யோசுவா 15:1-63

15  யூதா கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி ஒதுக்கப்பட்ட* பகுதி+ ஏதோமின்+ எல்லை வரைக்கும், அதாவது சீன் வனாந்தரம் வரைக்கும் நெகேபின் தென்முனை வரைக்கும், விரிந்திருந்தது.  அவர்களுடைய தெற்கு எல்லை உப்புக் கடலின்*+ முனையில், அதாவது தெற்கே பார்த்தபடி இருக்கிற விரிகுடாவில், ஆரம்பித்து  தெற்கே அக்கராபீம்+ மேட்டைக் கடந்து, சீனுக்குப் போனது. பின்பு, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்கிலிருந்து மேலே ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதார்வரை போய், கர்க்கா பக்கமாகத் திரும்பியது.  அங்கிருந்து அஸ்மோனுக்குப்+ போய், எகிப்தின் பள்ளத்தாக்குவரை*+ விரிந்திருந்தது. அந்த எல்லை கடலில்* முடிவடைந்தது. இதுதான் அவர்களுடைய தெற்கு எல்லை.  உப்புக் கடல்தான், அதாவது யோர்தானின் முகத்துவாரம்* வரையில் இருக்கிற பகுதிதான், அவர்களுடைய கிழக்கு எல்லை. உப்புக் கடலின் விரிகுடாவில், யோர்தானின் முகத்துவாரத்தில், வடக்கு எல்லை ஆரம்பித்தது.+  அந்த எல்லை பெத்-ஓக்லாவரை+ போய், பெத்-அரபாவுக்கு+ வடக்கு வரையில் போனது. அங்கிருந்து ரூபனின் மகனாகிய போகனுடைய+ கல் வரையில் போனது.  பின்பு, அது ஆகோர் பள்ளத்தாக்கிலுள்ள+ தெபீர்வரை போய் வடக்கே கில்காலுக்குத்+ திரும்பியது. பள்ளத்தாக்கின்* தெற்கிலுள்ள அதும்மீம் மேட்டுக்கு முன்பாகத்தான் கில்கால் இருக்கிறது. பின்பு, அந்த எல்லை என்-சேமேஸ்+ நீரூற்றுகளைக் கடந்து என்-ரொகேலில்+ முடிவடைந்தது.  அங்கிருந்து பென்-இன்னோம்* பள்ளத்தாக்குவரை,+ தெற்கே உள்ள எபூசியர்களின்+ மலைச் சரிவுவரை, அதாவது எருசலேம்வரை,+ அந்த எல்லை போனது. பின்பு, அது இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கே இருக்கிற மலையின் உச்சிவரை போனது. அந்த மலை, ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடமுனையில் இருக்கிறது.  அந்த எல்லை, மலை உச்சியிலிருந்து நெப்தோவா நீரூற்றுவரை+ போய், எப்பெரோன் மலையில் இருக்கிற நகரங்கள்வரை விரிந்திருந்தது. பின்பு பாலா வரையில், அதாவது கீரியாத்-யெயாரீம்+ வரையில், போனது. 10  அது பாலாவிலிருந்து மேற்கே திரும்பி சேயீர் மலைவரை போய், வடக்கே உள்ள யெயாரீம் மலைச் சரிவுவரை, அதாவது கெசலோன்வரை, போனது. பின்பு பெத்-ஷிமேசுக்கு+ இறங்கி திம்னாவுக்குப்+ போனது. 11  அங்கிருந்து அது வடக்கே இருக்கிற எக்ரோனின் சரிவுவரை போய்,+ சிக்ரோனிலிருந்து பாலா மலையைக் கடந்து, யாப்னியேலுக்குப் போய், கடலில் முடிவடைந்தது. 12  பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதிகளும் மேற்கு எல்லையாக இருந்தன.+ யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி நாலாபக்கமும் கிடைத்த எல்லை இதுதான். 13  யெகோவா கட்டளை கொடுத்தபடியே, யூதா வம்சத்தார் மத்தியில் எப்புன்னேயின் மகன் காலேபுக்கு+ யோசுவா ஒரு பங்கு கொடுத்தார். அவருக்கு கீரியாத்-அர்பாவை (அர்பா என்பவன் ஏனாக்கின் தகப்பன்), அதாவது எப்ரோனை, கொடுத்தார்.+ 14  அதனால் ஏனாக்கின்+ மூன்று மகன்களான சேசாய், அகீமான், தல்மாய்+ ஆகியவர்களை அங்கிருந்து காலேப் துரத்தியடித்தார். 15  பின்பு, அவர் தெபீருக்குப் போய் அங்கிருந்த ஜனங்களைத் தாக்கினார்.+ (தெபீர் முற்காலத்தில் கீரியாத்-செப்பேர் என்று அழைக்கப்பட்டது.) 16  அதன்பின் காலேப், “கீரியாத்-செப்பேரைக் கைப்பற்றுகிறவனுக்கு என் மகள் அக்சாளைக் கல்யாணம் செய்து கொடுப்பேன்” என்று சொன்னார். 