ஆபகூக் 1:1-17

1  ஒரு தரிசனத்தில் ஆபகூக்* தீர்க்கதரிசிக்குக் கிடைத்த செய்தி இதுதான்:   அவர் கடவுளிடம், “யெகோவாவே, நான் எவ்வளவு காலத்துக்குத்தான் உதவிக்காகக் கதறுவேன், நீங்கள் ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+ வன்முறையிலிருந்து காப்பாற்றும்படி எவ்வளவு காலத்துக்குத்தான் கேட்பேன், ஏன் கண்டுகொள்ளாமல்* இருக்கிறீர்கள்?+   என்னை ஏன் அக்கிரமங்களைப் பார்க்க வைக்கிறீர்கள்? கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்? நாச வேலைகளும் வன்முறைகளும் ஏன் என்னுடைய கண் முன்னாலேயே நடக்கின்றன? எங்கு பார்த்தாலும் ஏன் சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது?   சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை.எங்குமே நியாயம் இல்லை. நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைக்கிறான்.அதனால்தான், நீதி புரட்டப்படுகிறது”+ என்று சொன்னார்.   “ஜனங்களே, சுற்றியுள்ள தேசங்களைக் கூர்ந்து கவனியுங்கள்! ஏனென்றால், உங்களுடைய காலத்தில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது.அதைப் பற்றிச் சொன்னால்கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனாலும், அதை ஆச்சரியத்தோடு பாருங்கள்; பார்த்து அதிர்ச்சி அடையுங்கள்.+   நான் கல்தேயர்களை வரவழைப்பேன்.+அவர்கள் ஈவிரக்கம் இல்லாதவர்கள், கண்மூடித்தனமாகத் தாக்குபவர்கள். பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள். தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+   அவர்கள் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள். அவர்களே தங்களுக்குச் சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள், அவர்களே அதிகாரத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.*+   அவர்களுடைய குதிரைகள் சிறுத்தையைவிட வேகமாக ஓடும்.ராத்திரியில் திரிகிற ஓநாய்களைவிட மூர்க்கமாக இருக்கும்.+ அவர்களுடைய போர்க்குதிரைகள் துள்ளிக் குதித்து ஓடும்.அவை வெகு தூரத்திலிருந்து வரும். இரையைப் பார்த்ததும் அதன்மேல் பாய்கிற கழுகு போல வேகமாகப் பாயும்.+   அவர்கள் எல்லாவற்றையும் நொறுக்கிப்போட படைதிரண்டு வருவார்கள்.+ சுட்டெரிக்கும் கிழக்குக் காற்றைப் போல வேகமாக வருவார்கள்.+மணலை அள்ளுவது போல ஜனங்களை அள்ளிக்கொண்டு போவார்கள். 10  ராஜாக்களை அவர்கள் கிண்டல் செய்வார்கள்.உயர் அதிகாரிகளை ஏளனம் பண்ணுவார்கள்.+ கோட்டைகளைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பார்கள்.+மண்மேடுகளை எழுப்பி அந்தக் கோட்டைகளைக் கைப்பற்றுவார்கள். 11  காற்றைப் போல வேகமாகத் தேசத்தைக் கடந்து போவார்கள்.ஆனால், தங்கள் தெய்வம்தான் தங்களுக்குப் பலம் தந்ததாகச் சொல்வார்கள்.*+அதனால், குற்றவாளிகளாக ஆவார்கள்.”+ 12  யெகோவாவே, நீங்கள் என்றென்றும் இருப்பவர்.+ என் கடவுளே, பரிசுத்தமான கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை.*+ யெகோவாவே, எங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பைக் கொடுக்கத்தான் அவர்களை நியமித்தீர்கள்.கற்பாறை போன்றவரே,+ எங்களைத் தண்டிப்பதற்குத்தான்* அவர்களை வரவழைத்தீர்கள்.+ 13  மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!அக்கிரமங்களை உங்களால் சகிக்க முடியாதே!+ அப்படியிருந்தும், நயவஞ்சகர்களை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?+நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைப்பதைப் பார்த்து ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?+ 14  கடல்மீன்களைப் போலவும் ஆதரவில்லாத* கடல் பிராணிகளைப் போலவும்மனிதர்கள் நடத்தப்படுவதற்கு ஏன் விடுகிறீர்கள்? 15  அவர்கள் எல்லாரையும் எதிரி* தூண்டிலில் பிடிக்கிறான்.மீன்பிடிக்கும் வலையால் இழுக்கிறான். அதில் வாரிக்கொள்கிறான். அதனால், சந்தோஷத்தில் துள்ளுகிறான்.+ 16  தன்னுடைய வலைகளுக்கு அவன் பலிகளைச் செலுத்துகிறான்.அவற்றுக்குத் தூபம் காட்டுகிறான்.ஏனென்றால், அவற்றால்தான் அவனுக்குச் செல்வம் குவிந்தது,* அருமையான உணவும் கிடைத்தது. 17  அப்படியானால், அவன் தன் வலையை விரித்துக்கொண்டே இருப்பானா?* கரிசனை இல்லாமல் ஜனங்களைக் கொன்று குவித்துக்கொண்டே இருப்பானா?+

அடிக்குறிப்புகள்

ஒருவேளை இதன் அர்த்தம், “இறுக்கமாகக் கட்டிப்பிடித்தல்.”
வே.வா., “காப்பாற்றாமல்.”
வே.வா., “தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள்.”
அல்லது, “அவர்களுடைய பலம்தான் அவர்களுக்குத் தெய்வம்.”
அல்லது, “நாங்கள் சாகப்போவதே இல்லை.”
வே.வா., “கண்டிப்பதற்குத்தான்.”
வே.வா., “அதிகாரி இல்லாத.”
அதாவது, “கல்தேயன்.”
நே.மொ., “கொழுமையான பங்கு கிடைத்தது.”
அல்லது, “வாளை உருவிக்கொண்டே இருப்பானா?”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா