எரேமியா 18:1-23

18  எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர்,  “நீ எழுந்து குயவனின் வீட்டுக்குப் போ.+ அங்கே நான் உன்னிடம் பேசுவேன்” என்று சொன்னார்.  அவர் சொன்னபடியே நான் குயவனின் வீட்டுக்குப் போனேன். அங்கே அந்தக் குயவன் களிமண்ணால் ஒரு பானை செய்துகொண்டிருந்தான்.  அது சரியான வடிவத்தில் வரவில்லை. அதனால், அந்தக் களிமண்ணை வைத்து வேறொரு பானையைத் தன் விருப்பப்படி செய்தான்.  அப்போது யெகோவா என்னிடம்,  “‘இஸ்ரவேல் ஜனங்களே, இந்தக் குயவன் செய்தது போலவே நானும் உங்களுக்குச் செய்ய முடியாதா?’ என்று யெகோவா கேட்கிறார். ‘இஸ்ரவேல் ஜனங்களே, குயவனின் கையில் களிமண் இருப்பது போலவே நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.+  ஒரு தேசத்தை அல்லது ராஜ்யத்தைக் கவிழ்க்கப்போவதாகவும் அழிக்கப்போவதாகவும்+ நான் சொன்ன பின்பு,  அங்குள்ள ஜனங்கள் கெட்டது செய்வதை விட்டுவிட்டால் நானும் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+  ஆனால், ஒரு தேசத்தை அல்லது ராஜ்யத்தைச் செழித்தோங்க வைப்பேன் என்று நான் சொன்ன பின்பு, 10  அங்குள்ள ஜனங்கள் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்து என் பேச்சைக் கேட்காமல் போய்விட்டால் நானும் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களுக்கு நல்லது செய்யாமல் போய்விடுவேன்.’ 11  இப்போது நீ யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம் தயவுசெய்து இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தி இதுதான்: “நான் உங்களை அழிக்க நினைத்திருக்கிறேன்; உங்களைத் தண்டிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். தயவுசெய்து கெட்ட வழிகளையும் கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டுத் திருந்துங்கள்”’”+ என்று சொன்னார். 12  ஆனால் அவர்கள், “எங்களால் முடியாது!+ நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் செய்வோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பொல்லாத இதயத்தின் பிடிவாதப் போக்கில்தான் போவோம்”+ என்று சொன்னார்கள். 13  அதனால் யெகோவா, “தயவுசெய்து நீங்களே மற்ற தேசங்களுக்குப் போய்க் கேட்டுப் பாருங்கள். இது போல ஒன்று எங்கேயாவது நடந்திருக்கிறதா? கன்னிப்பெண்ணாகிய இஸ்ரவேல் படுகேவலமான காரியத்தைச் செய்திருக்கிறாள்.+ 14  லீபனோனின் மலைகளில் உள்ள பனி எப்போதாவது உருகுமா? தொலைதூரத்திலிருந்து பாய்ந்து வருகிற குளிர்ந்த தண்ணீர் எப்போதாவது வற்றிப்போகுமா? 15  ஆனால், என் ஜனங்கள் என்னை மறந்துவிட்டார்கள்.+ ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களுக்குத் தகன பலி செலுத்துகிறார்கள்.*+பூர்வ கால வழியில் போகிறவர்களைத் தடுக்கி விழ வைக்கிறார்கள்.+கரடுமுரடாக இருக்கிற சிறு பாதைகளில் அவர்களைப் போக வைக்கிறார்கள். 16  அதனால், அவர்களுடைய தேசத்துக்குக் கோரமான முடிவு வரும்.+என்றென்றைக்கும் அதைப் பார்த்து ஜனங்கள் கேலி செய்வார்கள்.*+ அந்த வழியாகப் போகிற எல்லாரும் அதிர்ச்சியில் தலையாட்டிக்கொண்டு போவார்கள்.+ 17  கிழக்குக் காற்று எப்படிப் பதரைச் சிதறிப்போக வைக்குமோ அப்படியே நான் அவர்களை எதிரிகளுக்கு முன்னால் சிதறிப்போக வைப்பேன். அழிவு நாளில் நான் அவர்களுக்கு என் முகத்தைக் காட்டாமல் முதுகைக் காட்டுவேன்”+ என்று சொல்கிறார். 18  ஆனால் அவர்கள் ஒருவரிடம் ஒருவர், “வாருங்கள், நாம் திட்டம் போட்டு எரேமியாவை ஒரு வழி பண்ணலாம்.+ கடவுளுடைய சட்டத்தைக் கற்றுக்கொடுக்க நமக்குத்தான் குருமார்கள் இருக்கிறார்களே, ஆலோசனை சொல்ல ஞானிகள் இருக்கிறார்களே, கடவுளுடைய செய்தியைச் சொல்ல தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களே. அதனால் வாருங்கள், எல்லாரும் போய் எரேமியாவைக் குற்றம்சாட்டிப் பேசலாம்.* அவன் சொல்வதைக் காதில் வாங்காமல் வந்துவிடலாம்” என்று சொன்னார்கள். 19  யெகோவாவே, தயவுசெய்து என் ஜெபத்தைக் கேளுங்கள்.என்னுடைய எதிரிகள் பேசுவதையெல்லாம் கேளுங்கள். 20  நான் நல்லது செய்தும் அவர்கள் எனக்குக் கெடுதல் செய்ய நினைப்பது நியாயமா? என்னைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்களே.+ அவர்கள்மேல் நீங்கள் கோபத்தைக் காட்டாமல் இருப்பதற்குநான் எப்படியெல்லாம் அவர்களுக்காகப் பரிந்து பேசினேன் என்று நினைத்துப் பாருங்கள். 21  இப்போது, தேசத்திலுள்ள ஆண்களைக் கொள்ளைநோயால் கொன்றுபோடுங்கள்.வாலிபர்களைப் போர்க்களத்தில் வெட்டிச் சாய்த்துவிடுங்கள்.+ அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கும் வாளுக்கும் பலியாக்குங்கள்.+அவர்களுடைய மனைவிகள் கணவனையும் பிள்ளைகளையும் இழந்து தவிக்கட்டும்.+ 22  அவர்களைத் திடீரென்று தாக்க கொள்ளைக்கூட்டத்தை அனுப்புங்கள்.அவர்களுடைய வீடுகளில் அலறல் சத்தம் கேட்கட்டும். ஏனென்றால், என்னைப் பிடிப்பதற்காகக் குழி தோண்டியிருக்கிறார்கள்.என்னைச் சிக்க வைப்பதற்காக வலைகளை விரித்திருக்கிறார்கள்.+ 23  ஆனால் யெகோவாவே,என்னைத் தீர்த்துக்கட்ட அவர்கள் என்னென்ன சதி செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.+ அவர்களுடைய குற்றத்தை மன்னிக்காதீர்கள்.அவர்களுடைய பாவங்களை மறந்துவிடாதீர்கள். அவர்கள்மேல் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்.+அப்போது, அவர்கள் உங்களுக்கு முன்னால் வீழ்ச்சி அடையட்டும்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தூபம் காட்டுகிறார்கள்.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
வே.வா., “எரேமியாவை வார்த்தைகளால் தாக்கலாம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா