சங்கீதம் 91:1-16

91  உன்னதமான கடவுளுடைய மறைவிடத்தில்* இருக்கிறவன்,+சர்வவல்லமையுள்ளவரின் நிழலில் தங்குவான்.+   நான் யெகோவாவிடம், “நீங்கள் என் அடைக்கலம், என் கோட்டை,+நான் நம்பியிருக்கிற கடவுள்”+ என்று சொல்வேன்.   அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும்,கொடிய கொள்ளைநோயிலிருந்தும் பாதுகாப்பார்.   அவர் தன்னுடைய சிறகுகளால் உன்னை மூடுவார்.அவருடைய இறக்கைகளின் கீழ் நீ அடைக்கலம் புகுவாய்.+ அவருடைய உண்மைத்தன்மை+ உனக்கு ஒரு பெரிய கேடயமாகவும்,+ பாதுகாப்பான மதிலாகவும்* இருக்கும்.   ராத்திரியில் வருகிற ஆபத்துகளுக்கும்,+பகலில் பறக்கிற அம்புக்கும்,+   இருட்டில் பரவுகிற கொள்ளைநோய்க்கும்,மத்தியானத்தில் பாழாக்குகிற பேரழிவுக்கும் நீ பயப்பட மாட்டாய்.   உன் பக்கத்தில் ஆயிரம் பேரும்,உன் வலது பக்கத்தில் பத்தாயிரம் பேரும் விழுவார்கள்.ஆனால், உனக்கு ஒன்றுமே ஆகாது.+   பொல்லாதவர்களுக்குக் கிடைக்கப்போகிற தண்டனையை நீ வெறுமனே பார்ப்பாய்.அதை உன் கண்களால் வெறுமனே பார்ப்பாய்.   ஏனென்றால், “யெகோவா என் அடைக்கலம்” என்று நீ சொன்னாய். உன்னதமான கடவுளை உன் குடியிருப்பாக* ஆக்கிக்கொண்டாய்.+ 10  உனக்கு எந்த விபரீதமும் நடக்காது.+உன் கூடாரத்தை எந்த ஆபத்தும் நெருங்காது. 11  உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,+அவர் தன்னுடைய தூதர்களுக்குக்+ கட்டளை கொடுப்பார். 12  உன் பாதம் கல்லில் மோதாதபடி,+அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்.+ 13  இளம் சிங்கத்தையும் நாகப்பாம்பையும் நீ மிதிப்பாய்.வளர்ந்த சிங்கத்தையும் பெரிய பாம்பையும் உன் காலடியில் நசுக்குவாய்.+ 14  கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.+ அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.+ 15  அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.+ இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.+ அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன். 16  நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.+என்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ரகசிய இடத்தில்.”
வே.வா., “அரணாகவும்.”
அல்லது, “கோட்டையாக; தஞ்சமாக.”
வே.வா., “மீட்பின் செயல்களை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா