சங்கீதம் 54:1-7

இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டியது. மஸ்கீல்.* சீப் நகரத்தார் சவுலிடம், “எங்கள் ஊரில்தான் தாவீது ஒளிந்திருக்கிறான்” என்று சொன்னபோது+ தாவீது பாடிய பாடல். 54  கடவுளே, உங்களுடைய பெயரால் என்னைக் காப்பாற்றுங்கள்.+உங்களுடைய வல்லமையால்* எனக்காக வழக்காடுங்கள்.+   கடவுளே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.+என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்.   முன்பின் தெரியாதவர்கள் எனக்கு எதிராகக் கிளம்புகிறார்கள்.ஈவிரக்கம் இல்லாதவர்கள் என் உயிரை எடுக்கப் பார்க்கிறார்கள்.+ கடவுளை அவர்கள் கொஞ்சம்கூட மதிப்பதே இல்லை.*+ (சேலா)   இதோ! கடவுள் எனக்குத் துணையாக இருக்கிறார்.+என்னை ஆதரிக்கிறவர்களோடு யெகோவா இருக்கிறார்.   என் எதிரிகள் செய்யும் அக்கிரமத்தை அவர்கள் தலையிலேயே விழ வைப்பார்.+கடவுளே, நீங்கள் உண்மையுள்ளவராக இருப்பதால் அவர்களுக்கு முடிவுகட்டுங்கள்.+   நான் உங்களுக்கு மனப்பூர்வமாகப் பலி செலுத்துவேன்.+ யெகோவாவே, நான் உங்கள் பெயரைப் புகழ்வேன்; ஏனென்றால், அது நல்லது.*+   எல்லா இக்கட்டுகளிலிருந்தும் அவர் என்னைக் காப்பாற்றுகிறார்.+அதனால், என் எதிரிகளை வெற்றிப் பெருமிதத்தோடு நான் பார்ப்பேன்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அதிகாரத்தால்.”
வே.வா., “கடவுளைத் தங்கள் கண்முன் வைப்பதே இல்லை.”
வே.வா., “அருமையானது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா