ஓசியா 7:1-16

7  “இஸ்ரவேலை நான் குணப்படுத்த நினைக்கும்போதெல்லாம்எப்பிராயீமின் குற்றமும்,+சமாரியாவின் அக்கிரமமும் அப்பட்டமாகத் தெரிகிறது.+ அந்த ஜனங்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.+வீடுகளில் திருடுகிறார்கள், வீதிகளில் கொள்ளையடிக்கிறார்கள்.+   இதையெல்லாம் நான் மறக்க மாட்டேன் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.+ அவர்களுடைய அக்கிரமங்களே அவர்களை வளைத்துக்கொண்டன.அவையெல்லாம் என்முன் வெட்டவெளிச்சமாக இருக்கின்றன.   அவர்கள் அட்டூழியங்கள் செய்து அரசனைச் சந்தோஷப்படுத்துகிறார்கள்.மோசடிகள் செய்து அதிகாரிகளை மயக்குகிறார்கள்.   அவர்கள் எல்லாரும் ரொட்டி சுடுகிறவனின் அடுப்பைப் போல் இருக்கிறார்கள்.பிசைந்த மாவு புளிக்கும்வரை அடுப்பின் நெருப்பை அவன் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கத் தேவை இல்லை; ஏனென்றால், அதன் நெருப்பு பற்றியெரிந்துகொண்டிருக்கும்.அதேபோல் அவர்களும் கெட்ட ஆசையில் பற்றியெரிந்து கடவுளுக்குத் துரோகம் செய்கிறார்கள்.   நம் ராஜாவின் விழாவில் அமைச்சர்கள் குடித்து வாந்தியெடுத்தார்கள்.குடிவெறியில்+ ஆத்திரமடைந்தார்கள். ராஜாவும் கிண்டல் செய்கிறவர்களோடு சேர்ந்துகொண்டான்.   அவர்களுடைய இதயம் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பைப் போல் இருக்கிறது.* ரொட்டி சுடுகிறவன் ராத்திரியெல்லாம் தூங்குகிறான்.காலையில் அவனுடைய அடுப்பு கொழுந்துவிட்டு எரிகிறது.   எல்லாருமே அடுப்பைப் போல அனல் கக்குகிறார்கள்.தங்களுடைய அதிகாரிகளை* பொசுக்குகிறார்கள். அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் வீழ்ச்சியடைந்தார்கள்.+அவர்களில் யாருமே உதவிக்காக என்னைக் கூப்பிடுவதில்லை.+   எப்பிராயீம் மற்ற தேசத்தாரோடு ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்துவிட்டான்.+ திருப்பிப் போடாத* ரொட்டியைப் போல அவன் இருக்கிறான்.   முன்பின் தெரியாதவர்கள் அவனுடைய அதிகாரத்தை அடக்கிவிட்டார்கள்.+ ஆனால், அவனுக்கு அது தெரியவில்லை. அவனுடைய முடியெல்லாம் நரைத்துவிட்டது. ஆனால், அவன் அதைக் கவனிக்கவில்லை. 10  இஸ்ரவேலின் கர்வம் அவன் முகத்திரையைக் கிழித்தது.+ஆனாலும், தன் கடவுளான யெகோவாவிடம் அவன் திரும்பவில்லை.+அவரிடம் உதவி கேட்கவும் இல்லை. 11  சுலபமாக ஏமாந்துவிடும் புறாவைப் போல எப்பிராயீம் ஜனங்கள் புத்தியில்லாமல் இருக்கிறார்கள்.+ அவர்கள் உதவிக்காக எகிப்தைக் கூப்பிடுகிறார்கள்,+ அசீரியாவிடம் ஓடுகிறார்கள்.+ 12  எங்கே போனாலும் அவர்கள்மேல் என் வலையை விரிப்பேன். வானத்துப் பறவைகளைப் போல அவர்களைக் கீழே விழ வைப்பேன். எச்சரித்தபடியே அவர்களைத் தண்டிப்பேன்.+ 13  என்னைவிட்டு விலகிப்போனதால், அவர்களுக்குக் கேடுதான் வரும்! என் வார்த்தையை மீறிவிட்டதால் அவர்களுக்கு அழிவுதான்! அவர்களை விடுவிக்கத் தயாராக இருந்தேன், ஆனால் என்னைப் பற்றிப் பொய் பேசித் திரிந்தார்கள்.+ 14  படுக்கையில் கிடந்து ஓலமிட்டார்கள்.ஆனாலும், உதவிக்காக என்னிடம் இதயப்பூர்வமாகக் கெஞ்சவில்லை.+ தானியத்துக்காகவும் தித்திப்பான திராட்சமதுவுக்காகவும் தங்கள் உடலை அடித்து அடித்துக் கிழித்துக்கொண்டார்கள்.என்னைவிட்டு விலகிப்போனார்கள். 15  அவர்களுக்குப் புத்திசொன்னேன்,* அவர்களுடைய கைகளைப் பலப்படுத்தினேன்.ஆனாலும், எனக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். 16  அவர்கள் தங்கள் வழியை மாற்றிக்கொண்டார்கள், ஆனாலும் உயர்ந்த இடத்துக்கு* வரவில்லை.உறுதியற்ற வில்லைப் போல் அவர்கள் நம்ப முடியாதவர்களாக இருந்தார்கள்.+ எதிர்த்துப் பேசுகிற அவர்களுடைய அதிகாரிகள் வாளுக்குப் பலியாவார்கள். எகிப்து தேசத்தில் அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள்.”+

அடிக்குறிப்புகள்

அல்லது, “சதித்திட்டங்கள் தீட்டும்போது அவர்களுடைய இதயம் அடுப்பைப் போல இருக்கிறது.”
வே.வா., “நீதிபதிகளை.”
வே.வா., “அரைவேக்காடான.”
வே.வா., “அவர்களைக் கண்டித்துத் திருத்தினேன்.”
அதாவது, ”எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் வணக்கத்துக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா