எரேமியா 50:1-46

50  கல்தேயர்களின் தேசமான பாபிலோனைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னது இதுதான்:   “இதை எல்லா தேசங்களிலும் சொல்லுங்கள்! கொடியை* ஏற்றி, அறிவிப்பு செய்யுங்கள்! எதையும் மறைக்காதீர்கள்! இப்படிச் சொல்லுங்கள்: ‘பாபிலோன் கைப்பற்றப்பட்டது!+ பேல் அவமானம் அடைந்துவிட்டது!+ மெரொதாக்கைத் திகில் கவ்விக்கொண்டது! பாபிலோனின் சிலைகளுக்கு அவமானம் வந்துவிட்டது! அவளுடைய அருவருப்பான* உருவச்சிலைகள் மிரண்டுபோய்விட்டன!’   அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+ அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது. மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.தேசமே வெறிச்சோடிப்போனது.”  யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒன்றாக வருவார்கள்.+ அவர்கள் அழுதுகொண்டே நடந்து வருவார்கள்.+ ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய கடவுளான யெகோவாவைத் தேடுவார்கள்.+  சீயோனுக்குப் போகும் வழியைக்+ கேட்பார்கள். அந்தத் திசையைப் பார்த்தபடி ஒருவரிடம் ஒருவர், ‘வாருங்கள், என்றுமே மறக்கப்படாத ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை நாம் யெகோவாவுடன் செய்து அவரோடு சேர்ந்துகொள்ளலாம்’+ என்று சொல்வார்கள்.  என்னுடைய ஜனங்கள் காணாமல்போன மந்தையைப்+ போல ஆகிவிட்டார்கள். அவர்களுடைய மேய்ப்பர்களே அவர்களை மலைகளிலும் குன்றுகளிலும் அலைய வைத்துவிட்டார்கள்.+ அவர்களுடைய தொழுவத்தையே அவர்கள் மறந்துவிட்டார்கள்.  அவர்களைக் கண்டுபிடிக்கிற எல்லாரும் அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள்.+ அவர்களுடைய எதிரிகள், ‘எங்கள்மேல் குற்றம் இல்லை. இவர்கள்தான் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்தார்கள். இவர்களுடைய முன்னோர்கள் நம்பியிருந்த நீதியுள்ள கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்’ என்று சொல்கிறார்கள்.”   “பாபிலோனைவிட்டு ஓடிப்போங்கள்.கல்தேயர்களின் தேசத்தைவிட்டு வெளியேறுங்கள்.+மந்தையில் முதலாவதாகப் போகிற கடாக்களைப் போலப் போங்கள்.   ஏனென்றால், வடக்கிலிருந்து மாபெரும் தேசங்களை+ ஒரு பெரிய கூட்டமாக வர வைப்பேன்.பாபிலோனுக்கு எதிராக அந்தக் கூட்டத்தை வர வைப்பேன். அது போர் செய்ய அணிவகுத்து வரும்.பாபிலோனைக் கைப்பற்றும். அதன் அம்புகள் போர்வீரனுடைய அம்புகளைப் போலப் பாய்ந்து,பிள்ளைகளைப் பெற்றோரிடமிருந்து பறித்துவிடும்.+அவற்றின் குறி தப்பாது. 10  எதிரிகள் கல்தேயாவைச் சூறையாடுவார்கள்.+ போதும் போதும் என்கிற அளவுக்கு அதைக் கொள்ளையடிப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார். 11  “ஏனென்றால், என்னுடைய ஜனங்களை நீங்கள் கொள்ளையடித்தபோது+சந்தோஷத்தில் மிதந்தீர்கள்.+ புல்வெளியிலுள்ள இளம் பசுவைப் போலத் துள்ளிக் குதித்தீர்கள்.வீரியமுள்ள குதிரைகள்* போலக் கனைத்தீர்கள். 12  உங்களுடைய தாய்க்கு அவமானம் வந்துவிட்டது.+ உங்களைப் பெற்றெடுத்தவள் ஏமாற்றம் அடைந்துவிட்டாள். தேசங்களிலேயே அற்பமான தேசமாகிவிட்டாள்.தண்ணீர் இல்லாத பொட்டல் காடாகவும் பாலைவனமாகவும் ஆகிவிட்டாள்.+ 13  யெகோவாவின் கோபத்தினால் அவள் அடியோடு அழிந்துபோவாள்.+மனுஷ நடமாட்டமே இல்லாமல் போவாள்.+ அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+ 14  வில்லை வளைக்கிற வீரர்களே,எல்லா பக்கத்திலிருந்தும் அணிவகுத்து வந்து பாபிலோனைத் தாக்குங்கள். சரமாரியாக அம்பு விடுங்கள்.+ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள்.+ 15  எல்லா பக்கத்திலிருந்தும் போர் முழக்கம் செய்யுங்கள். அவள் சரணடைந்துவிட்டாள். அவளுடைய தூண்கள் விழுந்துவிட்டன; அவளுடைய மதில்கள் இடிந்துவிட்டன.+ஏனென்றால், யெகோவா அவளைப் பழிவாங்கிவிட்டார்.+ நீங்களும் பழி தீர்த்துக்கொள்ளுங்கள். அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள்.+ 16  பாபிலோனில் விதை விதைக்கிறவர்களையும்அறுவடை செய்கிறவர்களையும் வெட்டிச் சாய்த்துவிடுங்கள்.+ கொடூரமான வாளுக்குப் பயந்து எல்லாரும் அவரவர் தேசத்துக்கே ஓடிப் போவார்கள்.+அவரவர் ஜனங்களிடமே திரும்பிப்போவார்கள். 17  “இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப்போன ஆடுகளைப் போல இருக்கிறார்கள்.+ சிங்கங்கள் அவர்களைத் துரத்தின.+ முதலில் அசீரிய ராஜா அவர்களைத் தாக்கினான்.+ அதன்பின், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களுடைய எலும்புகளை நொறுக்கினான்.+ 18  அதனால், இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘அசீரிய ராஜாவைத் தண்டித்தது போலவே+ பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் நான் தண்டிப்பேன். 19  இஸ்ரவேலை அவனுடைய மேய்ச்சல் நிலத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவன் கர்மேலிலும் பாசானிலும்+ எப்பிராயீம் மலைப்பகுதியிலும்+ கீலேயாத் மலைப்பகுதியிலும்+ மேய்ந்து திருப்தியடைவான்.’” 20  யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில்,இஸ்ரவேலிடம் குற்றம் இருக்கிறதா என்று நான் தேடிப் பார்ப்பேன்.ஆனால், அவனிடம் குற்றமே இருக்காது.யூதாவிடம் எந்தப் பாவமும் இருக்காது.நான் உயிரோடு விட்டுவைத்திருக்கிற ஜனங்களை மன்னிப்பேன்.”+ 21  யெகோவா சொல்வது இதுதான்: “மெரதாயீம் தேசத்துக்கும் பேகோடு+ ஜனங்களுக்கும் எதிராகப் போ. அவர்களைப் படுகொலை செய்; அடியோடு அழித்துவிடு. நான் சொன்னதையெல்லாம் செய். 22  தேசத்தில் போர் நடக்கிற சத்தம் கேட்கிறது.பேரழிவின் சத்தம் கேட்கிறது. 23  எல்லா தேசங்களையும் அடித்து நொறுக்கிய சம்மட்டி உடைத்தெறியப்பட்டது!+ பாபிலோனுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போனது!+ 24  பாபிலோனே, உனக்குப் பொறி வைத்தேன்.உனக்கே தெரியாமல் நீ மாட்டிக்கொண்டாய். நீ யெகோவாவையே எதிர்த்தாய்.அதனால் பிடிபட்டாய்.+ 25  யெகோவா தன்னுடைய களஞ்சியத்தைத் திறந்து,தன்னுடைய கோபத்தின் ஆயுதங்களை எடுத்திருக்கிறார்.+ உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவாகல்தேயர்களின் தேசத்தைத் தண்டிக்கப்போகிறார். 26  தொலைதூர இடங்களிலிருந்து வந்து அவளைத் தாக்குங்கள்.+ அவளுடைய களஞ்சியங்களைத் திறங்கள்.+ தானியங்களைக் குவிப்பது போல அவளுடைய பொருள்களைக் குவித்து வையுங்கள். அவளை அடியோடு அழித்துவிடுங்கள்.+ அவளுடைய ஜனங்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காதீர்கள். 27  அவளுடைய இளம் காளைகளைக் கொன்றுபோடுங்கள்.+வெட்டப்படும் இடத்துக்கு அவற்றை அனுப்புங்கள். அவற்றுக்கான தண்டனைத் தீர்ப்பு நாளும் நேரமும் வந்துவிட்டது.அவற்றின் கதி அவ்வளவுதான்! 28  தப்பித்து ஓடுகிறவர்களின் சத்தம் கேட்கிறது.அவர்கள் பாபிலோன் தேசத்திலிருந்து தப்பித்துப் போகிறார்கள்.யெகோவா தேவன் தன்னுடைய ஆலயத்துக்காகப் பழிவாங்கியதைப்+ பற்றிசீயோனில் அறிவிப்பதற்குப் போகிறார்கள். 29  வில்வீரர்களைக்+ கூப்பிடுங்கள்.பாபிலோனைத் தாக்கச் சொல்லுங்கள். அவளைச் சுற்றிவளையுங்கள்; யாரையும் தப்ப விடாதீர்கள். அவளுக்குச் சரியான கூலி கொடுங்கள்.+ அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள்.+ ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராக அகங்காரத்தோடு நடந்துகொண்டாள்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுக்குமுன் பெருமையடித்தாள்.+ 30  அந்த நாளில், அவளுடைய வாலிபர்கள்+ பொது சதுக்கங்களில் விழுந்து கிடப்பார்கள்.எல்லா வீரர்களும் அழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். 31  “திமிர் பிடித்தவளே,+ நான் உன்னைத் தண்டிக்கப்போகிறேன்”+ என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.“நான் உன்னுடைய கணக்கைத் தீர்க்கப்போகிற நாளும் நேரமும் வரப்போகிறது. 32  திமிர் பிடித்தவளே, நீ தடுமாறி விழுவாய்.உன்னைத் தூக்கிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.+ உன்னுடைய நகரங்களுக்கு நான் தீ வைப்பேன்.உன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அது பொசுக்கிவிடும்.” 33  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒடுக்கப்படுகிறார்கள்.அவர்களைப் பிடித்துக்கொண்டு போன எல்லாரும்+ அவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருக்கிறார்கள்.+ 34  ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+ 35  “கல்தேயர்களை ஒரு வாள் தாக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.“பாபிலோனின் அதிகாரிகளையும் ஞானிகளையும் குடிமக்களையும் அது கொன்றுபோடும்.+ 36  வெட்டிப் பேச்சு பேசுகிறவர்களை* ஒரு வாள் தாக்கும்; அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள். பாபிலோனின் வீரர்களை ஒரு வாள் தாக்கும்; அவர்கள் மிரண்டுபோவார்கள்.+ 37  அவர்களுடைய குதிரைகளையும் போர் ரதங்களையும்,அவள் நடுவில் வாழ்கிற மற்ற தேசத்தாரையும் ஒரு வாள் தாக்கும்.அவர்கள் பெண்களைப் போல ஆகிவிடுவார்கள்.+ அவளுடைய பொக்கிஷங்களை ஒரு வாள் தாக்கும்; அவை கைப்பற்றப்படும்.+ 38  அவளுடைய தண்ணீர் பாழாகிப்போகும்; அது வற்றிப்போகும்.+ ஏனென்றால், அவளுடைய தேசத்தில் எங்கு பார்த்தாலும் சிலைகள்தான் இருக்கின்றன.+அவற்றைக் கும்பிடுகிறவர்கள் பயங்கரமான தரிசனங்களைப் பார்த்து பைத்தியக்காரர்கள் போல நடந்துகொள்கிறார்கள். 39  பாலைவன மிருகங்கள், ஊளையிடுகிற மிருகங்களோடு வாழும்.பாபிலோனில் நெருப்புக்கோழிகள் தங்கும்.+ இனி ஒருபோதும் மனுஷர்கள் அங்கே குடியிருக்க மாட்டார்கள்.எத்தனை தலைமுறை வந்தாலும் ஒருவரும் அங்கே வாழ மாட்டார்கள்.”+ 40  “சோதோமையும் கொமோராவையும்+ அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களையும்+ நான் அழித்தது போலவே பாபிலோனையும் அழிப்பேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார். 41  இதோ, வடக்கிலிருந்து ஒரு ஜனம் வருகிறது.மாபெரும் தேசமும் பலம்படைத்த ராஜாக்களும்+பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.+ 42  அவர்கள் வில்லினாலும் ஈட்டியினாலும் தாக்குகிறார்கள்.+ அவர்கள் ஈவிரக்கமே இல்லாதவர்கள், கொடூரமானவர்கள்.+ குதிரைகளில் அவர்கள் பாய்ந்து வருகிற சத்தம்,கடல் கொந்தளிக்கிற சத்தத்தைப் போல இருக்கிறது.+ பாபிலோன் மகளே, உனக்கு எதிராக அவர்கள் ஒன்றாக அணிவகுத்து வருகிறார்கள்.+ 43  அவர்கள் வரும் செய்தி பாபிலோன் ராஜாவின் காதுக்கு எட்டிவிட்டது.+அவனுடைய கைகள் வெடவெடக்கின்றன.+ அவன் பயத்தில் நடுங்குகிறான்.பிரசவ வலியில் துடிக்கிற பெண்ணைப் போலத் துடிக்கிறான். 44  “யோர்தானை ஒட்டியுள்ள புதர்க் காடுகளிலிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல ஒருவன் பாய்ந்து வந்து பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களைத் தாக்குவான். ஆனால், நான் அவர்களை ஒரே நொடியில் அவளைவிட்டு ஓட வைப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்டவனின் கையில் அவளைக் கொடுப்பேன்.+ என்னைப் போல யார் இருக்கிறார்கள்? எனக்கே சவால்விட யாரால் முடியும்? எந்த மேய்ப்பனால் என்முன் நிற்க முடியும்?+ 45  அதனால் ஜனங்களே, பாபிலோனுக்கு எதிராக யெகோவா எடுத்திருக்கிற முடிவைப்+ பற்றியும், கல்தேயர்களின் தேசத்துக்கு எதிராக அவர் யோசித்திருக்கிற விஷயத்தைப் பற்றியும் கேளுங்கள்: மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகள் கண்டிப்பாக இழுத்துச் செல்லப்படும். அவற்றின் தொழுவங்களை அவர் வெறுமையாக்குவார்;+ ஏனென்றால், அவர்கள் பாவம் செய்தார்கள். 46  பாபிலோன் கைப்பற்றப்படுகிற சத்தத்தில் பூமி அதிரும்.தேசங்களில் அலறல் சத்தம் கேட்கும்!”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொடிக் கம்பத்தை.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
வே.வா., “பொலிகுதிரைகள்.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
வே.வா., “போலித் தீர்க்கதரிசிகளை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா