எரேமியா 2:1-37

2  யெகோவா என்னிடம்,  “எருசலேமுக்கு நீ அறிவிக்க வேண்டியது என்னவென்றால், ‘யெகோவா சொல்வது இதுதான்: “இளவயதில் என்மேல் எவ்வளவு பக்தியாக* இருந்தாய்!+என்னோடு நிச்சயிக்கப்பட்டிருந்த சமயத்தில் என்மேல் எவ்வளவு பிரியமாக இருந்தாய்!+எதுவும் விதைக்கப்படாத வனாந்தரத்திலே என்னை எப்படிப் பின்பற்றி வந்தாய்!+இதெல்லாம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.   இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவர்களாக,+ அவருடைய முதல் விளைச்சலாக இருந்தார்கள்.”’ ‘அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறவர்கள் குற்றவாளிகளாக ஆவார்கள். அப்படிப்பட்டவர்கள் அழிந்துபோவார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”+   யாக்கோபின் வம்சத்தாரே, இஸ்ரவேலின் குடும்பங்களே,யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்.   யெகோவா சொல்வது இதுதான்: “உங்களுடைய முன்னோர்கள் என்னிடம் என்ன குறையைப் பார்த்தார்கள்?+ஏன் என்னைவிட்டுத் தூரமாகப் போனார்கள்?ஏன் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி+ ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆனார்கள்?+   ‘எகிப்திலிருந்து விடுதலை செய்து,+ஆள் நடமாட்டமே இல்லாத வனாந்தரத்தின் வழியாகவும்,பாலைவனங்களும்+ படுகுழிகளும் வறட்சியும்+கும்மிருட்டும் உள்ள தேசத்தின் வழியாகவும்,யாருமே குடியிருக்காத பிரதேசத்தின் வழியாகவும்நம்மைக் கூட்டிக்கொண்டு வந்த யெகோவா எங்கே?’ என்று அவர்கள் கேட்கவில்லை.   பழத் தோட்டங்கள் நிறைந்த தேசத்துக்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.அந்தத் தேசத்தின் விளைச்சலையும் வளங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன்.+ ஆனால், நீங்கள் அந்தத் தேசத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள்.நான் கொடுத்த சொத்தை அருவருப்பானதாக ஆக்கினீர்கள்.+   ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+ திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.   ‘அதனால் நான் திரும்பவும் உங்களோடு வழக்காடுவேன்,+உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன்’ என்று யெகோவா சொல்கிறார். 10  ‘கித்தீமின்+ கடலோரப் பகுதிகளுக்கு* போய்ப் பாருங்கள். கேதாருக்கு+ ஆள் அனுப்பி நன்றாக விசாரியுங்கள்.இதுபோல் ஒன்று நடந்திருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். 11  எந்தத் தேசத்து ஜனங்களாவது அவர்களுடைய தெய்வத்தை விட்டுவிட்டு தெய்வமே இல்லாதவற்றை வணங்கியிருக்கிறார்களா? ஆனால், என்னுடைய ஜனங்கள் மகிமையுள்ள என்னை விட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வணங்குகிறார்கள்.+ 12  யெகோவா சொல்வது இதுதான்: ‘வானமே, இதைப் பார்த்து ஆச்சரியப்படு.அதிர்ச்சியில் நடுநடுங்கு. 13  ஏனென்றால், என் ஜனங்கள் இரண்டு தவறுகளைச் செய்துவிட்டார்கள்: வாழ்வு தரும் நீரூற்றாகிய+ என்னை விட்டுவிட்டார்கள்.அதோடு, தங்களுக்காகத் தொட்டிகளை வெட்டிக்கொண்டார்கள்.*அவை தண்ணீர் நிற்காத உடைந்த தொட்டிகள்.’ 14  ‘இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனா அல்லது எஜமானின் வீட்டில் பிறந்த அடிமையா? அப்புறம் ஏன் கொள்ளையடிக்கப்பட அவன் விடப்பட்டான்? 15  அவனைப் பார்த்து இளம் சிங்கங்கள் கர்ஜித்தன.+சத்தமாக உறுமின. அவனுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தன. அவனுடைய நகரங்கள் கொளுத்தப்பட்டன; அங்கு யாருமே இல்லை. 16  இஸ்ரவேலே, நோப்* மக்களும்+ தக்பானேஸ் மக்களும்+ உன் தேசத்தைச் சூறையாடுகிறார்கள்.* 17  உனக்கு இந்த நிலைமை வந்ததற்கு நீதானே காரணம்?உன் கடவுளாகிய யெகோவா உனக்கு வழி காட்டினாரேஆனால், நீ அவரை விட்டுவிட்டாயே.+ 18  இப்போது ஏன் எகிப்துக்குப் போகத் துடிக்கிறாய்?+ஏன் சீகோரின்* தண்ணீரைக் குடிக்க ஏங்குகிறாய்? ஏன் அசீரியாவுக்குப் போக ஆசைப்படுகிறாய்?+ஏன் யூப்ரடிஸ்* ஆற்றின் தண்ணீரைக் குடிக்க விரும்புகிறாய்? 19  உன் அக்கிரமமே உனக்குப் பாடம் புகட்ட வேண்டும்.நீ செய்த துரோகமே உன்னைக் கண்டிக்க வேண்டும். உன் கடவுளாகிய யெகோவாவைவிட்டு விலகினால்எந்தளவுக்குக் கஷ்டத்தையும் வேதனையையும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்.+உனக்கு என்மேல் பயமே இல்லை’+ என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 20  ‘எத்தனையோ வருஷங்களுக்கு முன்பே நான் உன் நுகத்தடியை முறித்துப்போட்டேன்.+உன் விலங்குகளை உடைத்துப்போட்டேன். ஆனால், “நான் உங்களுக்குச் சேவை செய்ய மாட்டேன்” என்று நீ சொன்னாய். உயரமான எல்லா மலைகளின் மேலும், அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+படுத்துக் கிடந்து விபச்சாரம் செய்தாய்.+ 21  தரமான சிவப்புத் திராட்சைக் கொடியாகத்தானே உன்னை நட்டு வைத்தேன்?+ நீ முழுக்க முழுக்க நல்ல கொடியாகத்தானே இருந்தாய்?பிறகு எப்படித் தரம்கெட்ட காட்டுத் திராட்சைக் கொடியாக மாறினாய்?’+ 22  ‘நீ என்னதான் நன்றாகத் தேய்த்துக் குளித்தால்கூட* உன் அழுக்கு போகாது.உன் அக்கிரமங்கள்தான் என் கண்ணுக்குக் கறையாகத் தெரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 23  நீ உன்னைக் கறைபடுத்திக்கொள்ளவே இல்லை என்றும், பாகால்களை வணங்கவே இல்லை என்றும் எப்படிச் சொல்லலாம்? பள்ளத்தாக்கில் நீ போன வழியைப் பார். நீ என்ன செய்தாய் என்று யோசித்துப் பார். அங்கும் இங்கும் கண்மூடித்தனமாக ஓடுகிறஇளம் பெண் ஒட்டகத்தைப் போல நீ இருக்கிறாய். 24  வனாந்தரத்தில் திரிந்து பழகிய பெண் காட்டுக் கழுதை போல இருக்கிறாய்!அது காம வேட்கையில் மோப்பம் பிடிக்கும். காம வெறியில் இருக்கும்போது அதை யாரால் கட்டுப்படுத்த முடியும்? ஆண் கழுதை அதைத் தேடி அலைய வேண்டியதே இல்லை. இணை சேரும் காலத்தில் அதுவே தேடி வரும். 25  இஸ்ரவேலே, ‘வீணானதைத் தேடிப்போய் உன் பாதத்தைத் தேய விடாதே,உன் தொண்டையை வறண்டுபோக விடாதே’ என்று நான் சொன்னபோது, ‘என்னால் முடியாது!+ நான் மற்ற தெய்வங்களிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்.+அந்தத் தெய்வங்களைத்தான் கும்பிடுவேன்’+ என்று நீ சொன்னாய். 26  கையும் களவுமாகப் பிடிபடுகிற திருடன் அவமானம் அடைவது போல,இஸ்ரவேல் ஜனங்களும் அவமானம் அடைந்திருக்கிறார்கள்.ஜனங்கள், ராஜாக்கள், இளவரசர்கள், குருமார்கள்,தீர்க்கதரிசிகள் என எல்லாருமே அசிங்கப்பட்டுப் போயிருக்கிறார்கள்.+ 27  அவர்கள் ஒரு மரத்தைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தகப்பன்’ என்றும்,+ ஒரு கல்லைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தாய்’ என்றும் சொல்கிறார்கள். என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போகிறார்கள்.*+ ஆனால், ஆபத்துக் காலத்தில் மட்டும்,‘காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!’+ என்று கெஞ்சுவார்கள். 28  உங்களுக்காக நீங்கள் உண்டாக்கிய தெய்வங்கள் எங்கே?+ யூதா ஜனங்களே, உங்கள் நகரங்களைப் போல உங்கள் தெய்வங்களும் ஏராளமாகிவிட்டன.+முடிந்தால், ஆபத்துக் காலத்தில் அந்தத் தெய்வங்களே உங்களைக் காப்பாற்றட்டும். 29  ‘ஏன் என்னோடு வாதாடிக்கொண்டே இருக்கிறீர்கள்? ஏன் எல்லாரும் என் பேச்சை மீறுகிறீர்கள்?’+ என்று யெகோவா கேட்கிறார். 30  நான் உங்கள் மகன்களைத் தண்டித்தது வீண்.+ நான் கண்டித்தும் அவர்கள் திருந்தவே இல்லை.+கொடிய சிங்கத்தைப் போலஉங்கள் வாளே உங்கள் தீர்க்கதரிசிகளைத் தாக்கிக் கொன்றது.+ 31  இன்றைய தலைமுறையினரே, யெகோவாவின் வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள். நான் இஸ்ரவேலுக்கு ஒரு வனாந்தரம்போல் ஆகிவிட்டேனா?பயங்கரமான இருட்டில் கிடக்கும் தேசம்போல் ஆகிவிட்டேனா? என் ஜனங்கள் என்னிடம், ‘எங்கள் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருக்கிறோம், உங்களிடம் இனி வரவே மாட்டோம்’+ என்று ஏன் சொல்கிறார்கள்? 32  ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளா?ஒரு கல்யாணப் பெண் தன் கல்யாண உடையை* மறப்பாளா? ஆனாலும், என் ஜனங்கள் நாள்கணக்காக என்னை மறந்துவிட்டார்கள்.+ 33  பெண்ணே,* நீ கள்ளத்தனமாகக் காதலர்களைத் தேடிப்போனாயே! கெட்ட வழிகளில் போய்ப் பழக்கப்பட்டிருக்கிறாயே!+ 34  ஏழைகளான அப்பாவி ஜனங்களின் இரத்தக் கறை உன் உடைகளில் இருக்கிறது.+கொள்ளையடித்ததால் அவர்கள் கொல்லப்படவில்லை.இருந்தாலும், உன் உடைகளிலெல்லாம் அவர்களுடைய இரத்தக் கறையைப் பார்த்தேன்.+ 35  ஆனால் நீ, ‘அவருக்கு என்மேல் இருந்த கோபம் போய்விட்டது. நான் நிரபராதி’ என்று சொல்லிக்கொள்கிறாய்.பாவம் செய்யவில்லை என்று நீ சொல்லிக்கொள்வதால் இப்போது நான் உன்னைத் தண்டிக்கப்போகிறேன். 36  என்னைவிட்டு ஏன் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருக்கிறாய்? அதனால் வரும் விபரீதத்தை ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய்? அசீரியாவை நம்பி நீ அவமானப்பட்டதைப் போல+எகிப்தையும் நம்பி நீ அவமானப்பட்டுப் போவாய்.+ 37  நீ யார்மேல் நம்பிக்கை வைத்தாயோ அவர்களை யெகோவா ஒதுக்கித்தள்ளிவிட்டார்.அவர்களால் உனக்கு உதவி செய்ய முடியாது.அதனால், நீ தலைமேல் கை வைத்துக்கொண்டுதான் இங்கிருந்து போவாய்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அன்பாக.”
வே.வா., “தீவுகளுக்கு.”
வே.வா., “குடைந்துகொண்டார்கள்.” ஒருவேளை பாறையில் குடைந்திருக்கலாம்.
வே.வா., “மோப்.”
நே.மொ., “உன் உச்சந்தலையைத் தின்கிறார்கள்.”
அதாவது, “ஐப்பிராத்து.”
இது நைல் நதியின் ஒரு கிளை.
நே.மொ., “நீ சோடா உப்பினாலும் நிறைய சலவைத் தூளினாலும் கழுவினால்கூட.”
வே.வா., “எனக்கு முகத்தைக் காட்டுவதற்குப் பதிலாக முதுகைக் காட்டுகிறார்கள்.”
நே.மொ., “தன் மார்க்கச்சையை.”
அதாவது, “எருசலேமே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா