மீகா 2:1-13

2  “சூழ்ச்சி செய்கிறவர்களுக்குக் கேடுதான் வரும்.அவர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டே சதித்திட்டம் போடுகிறார்கள். விடிந்ததும் அதைச் செய்து முடிக்கிறார்கள்.நினைத்ததைச் செய்யும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருக்கிறது.+   வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள். அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.   அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் இந்த ஜனங்களை அழிக்க முடிவு செய்திருக்கிறேன்,+ ஒருவராலும் தப்பிக்க முடியாது.+ இனி யாரும் ஆணவத்தோடு நடந்துகொள்ள மாட்டார்கள்,+ ஏனென்றால் அழிவு காலம் வந்துவிட்டது.+   அந்த நாளில், மற்றவர்கள் உங்களுக்காகப் புலம்பல் பாட்டுப் பாடுவார்கள்.உங்கள் கதியைப் பார்த்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.+ “ஐயோ, நாம் அடியோடு அழிந்துபோனோமே!+ அவர் நம்முடைய ஜனத்தின் சொத்தை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டாரே! அதை நம்மிடமிருந்து பறித்துவிட்டாரே!+ அவரை வணங்காத ஆட்களிடம் நம் வயல்களைக் கொடுத்துவிட்டாரே!” என்று சொல்வார்கள்.   நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுப்பதற்கு யெகோவாவின் சபையில் யாரும் இருக்க மாட்டார்கள்.நூல்பிடித்து அளப்பதற்கு ஆளே இருக்க மாட்டார்கள்.   “பிரசங்கிப்பதை நிறுத்துங்கள்!” என்று அவர்கள் சொல்கிறார்கள்.“இந்த விஷயங்களைச் சொல்லிக்கொண்டு திரியக் கூடாது,எங்களுக்கு எந்த அவமானமும் வராது!” என்று சொல்கிறார்கள்.   யாக்கோபின் வம்சத்தாரே, “யெகோவாவுக்கு* பொறுமை இல்லாமல் போய்விட்டதா? அவர் உண்மையிலேயே இப்படியெல்லாம் செய்யப்போகிறாரா?” என்று கேட்கிறீர்களே! நேர்மையாக நடப்பவர்களுக்கு என் வார்த்தைகளால் நன்மை கிடைக்காமல் போகுமா?   சமீப காலமாக, என் ஜனங்களே எனக்கு எதிரியாகிவிட்டார்கள். போரை முடித்துவிட்டுப் பயமில்லாமல் திரும்பி வருகிறவர்களை நீங்கள் தாக்குகிறீர்கள்.அவர்களுடைய அழகான மேலாடையை* பிடுங்கிக்கொள்கிறீர்கள்.   பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து விரட்டுகிறீர்கள்.அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து என்னுடைய ஆசீர்வாதங்களை ஒரேயடியாகப் பறித்துவிடுகிறீர்கள். 10  எழுந்து போங்கள், இது ஓய்வெடுப்பதற்கான* இடம் இல்லை. இங்கே அசுத்தமான காரியங்கள் நடக்கின்றன;+ அதனால், பயங்கரமான அழிவு வரப்போகிறது.+ 11  ஒருவன் வீணான வழியிலும் ஏமாற்று வழியிலும் போய், “திராட்சமதுவையும் மதுபானங்களையும் பற்றி உங்களுக்குப் பிரசங்கிக்கிறேன்” என்று ஜனங்களிடம் பொய் சொன்னால், அவன் இந்த ஜனங்களின் சந்தோஷத்துக்காக மட்டும் பிரசங்கிக்கிறவனாக இருப்பான்!+ 12  யாக்கோபே, உங்கள் எல்லாரையும் நான் கண்டிப்பாகக் கூட்டிச்சேர்ப்பேன்.மீதியிருக்கும் இஸ்ரவேலர்களை நிச்சயம் ஒன்றுசேர்ப்பேன்.+ தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஆடுகளைப் போல அவர்கள் இருப்பார்கள்.+ஏராளமான ஜனங்களால் தேசமே கலகலப்பாக இருக்கும்.’+ 13  தடைகளைத் தகர்க்கிறவர் அவர்களுக்கு முன்னால் போவார்.அவர்கள் தடைகளைத் தகர்த்துவிட்டு வாசல் வழியாக வெளியே போவார்கள்.+ அவர்களுடைய ராஜா அவர்களுக்கு முன்னால் போவார்.யெகோவா அவர்கள் எல்லாரையும் தலைமைதாங்கி நடத்துவார்.”+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “யெகோவாவின் சக்திக்கு.”
அல்லது, “மேலாடைக்கு மேல் இருக்கிற அணிகலனை.”
வே.வா., “நிம்மதியாகக் குடியிருப்பதற்கான.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா