எரேமியா 21:1-14

21  யெகோவாவின் செய்தியைக் கேட்டு வருவதற்காக மாசெயாவின் மகனும் குருவுமாகிய செப்பனியாவையும்,+ மல்கீயாவின் மகனாகிய பஸ்கூரையும்+ எரேமியாவிடம் சிதேக்கியா ராஜா+ அனுப்பினார்.  அவர்கள் எரேமியாவிடம் வந்து, “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் எங்களோடு போர் செய்ய வந்திருக்கிறான்.+ யெகோவா ஒருவேளை எங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்து அவனை எங்களைவிட்டுத் திரும்பிப் போக வைக்கலாம்.+ அப்படி நடக்குமா என்று தயவுசெய்து அவரிடம் விசாரித்துச் சொல்லுங்கள்” என்றார்கள். அப்போது, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.  அதனால் எரேமியா அவர்களிடம், “நீங்கள் சிதேக்கியாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்:  ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “உன்னை மதிலுக்கு வெளியே சுற்றிவளைத்திருக்கும் பாபிலோன் ராஜாவையும்+ கல்தேயர்களையும் தாக்குவதற்காக நீ கையில் வைத்திருக்கிற ஆயுதங்களை நான் உனக்கு எதிராகவே திருப்புவேன். அவற்றை* இந்த நகரத்தின் நடுவே கொண்டுவருவேன்.  பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் என்னுடைய பலத்த கையை ஓங்கி,+ உனக்கு எதிராகப் போர் செய்வேன்.+  இந்த நகரத்தில் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் பயங்கரமான கொள்ளைநோய்க்குப் பலியாக்குவேன்.+  அதற்குப் பின்பு, யூதாவின் ராஜாவான சிதேக்கியாவையும் அவனுடைய ஊழியர்களையும் இந்த நகரத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன்.” யெகோவா சொல்வது இதுதான்: “கொள்ளைநோய்க்கும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் தப்பியவர்களை, அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+ பாபிலோன் ராஜா அவர்கள் எல்லாரையும் வாளால் வெட்டிச் சாய்ப்பான். அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டான், பரிதாபப்பட மாட்டான்.”’+  இந்த ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் நான் உங்கள்முன் வைக்கிறேன்.  இந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருக்கிற கல்தேயர்களிடம் போய் சரணடைகிற எல்லாரும் உயிர் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், நகரத்திலேயே இருக்கிறவர்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.”’+ 10  ‘யெகோவா சொல்வது இதுதான்: “இந்த நகரத்தை நான் காப்பாற்ற மாட்டேன், இதை அழித்தே தீருவேன்.+ இதை பாபிலோன் ராஜாவின் கையில்+ கொடுத்துவிடுவேன்.+ அவன் இதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.” 11  யூதாவின் ராஜாவுடைய குடும்பத்தாரே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 12  தாவீதின் வம்சத்தாரே, யெகோவா சொல்வது இதுதான்: “ஒவ்வொரு நாளும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்.மோசடிக்காரர்களின் கையிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள்.+நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தால்+என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+அதை யாராலும் அணைக்க முடியாது.”’ 13  யெகோவா சொல்வது இதுதான்: ‘பள்ளத்தாக்கில் குடியிருக்கிறவர்களே,சமவெளியில் இருக்கிற மலைப்பாறைமேல் வாழ்கிறவர்களே, நான் உங்களோடு போர் செய்வேன். ஆனால் நீங்கள், “நமக்கு எதிராக யார் வரப்போகிறார்கள்? நம் ஊர்களை யார் கைப்பற்றப்போகிறார்கள்?” என்று சொல்கிறீர்கள். 14  நான் உங்களைத் தண்டிப்பேன்.உங்களுடைய செயல்களுக்குத் தகுந்த கூலி கொடுப்பேன்’+ என்று யெகோவா சொல்கிறார். ‘நான் உங்கள் காட்டுக்குத் தீ வைப்பேன்.சுற்றியுள்ள எல்லாமே பொசுங்கிப்போகும்’+ என்று சொன்னார்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவர்களை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா