சங்கீதம் 95:1-11

95  வாருங்கள், யெகோவாவுக்கு முன்பாகச் சந்தோஷ ஆரவாரம் செய்வோம்! நம்மை மீட்கும் கற்பாறைக்கு முன்பாக வெற்றி முழக்கம் செய்வோம்!+   அவருடைய சன்னிதிக்கு வந்து நன்றி சொல்வோம்!+அவர்முன் பாடல் பாடி, வெற்றி முழக்கம் செய்வோம்!   ஏனென்றால், யெகோவாதான் மகத்தான கடவுள்.அவர்தான் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் மேலான மகா ராஜா.+   பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கின்றன.மலைகளின் சிகரங்களும் அவருடைய கையில்தான் இருக்கின்றன.+   அவர் உண்டாக்கிய கடலும் அவருக்குத்தான் சொந்தம்.+நிலத்தையும் அவருடைய கைகள்தான் உண்டாக்கின.+   வாருங்கள், அவரை வணங்குவோம்; அவர்முன் தலைவணங்குவோம்.நம்மைப் படைத்த யெகோவாவுக்குமுன் மண்டிபோடுவோம்.+   ஏனென்றால், அவர்தான் நம் கடவுள்.நாம் அவருடைய ஜனங்களாகவும்,அவர் அக்கறையோடு மேய்க்கிற ஆடுகளாகவும் இருக்கிறோம்.+ இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+   உங்களுடைய முன்னோர்கள் மேரிபாவில்* செய்தது போலவும்,வனாந்தரத்திலுள்ள மாசாவில்* செய்தது போலவும்,+உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்.+   அங்கே அவர்கள் என்னைச் சோதித்தார்கள்.+நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னிடமே சவால்விட்டார்கள்.+ 10  நாற்பது வருஷங்களாக அந்தத் தலைமுறை செய்ததெல்லாம் எனக்கு வெறுப்பாக இருந்தது. “அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது” என்றும்,“அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றும் சொன்னேன். 11  “அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்”+ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “தகராறு செய்தல்.”
அர்த்தம், “பரீட்சை பார்த்தல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா