புலம்பல் 2:1-22

א [ஆலெஃப்] 2  ஐயோ! யெகோவாவின் கோபம் சீயோன் மகளை மேகம்போல் மூடிவிட்டதே! இஸ்ரவேலின் மகிமையை அவர் வானத்திலிருந்து மண்ணுக்குத் தள்ளிவிட்டார்.+ தன்னுடைய கோபத்தின் நாளில் தன்னுடைய கால்மணையை+ அவர் நினைத்துப் பார்க்கவில்லை. ב [பேத்]   யாக்கோபு குடியிருந்த இடங்களையெல்லாம் யெகோவா கரிசனை இல்லாமல் அழித்துவிட்டார். யூதா மகளின் கோட்டைகளைக் கோபத்தோடு இடித்துப்போட்டார்.+ அவளைத் தரைமட்டமாக்கி, அவளுடைய தேசத்துக்கும் தலைவர்களுக்கும்+ அவமானத்தை வர வைத்துவிட்டார்.+ ג [கீமெல்]   கோபத் தீயினால் இஸ்ரவேலின் அதிகாரத்தையெல்லாம் அழித்துவிட்டார். எதிரி வந்தபோது இஸ்ரவேலுக்குக் கைகொடுத்து உதவாமல் போய்விட்டார்.+அவருடைய கோபம் யாக்கோபின் மேல் நெருப்பாய்ப் பற்றியெரிந்தது. அவனைச் சுற்றியிருந்த எல்லாவற்றையும் அது சுட்டெரித்தது.+ ד [டாலத்]   எதிரியைப் போலத் தாக்குவதற்காக அவர் வில்லை வளைத்து, வலது கையைத் தயாராக வைத்தார்.+கண்களுக்கு அருமையான எல்லாரையும் கொன்றுபோட்டார்.+ சீயோன் மகளுடைய கூடாரத்துக்குள்+ கோபத்தைத் தீ போலக் கொட்டினார்.+ ה [ஹே]   யெகோவா எதிரியைப் போல ஆகிவிட்டார்.+இஸ்ரவேலை அழித்துவிட்டார். அவளுடைய எல்லா கோபுரங்களையும் தரைமட்டமாக்கிவிட்டார்.அவளுடைய எல்லா கோட்டைகளையும் நாசமாக்கிவிட்டார். யூதாவைப் பயங்கரமாக அழுது புலம்ப வைத்துவிட்டார். ו [வா]   தோட்டத்தில் இருக்கிற பந்தலைப் போலத் தன்னுடைய கூடாரத்தைப் பிரித்தெறிந்தார்.+ தன்னுடைய பண்டிகைக்கு முடிவுகட்டினார்.+ பண்டிகையையும் ஓய்வுநாளையும் சீயோன் மறந்துபோகும்படி யெகோவா செய்துவிட்டார்.பயங்கர கோபத்தினால் ராஜாக்களையும் குருமார்களையும் வெறுத்து ஒதுக்கிவிட்டார்.+ ז [ஸாயின்]   யெகோவா தன்னுடைய பலிபீடத்தை ஒதுக்கித்தள்ளினார்.தன்னுடைய ஆலயத்தை நிராகரித்தார்.+ சீயோனின் கோட்டைச் சுவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.+ பண்டிகை நாளின் ஆரவாரத்தைப் போல யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடைய ஆரவாரம் கேட்கிறது.+ ח [ஹேத்]   சீயோன் மகளுடைய மதிலை இடித்துப்போட+ யெகோவா தீர்மானம் செய்துவிட்டார். அளவுநூலை எடுத்து அளந்துவிட்டார்.+ அழிவைக் கொண்டுவர அவர் தயங்கவில்லை. அரணையும் மதிலையும் அழுது புலம்ப வைத்தார். அவற்றின் பலமெல்லாம் போய்விட்டது. ט [டேத்]   அவளுடைய வாசல் கதவுகள் மண்ணில் புதைந்துவிட்டன.+ அவளுடைய தாழ்ப்பாள்களை அவர் உடைத்தெறிந்தார். அவளுடைய ராஜாக்களும் அதிகாரிகளும் வேறு தேசத்து ஜனங்களோடு இருக்கிறார்கள்.+ சட்டத்தை* யாரும் கடைப்பிடிப்பது இல்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக்கூட யெகோவாவிடமிருந்து எந்தத் தரிசனமும் கிடைப்பதில்லை.+ י [யோத்] 10  சீயோன் மகளின் பெரியோர்கள்* ஒன்றும் பேசாமல் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.+ தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார்கள்; துக்கத் துணியை* உடுத்தியிருக்கிறார்கள்.+ எருசலேமின் கன்னிப்பெண்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள். כ [காஃப்] 11  அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+ என் குடல் துடிக்கிறது. என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+ பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+ ל [லாமெத்] 12  படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள். “சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டேதங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள். מ [மேம்] 13  எருசலேம் மகளே, நான் உனக்கு எதை ஆதாரமாகக் காட்டுவேன்?உன்னை எதனோடு ஒப்பிடுவேன்? கன்னிப்பெண்ணாகிய சீயோனே, நான் உன்னை எதனோடு ஒப்பிட்டு ஆறுதல் சொல்வேன்? உன்னுடைய காயம் கடலைப் போலப் பெரிதாக இருக்கிறதே.+ யாரால் உன்னைக் குணமாக்க முடியும்?+ נ [நூன்] 14  உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+ ס [சாமெக்] 15  வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+ எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி, “இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம், உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள். פ [பே]* 16  உன்னைப் பார்த்து எதிரிகள் கிண்டல் செய்து விசில் அடிக்கிறார்கள். பற்களைக் கடித்துக்கொண்டு, “நாம் அவளை விழுங்கிவிட்டோம்.+ இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம்.+ அது வந்துவிட்டது! நம் கண்ணாலேயே பார்த்துவிட்டோம்!”+ என்று சொல்கிறார்கள். ע [ஆயின்] 17  யெகோவா தான் நினைத்ததைச் செய்துவிட்டார்.+ரொம்பக் காலத்துக்கு முன்னால் சொன்னதை+ நிறைவேற்றிவிட்டார்.+ கரிசனை காட்டாமல் அழித்துவிட்டார்.+ உன்னைப் பார்த்து எதிரி சந்தோஷப்படும்படி செய்துவிட்டார். உன் விரோதிகளுக்கு அதிக பலம் தந்துவிட்டார். צ [சாதே] 18  சீயோன் மகளின் மதிலே, ஜனங்கள் யெகோவாவிடம் கதறுகிறார்கள். ராத்திரி பகலாகக் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடட்டும். நீ ஓய்வெடுக்காதே; உன் கண்களுக்கு ஓய்வே கொடுக்காதே. ק [கோஃப்] 19  எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு! யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு. பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காகஅவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு. ר [ரேஷ்] 20  யெகோவாவே, உங்களிடம் கடுமையான தண்டனை பெற்றவளைப் பாருங்கள். பெண்கள் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளையே சாப்பிட வேண்டுமா?+குருமார்களும் தீர்க்கதரிசிகளும் யெகோவாவின் ஆலயத்தில் கொல்லப்பட வேண்டுமா?+ ש [ஷீன்] 21  சிறுவர்களும் பெரியவர்களும் தெருக்களில் செத்துக் கிடக்கிறார்கள்.+ என்னுடைய வாலிபப் பெண்களும்* வாலிபப் பையன்களும் வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+ உங்களுடைய கோபத்தின் நாளில் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள். கரிசனை காட்டாமல் அவர்களை வெட்டிப்போட்டீர்கள்.+ ת [ட்டா] 22  பண்டிகைக்காக+ ஜனங்களை வரவழைப்பது போல, எல்லா திசைகளிலிருந்தும் நீங்கள் திகிலை வரவழைத்திருக்கிறீர்கள்.யெகோவாவுடைய கோபத்தின் நாளில் யாருமே தப்பிக்கவில்லை, யாருமே பிழைக்கவில்லை.+ நான் பெற்றெடுத்து வளர்த்தவர்களை எதிரி கொன்றுபோட்டான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “மூப்பர்கள்.”
நே.மொ., “ஆச்சரியத்தில் விசில் அடித்து.”
எபிரெய அகரவரிசையில் “பே” என்று எழுத்து “ஆயின்” என்ற எழுத்துக்கு அடுத்ததாக வரும் என்றாலும், இங்கே அதற்கு முன்னதாக வருகிறது.
வே.வா., “கன்னிப் பெண்களும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா