சங்கீதம் 112:1-10
112 “யா”வைப் புகழுங்கள்!*+
א [ஆலெஃப்]
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+
ג [கீமெல்]
2 அவனுடைய வாரிசுகள் இந்த உலகத்தில் பலம்படைத்தவர்களாக இருப்பார்கள்.ד [டாலத்]நேர்மையானவனின் வம்சம்* ஆசீர்வதிக்கப்படும்.+
ה [ஹே]
3 அவனுடைய வீட்டில் பணமும் பொருளும் குவிந்திருக்கும்.ו [வா]அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
ז [ஸாயின்]
4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+
ח [ஹேத்]
கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான்.
ט [டேத்]
5 தாராளமாக* கடன் கொடுக்கிறவனுக்கு எந்தக் குறையும் வராது.+
י [யோத்]
அவன் எல்லாவற்றையுமே நியாயமாகச் செய்கிறான்.
כ [காஃப்]
6 அவன் அசைக்கப்படவே மாட்டான்.+
ל [லாமெத்]
நீதிமான் என்றென்றும் நினைவில் வைக்கப்படுவான்.+
מ [மேம்]
7 கெட்ட செய்தியைக் கேட்டு அவன் பயப்பட மாட்டான்.+
נ [நூன்]
அவனுடைய உள்ளம் உறுதியாக இருக்கிறது, யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறது.+
ס [சாமெக்]
8 அவனுடைய நெஞ்சம் நிலைதடுமாறாது;* அவன் எதற்கும் பயப்பட மாட்டான்.+ע [ஆயின்]கடைசியில், எதிரிகளை வெற்றிப் பெருமிதத்தோடு பார்ப்பான்.+
פ [பே]
9 அவன் வாரி வழங்கியிருக்கிறான், ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்.+
צ [சாதே]
அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+
ק [கோஃப்]
அவனுடைய பலத்தின் மகிமை கூடிக்கொண்டே போகும்.
ר [ரேஷ்]
10 பொல்லாதவன் அதைப் பார்த்து எரிச்சலடைவான்.
ש [ஷீன்]
பற்களை நறநறவென்று கடித்து, கடைசியில் மறைந்துபோவான்.
ת [ட்டா]
பொல்லாதவர்களுடைய ஆசைகள் அழிந்துபோகும்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ வே.வா., “நேர்மையானவர்களின் தலைமுறை.”
^ வே.வா., “கனிவாகவும்.”
^ வே.வா., “கனிவாக.”
^ வே.வா., “திடமாக இருக்கும்; உறுதியாக இருக்கும்.”