புலம்பல் 4:1-22

א [ஆலெஃப்] 4  ஐயோ! பளபளப்பான சொக்கத்தங்கம் இப்படி மங்கிப்போனதே!+ பரிசுத்த இடத்தின் கற்கள்+ தெரு முனைகளில் இப்படிச் சிதறிக் கிடக்கிறதே!+ ב [பேத்]   சொக்கத்தங்கம் போன்ற சீயோனின் மகன்கள்குயவனின் கைவேலைப்பாடான மண்ஜாடிகளைப் போல ஆகிவிட்டார்களே! ג [கீமெல்]   நரிகள்கூட குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்.ஆனால், என் மகளாக இருக்கும் மக்கள் வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழிகள்+ போலக் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்.+ ד [டாலத்]   பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது. பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+ ה [ஹே]   விதவிதமான உணவு சாப்பிட்டவர்கள் பஞ்சத்தில் அடிபட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்.+ விலை உயர்ந்த துணிமணிகளை உடுத்தி வளர்ந்தவர்கள்+ குப்பைமேட்டில் கிடக்கிறார்கள். ו [வா]   உதவி செய்ய யாரும் இல்லாமல் ஒரே நொடியில் அழிக்கப்பட்ட சோதோமைவிட+என் ஜனங்கள் பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டார்கள்.+ ז [ஸாயின்]   அவர்களுடைய நசரேயர்கள்+ பனியைவிட தூய்மையாகவும் பாலைவிட வெண்மையாகவும் இருந்தார்கள். பவளங்களைவிட சிவப்பாக இருந்தார்கள்; நீலமணிக்கற்களைப் போலப் பளபளப்பாக இருந்தார்கள். ח [ஹேத்]   ஆனால், இப்போது கரியைவிட கறுப்பாகிவிட்டார்கள்.தெருக்களில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. அவர்களுடைய தோல் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது,+ காய்ந்த மரத்தைப் போல ஆகிவிட்டது. ט [டேத்]   பஞ்சத்தில் செத்தவர்களைவிட வாளால் செத்தவர்களே மேல்.+வாளைப் போலப் பசி அவர்களைக் கொன்றுபோட்டது. י [யோத்] 10  என் ஜனங்களுக்கு அழிவு வந்தபோது பாசமான தாய்கள்கூட தங்களுடைய குழந்தைகளை வேக வைத்துத் தின்றார்கள்.+ כ [காஃப்] 11  யெகோவாவின் கோபம் தீ போலப் பற்றியெரிந்தது.அவர் தன்னுடைய கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தார்.+ சீயோனில் நெருப்பு மூட்டினார்; அது அவளுடைய அஸ்திவாரங்களைப் பொசுக்கியது.+ ל [லாமெத்] 12  எதிரிகள் எருசலேமின் நுழைவாசலுக்குள் புகுந்துவிட்டார்கள்.+உலகத்திலுள்ள எந்த ராஜாவும் ஜனமும் இதை எதிர்பார்க்கவே இல்லை. מ [மேம்] 13  தீர்க்கதரிசிகளும் குருமார்களும் செய்த பாவங்களால்தான் இந்தக் கதி!+அவர்கள் நீதிமான்களின் இரத்தத்தை அங்கே சிந்தினார்கள்.+ נ [நூன்] 14  தீர்க்கதரிசிகளும் குருமார்களும் குருடர்களைப் போலத் தெருக்களில் அலைந்து திரிந்தார்கள்.+அவர்களுடைய துணிகளில் இரத்தக் கறை படிந்திருக்கிறது.+ யாரும் அந்தத் துணிகளைத் தொடுவதற்குத் துணிவதில்லை. ס [சாமெக்] 15  அவர்கள் வீடுவாசலைப் பறிகொடுத்துவிட்டு அலைகிறார்கள். ஜனங்கள் அவர்களைப் பார்த்து, “பக்கத்தில் வராதீர்கள்! நீங்கள் தீட்டுப்பட்டவர்கள்!” என்று கத்துகிறார்கள். “போய்விடுங்கள்! போய்விடுங்கள்! எங்களைத் தொடாதீர்கள்!” என்று அலறுகிறார்கள். மற்ற தேசத்து ஜனங்களும், “அவர்கள் நம்மோடு வாழக் கூடாது” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள்.+ פ [பே]* 16  அதோடு, “அவர்களை யெகோவா துரத்திவிட்டார்.+அவர்கள்மேல் இனி கருணை காட்ட மாட்டார். இனி யாரும் இந்தக் குருமார்களையும் பெரியோர்களையும்* மதிக்க மாட்டார்கள்”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ע [ஆயின்] 17  உதவி கிடைக்குமென்று எதிர்பார்த்து எதிர்பார்த்து எங்கள் கண்கள் பூத்துப்போயின.+ எங்களைக் காப்பாற்ற முடியாத தேசத்துக்காகக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்துபோனோம்.+ צ [சாதே] 18  எதிரிகள் எங்களை வேட்டையாடுகிறார்கள்;+ அதனால், பொது சதுக்கங்களில் எங்களால் நடந்துபோக முடியவில்லை. இனி எங்கள் கதி அவ்வளவுதான்! எங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது! எங்களுடைய காலம் முடிந்துவிட்டது! ק [கோஃப்] 19  எதிரிகள் கழுகுகளைவிட வேகமாக எங்கள்மேல் பாய்ந்தார்கள்.+ மலைகளில் எங்களைத் துரத்தினார்கள்; வனாந்தரத்தில் பதுங்கியிருந்து தாக்கினார்கள். ר [ரேஷ்] 20  யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை+ அவர்கள் பிடித்துவிட்டார்கள்; எங்களுக்கு உயிர்மூச்சாக இருந்தவரைப் படுகுழியில் விழ வைத்தார்கள்.+“மற்ற தேசத்தாரின் நடுவே அவருடைய நிழலில் வாழ்வோம்” என்று நாங்கள் நம்பியிருந்தோமே! ש [ஸீன்] 21  ஊத்ஸ் தேசத்தில் வாழ்கிற ஏதோம் மகளே, சந்தோஷமாக ஆடிப் பாடு!+ உன்னிடமும் கிண்ணம் கொடுக்கப்படும்;+ நீ போதை ஏறுமளவுக்குக் குடித்து, ஆபாசமாகக் கிடப்பாய்.+ ת [ட்டா] 22  சீயோன் மகளே, உன்னுடைய தண்டனை முடிந்துவிட்டது. அவர் மறுபடியும் உன்னைச் சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்கு விடமாட்டார்.+ ஆனால் ஏதோம் மகளே, அவர் உன்னுடைய அக்கிரமங்களைக் கணக்கெடுப்பார். உன்னுடைய பாவங்களை அம்பலமாக்குவார்.+

அடிக்குறிப்புகள்

எபிரெய அகரவரிசையில் “பே” என்று எழுத்து “ஆயின்” என்ற எழுத்துக்கு அடுத்ததாக வரும் என்றாலும், இங்கே அதற்கு முன்னதாக வருகிறது.
வே.வா., “மூப்பர்களையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா