சங்கீதம் 43:1-5

43  கடவுளே, எனக்குத் தீர்ப்பு கொடுங்கள்.+நம்பிக்கைத் துரோகம் செய்கிற தேசத்தோடு எனக்காக வழக்காடுங்கள்.+ மோசடியும் அநியாயமும் செய்கிறவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.   ஏனென்றால், நீங்கள்தான் என் கடவுள், என் கோட்டை.+ நீங்கள் ஏன் என்னை ஒதுக்கிவிட்டீர்கள்? எதிரியின் கொடுமை தாங்காமல் நான் ஏன் சோகத்தோடு நடமாட வேண்டும்?+   உங்களுடைய ஒளியையும் சத்தியத்தையும் அனுப்புங்கள்.+ அவை எனக்கு வழி காட்டட்டும்.+உங்களுடைய பரிசுத்த மலைக்கும் மகத்தான கூடாரத்துக்கும்+ என்னை வழிநடத்தட்டும்.   அப்போது நான் கடவுளுடைய பலிபீடத்துக்கு வருவேன்.+எனக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தருகிற என் கடவுளிடம் வருவேன். கடவுளே, என் கடவுளே, யாழ் இசைத்து நான் உங்களைப் புகழ்வேன்.+   நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்? எனக்குள் ஏன் இந்தக் கலக்கம்? என் நெஞ்சமே, கடவுளுக்காகக் காத்திரு.+ஏனென்றால், என்னுடைய மகத்தான மீட்பரை நான் தொடர்ந்து புகழ்வேன்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா