சங்கீதம் 67:1-7

இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டிய சங்கீதம். ஒரு பாடல். 67  கடவுள் கருணை காட்டி, நம்மை ஆசீர்வதிப்பார்.அவர் தன்னுடைய முகத்தை நம்மேல் பிரகாசிக்க வைப்பார்.+ (சேலா)   அப்போது, உங்களுடைய வழியைப் பற்றிப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+நீங்கள் தரும் மீட்பைப் பற்றி எல்லா தேசத்து மக்களும் தெரிந்துகொள்வார்கள்.+   கடவுளே, மக்கள் உங்களைப் புகழட்டும்.எல்லா மக்களும் உங்களைப் புகழட்டும்.   தேசங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்யட்டும்.+ஏனென்றால், நீங்கள் மக்களுக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுப்பீர்கள்.+ எல்லா தேசத்து ஜனங்களுக்கும் வழிகாட்டுவீர்கள். (சேலா)   கடவுளே, மக்கள் உங்களைப் புகழட்டும்.எல்லா மக்களும் உங்களைப் புகழட்டும்.   பூமி விளைச்சல் தரும்.+கடவுளாகிய நம் கடவுளே நம்மை ஆசீர்வதிப்பார்.+   கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்.பூமியெங்கும் உள்ளவர்கள் அவருக்குப் பயப்படுவார்கள்.*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவருக்கு மதிப்புக் கொடுப்பார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா