Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

B1

பைபிளின் செய்தி

ஆட்சி செய்ய யெகோவாவுக்கு உரிமை இருக்கிறது. அவர் ஆட்சி செய்யும் விதம் சிறந்தது. பூமியையும் மனிதர்களையும் அவர் எந்த நோக்கத்துக்காகப் படைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும்.

கி.மு. 4026-க்குப் பின்

ஆட்சி செய்ய யெகோவாவுக்கு உரிமை இருக்கிறதா, அவர் ஆட்சி செய்யும் விதம் சரியானதா என்று “பாம்பு” கேள்வி கேட்கிறது. ஒரு “சந்ததி,” அதாவது வாரிசு, வருவார்; அவர் கடைசியில் பாம்பை, அதாவது சாத்தானை, நசுக்குவார் என்று யெகோவா வாக்குக் கொடுக்கிறார். (ஆதியாகமம் 3:1-5, 15) ஆனாலும், சாத்தானுடைய செல்வாக்கின் கீழ் மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்ய யெகோவா காலத்தை அனுமதிக்கிறார்.

கி.மு. 1943

வாக்குக் கொடுக்கப்பட்ட “சந்ததி,” ஆபிரகாமின் வழியில் வருமென்று யெகோவா சொல்கிறார்.—ஆதியாகமம் 22:18.

கி.மு. 1070-க்குப் பின்

வாக்குக் கொடுக்கப்பட்ட “சந்ததி,” தாவீது ராஜா மற்றும் அவருடைய மகன் சாலொமோனின் வழியில் வருமென்று யெகோவா உறுதியளிக்கிறார்.—2 சாமுவேல் 7:12, 16; 1 ராஜாக்கள் 9:3-5; ஏசாயா 9:6, 7.

கி.பி. 29

வாக்குக் கொடுக்கப்பட்ட ‘சந்ததியும்,’ தாவீதின் சிம்மாசனத்துக்கு வாரிசும் இயேசுதான் என்று யெகோவா அடையாளம் காட்டுகிறார்.—கலாத்தியர் 3:16; லூக்கா 1:31-33; 3:21, 22.

கி.பி. 33

இயேசுவைக் கொல்வதன் மூலம், வாக்குக் கொடுக்கப்பட்ட ‘சந்ததியை’ பாம்பாகிய சாத்தான் தற்காலிகமாகக் காயப்படுத்துகிறான். இயேசுவை யெகோவா பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பி, அவருடைய பரிபூரண உயிரின் மதிப்பை ஏற்றுக்கொள்கிறார். அதன் அடிப்படையில் பாவங்களை மன்னித்து, ஆதாமின் சந்ததிக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பார்.—ஆதியாகமம் 3:15; அப்போஸ்தலர் 2:32-36; 1 கொரிந்தியர் 15:21, 22.

கி.பி. சுமார் 1914

பாம்பை, அதாவது சாத்தானை, இயேசு பூமிக்குத் தள்ளி, கொஞ்சக் காலம் அங்கே விட்டுவைத்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 12:7-9, 12.

எதிர்காலம்

1,000 வருஷங்களுக்குச் சாத்தானை இயேசு சிறையில் அடைப்பார். பின்பு அவன் தலையை நசுக்குவார், அதாவது அவனை அழிப்பார். யெகோவா எந்த நோக்கத்துக்காக இந்தப் பூமியையும் மனிதர்களையும் படைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும். அவருடைய பெயர்மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கும், அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது என்று நிரூபிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 20:1-3, 10; 21:3, 4.