எரேமியா 24:1-10

24  பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்,*+ யூதாவின் அதிகாரிகளையும், கைத்தொழிலாளிகளையும், கொல்லர்களையும்* எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு+ போன பின்பு யெகோவா எனக்கு ஒரு காட்சியைக் காட்டினார். இரண்டு அத்திப் பழக் கூடைகள் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன.  ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அவை முதன்முதலாகப் பழுத்த அத்திப் பழங்களைப் போல மிகவும் நன்றாக இருந்தன. இன்னொரு கூடையில் கெட்டுப்போன அத்திப் பழங்கள் இருந்தன. அவை சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போயிருந்தன.  யெகோவா என்னிடம், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். ஒரு கூடையில் மிகவும் நல்ல அத்திப் பழங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னொரு கூடையில் சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்கள் இருக்கின்றன”+ என்று சொன்னேன்.  அப்போது யெகோவா என்னிடம்,  “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவிலிருந்து கல்தேயர்களின் தேசத்துக்குப் பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் நல்லது செய்வேன்.  அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+  யெகோவாவாகிய என்னைப் புரிந்துகொள்ளும் இதயத்தை நான் அவர்களுக்குத் தருவேன்.+ அவர்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+  சாப்பிடவே முடியாதளவுக்கு மிகவும் கெட்டுப்போன அத்திப் பழங்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவும்,+ அவனுடைய அதிகாரிகளும், எருசலேமின் அழிவில் தப்பித்தவர்களும், அதாவது இந்தத் தேசத்திலும் எகிப்திலும்+ வாழ்கிறவர்களும், கெட்டுப்போன அத்திப் பழங்களைப் போல இருக்கிறார்கள்.  அவர்களுக்கு நான் கொண்டுவரப்போகும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போகும்.+ நான் அவர்களைத் துரத்தியடிக்கிற இடங்களிலெல்லாம்+ ஜனங்கள் அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ 10  அவர்களுக்கு எதிராக நான் போரையும்+ பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்+ வர வைப்பேன். அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலிருந்து அவர்களை ஒழித்துக்கட்டுவேன்”’ என்று சொன்னார்.”

அடிக்குறிப்புகள்

யோயாக்கீன் என்றும் கோனியா என்றும்கூட அழைக்கப்படுகிறார்.
அல்லது, “கோட்டைக் கொத்தளங்கள் கட்டுகிறவர்களையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா