சங்கீதம் 76:1-12

இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டியது. ஆசாப்பின்+ சங்கீதம். ஒரு பாடல். 76  யூதாவில் உள்ளவர்கள் கடவுளை அறிந்திருக்கிறார்கள்.+இஸ்ரவேலில் அவருடைய பெயர் பிரபலமாக இருக்கிறது.+   அவருடைய கூடாரம் சாலேமில்+ இருக்கிறது.அவருடைய குடியிருப்பு சீயோனில் இருக்கிறது.+   தீ பறக்கும் அம்புகளை அவர் அங்கே முறித்துப் போட்டார்.கேடயத்தையும் வாளையும் போர்க் கருவிகளையும் உடைத்துப் போட்டார்.+ (சேலா)   கடவுளே, நீங்கள் பிரகாசமாக ஒளிவீசுகிறீர்கள்.*காட்டு மிருகங்கள் வாழ்கிற மலைகளைவிட கம்பீரமாக இருக்கிறீர்கள்.   நெஞ்சத்தில் துணிச்சல் உள்ளவர்கள் சூறையாடப்பட்டார்கள்.+ அவர்கள் செத்துப்போனார்கள்.*போர்வீரர்களில் ஒருவனால்கூட எதுவும் செய்ய முடியவில்லை.+   யாக்கோபின் கடவுளே, நீங்கள் அதட்டியபோது,ரத வீரன் செத்துப்போனான்,* குதிரையும் செத்துப்போனது.+   நீங்கள் மட்டுமே பயபக்திக்குரியவர்.*+ உங்களுடைய கடும் கோபத்தை யாரால் தாக்குப்பிடிக்க முடியும்?+   பரலோகத்திலிருந்து உங்கள் தீர்ப்பை அறிவித்தீர்கள்.+அப்போது, பூமி பயந்து அடங்கியது.+   ஏனென்றால், தன்னுடைய தீர்ப்பை நிறைவேற்ற கடவுள் எழுந்து வந்தார்.பூமியிலிருக்கிற தாழ்மையான* எல்லாரையும் காப்பாற்ற அவர் எழுந்து வந்தார்.+ (சேலா) 10  மனிதர்களுடைய கடும் கோபம் உங்களுக்குப் புகழ் உண்டாக்கும்படி நீங்கள் செய்வீர்கள்.+அவர்களிடம் எஞ்சியிருக்கிற கொஞ்சநஞ்ச கோபமும்கூட உங்களுக்கு மகிமை உண்டாக்கும்படி* செய்வீர்கள். 11  உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் நேர்ந்துகொண்டு, அதை நிறைவேற்றுங்கள்.+அவரைச் சுற்றியிருக்கிற எல்லாரும் பயபக்தியோடு தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்.+ 12  தலைவர்களுடைய கர்வத்தை அவர் அடக்குவார்.பூமியிலுள்ள ராஜாக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்துவார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒளி உங்களைப் போர்த்தியிருக்கிறது.”
நே.மொ., “ஆழ்ந்து தூங்கிவிட்டார்கள்.”
நே.மொ., “ஆழ்ந்து தூங்கிவிட்டான்.”
வே.வா., “பிரமிக்க வைக்கிறவர்.”
வே.வா., “சாந்தமான.”
வே.வா., “அலங்காரமாக ஆகும்படி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா