எசேக்கியேல் 23:1-49

23  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்.+  அவர்கள் இரண்டு பேரும் எகிப்தில் விபச்சாரிகளாக இருந்தார்கள்.+ பருவ வயதிலிருந்தே விபச்சாரம் செய்துவந்தார்கள். தங்கள் கற்பை விற்று ஆண்களோடு உல்லாசமாக இருந்தார்கள்.  பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம்.  அகோலாள் என்னுடையவளாக இருந்தபோது விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள்.+ அவளுடைய ஆசைக் காதலர்களான அசீரியர்களை+ மோகத்தோடு தேடிப்போனாள்.+  அவர்கள் நீல உடை உடுத்திய ஆளுநர்களாகவும் துணை அதிகாரிகளாகவும் இருந்தார்கள். குதிரைகளில் வந்த அழகான இளம் வீரர்களாக இருந்தார்கள்.  அசீரியாவின் தலைசிறந்த ஆண்மகன்களோடு அவள் விபச்சாரம் செய்துகொண்டே இருந்தாள். ஆட்களை மோகத்தோடு தேடிப்போய், அவர்களுடைய அருவருப்பான* சிலைகளை வணங்கி தன்னைத் தீட்டுப்படுத்தினாள்.+  எகிப்தில் செய்த விபச்சாரத்தை அவள் விடவில்லை. அவளுடைய பருவ வயதில் எகிப்தியர்கள் அவளோடு உல்லாசமாக இருந்து தங்கள் காமப்பசியைத் தீர்த்துக்கொண்டார்கள்.+  அதனால், அவள் மோகத்தோடு தேடிப்போன அவளுடைய ஆசைக் காதலர்களான அசீரியர்களின் கையிலேயே நான் அவளைக் கொடுத்துவிட்டேன்.+ 10  அவர்கள் அவளை நிர்வாணமாக்கி,+ அவளுடைய மகன்களையும் மகள்களையும் பிடித்துக்கொண்டு போனார்கள்.+ நடத்தைகெட்டவள் என்ற பெயரெடுத்திருந்த அவளைத் தண்டித்து, வாளால் வெட்டிப்போட்டார்கள். 11  அவளுடைய தங்கை அகோலிபாள் அதைப் பார்த்த பின்பு இன்னும் கேவலமாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள். விபச்சாரம் செய்வதில் அவளுடைய அக்காவையே மிஞ்சிவிட்டாள்.+ 12  அசீரியர்களை மோகத்தோடு தேடிப்போனாள்.+ அவர்கள் கம்பீரமாக உடை உடுத்திய ஆளுநர்களாகவும் துணை அதிகாரிகளாகவும் இருந்தார்கள். குதிரைகளில் வந்த அழகான இளம் வீரர்களாக இருந்தார்கள். 13  அவள் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டாள். அக்காவும் தங்கையும் ஒரே போல நடந்துகொண்டார்கள்.+ 14  ஆனால், தங்கை விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்துவந்தாள். சுவரில் செதுக்கப்பட்ட ஆண்களின் உருவங்களைப் பார்த்தாள். அவை சிவப்பு நிறம் பூசப்பட்ட கல்தேயர்களின் உருவங்கள். 15  அந்த உருவங்களுக்கு இடுப்புவாரும், நீளமாகத் தொங்குகிற தலைப்பாகையும் இருந்தன. பார்ப்பதற்கு வீரர்களைப் போலவும், கல்தேயர்களின் தேசத்தில் பிறந்த பாபிலோனியர்களைப் போலவும் தெரிந்தன. 16  அவள் அவற்றைப் பார்த்ததுமே காமத் தீயில் பற்றியெரிய ஆரம்பித்தாள். உடனே, கல்தேயாவுக்குத் தூது அனுப்பினாள்.+ 17  அதனால், பாபிலோனியர்கள் அவளுடைய படுக்கைக்கு வந்து, தங்கள் காமப்பசியைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் அவளைத் தீட்டுப்படுத்திய பின்பு அவள் அருவருப்போடு அவர்களைவிட்டு விலகினாள். 18  அவள் மட்டுக்குமீறிய துணிச்சலோடு விபச்சாரம் செய்துகொண்டும் ஆபாசமாக நடந்துகொண்டும் இருந்தாள்.+ அதனால், நான் அருவருப்போடு அவளுடைய அக்காவைவிட்டு விலகியது போலவே அவளைவிட்டும் விலகினேன்.+ 19  அவள் விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்துவந்தாள்.+ பருவ வயதில் எகிப்து தேசத்தில் செய்த விபச்சாரத்தை ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தாள்.+ 20  தன் காதலர்களை மோகத்தோடு தேடிப்போனாள். கழுதையையும் குதிரையையும் போலக் காமவெறி பிடித்து அலைகிற ஆண்களுடைய வைப்பாட்டிகளைப் போல நடந்துகொண்டாள். 21  பருவ வயதில் எகிப்திய ஆண்களோடு வாழ்ந்த உல்லாச வாழ்க்கைக்காக ஏங்கினாள்.+ மறுபடியும் அவர்களோடு ஆபாசமாக நடக்கத் துடித்தாள்.+ 22  அதனால் அகோலிபாளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ அருவருப்போடு விட்டுவிலகிய உன் காதலர்களை நான் தூண்டிவிடுவேன்.+ அவர்கள் உனக்கு எதிராக எல்லா பக்கத்திலிருந்தும் வரும்படி செய்வேன்.+ 23  பேகோடு,+ சோவா, கோவா என்ற இடங்களைச் சேர்ந்தவர்களையும் பாபிலோனியர்களையும்+ கல்தேயர்களையும்+ அசீரியர்களையும் உனக்கு எதிராக வர வைப்பேன். அவர்கள் எல்லாரும் குதிரைகளில் வரும் அழகான இளம் போர்வீரர்கள். ஆளுநர்களாகவும் துணை அதிகாரிகளாகவும் முக்கிய ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். 24  அவர்கள் ஏராளமான போர் ரதங்களோடும் படைகளோடும் பெரிய கேடயங்களோடும் சிறிய கேடயங்களோடும்* தலைக்கவசங்களோடும் வந்து உன்னைத் தாக்குவார்கள். உன்னைச் சுற்றிவளைப்பார்கள். உன்னைத் தண்டிக்க நான் அவர்களுக்கு அதிகாரம் தருவேன். அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடி உனக்குத் தண்டனை கொடுப்பார்கள்.+ 25  நான் உன்மேல் என் கோபத்தைக் கொட்டித்தீர்ப்பேன். அவர்களும் உன்மேல் இருக்கிற ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். உன்னுடைய மூக்கையும் காதுகளையும் அவர்கள் அறுத்துவிடுவார்கள். உன்னில் மிச்சமிருக்கிறவர்களை வாளால் வெட்டிச் சாய்ப்பார்கள். உன்னுடைய மகன்களையும் மகள்களையும் பிடித்துக்கொண்டு போவார்கள். மிச்சமிருக்கிறவர்கள் நெருப்புக்குப் பலியாவார்கள்.+ 26  அவர்கள் உன்னுடைய உடைகளையும்,+ அழகான நகைகளையும் பிடுங்கிக்கொள்வார்கள்.+ 27  எகிப்து தேசத்தில் ஆரம்பமான+ உன்னுடைய வெட்கங்கெட்ட விபச்சாரத்துக்கு நான் முடிவுகட்டுவேன்.+ நீ இனி எகிப்தியர்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டாய். எகிப்தை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டாய்.’ 28  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யாரை வெறுக்கிறாயோ, யாரைவிட்டு அருவருப்போடு விலகினாயோ, அவர்களுடைய கையிலேயே உன்னைக் கொடுக்கப்போகிறேன்.+ 29  அவர்கள் உன்னை வெறுப்பார்கள். நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு,+ உன்னை நிர்வாணமாக்கிவிட்டுப் போவார்கள். அப்போது, உன்னுடைய வெட்கக்கேடும் ஆபாசமும் மானங்கெட்ட நடத்தையும் விபச்சாரமும் வெளிச்சத்துக்கு வரும்.+ 30  நீ ஒரு விபச்சாரியைப் போலத் தேசங்களின் பின்னால் அலைந்தாய்.+ அவர்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்கி உன்னைத் தீட்டுப்படுத்தினாய்.+ அதனால்தான், உனக்கு இந்தக் கதி வரும். 31  உன்னுடைய அக்காவைப் போலவே நீ நடந்துகொண்டாய்.+ அதனால், அவளுடைய கிண்ணத்தை உன் கையில் கொடுப்பேன்.’+ 32  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ உன் அக்காவுடைய பெரிய கிண்ணத்திலிருந்து குடித்து,+கேலி கிண்டலுக்கு ஆளாவாய்; அந்தக் கிண்ணம் அவற்றால் நிறைந்திருக்கிறது.+ 33  உன் அக்காவான சமாரியாவின் கிண்ணம்கோரமான முடிவையும் சீரழிவையும் கொண்டுவருகிற கிண்ணம்.நீ அதைக் குடித்துப் போதையில் தள்ளாடுவாய், சோகத்தில் வாடுவாய். 34  ஒரு சொட்டு விடாமல் குடித்துவிட்டு,+ அந்த மண் கிண்ணத்தை மெல்லுவாய்.அதன்பின், உன் மார்பகங்களை அறுத்தெறிவாய்.* “இதை நானே சொல்கிறேன்” என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.’ 35  அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ என்னை மறந்துவிட்டு, என்னை ஒதுக்கிவிட்டு,+ ஆபாசமாக நடந்தாய்; விபச்சாரம் செய்தாய். அதன் விளைவுகளை நீ அனுபவித்தே தீருவாய்’” என்றார். 36  பின்பு யெகோவா என்னிடம், “மனிதகுமாரனே, நீ அகோலாளுக்கும் அகோலிபாளுக்கும்+ தீர்ப்பு சொல்வாயா? அவர்களுடைய அருவருப்பான பழக்கவழக்கங்களை அவர்களுடைய முகத்துக்கு நேராகச் சொல்வாயா? 37  அவர்கள் எனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.+ அவர்களுடைய கையில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. அவர்கள் அருவருப்பான சிலைகளை வணங்கி எனக்குத் துரோகம் செய்தது மட்டுமல்லாமல், எனக்குப் பெற்றெடுத்த பிள்ளைகளை நெருப்பில் பலி கொடுத்து,* அந்தச் சிலைகளுக்கு இரையாக்கினார்கள்.+ 38  அதுமட்டுமல்ல, அந்த நாளில் என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள், என்னுடைய ஓய்வுநாட்களின் புனிதத்தைக் கெடுத்தார்கள். 39  அருவருப்பான சிலைகளுக்குத் தங்கள் பிள்ளைகளை நரபலி கொடுத்த+ அதே நாளில் என்னுடைய ஆலயத்துக்கு வந்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.+ என்னுடைய வீட்டுக்குள்ளேயே வந்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள். 40  அதோடு, தூரத்திலிருந்த ஆட்களை வரச் சொல்லி தூது அனுப்பினார்கள்.+ அகோலிபாளே, அந்த ஆட்கள் வந்துகொண்டிருந்த சமயத்தில் நீ நன்றாகக் குளித்து, உன் கண்களுக்கு மை தீட்டி, நகைகளால் உன்னை அலங்காரம் செய்துகொண்டாய்.+ 41  நீ ஆடம்பரமான கட்டிலில் உட்கார்ந்தாய்.+ உன்முன் ஒரு மேஜையைப் போட்டு,+ அதில் என்னுடைய தூபப்பொருளையும்+ எண்ணெயையும் வைத்துக்கொண்டாய்.+ 42  கூத்தும் கும்மாளமும் அடிக்கிற ஒரு கும்பலின் சத்தம் அங்கே கேட்டது. வனாந்தரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட குடிகாரர்களும் அந்தக் கும்பலில் இருந்தார்கள். அந்த ஆட்கள் இந்த இரண்டு பெண்களுடைய கைகளிலும் காப்புகளைப் போட்டுவிட்டார்கள், அவர்களுடைய தலைகளில் அழகான கிரீடங்களை வைத்தார்கள். 43  விபச்சாரம் செய்து* களைத்துப்போனவளைப் பற்றி நான், ‘இவள் விபச்சாரம் செய்வதை விடவே மாட்டாள்’ என்று சொன்னேன். 44  விபச்சாரியிடம் போவதைப் போல அவர்கள் அவளிடம் போய்க்கொண்டே இருந்தார்கள். மானங்கெட்ட பெண்களான அகோலாளிடமும் அகோலிபாளிடமும் இப்படித்தான் அவர்கள் போய்க்கொண்டே இருந்தார்கள். 45  ஆனால், விபச்சாரம் செய்ததற்காகவும்*+ கொலை செய்ததற்காகவும்+ நீதிமான்கள் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பார்கள். அவர்கள் விபச்சாரிகள்,* கொலைகாரிகள்.+ 46  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவதற்காகவும் உங்களைச் சூறையாடுவதற்காகவும் ஒரு படை வரவழைக்கப்படும்.+ 47  அந்தப் படைவீரர்கள் உங்கள்மேல் கல்லெறிந்து,+ உங்களை வாளால் வெட்டிப்போடுவார்கள். உங்களுடைய மகன்களையும் மகள்களையும் கொன்று,+ உங்களுடைய வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ 48  இந்தத் தேசத்தில் உங்களுடைய வெட்கங்கெட்ட நடத்தைக்கு நான் முடிவுகட்டுவேன். எல்லா பெண்களுக்கும் அது ஒரு பாடமாக இருக்கும். உங்களைப் போல ஆபாசமாக நடந்துகொள்ளக் கூடாது என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.+ 49  ஆபாசமான நடத்தைக்கும் அருவருப்பான சிலைகளை வணங்கிய பாவத்துக்கும் தகுந்த தண்டனையை அந்தப் படைவீரர்கள் உங்களுக்குக் கொடுப்பார்கள். அப்போது, நான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்’”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “என் கூடாரம் அவளிடம் இருக்கிறது.”
அர்த்தம், “அவளுடைய கூடாரம்.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
இந்தச் சிறிய கேடயங்களைப் பொதுவாக வில்வீரர்கள் வைத்திருந்தார்கள்.
நே.மொ., “பிய்த்தெறிவாய்.”
நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்து.”
வே.வா., “கணவனுக்குத் துரோகம் செய்து.”
வே.வா., “கணவனுக்குத் துரோகம் செய்கிறவர்கள்.”
வே.வா., “கணவனுக்குத் துரோகம் செய்ததற்காகவும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா