ஏசாயா 12:1-6

12  அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், “யெகோவாவே, உங்களுக்கு நன்றி!என்னிடம் நீங்கள் கோபமாக இருந்தாலும்,உங்கள் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. நீங்கள் என்னை ஆறுதல்படுத்தினீர்கள்.+   இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.   மீட்பின் நீரூற்றுகளிலிருந்துநீங்கள் சந்தோஷமாகத் தண்ணீரை மொண்டுகொள்வீர்கள்.+   அந்த நாளில் நீங்கள் இப்படிச் சொல்வீர்கள்: “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+ அவருடைய பெயரே உயர்ந்தது என்று அறிவியுங்கள்.+   மாபெரும் அதிசயங்களைச் செய்த யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.+ அவர் செய்த அற்புதங்களைப் பூமியிலுள்ள எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.   சீயோனில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷமாக முழங்குங்கள்.உங்கள் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள் மகத்தானவர்.”

அடிக்குறிப்புகள்

“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா