எரேமியா 47:1-7

47  காசாவை பார்வோன் தாக்குவதற்கு முன்பு, பெலிஸ்தியர்களைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்ன செய்தி.  யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, வடக்கிலிருந்து தண்ணீர் பாய்ந்து வருகிறது. அது வெள்ளமாகப் பெருக்கெடுத்து வருகிறது. தேசத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும்நகரத்தையும் அதில் வாழ்கிறவர்களையும் அது மூழ்கடிக்கும்.ஆட்கள் அலறுவார்கள். ஜனங்கள் ஒப்பாரி வைப்பார்கள்.   வீரியமுள்ள குதிரைகள்* ஓடிவருகிற சத்தத்தையும்போர் ரதங்கள் பாய்ந்து வருகிற சத்தத்தையும்அதன் சக்கரங்கள் உருளுகிற சத்தத்தையும் கேட்டுதகப்பன்கள் பீதி அடைவார்கள்.பிள்ளைகளைக்கூட அம்போவென்று விட்டுவிட்டு ஓடுவார்கள்.   ஏனென்றால், பெலிஸ்தியர்கள்+ எல்லாருமே அழியப்போகிற நாள் வருகிறது.தீருவுக்கும்+ சீதோனுக்கும்+ போய் உதவி செய்கிறவர்களும் ஒழிந்துபோவார்கள். கப்தோர்* தீவிலிருந்து+ வந்தவர்களான பெலிஸ்தியர்களில் மீதியானவர்களையெகோவா அழிக்கப்போகிறார்.   காசாவுக்குத் துக்கமும் அவமானமும் வரும்.* அஸ்கலோன் அடங்கி ஒடுங்கிவிட்டது.+ அவற்றின் சமவெளியில் மிஞ்சியிருக்கிறவர்களே,இன்னும் எவ்வளவு காலம்தான் உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொண்டு இருப்பீர்கள்?+   யெகோவாவின் வாளே!+ நீ எப்போதுதான் அடங்குவாய்? உன்னுடைய உறைக்குள் திரும்பிப் போ. அங்கே அமைதியாக ஓய்வெடு.   அது எப்படி அடங்கும்?யெகோவாதானே அதற்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்! அஸ்கலோனையும் கடற்கரைப் பகுதியையும் அழிப்பதற்காக+அவர்தானே அதை அனுப்பியிருக்கிறார்?”

அடிக்குறிப்புகள்

வே.வா., “பொலிகுதிரைகள்.”
அதாவது, “கிரேத்தா.”
நே.மொ., “காசா மொட்டையடிக்கப்படும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா