சங்கீதம் 59:1-17

இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற இசையில்; மிக்தாம்.* தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவரைக் கொல்வதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது+ தாவீது பாடிய பாடல். 59  கடவுளே, எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+   அக்கிரமம் செய்கிற ஆட்களிடமிருந்தும்,வன்முறையில் இறங்குகிற ஆட்களிடமிருந்தும்* என்னைக் காப்பாற்றுங்கள்.   இதோ! என்னைத் தாக்குவதற்காக அவர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.+யெகோவாவே, நான் எந்தக் கலகமோ பாவமோ செய்யவில்லை.+ஆனாலும், பலசாலிகள் என்னைத் தாக்குகிறார்கள்.   நான் எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும், என்னைத் தாக்குவதற்காக ஓடி வருகிறார்கள். என் குரலைக் கேட்டு எழுந்திடுங்கள், என்னைப் பாருங்கள்.   பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள்.+ எல்லா தேசங்களையும் நியாயந்தீர்ப்பதற்காக எழுந்து வாருங்கள். கெட்ட எண்ணத்தோடு துரோகம் செய்கிற யாருக்கும் இரக்கம் காட்டாதீர்கள்.+ (சேலா)   ஒவ்வொரு சாயங்கால வேளையிலும் அவர்கள் வருகிறார்கள்.+நாய்கள்போல் ஊளையிட்டுக்கொண்டு,*+ ஊரைச் சுற்றித் திரிகிறார்கள்.+   அவர்களுடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் எப்படிக் கொட்டுகிறதென்று பாருங்கள்.அவர்களுடைய உதடுகள் வாள்களைப் போல இருக்கின்றன.+“இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்?” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+   ஆனால் யெகோவாவே, நீங்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்கள்.+எல்லா தேசங்களையும் பார்த்து ஏளனம் செய்வீர்கள்.+   என் பலமாக இருக்கிறவரே, நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.+கடவுளே, நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பான* அடைக்கலம்.+ 10  எனக்கு மாறாத அன்பைக் காட்டுகிற கடவுள் என் உதவிக்கு வருவார்.+எதிரிகளை நான் வெற்றிப் பெருமிதத்தோடு பார்க்கும்படி செய்வார்.+ 11  அவர்களைக் கொன்றுவிடாதீர்கள்; அப்படிச் செய்தால், என் ஜனங்கள் அதை மறந்துவிடுவார்களே. அதனால், உங்களுடைய பலத்தைப் பயன்படுத்தி அவர்களை அலைய விடுங்கள்.யெகோவாவே, எங்கள் கேடயமே,+ அவர்களைத் தோற்கடியுங்கள். 12  அவர்கள் தங்களுடைய வாயினாலும் தங்களுடைய உதடுகளின் வார்த்தைகளினாலும் பாவம் செய்கிறார்கள்.அவர்கள் சபித்துப் பேசுகிறார்கள், பொய் பேசுகிறார்கள்.அதனால், அவர்களுடைய பெருமையே அவர்களைச் சிக்க வைக்கட்டும்.+ 13  உங்களுடைய கோபத்தால் அவர்களை ஒழித்துக்கட்டுங்கள்.+அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுங்கள்.கடவுள்தான் யாக்கோபையும் பூமி முழுவதையும் ஆளுகிறார் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.+ (சேலா) 14  சாயங்கால வேளையில் அவர்கள் வரட்டும்.நாய்கள்போல் ஊளையிட்டுக்கொண்டு,* ஊரைச் சுற்றித் திரியட்டும்.+ 15  உணவுக்காக அலையட்டும்.+திருப்தி அடையாமலும், தங்குவதற்கு இடம் இல்லாமலும் தவிக்கட்டும். 16  ஆனால், நான் உங்களுடைய பலத்தைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்.+காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிச் சந்தோஷமாகப் பேசுவேன். ஏனென்றால், நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பான அடைக்கலம்,+இக்கட்டான காலத்தில் நான் ஓடி வருவதற்கான கோட்டை.+ 17  என் பலமாக இருக்கிறவரே, நான் உங்களையே புகழ்ந்து பாடுவேன்.*+ஏனென்றால், எனக்கு மாறாத அன்பைக் காட்டுகிற கடவுளான நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பான அடைக்கலம்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “இரத்தவெறி பிடித்தவர்களிடமிருந்தும்.”
வே.வா., “குரைத்துக்கொண்டு.”
வே.வா., “உயர்ந்த.”
வே.வா., “குரைத்துக்கொண்டு.”
வே.வா., “இசை இசைப்பேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா