சங்கீதம் 95:1-11
95 வாருங்கள், யெகோவாவுக்கு முன்பாகச் சந்தோஷ ஆரவாரம் செய்வோம்!
நம்மை மீட்கும் கற்பாறைக்கு முன்பாக வெற்றி முழக்கம் செய்வோம்!+
2 அவருடைய சன்னிதிக்கு வந்து நன்றி சொல்வோம்!+அவர்முன் பாடல் பாடி, வெற்றி முழக்கம் செய்வோம்!
3 ஏனென்றால், யெகோவாதான் மகத்தான கடவுள்.அவர்தான் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் மேலான மகா ராஜா.+
4 பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கின்றன.மலைகளின் சிகரங்களும் அவருடைய கையில்தான் இருக்கின்றன.+
5 அவர் உண்டாக்கிய கடலும் அவருக்குத்தான் சொந்தம்.+நிலத்தையும் அவருடைய கைகள்தான் உண்டாக்கின.+
6 வாருங்கள், அவரை வணங்குவோம்; அவர்முன் தலைவணங்குவோம்.நம்மைப் படைத்த யெகோவாவுக்குமுன் மண்டிபோடுவோம்.+
7 ஏனென்றால், அவர்தான் நம் கடவுள்.நாம் அவருடைய ஜனங்களாகவும்,அவர் அக்கறையோடு மேய்க்கிற ஆடுகளாகவும் இருக்கிறோம்.+
இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+
8 உங்களுடைய முன்னோர்கள் மேரிபாவில்* செய்தது போலவும்,வனாந்தரத்திலுள்ள மாசாவில்* செய்தது போலவும்,+உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்.+
9 அங்கே அவர்கள் என்னைச் சோதித்தார்கள்.+நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னிடமே சவால்விட்டார்கள்.+
10 நாற்பது வருஷங்களாக அந்தத் தலைமுறை செய்ததெல்லாம் எனக்கு வெறுப்பாக இருந்தது.
“அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது” என்றும்,“அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றும் சொன்னேன்.
11 “அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்”+ என்று
கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.