ஏசாயா 56:1-12
56 யெகோவா சொல்வது இதுதான்:
“நியாயமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள்.நான் சீக்கிரத்தில் உங்களை மீட்கப்போகிறேன்.நான் நீதியுள்ளவர் என்பதை அப்போது எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.+
2 இதைச் செய்கிறவர்களும்,இதை உறுதியாகக் கடைப்பிடிக்கிறவர்களும்,ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கிறவர்களும், அதன் புனிதத்தைக் கெடுக்காதவர்களும்,+கெட்ட காரியங்கள் செய்யாதவர்களும் சந்தோஷமானவர்கள்.
3 யெகோவாவின் ஜனங்களோடு சேர்ந்துகொள்கிற மற்ற தேசத்தார்,+‘யெகோவா என்னை அவருடைய ஜனங்களிடமிருந்து கண்டிப்பாக ஒதுக்கிவிடுவார்’ என்று சொல்லக் கூடாது.
அண்ணகர்கள்* யாரும், ‘நான் ஒரு பட்டமரம்’ என்று சொல்லக் கூடாது.”
4 யெகோவாவின் கட்டளைப்படி ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமானதைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தின்படி நடக்கிற அண்ணகர்களைப் பற்றி அவர் சொல்வது இதுதான்:
5 “என்னுடைய வீட்டில் அவர்களுக்கு ஒரு இடத்தையும்* ஒரு பெயரையும் கொடுப்பேன்.குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதத்தைவிட பெரிய ஆசீர்வாதமாக அது இருக்கும்.
என்றென்றும் அழியாத ஒரு பெயரைநான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
6 என் ஜனங்களோடு சேர்ந்துகொள்ள வருகிற மற்ற தேசத்து ஜனங்களையும் நான் ஏற்றுக்கொள்வேன்.யெகோவாவுக்குச் சேவை செய்யவும், யெகோவாவின் பெயரை நேசிக்கவும்,+அவருடைய ஊழியர்களாக இருக்கவும் அவர்கள் வருவார்கள்.அவர்கள் என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுக்காமல் அதை அனுசரிப்பார்கள்.என்னுடைய ஒப்பந்தத்தின்படி நடப்பார்கள்.
7 அவர்களையும் என்னுடைய பரிசுத்த மலைக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+என்னுடைய ஜெப வீட்டில் அவர்களைச் சந்தோஷமாக இருக்க வைப்பேன்.
என்னுடைய பலிபீடத்தில் அவர்கள் செலுத்துகிற தகன பலிகளையும் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்வேன்.
ஏனென்றால், என் வீடு எல்லா ஜனங்களுக்குமான ஜெப வீடு என்று அழைக்கப்படும்.”+
8 சிதறிப்போன இஸ்ரவேலர்களைக் கூட்டிச்சேர்க்கிற உன்னதப் பேரரசராகிய யெகோவா+ சொல்வது இதுதான்:
“நான் ஏற்கெனவே கூட்டிச்சேர்த்த ஜனங்களோடு மற்றவர்களையும் கூட்டிச்சேர்ப்பேன்.”+
9 வயல்வெளி மிருகங்களே, காட்டு விலங்குகளே,வந்து சாப்பிடுங்கள்!+
10 காவல்காரர்கள் சரியான குருடர்கள்;+ அவர்கள் எதையுமே கவனிக்கவில்லை.+
அவர்கள் குரைக்க முடியாத ஊமை நாய்கள்.+
மூச்சு இரைத்துக்கொண்டே படுத்துக் கிடக்கிறார்கள்; எப்போதும் தூங்கவே விரும்புகிறார்கள்.
11 அவர்கள் அகோரப் பசியுள்ள நாய்கள்.அவர்கள் திருப்தி அடைவதே இல்லை.
அவர்கள் புத்தி* இல்லாத மேய்ப்பர்கள்.+
அவரவருக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.ஆதாயத்துக்காக அநியாயமாய் நடந்துகொள்கிறார்கள்.
12 அவர்கள் ஒவ்வொருவரும், “வாருங்கள், நாம் திராட்சமது குடிப்போம்.போதை தலைக்கேறும்வரை குடிப்போம்.+
இன்று போலவே நாளைய தினமும் இருக்கும்,
சொல்லப்போனால் இன்னும் நன்றாகவே இருக்கும்!” என்கிறார்கள்.
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “நினைவுச் சின்னத்தையும்.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”