சங்கீதம் 24:1-10
தாவீதின் சங்கீதம்.
24 பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+நிலப்பரப்பும் அதில் குடியிருக்கிற எல்லாரும் அவருக்குத்தான் சொந்தம்.
2 ஏனென்றால், அவர்தான் கடல்களுக்கு மேலாகவும்,+ஆறுகளுக்கு மேலாகவும் அதை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.
3 யெகோவாவின் மலைக்கு யார் ஏறிப்போக முடியும்?+அவருடைய பரிசுத்த இடத்தில் யார் நிற்க முடியும்?
4 கறைபடியாத கைகளோடும் சுத்தமான இதயத்தோடும் இருந்து,+என்மேல்* பொய் சத்தியம் செய்யாமலும்,போலியாக உறுதிமொழி எடுக்காமலும் இருக்கிறவன்தான்.+
5 அவனுக்கு யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.+அவனை மீட்கிற கடவுளிடமிருந்து+ நீதி கிடைக்கும்.*
6 கடவுளைத் தேடுகிற தலைமுறை இதுதான்.யாக்கோபின் கடவுளே, உங்களுடைய கருணையை* நாடுகிற தலைமுறை இதுதான். (சேலா)
7 கதவுகளே, உங்களை உயர்த்துங்கள்.+பழங்கால நுழைவாசல்களே, திறந்துகொள்ளுங்கள்.*மகிமையுள்ள ராஜா உள்ளே வரட்டும்!+
8 மகிமையுள்ள இந்த ராஜா யார்?
அவர்தான் பலமும் வலிமையும் உள்ள யெகோவா.+அவர்தான் போர் செய்வதில் வல்லவரான யெகோவா.+
9 கதவுகளே, உங்களை உயர்த்துங்கள்.+பழங்கால நுழைவாசல்களே, திறந்துகொள்ளுங்கள்.மகிமையுள்ள ராஜா உள்ளே வரட்டும்!
10 மகிமையுள்ள இந்த ராஜா யார்?
மகிமையுள்ள இந்த ராஜா, பரலோகப் படைகளின் யெகோவாதான்.+ (சேலா)
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “என்னுடைய உயிர்மேல்.”
^ வே.வா., “அவனுக்கு மீட்பு தருகிற கடவுள் அவனை நீதியுள்ளவனாகக் கருதுவார்.”
^ வே.வா., “உங்களுடைய முகத்தை; சன்னிதியை.”
^ வே.வா., “உயருங்கள்.”