ஏசாயா 54:1-17

54  “குழந்தை பெறாதவளே, சந்தோஷமாக ஆரவாரம் செய்!+ பிரசவ வேதனைப்படாதவளே,+ ஆனந்தமாக ஆர்ப்பரி!+ஏனென்றால், கணவனோடு வாழ்கிறவளின் பிள்ளைகளைவிடகணவனால் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் ஏராளமாக இருக்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.   “உன் கூடாரத்தைப் பெரிதாக்கு.+ உன்னுடைய விசாலமான கூடாரத்தின் துணிகளை அகலமாக்கு. அதன் கயிறுகளைத் தாராளமாக நீளமாக்கு.கூடார ஆணிகளை உறுதிப்படுத்து.+   ஏனென்றால், உன்னுடைய எல்லைகள் வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் விரிவாகும். உன்னுடைய பிள்ளைகள் மற்ற தேசங்களைச் சொந்தமாக்குவார்கள்.வெறுமையாய்க் கிடக்கிற நகரங்களில் குடியேறுவார்கள்.+   பயப்படாதே,+ இனி நீ அவமானப்பட மாட்டாய்.+கூனிக்குறுகாதே, இனி நீ ஏமாற்றம் அடைய மாட்டாய். இளமையில் உனக்கு ஏற்பட்ட அவமானத்தையும்,விதவையானதால் ஏற்பட்ட தலைகுனிவையும் இனி நினைத்துப் பார்க்க மாட்டாய்.”   “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+ அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+   கணவனால் ஒதுக்கப்பட்டு வேதனைப்படுகிற மனைவியைப் போலவும்,+இளவயதில் கல்யாணமாகி கைவிடப்பட்டவளைப் போலவும் இருக்கிற உன்னை யெகோவா தேர்ந்தெடுத்தார்” என்று உன் கடவுள் சொல்கிறார்.   “கொஞ்சக் காலத்துக்கு* உன்னை நான் கைவிட்டேன்.ஆனால், மிகுந்த இரக்கத்தோடு உன்னைத் திரும்பவும் சேர்த்துக்கொள்வேன்.+   பயங்கரமான கோபத்தினால் என் முகத்தைக் கொஞ்சக் காலத்துக்கு உன்னிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.+ஆனால், இனி என்றென்றுமே உனக்கு மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுவேன்”+ என்று உன்னை விடுவிக்கிறவரான+ யெகோவா சொல்கிறார்.   “இது நோவாவின் காலத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.+ தண்ணீரால் உலகத்தை அழிக்க மாட்டேன் என்று நான் நோவாவிடம் சத்தியம் செய்து கொடுத்தது+ போலவே,உன்மேல் கோபப்படவோ உன்னைத் தண்டிக்கவோ மாட்டேன் என்று இப்போது சத்தியம் செய்து கொடுக்கிறேன்.+ 10  மலைகள் ஒழிந்துபோகலாம்.குன்றுகள் அழிந்துபோகலாம்.ஆனால், உனக்கு நான் காட்டுகிற மாறாத அன்பு ஒழியாது.+சமாதானத்துக்காக நான் செய்திருக்கிற ஒப்பந்தமும் அழியாது”+ என்று உன்மேல் இரக்கம் காட்டுகிற யெகோவா+ சொல்கிறார். 11  “வேதனையில் வாடியவளே,+ சூறாவளியில் சிக்கியவளே, ஆறுதல் கிடைக்காமல் தவித்தவளே,+உன் கற்களைக் காரை பூசி உறுதியாக்குவேன்.நீலமணிக்கற்களால் உன் அஸ்திவாரத்தை அமைப்பேன்.+ 12  மாணிக்கக் கற்களால் உன் கொத்தளங்களைக் கட்டுவேன்.ஜொலிக்கிற கற்களால் உன் வாசல் கதவுகளை அமைப்பேன்.விலை உயர்ந்த ரத்தினங்களால் உன் எல்லைகளைக் குறிப்பேன். 13  உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+ 14  நீ நீதியில் உறுதியாக நிலைநாட்டப்படுவாய்.+ இனி யாரும் உன்னைக் கொடுமைப்படுத்த மாட்டார்கள்.+நீ எதற்குமே பயப்பட மாட்டாய், எதுவுமே உன்னைப் பயமுறுத்தாது.திகில் உன்னை நெருங்காது.+ 15  உன்னைத் தாக்க இனிமேல் நான் யாரையும் அனுப்ப மாட்டேன்.அப்படி யாராவது தாக்க வந்தால், அவர்களை நீ தோற்கடிப்பாய்.”+ 16  “கரிநெருப்பை ஊதி ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனைப் படைத்தது நான்தான். அந்த ஆயுதத்தால் மற்றவர்களைக் கொன்றுபோடுகிறவனைப் படைத்ததும் நான்தான்.+ 17  அதனால், உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்.+உனக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் நீ முறியடிப்பாய். இது யெகோவாவின் ஊழியர்களுக்குக் கிடைக்கும் பெரிய ஆசீர்வாதம்.*அவர்களுடைய நீதிக்குக் காரணமானவர் நானே” என்று யெகோவா சொல்கிறார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “எஜமான்.”
வே.வா., “கண்ணிமைக்கும் நேரத்துக்கு.”
வே.வா., “ஆஸ்தி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா