சங்கீதம் 121:1-8

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 121  நான் என் கண்களை உயர்த்தி மலைகளைப் பார்க்கிறேன்.+ எனக்கு எங்கிருந்து உதவி வரும்?   யெகோவாவிடமிருந்தே எனக்கு உதவி வரும்.+அவர்தான் வானத்தையும் பூமியையும் படைத்தவர்.   உன் கால்கள் சறுக்குவதற்கு அவர் ஒருபோதும் விடமாட்டார்.+ உன்னைக் காக்கிறவர் ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்.   இஸ்ரவேலைக் காக்கிற கடவுள்ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்,அவர் தூங்கிவிடவும் மாட்டார்.+   யெகோவா உன்னைக் காக்கிறார். யெகோவா உன் வலது பக்கத்தில்+ உனக்கு நிழலாக இருக்கிறார்.+   பகலில் சூரியனோ,ராத்திரியில் சந்திரனோ உன்னைத் தாக்காது.+   எல்லா ஆபத்திலிருந்தும் யெகோவா உன்னைக் காப்பார்.+ உன் உயிரைக் காப்பார்.+   உன் வழிகளிலெல்லாம்* யெகோவா உன்னைக் காப்பார்.இன்றும் என்றும் காப்பார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நீ போகும்போதும் வரும்போதும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா