவை பயன்படுத்தினார். (தானி. 11:​6, 27, 29, 35) யெகோவா குறித்த காலம் தவறமாட்டார்; தம்முடைய நோக்கங்களை அந்தந்த காலத்தில் நிறைவேற்றுகிறார் என்று காட்டும் அநேக வேதவசனங்களும் உள்ளன. (லூக். 21:24; 1 தெ. 5:​1, 2) கால ஓட்டத்தில் முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்த சமயத்தைக் கண்டறிய நமக்கு உதவிசெய்யும் “அடையாளக் குறிகள்” பலவற்றை அவர் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் அளித்திருக்கிறார். பைபிளின் காலவரிசையைப் புரிந்துகொள்வதில் பெரும் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மற்றவர்களும் செய்யும் ஆராய்ச்சியால் ஒருகாலத்தில் சந்தேகிக்கப்பட்ட பல்வேறு பைபிள் சம்பவங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதோடு, பைபிளின் முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த காலத்தையும் நம்மால் தீர்மானிக்க முடிகிறது.​—நீதி. 4:18.

2வரிசை எண்கள், இயல் எண்கள். முந்தின ஆராய்ச்சியில் (பாராக்கள் 24, 25), இயல் எண்களுக்கும் வரிசை எண்களுக்கும் இடையே வேறுபாடுள்ளதென்று நாம் அறிந்தோம். பைபிளில் வரும் காலக் கணக்குகளை நவீன நாளைய காலக்கணிப்பு முறைகளுக்கு இசைவாக அளவிடும்போது இந்த வேறுபாட்டை மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக, “யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம்” என்ற மேற்கோளில் “முப்பத்தேழாம்” என்ற பதம் வரிசை எண்ணாகும். இது 36 நிறைவான ஆண்டுகளையும் கூடுதலாக சில நாட்களை, வாரங்களை, அல்லது மாதங்களையும் (36-வது ஆண்டின் முடிவிலிருந்து எவ்வளவு காலம் நீடித்ததோ அதையும்) குறிக்கிறது.​—எரே. 52:31.

3ஆட்சிசெய்த ஆண்டுகளும் பதவியேற்ற ஆண்டுகளும். யூதா, இஸ்ரவேல் ராஜ்யங்களின் அரசாங்கப் பதிவுகளையும், பாபிலோன், பெர்சியா வல்லரசுகளின் அரசியல் விவகாரங்களையும் பைபிள் குறிப்பிடுகிறது. இந்த நான்கு ராஜ்யங்களிலுமே, அரசர்கள் ஆட்சிசெய்த காலங்களின் அடிப்படையில் அரசாங்கக் கால வரிசை திருத்தமாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்புமுறையே பைபிளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஆதாரத்தை மேற்கோள் காட்டுகிறது என்பதையும் பைபிள் பெயரால் குறிப்பிடுகிறது. இதற்கு ஓர் உதாரணம், ‘சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகம்.’ (1 இரா. 11:41) ஓர் அரசனின் ஆட்சி, பொதுவாக நிசானிலிருந்து நிசான் வரை, அல்லது வசந்த காலத்திலிருந்து வசந்தகாலம் வரை கணக்கிடப்பட்டது. இவையே அதிகாரப்பூர்வ ஆண்டுகள். அதற்கு முன்னரே அவர் பதவியேற்றிருந்தால் நிசான் வரையான அந்த மாதங்கள் பதவியேற்கும் ஆண்டு என அழைக்கப்படுகிறது. ஓர் அரசனை அடுத்து மற்றொரு அரசன் சிங்காசனத்துக்கு வந்தபோது, அடுத்த வசந்தகாலம் வரை, அதாவது அடுத்த நிசான் மாதம் வரை எத்தனை மாதங்கள் இருந்தாலும், அவை புதிய அரசனின் பதவியேற்ற ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டன. ஆனாலும், அந்த மாதங்கள் ஆட்சியிலிருந்து விலகிய அரசனின் ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்தன. ஆகவே, புதிதாக பதவியேற்றவரது அதிகாரப்பூர்வ ஆட்சியாண்டு அடுத்த நிசான் 1-ல் தொடங்குவதாகக் கணக்கிடப்பட்டது.

4உதாரணமாக, தாவீது இன்னும் உயிரோடிருக்கையிலேயே, பொ.ச.மு. 1037-ன் நிசானுக்கு சற்று முன்பே சாலொமோன் ஆளத்தொடங்கினார் என தெரிகிறது. அதன் பின் சிறிது காலத்துக்குள் தாவீது மரித்தார். (1 இரா. 1:​39, 40; 2:10) எனினும் தாவீது கடைசியாக ஆட்சிசெய்த ஆண்டு, பொ.ச.மு. 1037-ன் வசந்தகாலம் வரையாக கணக்கிடப்பட்டு, அது அவருடைய 40 ஆண்டு நிர்வாகத்தின் பாகமாகவே சேர்க்கப்பட்டது. சாலொமோனின் ஆட்சியின் தொடக்கத்திலிருந்து பொ.ச.மு. 1037-ன் வசந்தகாலம் வரையிலான காலம் சாலொமோன் பதவியேற்ற ஆண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அவர் இன்னும் தன் தகப்பனின் ஆட்சிசெய்த ஆண்டை நிரப்பிக்கொண்டிருந்ததால் இதை அவரது ஆட்சிக்காலமாக கணக்கிட முடியாது. ஆகையால், சாலொமோனின் முதல் முழு ஆட்சியாண்டு பொ.ச.மு. 1037-ன் நிசான் வரையில் தொடங்கவில்லை. (1 இரா. 2:12) பிறகு, சாலொமோன் அரசனும் 40 நிறைவான ஆண்டுகள் ஆட்சிசெய்தார். (1 இரா. 11:42) இவ்வாறு, ஆட்சிக்காலத்தை பதவியேற்ற ஆண்டுகளிலிருந்து பிரித்து வைப்பதன்மூலம், பைபிளின் காலவரிசையைத் திருத்தமாக கணக்கிட முடிகிறது. a

ஆதாமின் படைப்பு வரை பின்னோக்கி கணக்கிடுதல்

5மையத் தேதியிலிருந்து தொடங்குதல். ஆதாமின் படைப்புவரை பின்னோக்கி கணக்கிடுவதற்கு மையத் தேதியானது, பாபிலோனிய பேரரசை கோரேசு தோற்கடித்த ஆண்டான பொ.ச.மு. 539 ஆகும். b கோரேசு ஆட்சி துவங்கிய முதலாம் வருடம், பொ.ச.மு. 537-ன் வசந்தகாலத்திற்கு முன், யூதருக்கு விடுதலையளித்து கட்டளை பிறப்பித்தார். செப்டம்பர், அக்டோபர் மாதப் பகுதிகளுக்கு இணையான ஏழாவது மாதமாகிய திஸ்ரியில் இஸ்ரவேல் புத்திரர் எருசலேமில் திரும்ப வந்துசேர்ந்திருந்தனர் என எஸ்றா 3:1 அறிவிக்கிறது. ஆகவே பொ.ச.மு. 537-ன் இலையுதிர்காலம், எருசலேமில் யெகோவாவின் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்ட தேதியாக கணக்கிடப்படுகிறது.

6பொ.ச.மு. 537-ன் இலையுதிர்காலத்தில் யெகோவாவின் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டதும் ஒரு தீர்க்கதரிசன காலப்பகுதி முடிவடைந்தது. எந்தத் தீர்க்கதரிசன காலப்பகுதி? வாக்குப்பண்ணப்பட்ட தேசம் ‘பாழாக’ கிடந்த “எழுபது வருஷமே” அந்த தீர்க்கதரிசன காலம். இதைக் குறித்து யெகோவா மேலும் சொன்னதாவது: “பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பி வரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்.” (எரே. 25:​11, 12; 29:10) இந்தத் தீர்க்கதரிசனத்தை நன்றாய் அறிந்திருந்த தானியேல், இந்த ‘எழுபது வருஷங்கள்’ முடியும் தறுவாயில் இதற்கிசைய செயல்பட்டார். (தானி. 9:​1-3) அவ்வாறெனில், பொ.ச.மு. 537-ம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் முடிவடைந்த இந்த ‘எழுபது வருஷங்கள்,’ பொ.ச.மு. 607-ன் இலையுதிர் காலத்தில் தொடங்கியிருக்க வேண்டும். நடந்த சம்பவங்கள் இதை உண்மையென நிரூபிக்கின்றன. பொ.ச.மு. 607-ல் எருசலேம் முற்றுகையிடப்பட்டதும், பாபிலோனியர் உட்புகுந்ததும், அரசனாகிய சிதேக்கியா பிடிக்கப்பட்டதுமான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை எரேமியா 52-ம் அதிகாரம் விவரிக்கிறது. பின்பு, 12-வது வசனம் சொல்கிறபடி, “ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே” அதாவது, (ஜூலை, ஆகஸ்ட் மாதப் பகுதிகளுக்கு ஒத்துள்ள) ஆப் மாதம் பத்தாந்தேதியில், ஆலயத்தையும் நகரத்தையும் பாபிலோனியர் எரித்துப்போட்டனர். எனினும், இது ‘எழுபது வருஷங்களின்’ ஆரம்பமாக இருக்கவில்லை. ஏனெனில், யூத ஆதிக்கம் முழுமையாக நீங்கவில்லை. அங்கு மீதமிருந்த குடிமக்கள்மீது கெதலியாவை ஆளுநராக பாபிலோன் ராஜா நியமித்திருந்தார். “ஏழாம் மாதத்திலே” கெதலியாவும், இன்னும் சிலரும் கொலை செய்யப்பட்டனர், ஆகவே மீந்திருந்த யூதர்கள் பயந்து எகிப்துக்கு ஓடிவிட்டனர். அப்படியென்றால், ஏறக்குறைய பொ.ச.மு. அக்டோபர் 1, 607-லிருந்தே அந்தத் தேசம் முழுமையான கருத்தில் ‘பாழாய்க்கிடந்[து] . . . எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.’​—2 இரா. 25:​22-26; 2 நா. 36:​20, 21.

7பொ.ச.மு. 607 முதல் பொ.ச.மு. 997 வரை. எருசலேமின் வீழ்ச்சியிலிருந்து சாலொமோனுடைய மரணத்துக்குப் பின் ராஜ்யம் பிரிக்கப்பட்ட காலம் வரை பின்னோக்கி இந்தக் காலப்பகுதியைக் கணக்கிடும்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனினும், ஒன்று, இரண்டு இராஜாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி இஸ்ரவேல், யூதா அரசர்களுடைய ஆட்சிகளை ஒப்பிட்டால், இந்தக் காலப்பகுதி 390 ஆண்டுகள் என்று தெரியும். இது திருத்தமான இலக்கம் என்பதற்கு எசேக்கியேல் 4:​1-13-லுள்ள தீர்க்கதரிசனம் உறுதியான அத்தாட்சியளிக்கிறது. புறஜாதியார் எருசலேமை முற்றுகையிட்டு அதன் குடிமக்களைச் சிறைப்படுத்திக் கொண்டுசெல்லும் அந்தக் காலத்தையே இந்தத் தீர்க்கதரிசனம் சுட்டிக் காட்டுகிறது. இது பொ.ச.மு. 607-ல் நிறைவேறியது. ஆகவே யூதாவைப் பற்றி சொல்லப்பட்ட அந்த 40 ஆண்டுகள் எருசலேம் பாழானதோடு முடிந்தது. ஆனால், இஸ்ரவேலைப் பற்றி சொல்லப்பட்ட 390 ஆண்டுகள் சமாரியா அழிக்கப்பட்டபோது முடிவடையவில்லை. ஏனெனில் எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்ததற்கு வெகுகாலத்திற்கு முன்பே சமாரியா அழிந்துவிட்டது. மேலும் எசேக்கியேலின் தீர்க்கதரிசனம், எருசலேமின் முற்றுகையையும் அழிவையும் குறித்தே உரைக்கப்பட்டது. இவ்வாறு, ‘இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமமும்’ பொ.ச.மு. 607-ல் முடிவுற்றது. இந்தத் தேதியிலிருந்து பின்னோக்கி கணக்கிட்டால், இந்த 390 ஆண்டுகளடங்கிய காலப்பகுதி பொ.ச.மு. 997-ல் தொடங்கினதென்று நாம் காண்கிறோம். அந்த ஆண்டில் யெரொபெயாம், சாலொமோனின் மரணத்திற்குப் பின், தாவீதின் குடும்பத்திலிருந்து பிரிந்து, “இஸ்ரவேலை யெகோவாவை விட்டுப் பின்வாங்குவதற்கும் பெரிய பாவத்தைச் செய்வதற்கும் இழுத்துவிட்டான்.”​—2 இரா. 17:​21, தி.மொ.

8பொ.ச.மு. 997 முதல் பொ.ச.மு. 1513 வரை. சாலொமோனின் 40 வருட ஆட்சி பொ.ச.மு. 997-ல் முழுமையாக முடிவடைந்ததால், அவருடைய ஆட்சியின் முதல் ஆண்டு பொ.ச.மு. 1037-ன் வசந்தகாலத்தில் தொடங்கியிருக்க வேண்டும். (1 இரா. 11:42) சாலொமோன் தன் ஆட்சியின் நான்காவது ஆண்டின் இரண்டாம் மாதத்தில், எருசலேமில் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார் என 1 இராஜாக்கள் 6:​1-லுள்ள பைபிள் பதிவு சொல்கிறது. இது, அவருடைய ஆட்சியின் மூன்று முழு ஆண்டுகளும் ஒரு முழு மாதமும் கடந்துவிட்ட பின்பு, பொ.ச.மு. 1034-ன் ஏப்ரல்-மே மாதத்தில் ஆலயம் கட்டத் தொடங்கினதை குறிக்கிறது. ‘இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்தில்’ ஆலயம் கட்டப்பட்டது என்று அதே வசனம் சொல்கிறது. 480-வது என்பது வரிசை எண்ணாக இருப்பதால், இதில் 479 முழு ஆண்டுகள் உள்ளன. ஆகவே, 479-ஐ 1034 உடன் கூட்டினால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளிவந்த தேதி பொ.ச.மு. 1513 என்று தெரியும். பொ.ச.மு. 1513-லிருந்து, ஆபிப் (நிசான்) மாதம் இஸ்ரவேலருக்கு ‘வருஷத்தின் முதலாம் மாதமாக’ கணக்கிடப்பட்டது என்றும் (யாத். 12:2), அதற்கு முன்னால் இலையுதிர் காலத்தின் திஸ்ரி மாதமே வருஷத்தின் முதல் மாதமாக கணக்கிடப்பட்டது என்றும் ஆராய்ச்சி 2-ன் 19-வது பாரா விளக்குகிறது. ஸ்காஃப்-ஹெர்ஜாகின் மத அறிவுக்குரிய புதிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) 1957, தொ. 12, பக்கம் 474 பின்வருமாறு கூறுகிறது: “அரசர்களின் ஆட்சிக்காலம், வசந்தகாலத்தில் தொடங்கின ஆண்டை ஆதாரமாக கொண்டு கணக்கிடப்பட்டிருக்கிறது, இது பாபிலோன் பின்பற்றிய முறைக்கு ஒத்துள்ளது.” பைபிள் கால கணக்கிற்காக இலையுதிர் காலத்தில் தொடங்கும் ஆண்டை வசந்தகாலத்தில் தொடங்கும் ஆண்டிற்கு மாற்றும்பொழுதெல்லாம் ஆறு மாதங்கள் குறையும், அல்லது கூடும்.

9பொ.ச.மு. 1513 முதல் பொ.ச.மு. 1943 வரை. “இஸ்ரவேலர்கள் குடியிருந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள். அப்பொழுது எகிப்திலும் குடியிருந்தார்கள்” என்று மோசே, யாத்திராகமம் 12:​40, 41-ல் (NW) பதிவு செய்தார். ஆகவே, இஸ்ரவேலர்கள் குடியிருந்த காலம் 430 வருடங்கள்; ஆனால் மேற்சொன்ன வசனத்திலிருந்து பார்க்கும்போது, அத்தனை வருடங்களாக அவர்கள் எகிப்திலேயே ‘குடியிருக்க’வில்லை. இந்த 430 வருடங்கள், ஆபிரகாம் கானானுக்குச் செல்வதற்காக ஐப்பிராத் நதியைக் கடக்கும்போது தொடங்குகிறது. அப்போதிலிருந்துதான் யெகோவா ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை செல்லுபடியானது. இவ்வாறு ‘குடியிருந்த காலத்தில்’ முதல் 215 ஆண்டுகள் கானானிலும் மீதி 215 ஆண்டுகள் எகிப்திலும் செலவிடப்பட்டன. பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேலர், எகிப்திய ஆதிக்கம் எல்லாவற்றிலிருந்தும் அதைச் சார்ந்திருப்பதிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு சுயாதீனரானபோதே அக்காலம் முடிந்தது. c மசோரெட்டிக் மூல நூலைப் பார்க்கிலும் பழமையான எபிரெய மூல நூலை ஆதாரமாக கொண்டதே கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு. “எகிப்திலும்” “கானான் தேசத்திலும்” குடியிருந்த காலம் என்று இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம், கானானில் வசித்ததையும் சேர்த்துக் குறிப்பிடுகிறது என்பதாக யாத்திராகமம் 12:40-க்கான அடிக்குறிப்பில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் தெரிவிக்கிறது. எகிப்திலும் கானான் தேசத்திலும் குடியிருந்த காலம் என்ற குறிப்பு சமாரிய ஐந்தாகமத்திலும் உள்ளது. கலாத்தியர் 3:​17-ம் 430 ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. ஆகவே இந்தக் காலப்பகுதி, ஆபிரகாம் கானானுக்குச் செல்லும் வழியில் ஐப்பிராத்தைக் கடந்த சமயத்தில் ஆபிரகாமிய உடன்படிக்கை செல்லுபடியானதோடு தொடங்கிற்றென்று உறுதியாகிறது. இது பொ.ச.மு. 1943-ல் நிகழ்ந்தது; அப்போது ஆபிரகாமுக்கு 75 வயது.​—ஆதி. 12:4.

10இந்தக் காலக்கணக்கை மற்றொரு அத்தாட்சியும் ஆதரிக்கிறது: ஆபிரகாமின் சந்ததியார் 400 ஆண்டுகள் துன்பப்படுவார்கள் என்று அப்போஸ்தலர் 7:​6 குறிப்பிடுகிறது. எகிப்தில் இஸ்ரவேலர்கள் பட்ட துன்பத்திலிருந்து பொ.ச.மு. 1513-ல் யெகோவா விடுவித்தார். அப்படியென்றால், அவர்களது துன்ப காலம் பொ.ச.மு. 1913-ல் தொடங்கியிருக்க வேண்டும். அதாவது, ஈசாக்கு பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு, அவன் பால்மறந்த நாளை கொண்டாடிய போது, இஸ்மவேல் ஈசாக்கைப் ‘பரியாசம்பண்ணின’ காலத்தில் தொடங்கியிருக்க வேண்டும்.​—ஆதி. 15:13; 21:​8, 9.

11பொ.ச.மு. 1943 முதல் பொ.ச.மு. 2370 வரை. பொ.ச.மு. 1943-ல் ஆபிரகாம் கானானுக்குள் பிரவேசித்தபோது அவருக்கு 75 வயதென்று நாம் பார்த்தோம். இப்போது கால ஓட்டத்தில் இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று, நோவாவின் நாட்கள் வரை கணக்கிட முடியும். இது ஆதியாகமம் 11:​10-லிருந்து 12:4 வரை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளை வைத்து கணக்கிடப்படுகிறது. பின்வருமாறு கணக்கிடுகையில், மொத்தம் 427 ஆண்டுகள் வருகின்றன:

ஜலப்பிரளயத்தின் தொடக்கத்திலிருந்து

அர்பக்சாத்தின் பிறப்பு வரை 2 ஆண்டுகள்

பின்பு சாலாவின் பிறப்பு வரை 35

ஏபேரின் பிறப்பு வரை 30

பேலேகின் பிறப்பு வரை 34

ரெகூவின் பிறப்பு வரை 30

செரூகின் பிறப்பு வரை 32

நாகோரின் பிறப்பு வரை 30

தேராகின் பிறப்பு வரை 29

தேராகின் மரணம் வரை, அப்போது

ஆபிரகாமுக்கு 75 வயது 205

மொத்தம் 427 ஆண்டுகள்

427 ஆண்டுகளை பொ.ச.மு. 1943-உடன் கூட்டினால் பொ.ச.மு. 2370 வருகிறது. இவ்வாறு, நோவாவின் நாளின் ஜலப்பிரளயம் பொ.ச.மு. 2370-ல் தொடங்கினதென்று பைபிளின் கால அட்டவணை காட்டுகிறது.

12பொ.ச.மு. 2370 முதல் பொ.ச.மு. 4026 வரை. கால ஓட்டத்தில் இன்னும் பின்னோக்கி செல்கையில், ஜலப்பிரளயத்திலிருந்து ஆதாமின் படைப்பு வரையான காலப்பகுதியை பைபிள் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இது ஆதியாகமம் 5:​3-29-ஐயும் 7:​6, 11-ஐயும் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் காலக் கணிப்பு கீழே சுருக்கமாக கொடுக்கப்படுகிறது:

ஆதாமின் படைப்பிலிருந்து

சேத்தின் பிறப்பு வரை 130 ஆண்டுகள்

பின்பு ஏனோஸின் பிறப்பு வரை 105

கேனானின் பிறப்பு வரை 90

மகலாலெயேலின் பிறப்பு வரை 70

யாரேத்தின் பிறப்பு வரை 65

ஏனோக்கின் பிறப்பு வரை 162

மெத்தூசலாவின் பிறப்பு வரை 65

லாமேக்கின் பிறப்பு வரை 187

நோவாவின் பிறப்பு வரை 182

ஜலப்பிரளயம் வரை 600

மொத்தம் 1,656 ஆண்டுகள்

1,656 ஆண்டுகளை முந்தின தேதியாகிய பொ.ச.மு. 2370 உடன் கூட்டினால், ஆதாம் படைக்கப்பட்ட ஆண்டாகிய பொ.ச.மு. 4026-க்கு வருகிறோம். பூர்வ காலண்டர்களில் பெரும்பான்மையானவை இலையுதிர் காலத்தில் தொடங்கினதால், ஆதாம் இலையுதிர் காலத்தில் படைக்கப்பட்டிருக்கலாம்.

13இது இன்று எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது? 1963-ல் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு, பின்வருமாறு கூறினது: “அப்படியென்றால், 1963-ல், யெகோவா ‘தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு ஓய்ந்திருந்த’ அந்த ‘நாளில்’ 5,988 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?” (ஆதி. 2:3) இல்லை, ஏனெனில் ஆதாமைப் படைத்தவுடன் யெகோவாவின் ஓய்வுநாள் தொடங்கிவிடவில்லை. ஆதாமை படைத்தப் பிறகும், படைப்பின் ஆறாவது நாளிலேயே இன்னும் பல மிருகங்களையும் பறவைகளையும் வகைவகையாக யெகோவா படைத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும் ஆதாமை மிருகங்களுக்குப் பெயரிடும்படி சொன்னார். இது சிறிது காலம் எடுத்திருக்கும். பிறகு ஏவாளைப் படைத்தார். (ஆதி. 2:​18-22; NW பைபிள், 1953-ன் பதிப்பில், 19-ம் வசனத்திற்கு கொடுத்துள்ள அடிக்குறிப்பையும் காண்க.) ‘ஏழாம் நாளின்’ தொடக்கத்திலிருந்து [1963] வரை சரியாக எவ்வளவு ஆண்டுகள் சென்றிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள, ஆதாம் படைக்கப்பட்டதற்கும் ‘ஆறாம் நாளின்’ முடிவுக்கும் இடையே எவ்வளவு காலம் உள்ளதோ, அதை 5,988 ஆண்டுகளிலிருந்து கழித்துவிடவேண்டும். ஆனால் எதிர்கால தேதிகளை ஊகிப்பதற்கு பைபிளிலுள்ள காலக்கணக்கு பயனளிக்காது.​—மத். 24:36. d

14மனிதன் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்துவருகிறான் என்று விஞ்ஞானிகள் கூறுவதைப் பற்றியதென்ன? பண்டைய கால பதிவுகளிலிருந்து பைபிள் சம்பவங்களை உண்மை என நிரூபிக்க முடியும். ஆனால் விஞ்ஞானிகளின் விவாதங்களை நிரூபிக்க எந்தவொரு பதிவும் இல்லை. ஊகங்களின் அடிப்படையில் ‘சரித்திர காலத்திற்கு முந்திய மனிதன்’ இந்த இந்த காலங்களில் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். அவற்றை நிரூபிக்க முடியாது. நம்பத்தக்க உலக சரித்திரமும் காலக் கணக்குகளும் சில ஆயிர ஆண்டுகளே பழமையானவை. இந்தப் பூமி, நோவாவுடைய நாளின் ஜலப்பிரளயத்தைப் போன்ற பல எழுச்சிகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டிருக்கிறது. இவை பாறை அடுக்குகளையும் புதைபடிவ தடயங்களையும் பேரளவாய் பாதித்துவிட்டிருக்கின்றன; இவ்வாறு, ஜலப்பிரளயத்துக்கு முந்திய தேதிகளின்பேரிலான எந்த விஞ்ஞான கூற்றுகளையும் பெருமளவு சந்தேகத்திற்கு உட்படுத்தியிருக்கின்றன. e மனிதரின் முரண்பாடான எல்லா கருத்துக்களும் கோட்பாடுகளும் ஏற்கும்படி இல்லை. ஆனால் பைபிள் கூறுவது பகுத்தறிவுக்கு ஏற்றதாக உள்ளது. ஏனெனில், அது மனிதவர்க்கத்தின் தொடக்கத்தைப் பற்றி மிகத் தெளிவான, ஒத்திசைவான விவரத்தை அளிக்கிறது; அத்துடன், யெகோவாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் சரித்திரமும் அதில் கவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

15பைபிளை ஆராய்ந்தறிவதும், காலம் தவறாதவரான யெகோவா தேவனின் செயல்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்வதும், மிக மனத்தாழ்மையாக உணரும்படி நம்மை செய்விக்க வேண்டும். சர்வ வல்ல கடவுளுடன் ஒப்பிட, சாகும் தன்மையுடைய மனிதன் மெய்யாகவே அற்பமானவன். எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அவர் செய்த மாபெரும் படைப்பைப் பற்றி வேதவாக்கியம் இவ்வாறு எளிமையாக சொல்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”​—ஆதி. 1:1.

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை

16இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றிய தேவாவியால் ஏவப்பட்ட நான்கு விவரப் பதிவுகள் பின்வரும் வரிசை முறையில் எழுதப்பட்டதாக தெரிகிறது: மத்தேயு (ஏ. பொ.ச. 41), லூக்கா (ஏ. பொ.ச. 56-58), மாற்கு (ஏ. பொ.ச. 60-65), யோவான் (ஏ. பொ.ச. 98). லூக்கா 3:​1-3-லுள்ள தகவலை பயன்படுத்தி, திபேரியு ராயனுடைய ஆட்சி தொடங்கிய காலம் பொ.ச. 14 என்பதை அறியலாம். ஆகவே பூமியில் இயேசுவின் தனிச்சிறப்புக்குரிய ஊழியம் தொடங்கிய காலம் பொ.ச. 29 என்று முந்தின அதிகாரத்தில் பார்த்தோம். இயேசுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை மத்தேயு பெரும்பாலும் கால வரிசைப்படி பதிவுசெய்யவில்லை. ஆனால் மற்ற மூன்று புத்தகங்களும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை கால வரிசைப்படி அளிப்பதாக தெரிகிறது. தொடர்ந்துவரும் அட்டவணையில் இதற்கான உதாரணத்தை காண்க. மற்ற மூன்று சுவிசேஷங்கள் எழுதப்பட்டு 30-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகே கடைசியாக யோவான் புத்தகம் எழுதப்பட்டது. இது மற்ற மூன்று சுவிசேஷங்கள் விட்டுவிட்ட, முக்கியமான நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறதென்பதைக் கவனிக்கலாம். பூமிக்குரிய ஊழியத்தின்போது இயேசு நான்கு பஸ்கா பண்டிகைகள் கொண்டாடிய விவரத்தை யோவான் குறிப்பிடுவது முக்கியமாய் கவனிக்கத்தக்கது. இது இயேசுவின் மூன்றரை ஆண்டு ஊழியம் பொ.ச. 33-ல் முடிவடைந்ததை உறுதிசெய்கிறது. fயோவா. 2:13; 5:1; 6:4; 12:1; 13:1.

17பொ.ச. 33-ல் இயேசு மரித்தார் என்பதை மற்ற அத்தாட்சிகளும் உறுதிசெய்கின்றன. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, நிசான் 15, எந்தக் கிழமையில் வந்தாலும், எப்போதும் முக்கிய ஓய்வுநாளாக இருந்தது. வழக்கமான ஓய்வுநாளில் அதுவும் சேர்ந்து வந்தால், அப்போது அந்த நாள் “பெரிய” ஓய்வுநாள் என்று அறியப்படலாயிற்று. இயேசு மரணமடைந்த அடுத்த நாள் பெரிய ஓய்வுநாள் என்று யோவான் 19:31 காட்டுகிறது. ஆகவே அவருடைய மரண நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தது. அதோடு, பொ.ச. 31-லும் பொ.ச. 32-லும் நிசான் 14 வெள்ளிக்கிழமையில் வரவில்லை. ஆனால் பொ.ச. 33-ல் மாத்திரமே நிசான் 14 வெள்ளிக்கிழமையில் வந்தது. ஆகையால் பொ.ச. 33, நிசான் 14 அன்றே இயேசு மரித்திருக்க வேண்டும். g

18எழுபதாவது “வாரம்,” பொ.ச. 29-36. இயேசுவின் ஊழிய காலத்தைப் பற்றி தானியேல் 9:​24-27-லும் கொடுக்கப்பட்டுள்ளது. இது, “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும்” 69 வார ஆண்டுகள் (483 ஆண்டுகள்) அடங்கிய காலப்பகுதி என்பதை முன்னறிவித்தது. நெகேமியா 2:​1-8-ன் பிரகாரம், இந்தக் கட்டளை பெர்சிய ராஜாவான “அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷ”த்தில் பிறப்பிக்கப்பட்டது. அர்தசஷ்டா எப்போது தன் ஆளுகையைத் தொடங்கினான்? அவனுடைய தகப்பனும் முந்திய அரசருமான சஷ்டா, பொ.ச.மு. 475-ன் பிற்பகுதியில் மரித்தான். இவ்வாறு அர்தசஷ்டா பதவியேற்ற ஆண்டு பொ.ச.மு. 475-ல் தொடங்கினது. கிரேக்க, பெர்சிய, மற்றும் பாபிலோனிய தகவல்மூலங்களிலிருந்து கிடைக்கும் உறுதியான அத்தாட்சியால் இது ஆதரிக்கப்படுகிறது. உதாரணமாக, கிரேக்க சரித்திராசிரியனாகிய தூசிடைட்ஸ் (சரித்திரத்தை திருத்தமாக பதிவு செய்வதில் பிரசித்திபெற்றவர்), அர்தசஷ்டா ‘புதிதாக சிங்காசனத்தில் அமர்ந்தபோது,’ கிரேக்க அரசியல் வல்லுநர் தெமிஸ்டாக்லஸ் பெர்சியாவுக்கு ஓடிப்போனதைக் குறித்து எழுதுகிறார். தெமிஸ்டாக்லஸ் பொ.ச.மு. 471/470-ல் இறந்துபோனார் என்பதை பொ.ச.மு. முதல் நூற்றாண்டின் மற்றொரு கிரேக்க சரித்திராசிரியன் டயோடோரஸ் சைக்குலஸ் உறுதிசெய்கிறார். தெமிஸ்டாக்லஸ் தன் நாட்டைவிட்டு ஓடினபின்பு, அர்தசஷ்டாவுக்கு முன்பாக தான் வருவதற்குமுன் பெர்சிய மொழியை ஓர் ஆண்டு படிக்க தனக்கு அனுமதி அளிக்கும்படி அவரிடம் கேட்டிருந்தார், அது அனுமதிக்கப்பட்டது. ஆகவே பெர்சியாவில் தெமிஸ்டாக்லஸ் குடியேறினது பொ.ச.மு. 472-க்குப் பிற்பட்டதாக இருக்க முடியாது. அவர் வந்து சேர்ந்த தேதி பொ.ச.மு. 473 என தாராளமாக குறிப்பிடலாம். அந்தச் சமயத்தில் அர்தசஷ்டா “புதிதாக சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார்.” h

19இவ்வாறு “அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம்” பொ.ச.மு. 455 ஆகும். பொது சகாப்தத்திற்கு முன்பிலிருந்து பொது சகாப்தத்திற்கு வரும்போது பூஜ்ய ஆண்டு இல்லை என்பதை மனதில் வைக்கவும். பொ.ச.மு. 455-லிருந்து 483 ஆண்டுகளை (69 “வாரங்கள்”) கணக்கிட்டால், “பிரபுவாகிய மேசியா” தோன்றும் ஆண்டு பொ.ச. 29 என்று தெரியும். அந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில், இயேசு முழுக்காட்டப்பட்டு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டபோது மேசியா ஆனார். “அந்த [எழுபதாவது] வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்” என்றும் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. இயேசு தம்மைத்தாமே பலிசெலுத்தினதால், அதுவரை யூதர்கள் செலுத்தி வந்த பலிகள் செல்லுபடியாகாமல் போயின. இவ்வாறு இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. இந்த “வார” ஆண்டுகளின் “பாதி” அதாவது, மூன்றரை ஆண்டுகள், பொ.ச. 33-ன் இலையுதிர்காலத்தில் முடிகிறது. அப்போது இயேசு கொல்லப்பட்டார். எனினும், அந்த எழுபதாவது வாரம் முழுவதும் “அவர் . . . அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்”த வேண்டும். அப்படியென்றால், அந்த ஏழு ஆண்டுகளின்போது, அதாவது பொ.ச. 29-லிருந்து பொ.ச. 36 வரை யெகோவா தமது தனிப்பட்ட தயவை யூதர்கள்மீது தொடர்ந்து காட்டினார் என்பது தெரிகிறது. பின்பே, பொ.ச. 36-ல் கொர்நேலியுவின் மதமாற்றம் காட்டுகிறபடி, விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார் ஆவிக்குரிய இஸ்ரவேலராவதற்கு வழி திறக்கப்பட்டது. iஅப். 10:​30-33, 44-48; 11:1.

அப்போஸ்தலர் காலங்களில் ஆண்டுகளைக் கணக்கிடுதல்

20பொ.ச. 33-க்கும் பொ.ச. 49-க்கும் இடையில். பொ.ச. 44-ம் ஆண்டை இந்தக் காலப்பகுதிக்குப் பயனுள்ள தேதியாக ஏற்கலாம். ஜொஸிபஸின் பிரகாரம், (ஜூயிஷ் ஆண்டிக்விட்டீஸ், XIX, 351 [Viii, 2]), (பொ.ச. 41-ல்) ரோமின் கிலவுதியுராயன் பதவி ஏற்றப் பின், முதலாம் ஏரோது அகிரிப்பா மூன்று ஆண்டுகள் அரசாண்டான். இந்த ஏரோது பொ.ச. 44-ல் மரித்தானென சரித்திர அத்தாட்சி காட்டுகிறது. j இப்போது பைபிள் பதிவைக் காண்கையில், வரவிருந்த ஒரு கொடிய பஞ்சத்தைக் குறித்து ‘ஆவியின் மூலமாய்’ அகபு தீர்க்கதரிசனம் உரைத்தது, சீஷனாகிய யாக்கோபு பட்டயத்தால் கொல்லப்பட்டது, பேதுரு (பஸ்கா சமயத்தில்) சிறையிலடைக்கப்பட்டு அற்புதமாய் விடுவிக்கப்பட்டது ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் ஏரோதின் மரணத்துக்குச் சற்று முன்பே நடந்தன என்பது தெரிந்துகொள்கிறோம். ஆகவே, பொ.ச. 44-ஐ இந்த எல்லா நிகழ்ச்சிகளுக்குமுரிய காலமாக குறிக்கலாம்.​—அப். 11:​27, 28; 12:​1-11, 20-23.

21முன்னறிவிக்கப்பட்ட இந்தப் பஞ்சம் ஏறக்குறைய பொ.ச. 46-ல் ஏற்பட்டது. பெரும்பாலும் இந்தச் சமயத்தில்தான் பவுலும் பர்னபாவும் எருசலேமில் “உபகார [நிவாரண] ஊழியத்தைச் செய்து முடித்”திருக்க வேண்டும். (அப். 12:​25, தி.மொ.) அவர்கள் சீரியாவின் அந்தியோகியாவுக்குத் திரும்பிச் சென்றபோது, முதல் மிஷனரி பயணத்திற்காக பரிசுத்த ஆவி அவர்களை தனியாக பிரித்துவைத்தது. இந்த மிஷனரி பயணம் சீப்புரு தீவு முழுவதிலும் ஆசியா மைனரின் பல பட்டணங்களிலும் மாகாணங்களிலும் செய்யப்பட்டது. k இந்தப் பயணம் பெரும்பாலும் பொ.ச. 47-ன் வசந்த காலத்திலிருந்து பொ.ச. 48-ன் இலையுதிர்காலம் வரையில் நீடித்திருந்திருக்கலாம், குளிர்காலத்தை ஆசியா மைனரில் கழித்திருக்கலாம். அடுத்த குளிர்காலத்தைப் பவுல் சீரியாவின் அந்தியோகியாவில் கழித்ததாக தோன்றுகிறது. அப்படியென்றால் பொ.ச. 49-ன் வசந்தகாலம் வரை நம்மால் கணக்கிட முடிகிறது.​—அப். 13:​1–14:28.

22கலாத்தியர் 1, 2 அதிகாரங்களிலுள்ள பதிவு இந்தக் காலவரிசையோடு ஒன்றிணைவதாக தோன்றுகிறது. இங்கே பவுல், தன் மதமாற்றத்திற்குப் பின் எருசலேமுக்கு இன்னும் இரண்டு தடவை சென்றுவருவதைப் பற்றி பேசுகிறார். ஒன்று, “மூன்று வருஷம் சென்றபின்பு,” மற்றொன்று “பதினாலு வருஷம் சென்றபின்பு.” (கலா. 1:​17, 18; 2:1) அந்நாளின் வழக்கத்தின்படி, இந்த இரண்டு காலப்பகுதிகளின் எண்களையும் வரிசை எண்களாக எடுத்துக்கொள்வோம்; அதோடு, பதிவு தெரிவிக்கிறபடி பவுலின் மதமாற்றம் அப்போஸ்தலருடைய காலத் தொடக்கத்தில் இருந்ததாகவும் வைத்துக்கொள்வோம்; அப்போது நாம் அந்த 3 ஆண்டுகளையும் 14 ஆண்டுகளையும் தொடர்ச்சியாக, பொ.ச. 34-36 ஆகவும் பொ.ச. 36-49 ஆகவும் கணக்கிடலாம்.

23பவுலோடு சென்ற தீத்துவுங்கூட விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கேட்கப்படவில்லை என்று சொல்லப்படுவதால், பவுல் எருசலேமுக்கு இரண்டாவது தடவை சென்றதாக கலாத்தியரில் குறிப்பிட்டிருப்பது, விருத்தசேதனப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருந்ததாக தெரிகிறது. இது அப்போஸ்தலர் 15:​1-35-ல் விவரிக்கப்பட்ட விருத்தசேதனத்தின்பேரில் செய்யப்படும் தீர்மானத்தைப் பெறுவதற்கான சந்திப்பாக இருந்தால், அது பொ.ச. 49-ல் பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்திற்கு முன்பு இருந்திருக்கும் என்பது பொருத்தமாக உள்ளது. மேலும், கலாத்தியர் 2:​1-10-ன் (தி.மொ.) பிரகாரம், பவுல், ‘தான் ஓடுவது வீணாகாதபடிக்கு,’ தான் பிரசங்கித்துக் கொண்டிருந்த நற்செய்தியைப் பற்றி எருசலேம் சபையின் “மதிப்புள்ளவர்கள்” முன்பாக தெரிவிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார். எப்படியும் பவுல் தனது முதல் மிஷனரி பயணத்தைப் பற்றி அறிக்கை தந்திருக்க வேண்டும். அப்போது, தனது ஊழியத்தைப் பற்றியும் கண்டிப்பாக அவர்களிடம் கூறியிருப்பார். “கடவுள் வெளிப்படுத்திக் காட்டிய”தால் பவுல் இவ்வாறு எருசலேமுக்குச் சென்றார்.

24பவுலின் இரண்டாவது மிஷனரி பயணம், ஏ. பொ.ச. 49-52. பவுல் எருசலேமிலிருந்து திரும்பிவந்த பின்பு, சீரியாவிலுள்ள அந்தியோகியாவில் காலத்தைச் செலவிட்டார்; ஆகவே, அவர் அங்கிருந்து இரண்டாவது பயணம் சென்றபோது அது பொ.ச. 49-ன் கோடைகாலமாய் இருந்திருக்க வேண்டும். (அப். 15:​35, 36) இது, முதல் பயணத்தைப் பார்க்கிலும் மிக அதிக விரிவானதாக இருந்ததால், அவர் ஆசியா மைனரில் குளிர் காலத்தைக் கழித்திருப்பார். மக்கெதோனியா தேசத்தானின் அழைப்புக்குப் பதிலளித்து, ஐரோப்பாவுக்குள் சென்றது பெரும்பாலும் பொ.ச. 50-ன் வசந்தகாலமாக இருந்திருக்கலாம். பின்பு பிலிப்பியிலும், தெசலோனிக்கேயிலும், பெரோயாவிலும், அத்தேனேயிலும் அவர் பிரசங்கித்து புதிய சபைகளை அமைத்தார். அப்படியென்றால், அவர் பொ.ச. 50-ன் இலையுதிர் காலத்தில், அகாயா மாகாணத்திலுள்ள கொரிந்துவுக்கு ஏறக்குறைய 2,090 கிலோமீட்டர் தூரம் பெரும்பாலும் நடந்தே வந்திருப்பார். (அப். 16:​9, 11, 12; 17:1, 2, 10, 11, 15, 16; 18:1) அப்போஸ்தலர் 18:​11-ன் பிரகாரம், பவுல் அங்கே 18 மாதங்கள், அதாவது பொ.ச. 52-ன் தொடக்கம் வரை தங்கினார். குளிர்காலம் முடிந்த பிறகு பவுல் எபேசுவின் வழியாக செசரியாவுக்கு கப்பற்பயணம் செய்தார். பெரும்பாலும் எருசலேமில், சபைக்கு வாழ்த்துதல் சொல்லச் சென்ற பின்பு, அவர் புறப்பட்ட இடமாகிய சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்கே பெரும்பாலும் பொ.ச. 52-ன் கோடைகாலத்தில் வந்து சேர்ந்தார். lஅப். 18:​12-22.

25பொ.ச. 50-52-ல் பவுல் கொரிந்துவுக்கு முதன்முதலாக சென்றிருக்க வேண்டும் என்பதை தொல்பொருள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு ஒன்று ஆதரிக்கிறது. இது, கிரீஸின் தெல்ஃபி மக்கள் கேட்டிருந்த விஷயத்துக்கு பேரரசன் கிலவுதியுராயனின் பதில் பொறிக்கப்பட்ட கல்வெட்டின் உடைந்த ஒரு துண்டாகும். இதில் “[லூசியஸ் ஜூ]னியஸ், கல்லியோன், . . . ஆளுநர்” என்ற வார்த்தைகள் உள்ளன. இந்தக் கல்வெட்டில் காணப்படுகிற எண் 26, ரோம அரசவை கிலவுதியுவை 26-வது தடவையாக பேரரசராக அங்கீகரித்ததை குறிக்கிறதென்று சரித்திராசிரியர்கள் பொதுவாய் ஒப்புக்கொள்கின்றனர். பொ.ச. ஆகஸ்ட் 1, 52-க்கு முன்பு கிலவுதியு 27-வது தடவையாக பேரரசராக அங்கீகரிக்கப்பட்டார் என மற்ற கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஆளுநரின் பதவிக் காலம், கோடை காலத்தில் தொடங்கி, ஓர் ஆண்டுக்கு நீடித்தது. இவ்வாறு, அகாயா நாட்டின் ஆளுநராக கல்லியோனின் பதவி காலம் பொ.ச. 51-ன் கோடைக்காலத்திலிருந்து பொ.ச. 52-ன் கோடைகாலம் வரையில் நீடித்ததாக தோன்றுகிறது. ‘கல்லியோன் அகாயா நாட்டு அதிபதியாக [ஆளுநராக] இருக்கையில் யூதர் ஏகமனதாக பவுலுக்கு விரோதமாய் எழும்பி அவரை நியாயாசனத்தின்முன் கொண்டுபோனார்கள்.’ அப்போஸ்தலன் பவுலை குற்றமற்றவரெனக் கல்லியோன் விடுதலை செய்தபின், அவர் “இன்னும் அநேக நாள் அங்கே தங்கி,” பின்பு சீரியாவுக்குக் கப்பலேறிச் சென்றார். (அப். 18:​11, 12, 17, 18, தி.மொ.) கொரிந்துவில் பவுல் தங்கின 18 மாதங்கள் பொ.ச. 52-ன் வசந்தகாலத்தில் முடிந்திருக்கும் என்பதை இவையெல்லாம் உறுதிசெய்வதாக தெரிகிறது. இந்தக் காலத்தை பின்வரும் கூற்றும் உறுதிசெய்கிறது. பவுல் கொரிந்துவுக்கு வந்துசேர்ந்தபோது, ‘யூதரெல்லாரும் ரோமாபுரியைவிட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டார்.’ (அப். 18:2) யூதர்கள் வெளியேறும்படியான இந்தக் கட்டளை, கிலவுதியுராயனின் ஒன்பதாவது ஆண்டில், அதாவது, பொ.ச. 49-ல் அல்லது பொ.ச. 50-ன் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டதாக ஐந்தாம் நூற்றாண்டு சரித்திராசிரியன் பாலஸ் ஒரோஸியஸ் சொன்னார். இவ்வாறு, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அந்த ஆண்டின் இலையுதிர் காலத்துக்கு முன்பே கொரிந்துவுக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டும். இது, பொ.ச. 50-ன் இலையுதிர் காலத்திலிருந்து பொ.ச. 52-ன் வசந்தகாலம் வரையில் பவுல் அங்கே தங்கியிருந்திருப்பார் என காட்டுகிறது. a

26பவுலின் மூன்றாவது மிஷனரி பயணம், ஏ. பொ.ச. 52-56. சீரியாவிலுள்ள அந்தியோகியாவில் “சிலகாலம்” இருந்தபின்பு, பவுல் மறுபடியுமாக ஆசியா மைனருக்குப் பயணப்பட்டார். அவர் அநேகமாக பொ.ச. 52-53-ன் குளிர்காலத்துக்குள் எபேசுக்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம். (அப். 18:23; 19:1) பவுல் எபேசுவில் “மூன்று மாதமளவும்” பின்பு ‘இரண்டு வருஷகாலமும்’ போதிப்பதில் செலவிட்டு, அதன்பின் மக்கெதோனியாவுக்குச் சென்றார். (அப். 19:​8-10) பின்னால், எபேசுவிலிருந்து வந்த கண்காணிகளிடம், தான் “மூன்றுவருஷ காலமாய்” அவர்கள் மத்தியில் ஊழியம் செய்ததை நினைப்பூட்டினார். ஆனால் இந்த மூன்று வருடங்கள் முழுமையான எண்ணை குறிக்கலாம். (அப். 20:31) பொ.ச. 55-ன் தொடக்கத்தில் “பெந்தெகொஸ்தே பண்டிகை”க்குப் பின் பவுல் எபேசுவைவிட்டு, நெடுந்தூரம் பயணப்பட்டு கிரீஸிலுள்ள கொரிந்துவுக்கு, குளிர்காலமான மூன்று மாதங்களை அங்கே செலவிடுவதற்குத் தக்கதாய்ப் போய்ச் சேர்ந்தார் என்று தோன்றுகிறது. பின்பு வடக்கே நெடுந்தூரம் பயணப்பட்டு, பொ.ச. 56-ன் பஸ்கா சமயத்துக்குள் பிலிப்பி பட்டணம் சென்றார். அங்கிருந்து துரோவா மற்றும் மிலேத்து வழியாக செசரியாவுக்குக் கடற்பயணஞ்செய்து, பின் எருசலேம் வரையாக சென்று, பொ.ச. 56-ன் பெந்தெகொஸ்தேக்குள் அங்கு சேர்ந்தார். b1 கொ. 16:​5-8; அப். 20:​1-3, 6, 15, 16; 21:​8, 15-17.

27கடைசியாக பொ.ச. 56-100 வரையுள்ள ஆண்டுகள். எருசலேமுக்கு பவுல் வந்து சிறிது காலத்துக்குள் கைதுசெய்யப்பட்டார். அவர் செசரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பேலிக்ஸின் ஸ்தானத்தில் பெஸ்து தேசாதிபதியாக வரும்வரையில் அங்கே இரண்டு ஆண்டுகள் காவலில் இருந்தார். (அப். 21:33; 23:​23-35; 24:27) பெஸ்து வந்தபின் பவுல் ரோமுக்குப் பயணப்பட்ட தேதி பொ.ச. 58 ஆக இருக்கலாமென தோன்றுகிறது. c பவுல் பயணம்செய்த கப்பல், சேதத்திற்கு உள்ளான பின்னும் மெலித்தாவில் குளிர்காலத்தைக் கழித்த பின்பும் அந்தப் பயணம் சுமார் பொ.ச. 59-ல் முடிவுற்றது. பவுல் ரோமில் இரண்டு ஆண்டு காலம், அல்லது பொ.ச. 61 வரை, சிறைக்காவலில் பிரசங்கித்துக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருந்தாரென பதிவு காட்டுகிறது.​—அப். 27:1; 28:​1, 11, 16, 30, 31.

28அப்போஸ்தலருடைய நடபடிகளின் சரித்திரப் பதிவு இதோடு முடிகிறது. ஆனாலும், பவுல் விடுதலை செய்யப்பட்டு, தன் மிஷனரி ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு, கிரேத்தா, கிரீஸ், மற்றும் மக்கெதோனியாவுக்குப் பயணப்பட்டார் என்பதற்கு அத்தாட்சிகள் உள்ளன. ஸ்பெய்ன் வரை அவர் சென்றாரா என்று தெரியவில்லை. ஏறக்குறைய பொ.ச. 65-ல் ரோமில் கடைசியாக சிறையிருந்தபோது, சீக்கிரத்திலேயே நீரோவின் கைகளில் பவுல் இரத்தசாட்சியாக மரித்திருக்கலாம். ரோமில் பெருந்தீ பற்றியெரிந்த தேதி பொ.ச. 64-ன் ஜூலை மாதம் என உலக சரித்திரம் குறிப்பிடுகிறது. இதைப் பின்தொடர்ந்து திடீரென கிறிஸ்தவர்களை நீரோ துன்புறுத்தத் தொடங்கினான். ஆகவே, பவுல் சிறையிருப்பில் ‘விலங்கிடப்பட்டு’ இருந்ததும் பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும் இந்தக் காலப்பகுதிக்கு சரியாக பொருந்துகிறது.​—2 தீ. 1:16; 4:​6, 7.

29அப்போஸ்தலன் யோவான் எழுதின ஐந்து புத்தகங்கள், பேரரசன் டொமீஷியன் கொண்டுவந்த துன்புறுத்தல் காலத்தின் முடிவில் எழுதப்பட்டன. இந்த அரசனுடைய ஆட்சிக்காலம் பொ.ச. 81-96 வரையாகும். இவரது ஆட்சியில் கடைசி மூன்று ஆண்டுகள் ஒரு பைத்தியக்காரன்போல் இவர் நடந்துகொண்டாரென சொல்லப்பட்டிருக்கிறது. பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டபோது யோவான், ஏறக்குறைய பொ.ச. 96-ல் வெளிப்படுத்துதலை எழுதினார். d அவருடைய சுவிசேஷமும் மூன்று நிருபங்களும், அவருடைய விடுதலைக்குப் பின் எபேசுவில் அல்லது அதற்கு அண்மையில் எழுதப்பட்டன. கடைசி அப்போஸ்தலனாகிய இவர் ஏறக்குறைய பொ.ச. 100-ல் மரித்தார்.

30உலக சரித்திர நிகழ்ச்சிகளை, பைபிளின் காலவரிசையோடும் தீர்க்கதரிசனங்களோடும் ஒப்பிடும்போது, கால ஓட்டத்தில் பைபிள் நிகழ்ச்சிகள் எப்போது நடந்தேறின என்பதை சரியாக கணக்கிட முடியும். பைபிளின் காலவரிசை முரண்படாமல் இருப்பது, பரிசுத்த வேதவாக்கியங்கள் கடவுளுடைய வார்த்தையே என்பதில் நம்முடைய நம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a இந்த அதிகாரத்தைப் படிக்கையில், வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 458-67-ஐ எடுத்துப் பார்ப்பது உதவியாயிருக்கலாம்.

b ஆராய்ச்சி 2, பாராக்கள் 28, 29.

c ஆபிரகாம் ஐப்பிராத்தைக் கடந்ததிலிருந்து ஈசாக்கின் பிறப்பு வரை 25 ஆண்டுகள்; பின்பு யாக்கோபின் பிறப்பு வரை 60 ஆண்டுகள்; யாக்கோபு எகிப்துக்குச் சென்றபோது அவருக்கு 130 வயது.​—ஆதி. 12:4; 21:5; 25:26; 47:9.

d 2000-ஆம் ஆண்டில், கடந்து சென்ற இந்தக் காலத்தை 6,025-லிருந்து கழிக்க வேண்டும்.

e ஆங்கில விழித்தெழு!, செப்டம்பர் 22, 1986, பக்கங்கள் 17-27; ஏப்ரல் 8, 1972, பக்கங்கள் 5-20.

f வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 57-8.

g ஆங்கில காவற்கோபுரம், 1976, பக்கம் 247; 1959, பக்கங்கள் 489-92.

h வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 614-16.

i வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 899-904.

j தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, 1987, தொ. 5, பக்கம் 880.

k வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 747.

l வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 747.

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 476, 886.

b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 747.

c யங்கின் பைபிளுக்குச் சொல் ஒப்பீட்டாராய்ச்சி, (ஆங்கிலம்) பக்கம் 342, “ஃபெஸ்டஸ்” என்பதன்கீழ்.

d வெளிப்படுத்துதல் புத்தகத்தின்பேரில் குறிப்புகள், (ஆங்கிலம்), 1852, ஆல்பர்ட் பார்ன்ஸ், பக்கங்கள் XXIX, XXX.

[கேள்விகள்]

1. (அ) யெகோவா காலம் தவறாதவர் என்று எது காட்டுகிறது? (ஆ) பைபிளின் காலவரிசையைப் புரிந்துகொள்வதில் என்ன முன்னேற்றம் செய்யப்பட்டிருக்கிறது?

2. வரிசை எண்களைக் கொண்டு கணக்கிடுவதற்கு உதாரணம் ஒன்றைக் கொடுங்கள்.

3. (அ) பைபிள் தேதிகளைத் தீர்மானிப்பதில் என்ன அரசாங்கப் பதிவுகள் உதவுகின்றன? (ஆ) எது ஆட்சி செய்த காலம், எது பதவியேற்ற ஆண்டு?

4. ஆட்சி செய்த காலத்தை வைத்து பைபிள் காலவரிசையை எவ்வாறு கணக்கிடலாம் என்பதைக் காட்டுங்கள்.

5. எருசலேமில் யெகோவாவின் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்ட தேதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

6. (அ) முன்னறிவிக்கப்பட்ட என்ன காலப்பகுதி பொ.ச.மு. 537-ன் இலையுதிர் காலத்தில் முடிவடைந்தது? (ஆ) இந்தக் காலப்பகுதி எப்போது தொடங்கியிருக்க வேண்டும், நடந்த சம்பவங்கள் எவ்வாறு இதை ஆதரிக்கின்றன?

7. (அ) சாலொமோனின் மரணத்திற்குப் பின் ராஜ்யம் பிரிக்கப்பட்ட காலம் வரையாக ஆண்டுகளை பின்னோக்கி எவ்வாறு கணக்கிடலாம்? (ஆ) எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் என்ன அத்தாட்சியை அளிக்கிறது?

8. (அ) எகிப்தைவிட்டு வெளியேறின வரையில் ஆண்டுகள் எவ்வாறு பின்னோக்கி கணக்கிடப்படுகின்றன? (ஆ) இந்தக் காலத்தின்போது என்ன மாற்றம் பைபிள் காலவரிசையைப் பாதிக்கிறது?

9. (அ) ஆபிரகாமிய உடன்படிக்கை செல்லுபடியான வரையில் இந்தப் பதிவின் தேதி எவ்வாறு பின்னோக்கி கணக்கிடப்படுகிறது? (ஆ) இந்தக் காலப்பகுதியின் முதல் 215 ஆண்டுகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன? (இ) கானானுக்குச் செல்லும் வழியில் ஐப்பிராத் நதியைக் கடந்தபோது ஆபிரகாமின் வயதென்ன?

10. ஆபிரகாமின் காலத்துக்குரிய காலவரிசையை வேறு எந்த அத்தாட்சி ஆதரிக்கிறது?

11. பைபிளின் கால அட்டவணைப்படி பின்னோக்கிச் சென்று எவ்வாறு ஜலப்பிரளயத் தேதியைக் கணக்கிட முடிகிறது?

12. ஆதாமின் படைப்பு வரை செல்லும் காலக்கணக்கீடு என்ன?

13. (அ) இந்தப் பூமியில் மனிதவர்க்கத்தின் சரித்திரம் எவ்வளவு காலம் நீடித்துள்ளது? (ஆ) இது ஏன் யெகோவாவின் ஓய்வுநாளின் நீடிப்புக்கு ஒத்தில்லை?

14. மனிதவர்க்கத்தின் தொடக்கத்தைப் பற்றிய மனிதரின் கருத்துக்களுக்கும் ஊகக் கோட்பாடுகளுக்கும் மேலாக பைபிள் விவரத்தையே ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

15. பைபிளை ஆராய்ந்தறிவது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?

16. (அ) நான்கு சுவிசேஷங்கள் என்ன வரிசை முறையில் எழுதப்பட்டன? (ஆ) இயேசுவின் ஊழியத் தொடக்கத் தேதியை நாம் எவ்வாறு குறிப்பிடலாம்? (இ) வெவ்வேறு சுவிசேஷங்களில் நிகழ்ச்சிகளின் என்ன வெவ்வேறான வரிசை முறைகள் பின்பற்றப்படுகின்றன, யோவானின் விவரப்பதிவில் கவனிக்கத்தக்கது எது?

17. இயேசுவின் மரண தேதியை வேறு என்ன அத்தாட்சியும் உறுதிசெய்கிறது?

18. (அ) 69 ‘வாரங்களைப்’ பற்றி தானியேல் என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்? (ஆ) நெகேமியாவின் பிரகாரம், இந்தக் காலப்பகுதி எப்போது தொடங்கினது? (இ) அர்தசஷ்டாவினுடைய ஆட்சியின் தொடக்கத் தேதியை நாம் எவ்வாறு கணக்கிடலாம்?

19. (அ) ‘அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷத்திலிருந்து’ கணக்கிட்டு, மேசியா தோன்றிய தேதியை நாம் எவ்வாறு தீர்மானிக்கிறோம்? (ஆ) 70 ‘வாரங்களைப்’ பற்றிய தீர்க்கதரிசனம் இந்தத் தேதியிலிருந்து எவ்வாறு நிறைவேற்றமடைந்தது?

20. ஏரோதின் மரணமும் அதற்கு முந்தின நிகழ்ச்சிகளும் சம்பவித்த காலத்தை தீர்மானிப்பதில் உலக சரித்திரம் எவ்வாறு பைபிள் பதிவுடன் இணைகிறது?

21. பவுலின் முதல் மிஷனரி பயணத்தின் உத்தேசமான தேதியை எப்படி நாம் தீர்மானிக்கலாம்?

22. கலாத்தியர் 1-வது 2-வது அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, பவுல் எருசலேமுக்குச் சென்ற அந்த இரண்டு சந்திப்புகளுக்கு எவ்வாறு தேதி குறிப்பிடலாம்?

23. கலாத்தியர் 2-வது அதிகாரமும் அப்போஸ்தலர் 15-வது அதிகாரமும் பவுல் பொ.ச. 49-ல் எருசலேமுக்குச் சென்றதைக் குறிக்கின்றனவென எந்த அத்தாட்சி குறிப்பாய் உணர்த்துகிறது?

24. எந்த ஆண்டுகளின்போது பவுல் தன் இரண்டாவது மிஷனரி பயணத்தைச் செய்தார், பொ.ச. 50-ன் பிற்பகுதி வரையாக அவர் கொரிந்துவுக்குப் போய்ச் சேரவில்லை என்பதில் ஏன் சந்தேகமில்லை?

25. (அ) பவுல் கொரிந்துவுக்கு முதலாவது சென்றது பொ.ச. 50-52 என்பதை தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு ஆதரிக்கிறது? (ஆ) ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் “இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த” உண்மை எவ்வாறு இந்த தேதியை உறுதிசெய்கிறது?

26. பவுல் தனது மூன்றாவது மிஷனரி பயணத்தில் எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த தேதிகளில் சென்றார்?

27. பவுல் முதன்முறையாக ரோமில் கைதுசெய்யப்பட்டது முதல் என்னவெல்லாம் நடந்தன?

28. பவுல் கடைசியாக சிறைத்தண்டனை பெற்று கொல்லப்பட்ட தேதி இதுதான் என்று எப்படி சரியாக சொல்ல முடியும்?

29. அப்போஸ்தலரின் காலம் எப்போது முடிவடைந்தது, அப்போது எழுதப்பட்ட புத்தகங்கள் யாவை?

30. பைபிள் கால வரிசையைப் பற்றிய இந்த ஆராய்ச்சியால் என்ன நன்மை?

[பக்கம் 287-ன் அட்டவணை]

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள்—நான்கு சுவிசேஷங்களும் கால வரிசையில் அமைக்கப்படுகின்றன

குறியீடுகள்: பி. “பின்”; ஏ. “ஏறக்குறைய.”

காலம் இடம் நிகழ்ச்சி

இயேசுவின் ஊழியம் வரை

பொ.ச.மு. 3 எருசலேம், முழுக்காட்டுபவரான யோவானின் பிறப்பு சகரியாவுக்கு

ஆலயம் முன்னறிவிக்கப்பட்டது

லூக்1:​5-25

ஏ. பொ.ச.மு. 2 நாசரேத்து; இயேசுவின் பிறப்பு மரியாளுக்கு முன்னறிவிக்கப்பட்டது,

யூதேயா அவள் எலிசபெத்தைப் போய் பார்க்கிறாள்

லூக்1:​26-56

பொ.ச.மு. 2 யூதேய முழுக்காட்டுபவரான யோவானின் பிறப்பு;

மலைநாடு பிற்பகுதியில், அவருடைய வனாந்தர வாழ்க்கை

லூக்1:​57-80

பொ.ச.மு. 2 பெத்லகேம் ஆபிரகாமின் மற்றும் தாவீதின் வித்தாக

ஏ. அக். 1 இயேசுவின் பிறப்பு (வார்த்தையாகிய அவர் மூலம்

மற்ற எல்லாம் உண்டாயின) மத்1:​1-25

லூக்2:​1-7 யோவா 1:​1-5, 9-14

பெத்லகேமின் தேவதூதன் நற்செய்தியை அறிவிக்கிறார்;

அருகில் மேய்ப்பர்கள் சென்று குழந்தையைக் காணுதல்

லூக்2:​8-20

பெத்லகேம்; (8-வது நாள்) இயேசு விருத்தசேதனம்

எருசலேம் செய்யப்படுகிறார், (40-வது நாள்) ஆலயத்திற்கு

கொண்டு செல்லப்படுகிறார் லூக்2:​21-38

பொ.ச.மு. 1 எருசலேம்; சோதிடர்கள்; எகிப்துக்கு ஓடிப்போதல்;

அல்லது பொ.ச. 1 பெத்லகேம்; குழந்தைகள் கொல்லப்படுதல்; இயேசு

நாசரேத்து திரும்பிவருதல் மத்2:​1-23 லூக்2:​39, 40

பொ.ச. 12 எருசலேம் பஸ்கா பண்டிகையில் பன்னிரண்டு வயது இயேசு;

வீட்டுக்குச் செல்கிறார் லூக்2:​41-52

29, வசந்தகாலம் வனாந்தரம், முழுக்காட்டுபவரான யோவானின் ஊழியம்

யோர்தான் மத்3:​1-12 மாற்1:​1-8

லூக்3:​1-18 யோவா1:​6-8, 15-28

இயேசுவின் ஊழியத்தின் தொடக்கம்

29, இலையுதிர்காலம் யோர்தான் நதி இயேசுவின் முழுக்காட்டுதலும் அபிஷேகமும்,

தாவீதின் வம்சத்தில் மனிதனாக பிறந்தார், ஆனால்

கடவுளுடைய குமாரனாக அறிவிக்கப்பட்டார்

மத்3:​13-17 மாற்1:​9-11

லூக்3:​21-38 யோவா1:​32-34

யூதேய இயேசுவின் உபவாசமும் சோதனையும்

வனாந்தரம் மத்4:​1-11 மாற்1:​12, 13

லூக்4:​1-13

யோர்தானுக்கு இயேசுவை பற்றி முழுக்காட்டுபவரான

அப்பால் யோவானின் சாட்சியம்

பெத்தானியா யோவா1:​15, 29-34

தான் பள்ளத்தாக்கின் இயேசுவின் முதல் சீஷர்கள்

மேற்பகுதி யோவா1:​35-51

கலிலேயாவின் இயேசுவின் முதல் அற்புதம்;

கானாவில்; கப்பர்நகூமுக்கு செல்கிறார்

கப்பர்நகூம் யோவா2:​1-12

30, பஸ்கா எருசலேம் பஸ்கா ஆசரிப்பு; வியாபாரிகளை

ஆலயத்திலிருந்து துரத்துகிறார்

யோவா2:​13-25

எருசலேம் நிக்கொதேமுடன் இயேசுவின் உரையாடல்

யோவா3:​1-21

யூதேயா; அயினோன் இயேசுவின் சீஷர் முழுக்காட்டுகின்றனர்; யோவான் சிறுக

வேண்டும் யோவா3:​22-36

திபேரியா யோவான் சிறையிலடைக்கப்படுகிறார்; இயேசு

கலிலேயாவுக்கு செல்கிறார் மத்4:12;

14:​3-5 மாற்1:14; 6:​17-20

லூக்3:​19, 20; லூக்4:14 யோவா4:​1-3

சமாரியாவில், கலிலேயாவுக்கு போகும் வழியில்,

சீகார் இயேசு சமாரியருக்கு போதிக்கிறார்

யோவா4:​4-43

கலிலேயாவில் இயேசுவின் விரிவான ஊழியம்

கலிலேயா ‘பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்று

முதலில் அறிவிக்கிறார் மத்4:17

மாற்1:​14, 15 லூக்4:​14, 15

யோவா4:​44, 45

நாசரேத்து; பையனை சுகப்படுத்துகிறார்; தமக்கு

கானா; நியமிக்கப்பட்ட ஊழியத்தை பற்றிய

கப்பர்நகூம் தீர்க்கதரிசனத்தை வாசிக்கிறார்;

நிராகரிக்கப்படுகிறார்; கப்பர்நகூமுக்கு

போய்விடுகிறார் மத்4:​13-16

லூக்4:​16-31 யோவா4:​46-54

கலிலேயா கடல், சீமோனும் அந்திரேயாவும், யாக்கோபும்

கப்பர்நகூமுக்கு யோவானும் அழைக்கப்படுகின்றனர்

அருகில் மத்4:​18-22 மாற்1:16-20

லூக்5:​1-11

கப்பர்நகூம் பேய் பிடித்தவனையும் பேதுருவின் மாமியாரையும்

இன்னும் பலரையும் சுகப்படுத்துகிறார்

மத்8:​14-17 மாற்1:​21-34

லூக்4:​31-41

கலிலேயா இப்போது அழைக்கப்பட்ட நால்வருடன் கலிலேயாவில்

முதல் சுற்றுப்பயணம் மத்4:​23-25

மாற்1:​35-39 லூக்4:​42, 43

கலிலேயா குஷ்டரோகி சுகப்படுத்தப்படுகிறான்; திரளான

ஜனங்கள் இயேசுவிடம் கூடுகின்றனர்

மத்8:​1-4 மாற்1:​40-45

லூக்5:​12-16

கப்பர்நகூம் திமிர்வாதக்காரனை சுகப்படுத்துகிறார்

மத்9:​1-8 மாற்2:​1-12

லூக்5:​17-26

கப்பர்நகூம் மத்தேயுவை அழைக்கிறார்; ஆயக்காரருடன் விருந்து

மத்9:​9-17 மாற்2:​13-22

லூக்5:​27-39

யூதேயா யூதேய ஜெபாலயங்களில் பிரசங்கிக்கிறார்

லூக்4:44

31, பஸ்கா எருசலேம் விருந்துக்கு செல்கிறார்; ஒரு மனிதனை

சுகப்படுத்துகிறார்; பரிசேயர்களை கண்டனம்

செய்கிறார் யோவா5:​1-47

எருசலேமிலிருந்து சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களை கொய்கின்றனர்

திரும்புகிறார் (?) மத்12:​1-82:​23-286:​1-5

கலிலேயா; ஓய்வுநாளில் கையை சுகப்படுத்துகிறார்;

கலிலேயா கடல் கடலோரத்துக்கு செல்கிறார்; சுகப்படுத்துகிறார்

மத்12:​9–21 மாற்3:​1-12

லூக்6:​6-11

கப்பர்நகூமுக்கு 12 பேர் அப்போஸ்தலராக

அருகிலுள்ள மலை தெரிந்தெடுக்கப்படுகின்றனர் மாற்3:13-19

லூக்6:​12-16

கப்பர்நகூமுக்கு அருகில் மலைப் பிரசங்கம் மத்5:​1–7:29

லூக்6:​17-49

கப்பர்நகூம் அதிபதியின் வேலைக்காரனை சுகப்படுத்துகிறார்

மத்8:​5-13 லூக்7:​1-10

நாயீன் விதவையின் மகனை உயிர்த்தெழுப்புகிறார்

லூக்7:​11-17

கலிலேயா சிறைச்சாலையிலுள்ள யோவான் சீஷர்களை

இயேசுவிடம் அனுப்புகிறார்

மத்11:​2-19 லூக்7:​18-35

கலிலேயா பட்டணங்களை கடிந்துகொள்ளுதல்; பாலகருக்கு

வெளிப்படுத்துதல்; நுகம் மெதுவானது

மத்11:​20-30

கலிலேயா பாவியான ஸ்திரீ பாதங்களை அபிஷேகம் செய்தல்;

கடன்காரரை பற்றிய உவமை லூக்7:​36-50

கலிலேயா 12 சீஷருடன் கலிலேயாவில் இரண்டாவது முறையாக

பிரசங்கப் பயணம் லூக்8:​1-3

கலிலேயா பிசாசு பிடித்தவன் சுகப்படுத்தப்படுகிறான்;

பெயெல்செபூலுடன் தொடர்பு என்ற பழிச்சொல்

மத்12:​22-37 மாற்3:​19-30

கலிலேயா வேதபாரகரும் பரிசேயரும் அடையாளம்

கேட்கிறார்கள் மத்12:​38-45

கலிலேயா கிறிஸ்துவிற்கு சீஷர்களே நெருங்கிய உறவினர்

மத்12:​46-50 மாற்3:​31-35

லூக்8:​19-21

கலிலேயா கடல் உவமைகள்: விதைக்கிறவன், களைகள்,

மற்றவர்கள்; விளக்கங்கள் மத்13:​1-53

மாற்4:​1-34 லூக்8:​4-18

கலிலேயா கடல் ஏரியை கடக்கையில் சுழல்காற்று அமர்த்தப்படுகிறது

மத்8:​18, 23-27 மாற்4:​35-41

லூக்8:​22-25

கதரே, பிசாசுபிடித்த இருவர் சுகப்படுத்தப்படுகின்றனர்;

கலிலேயா கடலின் பன்றிகள் பிசாசுகள் பன்றிகளுக்குள் புகுகின்றன

தெ.கி. பகுதி மத்8:​28-34 மாற்5:​1-20

லூக்8:​26-39

பெரும்பாலும் யவீருவின் மகளை எழுப்புகிறார்; ஸ்திரீ

கப்பர்நகூம் சுகமடைகிறாள் மத்9:​18-26

மாற்5:​21-43 லூக்8:​40-56

கப்பர்நகூம் (?) இரண்டு குருடர்களையும் பிசாசு பிடித்த ஊமையன்

ஒருவனையும் சுகப்படுத்துகிறார்

மத்9:27-34

நாசரேத்து தாம் வளர்ந்த பட்டணத்துக்கு திரும்ப

செல்கிறார், மறுபடியும் நிராகரிக்கப்படுதல்

மத்13:​54-58 மாற்6:​1-6

கலிலேயா கலிலேயாவுக்கு மூன்றாவது தடவை பயணம்,

அப்போஸ்தலரை அனுப்புவதால்

விரிவாக்கப்படுகிறது மத்9:​35–11:1

மாற்6:​6-13 லூக்9:​1-6

திபேரியா முழுக்காட்டுபவரான யோவானின் சிரச்சேதம்;

ஏரோது குற்றவுணர்ச்சியால் பயப்படுகிறான்

மத்14:​1-12 மாற்6:​14-29

லூக்9:​7-9

32, பஸ்கா கப்பர்நகூம் (?); பிரசங்க சுற்று பயணத்திலிருந்து அப்போஸ்தலர்திரும்புகின்றனர்

நெருங்குகையில் கலிலேயா கடலின்; 5,000 பேருக்கு

(யோவா. 6:4) வ.கி. பகுதி உணவு பரிமாறல் மத்14:​13-21

மாற்6:​30-44 லூக்9:​10-17

யோவா6:​1-13

கலிலேயா கடலின் இயேசுவை ராஜாவாக்க முயற்சி; அவர் கடலின்மீது

வ.கி. பகுதி; நடக்கிறார்; சுகப்படுத்துகிறார்

கெனேசரேத்து மத்14:​22-36மாற்6:​45-56

யோவா6:​14-21

கப்பர்நகூம் ‘ஜீவ அப்பத்தை’ அடையாளங்காட்டுகிறார்;

சீஷர்கள் பலர் விலகிச் சென்றுவிடுகின்றனர்

யோவா6:​22-71

32, பஸ்காவுக்குப் பெரும்பாலும் கடவுளுடைய வார்த்தையை அவமாக்குகிற

பின் கப்பர்நகூம் பாரம்பரியங்கள் மத்15:​1-20

மாற்7:​1-23 யோவா7:1

பெனிக்கே; தீரு, சீதோனுக்கருகில்; பின்பு

தெக்கப்போலி தெக்கப்போலிக்கு; 4,000 பேர்

உணவளிக்கப்படுகின்றனர் மத்15:​21-38

மாற்7:​24–8:9

மக்தலா சதுசேயரும் பரிசேயரும் மறுபடியும்

அடையாளம் கேட்கின்றனர்

மத்15:​39–16:4 மாற்8:​10-12

கலிலேயா கடலின் பரிசேயரின் புளித்தமாவை பற்றி எச்சரிக்கிறார்;

வ.கி. பகுதி; குருடனை சுகப்படுத்துகிறார்

பெத்சாயிதா மத்16:​5-12 மாற்8:​13-26

பிலிப்புச் மேசியாவாகிய இயேசு; மரணத்தையும்

செசரியா உயிர்த்தெழுதலையும் முன்னறிவிக்கிறார்

மத்16:​13-28 மாற்8:​27–9:1

லூக்9:​18-27

பெரும்பாலும் பேதுரு, யாக்கோபு, யோவானுக்கு முன்பாக

எர்மோன் மலை மறுரூபமாதல் மத்17:​1-13

மாற்9:​2-13 லூக்9:​28-36

பிலிப்பிச் சீஷர்களால் சுகப்படுத்த முடியாத பிசாசு

செசரியா பிடித்தவனை சுகப்படுத்துகிறார்

மத்17:​14-20 மாற்9:​14-29

லூக்9:​37-43

கலிலேயா தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும்

மறுபடியும் முன்னறிவிக்கிறார்

மத்17:​22, 23 மாற்9:​30-32

லூக்9:​43-45

கப்பர்நகூம் வரிப்பணம் அற்புத செயலால் அளிக்கப்படுகிறது

மத்17:​24-27

கப்பர்நகூம் ராஜ்யத்தில் பெரியவன்; குற்றங்களை

மன்னித்தல்; இரக்கம் மத்18:​1-35

மாற்9:​33-50 லூக்9:​46-50

கலிலேயா; கூடாரப் பண்டிகைக்காக கலிலேயாவிலிருந்து

சமாரியா செல்கிறார்; போதக ஊழியத்துக்காக

எல்லாம் ஒதுக்கி வைக்கப்படுகிறது

மத்8:​19-22 லூக்9:​51-62

யோவா7:​2-10

யூதேயாவில் இயேசுவின் பிற்பட்ட ஊழியம்

32, கூடாரப் எருசலேம் கூடாரப் பண்டிகையில் இயேசு மக்களுக்கு

பண்டிகை போதிக்கிறார் யோவா7:​11-52

எருசலேம் பண்டிகைக்குப் பின் போதிக்கிறார்; குருடனை

சுகப்படுத்துகிறார் 8:​12–9:41

பெரும்பாலும் பிரசங்கிக்கும்படி 70 பேர்

யூதேயா அனுப்பப்படுகின்றனர்; அவர்கள் திரும்பி

வந்து, அறிக்கை செய்தல்

லூக்10:​1-24

யூதேயா; பிறனிடத்தில் அன்பு காட்டிய சமாரியனைப்

பெத்தானியா பற்றி சொல்கிறார்; மார்த்தாள்,

மரியாளின் வீட்டில் லூக்10:​25-42

பெரும்பாலும் மறுபடியும் மாதிரி ஜெபத்தை கற்பிக்கிறார்;

யூதேயா இடைவிடாதுகேட்க வலியுறுத்துகிறார்

லூக்11:​1-13

பெரும்பாலும் பொய் குற்றச்சாட்டை தகர்த்துவிடுகிறார்;

யூதேயா அந்தச் சந்ததியார் கண்டனத்துக்குரியவர்கள்

என்று சாடுகிறார் லூக்11:​14-36

பெரும்பாலும் பரிசேயனின் விருந்தில், மாய்மாலக்காரரை

யூதேயா இயேசு கண்டனம் செய்கிறார்

லூக்11:​37-54

பெரும்பாலும் கடவுளது பராமரிப்பை பற்றி பேச்சு;

யூதேயா உண்மையுள்ள விசாரணைக்காரன்

லூக்12:​1-59

பெரும்பாலும் கூனியான ஸ்திரீயை ஓய்வுநாளில்

யூதேயா சுகப்படுத்துகிறார்; மூன்று உவமைகள்

லூக்13:​1-21

32, பிரதிஷ்டை எருசலேம் பிரதிஷ்டை பண்டிகையில் இயேசு;

பண்டிகை நல்ல மேய்ப்பன் யோவா10:​1-39

யோர்தானுக்குக் கிழக்கே இயேசுவின் பிற்பட்ட ஊழியம்

யோர்தானுக்கு பலர் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர்

அப்பால் யோவா10:​40-42

பெரேயா (யோர்தானுக்கு பட்டணங்களிலும் கிராமங்களிலும் பிரசங்கித்துக்

அப்பால்) கொண்டே எருசலேமை நோக்கிச்

செல்கிறார் லூக்13:22

பெரேயா ராஜ்யத்தில் பிரவேசிப்பது; ஏரோது

பயமுறுத்துகிறான்; வீடு பாழாக்கப்படும்

லூக்13:​23-35

பெரும்பாலும் மனத்தாழ்மை; பெரிய விருந்தைப் பற்றிய

பெரேயா உவமை லூக்14:​1-24

பெரும்பாலும் சீஷனாக செய்ய வேண்டிய தியாகங்கள்

பெரேயா லூக்14:​25-35

பெரும்பாலும் உவமைகள்: காணாமற்போன ஆடு,

பெரேயா காணாமற்போன காசு, ஊதாரி மகன்

லூக்15:​1-32

பெரும்பாலும் உவமைகள்: அநீதியான உக்கிராணக்காரன்,

பெரேயா ஐசுவரியவானும் லாசருவும்

லூக்16:​1-31

பெரும்பாலும் மன்னிப்பதும் விசுவாசமும், அப்பிரயோஜனமான

பெரேயா ஊழியக்காரர் லூக்17:​1-10

பெத்தானியா மரித்த லாசருவை இயேசு உயிர்ப்பிக்கிறார்

யோவா11:​1-46

எருசலேம்; இயேசுவுக்கு எதிராக காய்பாவின்

எப்பிராயீம் ஆலோசனை; இயேசு நழுவிச்

சென்றுவிடுகிறார் யோவா11:​47-54

சமாரியா; சமாரியா, கலிலேயா வழியாக

கலிலேயா செல்கையில் சுகப்படுத்துகிறார்,

கற்பிக்கிறார் லூக்17:​11-37

சமாரியா அல்லது உவமைகள்: விடாப்பிடியாக கெஞ்சும்

கலிலேயா விதவை, பரிசேயனும் ஆயக்காரனும்

லூக்18:​1-14

பெரேயா பெரேயாவின் வழியாக செல்கிறார்;

விவாகரத்தின்பேரில் போதிக்கிறார்

மத்19:​1-12 மாற்10:​1-12

பெரேயா சிறு பிள்ளைகளை வரவேற்று ஆசீர்வதிக்கிறார்

மத்19:​13-15 மாற்10:13-16

லூக்18:​15-17

பெரேயா மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபன்;

திராட்சத்தோட்டத்து வேலையாட்களைப்

பற்றிய உவமை மத்19:​16–20:16

மாற்10:​17-31 லூக்18:​18-30

பெரும்பாலும் இயேசு தம்முடைய மரணத்தையும்

பெரேயா உயிர்த்தெழுதலையும் பற்றி மூன்றாவது

தடவை முன்னறிவிக்கிறார்

மத்20:​17-19 மாற்10:​32-34

லூக்18:​31-34

பெரும்பாலும் யாக்கோபும் யோவானும் ராஜ்யத்தில்

பெரேயா முக்கிய ஸ்தானத்தை வேண்டுவது

மத்20:​20-28 மாற்10:​35-45

எரிகோ எரிகோவின் வழியாக செல்கையில், குருடர்

இருவரை சுகப்படுத்துகிறார்; சகேயுவின்

வீட்டுக்கு செல்கிறார்; பத்து

ராத்தல்களை பற்றிய உவமை

மத்20:​29-34 மாற்10:​46-52

லூக்18:​35–19:28

எருசலேமில் இயேசுவின் கடைசி ஊழியம்

நிசான் 8, 33 பெத்தானியா பஸ்காவுக்கு ஆறு நாட்களுக்கு முன்னால்

பெத்தானியாவுக்கு வந்துசேருகிறார்

யோவா11:55–12:1

நிசான் 9 பெத்தானியா குஷ்டரோகி சீமோனின் வீட்டில் விருந்து;

மரியாள் இயேசுவின் தலையில் தைலத்தை

ஊற்றுகிறாள்; இயேசுவையும்

லாசருவையும் காண யூதர்கள்

வருகின்றனர் மத்26:​6-13

மாற்14:​3-9 யோவா12:​2-11

பெத்தானியா- எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றி பவனி

எருசலேம் மத்21:​1-11, 14-17

மாற்11:​1-11 லூக்19:​29-44

யோவா12:​12-19

நிசான் 10 பெத்தானியா- கனியற்ற அத்திமரம் சபிக்கப்பட்டது;

எருசலேம் இரண்டாவது தடவை ஆலய சுத்திகரிப்பு

மத்21:​18, 19, 12, 13

மாற்11:​12-17

லூக்19:​45, 46

எருசலேம் பிரதான ஆசாரியரும் பரிசேயரும்

இயேசுவை கொல்வதற்கு

சதிசெய்கின்றனர் மாற்11:​18, 19

லூக்19:​47, 48

எருசலேம் கிரேக்கரோடு பேசுகிறார்; யூதரின்

அவிசுவாசம் யோவா12:​20-50

நிசான் 11 பெத்தானியா- கனியற்ற அத்திமரம் பட்டுப்போனதை

எருசலேம் பார்க்கின்றனர்21:​19-2211:​20-25

எருசலேம், கிறிஸ்துவின் அதிகாரத்தைப் பற்றி கேள்வி;

ஆலயம் இரண்டு குமாரரை பற்றிய உவமை

மத்21:​23-32 மாற்11:​27-33

லூக்20:​1-8

எருசலேம், பொல்லாத குத்தகைக்காரர் மற்றும்

ஆலயம் கலியாண விருந்தைப் பற்றிய உவமைகள்

மத்21:​33–22:14

மாற்12:​1-12 லூக்20:​9-19

எருசலேம், வரி, உயிர்த்தெழுதல், கற்பனையின்பேரில்

ஆலயம் சிக்கவைக்கும் கேள்விகள் மத்22:​15-40

மாற்12:​13-34 லூக்20:​20-40

எருசலேம், மேசியாவின் வம்சாவளியை பற்றி

ஆலயம் வாயடைக்கச் செய்த இயேசுவின் கேள்வி

மத்22:​41-46 மாற்12:​35-37

லூக்20:​41-44

எருசலேம், சதுசேயரையும் பரிசேயரையும் கடுமையாக

ஆலயம் கண்டனம் செய்தல் மத்23:​1-39

மாற்12:​38-40 லூக்20:​45-47

எருசலேம், விதவையின் காசு மாற்12:​41-44

ஆலயம் லூக்21:​1-4

ஒலிவ மலை எருசலேமின் அழிவைப்பற்றிய முன்னறிவிப்பு,

இயேசுவின் வந்திருத்தல், ஒழுங்குமுறையின்

முடிவு மத்24:​1-51

மாற்13:​1-37 லூக்21:​5-38

ஒலிவ மலை உவமைகள்: பத்துக் கன்னிகைகள், தாலந்துகள்,

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

மத்25:​1-46

நிசான் 12 எருசலேம் இயேசுவை கொல்வதற்கு மதத்தலைவர்கள்

சதிசெய்கின்றனர் மத்26:​1-5

மாற்14:​1, 2 லூக்22:​1, 2

எருசலேம் இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ்

ஆசாரியருடன் பேரம் பேசுகிறான்

மத்26:​14-16 மாற்14:​10, 11

லூக்22:​3-6

நிசான் 13 எருசலேமிலும் அருகிலும் பஸ்காவுக்கான

(வியாழக்கிழமை ஏற்பாடுகள் மத்26:​17-19

பிற்பகல்) மாற்14:​12-16 லூக்22:​7-13

நிசான் 14 எருசலேம் பன்னிருவருடன் பஸ்கா விருந்து

சாப்பிட்டது மத்26:​20, 21

மாற்14:​17, 18 லூக்22:​14-18

எருசலேம் இயேசு தம் அப்போஸ்தலருடைய

பாதங்களைக் கழுவுகிறார்

யோவா13:​1-20

எருசலேம் யூதாஸே காட்டிக்கொடுப்பவன் என அடையாளம்

காட்டி வெளியேற்றுகிறார் மத்26:​21-25

மாற்14:​18-21 லூக்22:​21-23

யோவா13:​21-30

எருசலேம் 11 பேருடன் நினைவு ஆசரிப்பு இராப்போஜனம்

தொடங்கி வைக்கப்பட்டது மத்26:​26-29

மாற்14:​22-25

லூக்22:​19, 20, 24-30

[1 கொ. 11: 23-25]

எருசலேம் பேதுரு மறுதலிப்பதும் அப்போஸ்தலர்கள்

சிதறிப்போவதும் முன்னறிவிக்கப்படுகிறது

மத்26:​31-35 மாற்14:​27-31

லூக்22:​31-38 யோவா13:​31-38

எருசலேம் சகாயர்; பரஸ்பர அன்பு; உபத்திரவம்;

இயேசுவின் ஜெபம் யோவா14:​1–17:26

கெத்செமனே தோட்டத்தில் வியாகுலம்; இயேசு

காட்டிக்கொடுக்கப்பட்டு,

கைதுசெய்யப்படுகிறார்

மத்26:​30, 36-56

மாற்14:​26, 32-52

லூக்22:​39-53 யோவா18:​1-12

எருசலேம் அன்னா கேள்விகேட்டல்; காய்பா விசாரணை

செய்தல்; ஆலோசனை சங்கத்தில் பேதுரு

மறுதலிக்கிறார் மத்26:​57–27:1

மாற்14:​53–15:1 லூக்22:​54-71

யோவா18:​13-27

எருசலேம் காட்டிக்கொடுத்த யூதாஸ் தூக்குப்

போட்டுக்கொள்கிறான் மத்27:​3-10

[அப். 1:18, 19]

எருசலேம் பிலாத்துவிடமும், ஏரோதிடமும் மறுபடியும்

பிலாத்துவிடமும் கொண்டு போகப்படுகிறார்

மத்27:​2, 11-14 மாற்15:​1-5

லூக்23:​1-12 யோவா18:​28-38

எருசலேம் முதலில் அவரை விடுதலைசெய்ய முயன்ற பிலாத்து,

கடைசியில் அவருக்கு மரண தண்டனை

அளிக்கிறான் மத்27:​15-30

மாற்15:​6-19 லூக்23:​13-25

யோவா18:​39–19:16

(வெள்ளிக்கிழமை, கொல்கொதா, வாதனை கழுமரத்தில் இயேசுவின் மரணமும்,

ஏ. 3:00 பி.ப.) எருசலேம் அதைத் தொடர்ந்து நடந்தவையும்

மத்27:​31-56 மாற்15:​20-41

லூக்23:​26-49 யோவா19:​16-30

எருசலேம் இயேசுவின் உடலை வாதனை கழுமரத்திலிருந்து

இறக்கி, அடக்கம் செய்தல்

மத்27:​57-61 மாற்15:​42-47

லூக்23:​50-56 யோவா19:​31-42

நிசான் 15 எருசலேம் ஆசாரியர்களும் பரிசேயரும் கல்லறைக்கு காவல்

வைக்கின்றனர் மத்27:​62-66

நிசான் 16 எருசலேமும் இயேசுவின் உயிர்த்தெழுதலும் அந்நாளின்

அதன் சுற்றுப்புறமும் நிகழ்ச்சிகளும் மத்28:​1-15

மாற்16:​1-8 லூக்24:​1-49

யோவா20:​1-25

நிசான் 16 பி. எருசலேம்; இயேசு கிறிஸ்து அடுத்தடுத்து சீஷர்களின் முன்

கலிலேயா தோன்றுகிறார் மத்28:​16-20

[1 கொ. 15:​5-7] [அப். 1:​3-8]

யோவா20:​26–21:25

அய்யார் 25 ஒலிவ மலை, இயேசு உயிர்த்தெழுந்து, 40-ம் நாளில்

பெத்தானியாவுக்கருகில் பரலோகத்துக்கு செல்கிறார்

[அப். 1:​9-12] லூக்24:​50-53

‘இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளைக்’ குறிப்பிடும் அட்டவணையின்பேரில் கேள்விகள்:

(அ) முழுக்காட்டுபவரான யோவான் சிறைப்படுத்தப்பட்ட சமயம் வரையில் இயேசுவின் ஊழியத்தில் சம்பவித்த முக்கியமான சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுங்கள்.

(ஆ) பின்வரும் நிகழ்ச்சிகளின் இடத்தையும் ஆண்டையும் குறிப்பிடுங்கள்: (1) சீமோனையும் அந்திரேயாவையும், யாக்கோபையும் யோவானையும் அழைத்தது. (2) 12 அப்போஸ்தலரைத் தெரிந்தெடுத்தது. (3) மலைப்பிரசங்கம். (4) மறுரூபமாதல். (5) மரித்த லாசருவை உயிர்த்தெழுப்புதல். (6) சகேயுவின் வீட்டுக்கு இயேசு செல்வது.

(இ) இயேசுவின் குறிப்பிடத்தக்க அற்புதங்கள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்; அவை எப்போது, எங்கே நடந்தனவென கூறுங்கள்.

(ஈ) பொ.ச. 33, நிசான் 8-லிருந்து நிசான் 16 வரையில் இயேசுவுக்கு நேரிட்ட சில முக்கிய நிகழ்ச்சிகள் யாவை?

(உ) இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது சொன்ன குறிப்பிடத்தக்க உவமைகள் சில யாவை?

[பக்கம் 294-297-ன் படம்]

முக்கிய சரித்திர தேதிகளின் அட்டவணை

குறியீடுகள்: பி. “பின்”; மு. “முன்”; ஏ. “ஏறக்குறைய.”

தேதி நிகழ்ச்சி வசனம்

பொ.ச.மு. 4026 ஆதாம் படைக்கப்பட்டது ஆதி. 2:7

பொ.ச.மு. 4026-க்கு பி. ஏதேனிய உடன்படிக்கை செய்யப்பட்டது, ஆதி. 3:15

முதல் தீர்க்கதரிசனம்

பொ.ச.மு. 3896 மு. காயீன் ஆபேலைக் கொல்கிறான் ஆதி. 4:8

பொ.ச.மு. 3896 சேத்தின் பிறப்பு ஆதி. 5:3

பொ.ச.மு. 3404 நீதிமான் ஏனோக்கின் பிறப்பு ஆதி. 5:18

பொ.ச.மு. 3339 மெத்தூசலாவின் பிறப்பு ஆதி. 5:21

பொ.ச.மு. 3152 லாமேக்கின் பிறப்பு ஆதி. 5:25

பொ.ச.மு. 3096 ஆதாமின் மரணம் ஆதி. 5:5

பொ.ச.மு. 3039 ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்; ஆதி. 5:​23, 24;

அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலம் யூ. 14

முடிகிறது

பொ.ச.மு. 2970 நோவாவின் பிறப்பு ஆதி. 5:​28, 29

பொ.ச.மு. 2490 மனிதகுலத்தைக் குறித்து கடவுளுடைய ஆதி. 6:3

அறிவிப்பு

பொ.ச.மு. 2470 யாப்பேத்தின் பிறப்பு ஆதி. 5:32;

ஆதி9:24; 10:21

பொ.ச.மு. 2468 சேமின் பிறப்பு ஆதி. 7:11; 11:10

பொ.ச.மு. 2370 மெத்தூசலாவின் மரணம் ஆதி. 5:27

பிரளயம் ஏற்படுதல் (இலையுதிர்காலத்தில்) ஆதி. 7:​6, 11

பொ.ச.மு. 2369 ஜலப்பிரளயத்துக்குப் பின் உடன்படிக்கை ஆதி. 8:13; 9:16

செய்தல்

பொ.ச.மு. 2368 அர்பக்சாத்தின் பிறப்பு ஆதி. 11:10

பொ.ச.மு. 2269 பி. பாபேல் கோபுரம் கட்டுதல் ஆதி. 11:4

பொ.ச.மு. 2020 நோவாவின் மரணம் ஆதி. 9:​28, 29

பொ.ச.மு. 2018 ஆபிரகாமின் பிறப்பு ஆதி. 11:​26, 32; 12:4

பொ.ச.மு. 1943 ஆபிரகாம் கானானுக்குச் செல்லும் வழியில் ஆதி. 12:​4, 7;

ஐப்பிராத்தைக் கடக்கிறார்; ஆபிரகாமிய யாத். 12:40;

உடன்படிக்கை செல்லுபடியாக்கப்பட்டது; கலா. 3:17

நியாயப்பிரமாண உடன்படிக்கை வரையான

430 ஆண்டு காலப்பகுதியின் தொடக்கம்

பொ.ச.மு. 1933 மு. லோத்து மீட்கப்படுகிறார்; ஆபிரகாம் ஆதி. 14:​16, 18; 16:3

மெல்கிசேதேக்கை சந்திக்கிறார்

பொ.ச.மு. 1932 இஸ்மவேல் பிறக்கிறார் ஆதி. 16:​15, 16

பொ.ச.மு. 1919 விருத்தசேதன உடன்படிக்கை செய்யப்பட்டது ஆதி. 17:1, 10, 24

சோதோம் கொமோராவின் ஆக்கினைத்தீர்ப்பு ஆதி. 19:24

பொ.ச.மு. 1918 மெய்யான சுதந்தரவாளியாகிய ஈசாக்கின் பிறப்பு; ஆதி 21:​2, 5;

‘ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலத்தின்’ அப். 13:​17-20

தொடக்கம்

பொ.ச.மு. 1913 ஈசாக்கு பால்மறந்தது; இஸ்மவேலை ஆதி. 21:8; 15:13;

அனுப்பிவிடுதல்; 400 வருட துன்பகாலத்தின் அப். 7:6

தொடக்கம்

பொ.ச.மு. 1881 சாராளின் மரணம் ஆதி. 17:17; 23:1

பொ.ச.மு. 1878 ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் திருமணம் ஆதி. 25:20

பொ.ச.மு. 1868 சேமின் மரணம் ஆதி. 11:11

பொ.ச.மு. 1858 ஏசா மற்றும் யாக்கோபின் பிறப்பு ஆதி. 25:26

பொ.ச.மு. 1843 ஆபிரகாமின் மரணம் ஆதி. 25:7

பொ.ச.மு. 1818 முதல் இரண்டு மனைவிகளை ஏசா ஆதி. 26:34

விவாகஞ்செய்தல்

பொ.ச.மு. 1795 இஸ்மவேலின் மரணம் ஆதி. 25:17

பொ.ச.மு. 1781 யாக்கோபு ஆரானுக்கு ஓடிப்போகிறார்; ஆதி. 28:​2, 13, 19

பெத்தேலில் அவர் கண்ட தரிசனம்

பொ.ச.மு. 1774 யாக்கோபு லேயாளையும் ராகேலையும் ஆதி. 29:​23-30

மணம் செய்கிறார்

பொ.ச.மு. 1767 யோசேப்பின் பிறப்பு ஆதி. 30:​23, 24

பொ.ச.மு. 1761 யாக்கோபு ஆரானிலிருந்து கானானுக்குத் ஆதி. 31:18, 41

திரும்புகிறார்

பொ.ச.மு. 1761 ஏ. யாக்கோபு தேவதூதரோடு போராடுகிறார்; ஆதி. 32:​24-28

இஸ்ரவேல் என்று பெயரிடப்படுகிறார்

பொ.ச.மு. 1750 யோசேப்பை அவருடைய சகோதரர் அடிமையாக ஆதி. 37:​2, 28

விற்கின்றனர்

பொ.ச.மு. 1738 ஈசாக்கின் மரணம் ஆதி. 35:​28, 29

பொ.ச.மு. 1737 யோசேப்பு எகிப்தின் பிரதம மந்திரியாக்கப்பட்டார் ஆதி. 41:​40, 46

பொ.ச.மு. 1728 யாக்கோபு தன் முழு குடும்பத்துடன் எகிப்துக்குள் ஆதி. 45:6; 46:26;

பிரவேசிக்கிறார் ஆதி47:9

பொ.ச.மு. 1711 யாக்கோபின் மரணம் ஆதி. 47:28

பொ.ச.மு. 1657 யோசேப்பின் மரணம் ஆதி. 50:26

பொ.ச.மு. 1613 மு. யோபின் சோதனை யோபு 1:8; 42:16

பொ.ச.மு. 1600 பி. எகிப்து முதல் உலக வல்லரசாக யாத். 1:8

மேன்மையடைகிறது

பொ.ச.மு. 1593 மோசேயின் பிறப்பு யாத். 2:​2, 10

பொ.ச.மு. 1553 ஜனங்களை விடுவிக்க மோசே முன்வருதல்; யாத். 2:​11, 14, 15;

மீதியானுக்கு ஓடிப்போகிறார் அப். 7:23

ஏ. பொ.ச.மு. 1514 எரியும் முட்புதரின் அருகில் மோசே யாத். 3:2

பொ.ச.மு. 1513 பஸ்கா; இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு யாத். 12:12;

வெளியேறுகின்றனர்; செங்கடலை பிளந்து யாத்14:​27, 29, 30;

கடவுள் விடுவிக்கிறார்; எகிப்தின் வல்லமை ஆதி. 15:​13, 14

கவிழ்க்கப்பட்டது; 400 வருட துன்ப காலம்

முடிந்தது

சீனாய் (ஓரேப்) மலையில் நியாயப்பிரமாண யாத். 24:​6-8

உடன்படிக்கை செய்யப்பட்டது

ஆபிரகாமிய உடன்படிக்கை கலா. 3:17;

செல்லுபடியானதிலிருந்து 430 வருடகால யாத். 12:40

முடிவு

வனாந்தரத்தில் மோசே ஆதியாகமத்தைத் யோவா. 5:46

தொகுக்கிறார்; பைபிள் எழுதுவது

தொடங்குகிறது

பொ.ச.மு. 1512 ஆசரிப்புக்கூடார பணி முடிவடைகிறது யாத். 40:17

ஆரோனிய ஆசாரியத்துவம் ஸ்தாபிக்கப்படுகிறது லேவி. 8:​34-36

மோசே யாத்திராகமத்தையும் லேவியராகமத்தையும் லேவி. 27:34;

எழுதி முடிக்கிறார் எண். 1:1

ஏ. பொ.ச.மு. 1473 மோசே யோபு புத்தகத்தை எழுதி முடிக்கிறார் யோபு 42:​16, 17

பொ.ச.மு. 1473 மோசே மோவாபின் சமவெளிகளில் எண். 35:1; 36:13

எண்ணாகமத்தை எழுதி முடிக்கிறார்

மோவாபில் இஸ்ரவேலுடன் உடன்படிக்கை உபா. 29:1

மோசே உபாகமத்தை எழுதுகிறார் உபா. 1:​1, 3

மோவாபிலுள்ள நேபோ மலையில் மோசே உபா. 34:​1, 5, 7

மரிக்கிறார்

யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் யோசு. 4:19

கானானுக்குள் பிரவேசிக்கின்றனர்

பொ.ச.மு. 1467 தேசத்தின் பெரும்பாகம் கைப்பற்றப்பட்டது; யோசு. 11:23;

அப்போஸ்தலர் 13:​17-20-ன் ‘ஏறக்குறைய யோசு14:​7,

450 வருஷங்களின்’ முடிவு யோசு 14:10-15

ஏ. பொ.ச.மு. 1450 யோசுவாவின் புத்தகம் எழுதி முடிக்கப்பட்டது யோசு. 1:1; 24:26

யோசுவாவின் மரணம் யோசு. 24:29

பொ.ச.மு. 1117 சாமுவேல் சவுலை இஸ்ரவேலின் அரசனாக 1 சா. 10:24;

அபிஷேகம் செய்கிறார் அப். 13:21

பொ.ச.மு. 1107 பெத்லெகேமில் தாவீதின் பிறப்பு 1 சா. 16:1

ஏ. பொ.ச.மு. 1100 நியாயாதிபதிகள் புத்தகத்தை சாமுவேல் எழுதி நியா. 21:25

முடிக்கிறார்

ஏ. பொ.ச.மு. 1090 ரூத் புத்தகத்தை சாமுவேல் எழுதி முடிக்கிறார் ரூத் 4:​18-22

ஏ. பொ.ச.மு. 1078 1 சாமுவேல் புத்தகம் எழுதி முடிக்கப்பட்டது 1 சா. 31:6

பொ.ச.மு. 1077 எப்ரோனில் தாவீது யூதாவின் அரசராகிறார் 2 சா. 2:4

பொ.ச.மு. 1070 இஸ்ரவேல் முழுவதன்மீதும் தாவீது அரசராகிறார்; 2 சா. 5:​3-7

எருசலேமைத் தன் தலைநகராக்குகிறார்

பொ.ச.மு. 1070 பி. உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குள் கொண்டு 2 சா. 6:15;

வரப்படுகிறது; ராஜ்யத்துக்கான ஓர் உடன்படிக்கை 2சா7:​12-16

தாவீதுடன் செய்யப்படுகிறது

ஏ. பொ.ச.மு. 1040 காத்தும் நாத்தானும் 2 சாமுவேலை எழுதி 2 சா. 24:18

முடிக்கின்றனர்

பொ.ச.மு. 1037 சாலொமோன் தாவீதுக்குப்பின் இஸ்ரவேலின் 1 இரா. 1:39;

அரசராகிறார் 1இரா2:12

பொ.ச.மு. 1034 சாலொமோன் ஆலயம் கட்ட தொடங்கினார் 1 இரா. 6:1

பொ.ச.மு. 1027 எருசலேமில் ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறது 1 இரா. 6:38

ஏ. பொ.ச.மு. 1020 சாலொமோனின் உன்னதப்பாட்டை சாலொமோன் உன். 1:1

எழுதி முடிக்கிறார்

பொ.ச.மு. 1000 மு. பிரசங்கி புத்தகத்தைச் சாலொமோன் எழுதி முடிக்கிறார் பிர. 1:1

பொ.ச.மு. 997 சாலொமோனுக்குப் பின் ரெகொபெயாம் 1 இரா. 11:43;

அரசராகிறார்; ராஜ்யம் பிரிகிறது; 1இரா12:​19, 20

யெரொபெயாம் இஸ்ரவேலின் அரசனாக

ஆளத் தொடங்குகிறார்

பொ.ச.மு. 993 சீஷாக் யூதாவுக்குள் படையெடுத்து 1 இரா. 14:​25, 26

ஆலயத்திலிருந்து பொக்கிஷங்களை எடுத்துச்

செல்கிறான்

பொ.ச.மு. 980 ரெகொபெயாமுக்குப் பின் அபியாம் (அபியா) 1 இரா. 15:​1, 2

யூதாவின் அரசனாகிறான்

பொ.ச.மு. 977 அபியாமுக்குப் பின் ஆசா யூதாவின் அரசனாகிறார் 1 இரா. 15:​9, 10

ஏ. பொ.ச.மு. 976 யெரொபெயாமுக்குப் பின் நாதாப் இஸ்ரவேலின் 1 இரா. 14:20

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 975 நாதாபுக்குப் பின் பாஷா இஸ்ரவேலின் அரசனாகிறான் 1 இரா. 15:33

ஏ. பொ.ச.மு. 952 பாஷாவுக்குப் பின் ஏலா இஸ்ரவேலின் அரசனாகிறார் 1 இரா. 16:8

ஏ. பொ.ச.மு. 951 ஏலாவுக்குப் பின் சிம்ரி இஸ்ரவேலின் அரசனாகிறான் 1 இரா. 16:15

சிம்ரிக்குப் பின் உம்ரியும் திப்னியும் இஸ்ரவேலின் 1 இரா. 16:21

அரசராகின்றனர்

ஏ. பொ.ச.மு. 947 உம்ரி இஸ்ரவேலின் தனி அரசனாக ஆளுகிறான் 1 இரா. 16:​22, 23

ஏ. பொ.ச.மு. 940 உம்ரிக்குப் பின் ஆகாப் இஸ்ரவேலின் அரசனாகிறான் 1 இரா. 16:29

பொ.ச.மு. 936 ஆசாவுக்குப் பின் யோசபாத் யூதாவின் 1 இரா. 22:​41, 42

அரசனாகிறார்

ஏ. பொ.ச.மு. 919 ஆகாபுக்குப் பின் அகசியா இஸ்ரவேலின் தனி 1 இரா. 22:​51, 52

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 917 அகசியாவுக்குப் பின் இஸ்ரவேலின் யோராம் தனி 2 இரா. 3:1

அரசனாகிறான்

பொ.ச.மு. 913 யூதாவின் யோராம் யோசபாத்துடன் ‘ராஜ்யபாரம் 2 இரா. 8:​16, 17

பண்ணத்’ தொடங்குகிறான்

ஏ. பொ.ச.மு. 906 யோராமுக்குப் பின் அகசியா யூதாவின் 2 இரா. 8:​25, 26

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 905 அத்தாலியாள் அரசி யூதாவின் சிங்காசனத்தை 2 இரா. 11:​1-3

கைப்பற்றுகிறாள்

யோராமுக்குப் பின் யெகூ இஸ்ரவேலின் 2 இரா. 9:​24, 27;

அரசனாகிறார் 2இரா10:36

பொ.ச.மு. 898 அகசியாவுக்குப் பின் யோவாஸ் யூதாவின் 2 இரா. 12:1

அரசனாகிறார்

பொ.ச.மு. 876 யெகூவுக்குப் பின் யோவாகாஸ் இஸ்ரவேலின் 2 இரா. 13:1

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 859 யோவாகாஸுக்குப் பின் யோவாஸ் இஸ்ரவேலின் தனி 2 இரா. 13:10

அரசனாகிறான்

பொ.ச.மு. 858 யோவாசுக்குப் பின் அமத்சியா யூதாவின் 2 இரா. 14:1, 2

அரசனாகிறார்

ஏ. பொ.ச.மு. 844 யோவாசுக்குப் பின் இரண்டாம் யெரொபெயாம் 2 இரா. 14:23

இஸ்ரவேலின் அரசனாகிறான்

யோனாவின் புத்தகத்தை யோனா எழுதி முடிக்கிறார் யோனா 1:​1, 2

பொ.ச.மு. 829 அமத்சியாவுக்குப் பின் உசியா (அசரியா) யூதாவின் 2 இரா. 15:​1, 2

அரசனாகிறார்

ஏ. பொ.ச.மு. 820 அநேகமாக யோவேலின் புத்தகம் எழுதப்பட்டிருக்கும் யோவே. 1:1

ஏ. பொ.ச.மு. 804 ஆமோஸின் புத்தகத்தை ஆமோஸ் எழுதி ஆமோ. 1:1

முடிக்கிறார்

ஏ. பொ.ச.மு. 792 சகரியா இஸ்ரவேலின் அரசனாக (6 மாதங்கள்) 2 இரா. 15:8

ஆளுகிறான்

ஏ. பொ.ச.மு. 791 சகரியாவுக்குப் பின் சல்லூம் இஸ்ரவேலின் 2 இரா. 15:​13, 17

அரசனாகிறான்

சல்லூமுக்குப் பின் மெனாகேம் இஸ்ரவேலின்

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 780 மெனாகேமுக்குப் பின் பெக்காகியா இஸ்ரவேலின் 2 இரா. 15:23

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 778 பெக்காகியாவுக்குப் பின் பெக்கா இஸ்ரவேலின் 2 இரா. 15:27

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 778 ஏசாயா தீர்க்கதரிசனமுரைக்கத் தொடங்குகிறார் ஏசா. 1:1; 6:1

பொ.ச.மு. 777 உசியாவுக்கு (அசரியா) பின் யோதாம் யூதாவின் 2 இரா. 15:​32, 33

அரசனாகிறார்

ஏ. பொ.ச.மு. 761 யோதாமுக்குப் பின் ஆகாஸ் யூதாவின் 2 இரா. 16:​1, 2

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 758 ஓசெயா இஸ்ரவேலின் அரசனாக ‘ஆளத் 2 இரா. 15:30

தொடங்குகிறார்’

பொ.ச.மு. 745 ஆகாஸுக்குப் பின் எசேக்கியா யூதாவின் 2 இரா. 18:​1, 2

அரசனாகிறார்

பொ.ச.மு. 745 பி. ஓசியா புத்தகத்தை ஓசியா எழுதி முடிக்கிறார் ஓசி. 1:1

பொ.ச.மு. 740 அசீரியா இஸ்ரவேலைக் கீழ்ப்படுத்துகிறது, 2 இரா. 17:​6, 13, 18

சமாரியாவைக் கைப்பற்றுகிறது

பொ.ச.மு. 732 சனகெரிப் யூதாவின்மீது படையெடுக்கிறான் 2 இரா. 18:13

பொ.ச.மு. 732 பி. ஏசாயா புத்தகத்தை ஏசாயா எழுதி முடிக்கிறார் ஏசா. 1:1

பொ.ச.மு. 717 மு. மீகா புத்தகத்தை மீகா எழுதி முடிக்கிறார் மீ. 1:1

ஏ. பொ.ச.மு. 717 நீதிமொழிகளை தொகுத்தமைப்பது முடிகிறது நீதி. 25:1

பொ.ச.மு. 716 எசேக்கியாவுக்குப் பின் மனாசே யூதாவின் 2 இரா. 21:1

அரசனாகிறான்

பொ.ச.மு. 661 மனாசேக்குப் பின் ஆமோன் யூதாவின் அரசனாகிறான் 2 இரா. 21:19

பொ.ச.மு. 659 ஆமோனுக்குப் பின் யோசியா யூதாவின் அரசனாகிறார் 2 இரா. 22:1

பொ.ச.மு. 648 மு. செப்பனியா புத்தகத்தைச் செப்பனியா எழுதி முடிக்கிறார் செப். 1:1

பொ.ச.மு. 647 தீர்க்கதரிசியாக எரேமியா நியமிக்கப்படுகிறார் எரே. 1:​1, 2, 9, 10

பொ.ச.மு. 632 பி. நாகூம் புத்தகத்தை நாகூம் எழுதி முடிக்கிறார் நாகூ. 1:1

பொ.ச.மு. 632 கல்தேயரும் மேதியரும் நினிவேயை வீழ்த்துகின்றனர் நாகூ. 3:7

பாபிலோன் இப்போது மூன்றாவது உலக வல்லரசாகும்

நிலையிலுள்ளது

பொ.ச.மு. 628 யோசியாவுக்குப் பின் யோவாகாஸ் யூதாவின் அரசனாக 2 இரா. 23:31

ஆளுகிறான்

யோவாகாஸுக்குப் பின் யோயாக்கீம் யூதாவின் 2 இரா. 23:36

அரசனாகிறான்

ஏ. பொ.ச.மு. 628 ஆபகூக் புத்தகத்தை ஆபகூக் எழுதி முடிக்கிறார் ஆப. 1:1

பொ.ச.மு. 625 (இரண்டாம்) நேபுகாத்நேச்சார் பாபிலோனின் எரே. 25:1

அரசனாகிறான்; முதல் ஆட்சியாண்டு

பொ.ச.மு. 624-ன் நிசானிலிருந்து கணக்கிடப்படுகிறது

பொ.ச.மு. 620 நேபுகாத்நேச்சார் யோயாக்கீமை கப்பம்கட்டும் 2 இரா. 24:1

அரசனாக்குகிறான்

பொ.ச.மு. 618 யோயாக்கீமுக்குப் பின் யோயாக்கீன் யூதாவில் 2 இரா. 24:​6, 8

அரசனாகிறான்

பொ.ச.மு. 617 நேபுகாத்நேச்சார் முதல் யூதக் கைதிகளைப் தானி. 1:​1-4

பாபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு

செல்கிறான்

சிதேக்கியா யூதாவின் அரசனாக்கப்படுகிறான் 2 இரா. 24:​12-18

பொ.ச.மு. 613 எசேக்கியேல் தீர்க்கதரிசனமுரைக்கத் தொடங்குகிறார் எசே. 1:​1-3

பொ.ச.மு. 609 நேபுகாத்நேச்சார் மூன்றாவது தடவையாக யூதாவுக்கு 2 இரா. 25:​1, 2

எதிராக வருகிறான்; எருசலேமை முற்றுகையிடத்

தொடங்குகிறான்

பொ.ச.மு. 607 ஐந்தாவது மாதம் (ஆப்), ஆலயம் 2 இரா. 25:​8-10;

சுட்டெரிக்கப்படுகிறது, எருசலேம் எரே. 52:​12-14

அழிக்கப்படுகிறது

ஏழாவது மாதம், யூதர்கள் யூதாவைவிட்டு 2 இரா. 25:​25, 26;

வெளியேறுகிறார்கள்; “புறஜாதியாரின் காலம்” லூக். 21:24

தொடங்குகிறது

எரேமியா புலம்பலை எழுதுகிறார் புல. அறிமுகம், LXX

ஏ. பொ.ச.மு. 607 ஒபதியா புத்தகத்தை ஒபதியா எழுதுகிறார் ஒப. 1

ஏ. பொ.ச.மு. 591 எசேக்கியேல் புத்தகத்தை எசேக்கியேல் எழுதி எசே. 40:1;

முடிக்கிறார் எசே29:17

பொ.ச.மு. 580 1 மற்றும் 2 இராஜாக்களும் எரேமியாவும் எழுதி எரே. 52:31;

முடிக்கப்படுகின்றன 2 இரா. 25:27

பொ.ச.மு. 539 மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் தானி. 5:​30, 31

கைப்பற்றுகின்றனர்; மேதிய-பெர்சியா நான்காவது

உலக வல்லரசாகிறது

பொ.ச.மு. 537 எருசலேமுக்குத் திரும்பிச் செல்லும்படி அனுமதித்த 2 நா. 36:​22, 23;

பெர்சியனாகிய கோரேசின் கட்டளை எரே. 25:12;

செயல்படுத்தப்படுகிறது; எருசலேமின் 70 ஆண்டு எரே29:10

பாழ்க்கடிப்பு முடிகிறது

ஏ. பொ.ச.மு. 536 தானியேல் புத்தகத்தைத் தானியேல் எழுதி முடிக்கிறார் தானி. 10:1

பொ.ச.மு. 536 செருபாபேல் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடுகிறார் எஸ்றா 3:​8-10

பொ.ச.மு. 522 ஆலய கட்டட வேலையின்பேரில் தடையுத்தரவிடுதல் எஸ்றா 4:​23, 24

பொ.ச.மு. 520 ஆகாய் புத்தகத்தை ஆகாய் எழுதி முடிக்கிறார் ஆகா. 1:1

பொ.ச.மு. 518 சகரியா புத்தகத்தைச் சகரியா எழுதி முடிக்கிறார் சக. 1:1

பொ.ச.மு. 515 செருபாபேல் இரண்டாவது ஆலயத்தைக் கட்டி எஸ்றா 6:​14, 15

முடிக்கிறார்

ஏ. பொ.ச.மு. 475 எஸ்தர் புத்தகத்தை மொர்தெகாய் எழுதி முடிக்கிறார் எஸ்தர் 3:7; 9:32

பொ.ச.மு. 468 எஸ்றாவும் ஆசாரியர்களும் எருசலேமுக்குத் திரும்பி எஸ்றா 7:7

வருகின்றனர்

ஏ. பொ.ச.மு. 460 1 மற்றும் 2 நாளாகமங்கள் மற்றும் எஸ்றா எஸ்றா 1:1;

புத்தகங்களை எஸ்றா எழுதி முடிக்கிறார்; 2 நா. 36:22

கடைசி சங்கீதங்கள் தொகுத்தமைக்கப்படுகின்றன

பொ.ச.மு. 455 எருசலேமின் மதில்களை நெகேமியா திரும்பக் நெ. 1:1;

கட்டுகிறார்; 70 வாரங்களின் தீர்க்கதரிசனம் நெ2:​1, 11;

நிறைவேறத் தொடங்குகிறது நெ6:15; தானி. 9:24

பொ.ச.மு. 443 பி. நெகேமியாவின் புத்தகத்தை நெகேமியா எழுதி நெ. 5:14

முடிக்கிறார்

மல்கியாவின் புத்தகத்தை மல்கியா எழுதி முடிக்கிறார் மல். 1:1

பொ.ச.மு. 406 எருசலேமைத் திரும்பக் கட்டுவது முடிவுற்றதாக தெரிகிறது தானி. 9:25

பொ.ச.மு. 332 கிரீஸ், ஐந்தாவது உலக வல்லரசு, யூதேயாவை ஆளுகிறது தானி. 8:21

ஏ. பொ.ச.மு. 280 கிரேக்க செப்டுவஜின்ட் தொடங்குகிறது

பொ.ச.மு. 165 கிரேக்க விக்கிரகாராதனையால் தீட்டுப்படுத்தப்பட்டபின் யோவா. 10:22

ஆலய மறுபிரதிஷ்டை; பிரதிஷ்டை பண்டிகை

பொ.ச.மு. 63 ரோம், ஆறாவது உலக வல்லரசு, எருசலேமை யோவா. 19:15;

ஆளுகிறது வெளி. 17:10

ஏ. பொ.ச.மு. 37 ஏரோது (ரோம் நியமித்த அரசன்) மூர்க்கத் தாக்குதலால்

எருசலேமைக் கைப்பற்றுகிறார்

பொ.ச.மு. 2 முழுக்காட்டுபவரான யோவானின் மற்றும் இயேசுவின் லூக். 1:60; 2:7

பிறப்பு

பொ.ச. 29 யோவானும் இயேசுவும் தங்கள் ஊழியங்களைத் லூக். 3:​1, 2, 23

தொடங்குகின்றனர்

பொ.ச. 33 நிசான் 14: இயேசு பலியாகி, புதிய உடன்படிக்கையை லூக். 22:20;

அமலாக்குகிறார்; கழுமரத்தில் அறையப்படுகிறார் லூக்23:33

நிசான் 16: இயேசுவின் உயிர்த்தெழுதல் மத். 28:​1-10

சீவான் 6, பெந்தெகொஸ்தே: ஆவி ஊற்றப்படுகிறது; அப். 2:​1-17, 38

யூதர்கள் கிறிஸ்தவர்களாவதற்கு பேதுரு

வழியைத் திறந்தார்

பொ.ச. 36 70 வார ஆண்டுகளின் முடிவு; கொர்நேலியுவை பேதுரு தானி. 9:​24-27;

சந்திக்கிறார். இவர் விருத்தசேதனம் செய்யப்படாத அப். 10:​1, 45

புறஜாதியாரிலிருந்து கிறிஸ்தவ சபைக்குள் வந்த

முதல் நபர்

ஏ. பொ.ச. 41 “மத்தேயு” சுவிசேஷத்தை மத்தேயு எழுதுகிறார்

ஏ. பொ.ச. 47-48 முதல் மிஷனரி பயணத்தைப் பவுல் தொடங்குகிறார் அப். 13:​1–14:28

ஏ. பொ.ச. 49 புறஜாதியாரில் விசுவாசிகளானோருக்கு விருத்தசேதனம் அப். 15:​28, 29

தேவையில்லையென ஆளும் குழு தீர்மானிக்கிறது

ஏ. பொ.ச. 49-52 பவுலின் இரண்டாவது மிஷனரி பயணம் அப். 15:​36–18:22

ஏ. பொ.ச. 50 பவுல் கொரிந்துவிலிருந்து 1 தெசலோனிக்கேயரை 1 தெ. 1:1

எழுதுகிறார்

ஏ. பொ.ச. 51 பவுல் கொரிந்துவிலிருந்து 2 தெசலோனிக்கேயரை 2 தெ. 1:1

எழுதுகிறார்

ஏ. பொ.ச. 50-52 கொரிந்துவிலிருந்து அல்லது சீரியாவின் கலா. 1:1

அந்தியோகியாவிலிருந்து பவுல் கலாத்தியருக்குத் தன்

நிருபத்தை எழுதுகிறார்

ஏ. பொ.ச. 52-56 பவுலின் மூன்றாவது மிஷனரி பயணம் அப். 18:​23–21:19

ஏ. பொ.ச. 55 பவுல் எபேசுவிலிருந்து 1 கொரிந்தியரையும் 1 கொ. 15:32;

மக்கெதோனியாவிலிருந்து 2 கொரிந்தியரையும் 2 கொ. 2:​12, 13

எழுதுகிறார்

ஏ. பொ.ச. 56 பவுல் கொரிந்துவிலிருந்து ரோமருக்கு நிருபம் ரோ. 16:1

எழுதுகிறார்

ஏ. பொ.ச. 56-58 “லூக்கா” சுவிசேஷத்தை லூக்கா எழுதுகிறார் லூக். 1:​1, 2

ஏ. பொ.ச. 60-61 பவுல் ரோமிலிருந்து இவற்றை எழுதுகிறார்:

எபேசியர் எபே. 3:1

பிலிப்பியர் பிலி. 4:22

கொலோசெயர் கொலோ. 4:18

பிலேமோன் பிலே. 1

ஏ. பொ.ச. 61 பவுல் ரோமிலிருந்து எபிரெயருக்கு நிருபம் எபி. 13:24;

எழுதுகிறார் எபி10:34

லூக்கா ரோமில் அப்போஸ்தலருடைய நடபடிகளை

எழுதி முடிக்கிறார்

பொ.ச. 62 மு. “யாக்கோபு” நிருபத்தை, இயேசுவின் சகோதரனான யாக். 1:1

யாக்கோபு எருசலேமிலிருந்து எழுதுகிறார்

ஏ. பொ.ச. 60-65 “மாற்கு” சுவிசேஷத்தை மாற்கு எழுதுகிறார்

ஏ. பொ.ச. 61-64 பவுல் மக்கெதோனியாவிலிருந்து 1 தீமோத்தேயுவை 1 தீ. 1:3

எழுதுகிறார்

பவுல் தீத்து நிருபத்தை மக்கெதோனியாவிலிருந்து தீ. 1:5

எழுதுகிறார் (?)

ஏ. பொ.ச. 62-64 பேதுரு பாபிலோனிலிருந்து 1 பேதுருவை 1 பே. 1:1; 5:13

எழுதுகிறார்

ஏ. பொ.ச. 64 பேதுரு பாபிலோனிலிருந்து 2 பேதுருவை 2 பே. 1:1

எழுதுகிறார் (?)

ஏ. பொ.ச. 65 பவுல் ரோமிலிருந்து 2 தீமோத்தேயுவை 2 தீ. 4:​16-18

எழுதுகிறார்

இயேசுவின் சகோதரரான யூதா, “யூதா” நிருபத்தை யூ. 1, 17, 18

எழுதுகிறார்

பொ.ச. 70 எருசலேமும் அதன் ஆலயமும் ரோமரால் தானி. 9:27;

அழிக்கப்பட்டன மத். 23:​37, 38;

லூக். 19:​42-44

ஏ. பொ.ச. 96 யோவான், பத்மு தீவில், வெளிப்படுத்துதலை வெளி. 1:9

எழுதுகிறார்

ஏ. பொ.ச. 98 “யோவான்” என்ற சுவிசேஷத்தையும் யோவா. 21:​22, 23

1, 2, மற்றும் 3 யோவான் என்ற தன்

நிருபங்களையும் யோவான் எழுதுகிறார்; பைபிள்

எழுதப்படுவது முடிந்தது

ஏ. பொ.ச. 100 கடைசி அப்போஸ்தலராகிய யோவான் மரிக்கிறார் 2 தெ. 2:7

குறிப்பு: இந்தத் தேதிகளில் பல சரியானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில தேதிகள் கிடைத்த ஆதாரங்ளைக்கொண்டு தோராயமாக கொடுக்கப்பட்டுள்ளன என்பதை மறக்கவேண்டாம். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் தேதியை மாற்றவே முடியாது என்பதற்காக அல்ல இந்த அட்டவணை. ஆனால் கால ஓட்டத்தில் என்ன நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன, அவற்றின் இடையேயுள்ள தொடர்பு என்ன என்பதை பைபிள் மாணவர்கள் காண உதவுவதற்கே இந்த அட்டவணை.

“முக்கிய சரித்திர தேதிகளின் அட்டவணை”யிலும் “பைபிள் புத்தகங்களின் அட்டவணை”யிலும் இருந்து கேள்விகள்:

(அ) இந்த இரண்டு அட்டவணைகளையும் ஒப்பிட்டு, பின்குறிப்பிடும் காலங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் மற்றும் பைபிள் எழுத்தாளர்கள் சிலருடைய பெயர்களைக் குறிப்பிடுங்கள்: (1) பொ.ச.மு. 1117-ல் இஸ்ரவேல் ராஜ்யத்தை ஏற்படுத்துவதற்கு முன், (2) இஸ்ரவேல், யூத ராஜ்யங்களின் காலத்தில், (3) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதிலிருந்து எபிரெய வேதாகமத்தின் புத்தகத்தொகுப்பு பூர்த்தியாகும் வரையான காலத்தில்.

(ஆ) பவுலின் மிஷனரி பயணங்களிலிருந்து அவருடைய நிருபங்கள் எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பிடுங்கள்.

(இ) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற புத்தகங்கள் எழுதப்பட்ட காலத்தைக் குறித்ததில் வேறு என்ன சுவாரஸ்யமான குறிப்புகளைக் கவனிக்கிறீர்கள்?

(ஈ) ஏதேனும் முக்கிய பைபிள் சரித்திர நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, பின்வரும் நபர்கள் வாழ்ந்தது அந்த நிகழ்ச்சிக்கு முன்பா, பின்பா என்று கூறுங்கள், அல்லது அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்த மற்றவர்களோடு இவர்களையும் இணைத்து கூறுங்கள்: சேம், சாமுவேல், மெத்தூசலா, லோத்து, சவுல் அரசன், தாவீது, யோபு, இஸ்ரவேலின் அரசன் ஓசெயா, சாலொமோன், ஆரோன், யூதாவின் அரசன் சிதேக்கியா.

(உ) பின்வரும் நபர்களின் வாழ்நாளில் என்ன முக்கிய சம்பவங்கள் நடந்தன: (1) நோவா, (2) ஆபிரகாம், (3) மோசே?

(ஊ) பின்வரும் (பொ.ச.மு.) தேதிகளை வரிசையாக கீழே கொடுத்துள்ள சம்பவங்களுடன் பொருத்துக: 4026, 2370, 1943, 1513, 1473, 1117, 997, 740, 607, 539, 537, 455.

ஆதாம் படைக்கப்பட்டது

சீனாயில் நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்யப்பட்டது

எருசலேம் அழிக்கப்பட்டது

கோரேஸ் கட்டளை பிறப்பித்தப் பின் யூதர் எருசலேமுக்குத் திரும்புகின்றனர்

தேவாவியால் ஏவப்பட்ட பைபிள் எழுதப்பட தொடங்கியது

ஜலப்பிரளயத்தின் ஆரம்பம்

மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் கைப்பற்றுகின்றனர்

இஸ்ரவேலின் முதல் அரசன் அபிஷேகம் செய்யப்படுகிறார்

ஆபிரகாம் ஐப்பிராத்தைக் கடக்கிறார்; ஆபிரகாமிய உடன்படிக்கை செல்லுபடியாகிறது

இஸ்ரவேல், யூதா ராஜ்யங்கள் பிரிதல்

வட ராஜ்யத்தை அசீரியா தோற்கடித்தது

நெகேமியா எருசலேமின் மதில்களை திரும்பக் கட்டுதல்

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்

யோசுவா இஸ்ரவேலரை கானானுக்குள் வழிநடத்துகிறார்

எருசலேமின் 70 ஆண்டு பாழ்க்கடிப்பு முடிவடைகிறது

[பக்கம் 298-ன் அட்டவணை]

பைபிள் புத்தகங்களின் அட்டவணை

(சில தேதிகள் [எழுதப்பட்ட இடங்கள்] நிச்சயமாயில்லை. குறியீடுகள் பி., “பின்” என்பதையும், மு., ”முன்” என்பதையும், ஏ., “ஏறக்குறைய” என்பதையும் குறிக்கின்றன.)

பொது சகாப்தத்திற்கு முந்தின (பொ.ச.மு.) எபிரெய வேதாகமப் புத்தகங்கள்

புத்தகத்தின் எழுத்தாளர் எழுதப்பட்ட எழுதி காலப்பகுதி

பெயர் இடம் முடிக்கப்பட்டது

ஆதியாகமம் மோசே வனாந்தரம் 1513 ‘ஆதியிலிருந்து’

1657 வரை

யாத்திராகமம் மோசே வனாந்தரம் 1512 1657-1512

லேவியராகமம் மோசே வனாந்தரம் 1512 1 மாதம் (1512)

எண்ணாகமம் மோசே வனாந்தரம்/

மோவாப்

சமவெளி 1473 1512-1473

உபாகமம் மோசே மோவாப்

சமவெளி 1473 2 மாதங்கள் (1473)

யோசுவா யோசுவா கானான் ஏ. 1450 1473-ஏ. 1450

நியாயாதிபதிகள் சாமுவேல் இஸ்ரவேல் ஏ. 1100 ஏ. 1450-ஏ. 1120

ரூத் சாமுவேல் இஸ்ரவேல் ஏ. 1090 நியாயாதிபதிகளின்

11 ஆண்டு ஆட்சி

1 சாமுவேல் சாமுவேல்;

காத்;

நாத்தான் இஸ்ரவேல் ஏ. 1078 ஏ. 1180-1078

2 சாமுவேல் காத்;

நாத்தான் இஸ்ரவேல் ஏ. 1040 1077-ஏ. 1040

1-ம் 2-ம்

இராஜாக்கள் எரேமியா யூதா/எகிப்து 580 ஏ. 1040-580

1-ம் 2-ம்

நாளாகமங்கள் எஸ்றா எருசலேம் (?) ஏ. 460 1 நா. 9:​44-க்குப்

பின், 1077-537

எஸ்றா எஸ்றா எருசலேம் ஏ. 460 537-ஏ. 467

நெகேமியா நெகேமியா எருசலேம் பி. 443 456-443 பி.

எஸ்தர் மொர்தெகாய் சூசான், ஏலாம் ஏ. 475 493-ஏ. 475

யோபு மோசே வனாந்தரம் ஏ. 1473 1657-1473 இடையே

140 ஆண்டுகளுக்கு மேல்

சங்கீதம் தாவீதும் ஏ. 460

மற்றவர்களும்

நீதிமொழிகள் சாலொமோன்; எருசலேம் ஏ. 717

ஆகூர்;

லேமுவேல்

பிரசங்கி சாலொமோன் எருசலேம் மு. 1000

சாலொமோனின் சாலொமோன் எருசலேம் ஏ. 1020

உன்னதப்பாட்டு

ஏசாயா ஏசாயா எருசலேம் பி. 732 ஏ. 778-732 பி.

எரேமியா எரேமியா யூதா/எகிப்து 580 647-580

புலம்பல் எரேமியா எருசலேமுக்கு 607

அருகில்

எசேக்கியேல் எசேக்கியேல் பாபிலோன் ஏ. 591 613-ஏ. 591

தானியேல் தானியேல் பாபிலோன் ஏ. 536 618-ஏ. 536

ஓசியா ஓசியா சமாரியா பி. 745 804 மு.-745 பி.

(மாகாணம்

யோவேல் யோவேல் யூதா ஏ. 820 (?)

ஆமோஸ் ஆமோஸ் யூதா ஏ. 804

ஒபதியா ஒபதியா ஏ. 607

யோனா யோனா ஏ. 844

மீகா மீகா யூதா மு. 717 ஏ. 777-717

நாகூம் நாகூம் யூதா மு. 632

ஆபகூக் ஆபகூக் யூதா ஏ. 628 (?)

செப்பனியா செப்பனியா யூதா மு. 648

ஆகாய் ஆகாய் எருசலேம் 520 112 நாட்கள் (520)

சகரியா சகரியா எருசலேம் 518 520-518

மல்கியா மல்கியா எருசலேம் பி. 443

பொது சகாப்தத்தின்போது (பொ.ச.) எழுதப்பட்ட கிரேக்க வேதாகமப் புத்தகங்கள்

புத்தகத்தின் எழுத்தாளர் எழுதப்பட்ட எழுதி காலப்பகுதி

பெயர் இடம் முடிக்கப்பட்டது

மத்தேயு மத்தேயு பலஸ்தீனா ஏ. 41 பொ.ச.மு. 2-பொ.ச. 33

மாற்கு மாற்கு ரோம் ஏ. 60-65 பொ.ச. 29-33

லூக்கா லூக்கா செசரியா ஏ. 56-58 பொ.ச.மு. 3-பொ.ச. 33

யோவான் அப்போஸ்தலன் எபேசு, ஏ. 98 அறிமுகப்பகுதிக்குப்

யோவான் அல்லது அருகில் பின், பொ.ச. 29-33

அப்போஸ்தலர் லூக்கா ரோம் ஏ. 61 பொ.ச. 33-ஏ. 61

நடபடிகள்

ரோமர் பவுல் கொரிந்து ஏ. 56

1 கொரிந்தியர் பவுல் எபேசு ஏ. 55

2 கொரிந்தியர் பவுல் மக்கெதோனியா ஏ. 55

கலாத்தியர் பவுல் கொரிந்து அல்லது ஏ. 50-52

சீரியாவின்

அந்தியோகியா

எபேசியர் பவுல் ரோம் ஏ. 60-61

பிலிப்பியர் பவுல் ரோம் ஏ. 60-61

கொலோசெயர் பவுல் ரோம் ஏ. 60-61

1 தெசலோனிக்கேயர் பவுல் கொரிந்து ஏ. 50

2 தெசலோனிக்கேயர் பவுல் கொரிந்து ஏ. 51

1 தீமோத்தேயு பவுல் மக்கெதோனியா ஏ. 61-64

2 தீமோத்தேயு பவுல் ரோம் ஏ. 65

தீத்து பவுல் மக்கெதோனியா (?) ஏ. 61-64

பிலேமோன் பவுல் ரோம் ஏ. 60-61

எபிரெயர் பவுல் ரோம் ஏ. 61

யாக்கோபு யாக்கோபு எருசலேம் மு. 62

(இயேசுவின் சகோதரன்)

1 பேதுரு பேதுரு பாபிலோன் ஏ. 62-64

2 பேதுரு பேதுரு பாபிலோன் (?) ஏ. 64

1 யோவான் அப்போஸ்தலன் எபேசு, ஏ. 98

யோவான் அல்லது அருகில்

2 யோவான் அப்போஸ்தலன் எபேசு, ஏ. 98

யோவான் அல்லது அருகில்

3 யோவான் அப்போஸ்தலன் எபேசு, ஏ. 98

யோவான் அல்லது அருகில்

யூதா யூதா பலஸ்தீனா (?) ஏ. 65

(இயேசுவின் சகோதரன்)

வெளிப்படுத்துதல் அப்போஸ்தலன் பத்மு ஏ. 96

யோவான்