17  காலேபின் சகோதரனாகிய கேனாசின்+ மகன் ஒத்னியேல்+ அதைக் கைப்பற்றினார். அதனால், அவருக்குத் தன் மகள் அக்சாளை+ காலேப் கல்யாணம் செய்து கொடுத்தார். 18  அவள் தன் கணவனுடைய வீட்டுக்குப் போகும்போது, தன் அப்பாவிடம் ஒரு நிலத்தைக் கேட்டு வாங்கச் சொல்லி தன் கணவனைத் தூண்டினாள். கழுதையிலிருந்து அவள் கீழே இறங்கியபோது* காலேப் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.+ 19  அதற்கு அவள், “தயவுசெய்து எனக்கு ஒரு அன்பளிப்பு கொடுங்கள். தெற்கில்* நீங்கள் எனக்குக் கொடுத்த நிலம் வறண்ட நிலமாக இருக்கிறது. அதனால் நிறைய தண்ணீர் இருக்கிற நிலத்தையும்* கொடுங்கள்” என்று கேட்டாள். அவள் கேட்டபடியே மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் இருக்கிற நீர்வளமுள்ள நிலத்தை அவர் கொடுத்தார். 20  இதுதான் யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்ட நிலங்களின் விவரம். 21  யூதா கோத்திரத்தின் தென்முனையில், ஏதோமின் எல்லையைப்+ பார்த்தபடி இருக்கிற நகரங்கள் இவைதான்: கப்செயேல், ஏதேர், யாகூர், 22  கீனா, திமோனா, அதாதா, 23  கேதேஸ், ஆத்சோர், இத்னான், 24  சீப், தேலெம், பெயாலோத், 25  ஆத்சோர்-அதாத்தா, கீரியோத்-எஸ்ரோன், அதாவது ஆத்சோர், 26  ஆமம், சேமா, மொலாதா,+ 27  ஆத்சார்-காதா, எஸ்மோன், பெத்-பாலேத்,+ 28  ஆத்சார்-சுவால், பெயெர்-செபா,+ பிஸ்யோத்யா, 29  பாலா, ஈயிம், ஆத்சேம், 30  எல்தோலாத், கெசீல், ஓர்மா,+ 31  சிக்லாகு,+ மத்மன்னா, சன்சன்னா, 32  லெபாவோத், சில்லீம், ஆயின் மற்றும் ரிம்மோன்.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 29. 33  சேப்பெல்லாவிலுள்ள+ நகரங்கள் இவைதான்: எஸ்தாவோல், சோரா,+ அஷ்னா, 34  சனோவா, என்-கன்னீம், தப்புவா, ஏனாம், 35  யர்மூத், அதுல்லாம்,+ சோக்கோ, அசெக்கா,+ 36  சாராயிம்,+ அதித்தாயீம், கெதேரா மற்றும் கேதெரொத்தாயீம்.* கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 14. 37  சேனான், அதாஷா, மிக்தால்-காத், 38  திலியான், மிஸ்பே, யோக்தெயேல், 39  லாகீஸ்,+ போஸ்காத், எக்லோன், 40  காபோன், லகமாம், கித்லீஷ், 41  கெதெரோத், பெத்-டாகோன், நாமா மற்றும் மக்கெதா.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 16. 42  லிப்னா,+ ஏத்தேர், ஆசான்,+ 43  இப்தா, அஷ்னா, நெத்சீப், 44  கேகிலா, அக்சீப் மற்றும் மரேஷா. கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 9. 45  எக்ரோன், அதன் சிற்றூர்கள்* மற்றும் கிராமங்கள். 46  எக்ரோனுக்கு மேற்கே அஸ்தோத்தின் பக்கத்தில் இருக்கிற நகரங்கள் மற்றும் கிராமங்கள். 47  அஸ்தோத்,+ அதன் சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள்; காசா,+ அதன் சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள்; எகிப்தின் பள்ளத்தாக்கு, பெருங்கடல் மற்றும் கரையோரப் பகுதி.+ 48  மலைப்பகுதியிலுள்ள நகரங்கள்: சாமீர், யாத்தீர்,+ சோக்கோ, 49  தன்னா, கீரியாத்-சன்னா, அதாவது தெபீர், 50  ஆனாப், எஸ்தெமொ,+ ஆனீம், 51  கோசேன்,+ ஓலோன் மற்றும் கீலோ.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 11. 52  அராப், தூமா, எஷியான், 53  யானூம், பெத்-தப்புவா, ஆப்பெக்கா, 54  உம்தா, கீரியாத்-அர்பா, அதாவது எப்ரோன்,+ மற்றும் சீயோர். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 9. 55  மாகோன்,+ கர்மேல், சீப்,+ யுத்தா, 56  யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோவா, 57  கேயின், கிபியா மற்றும் திம்னா.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 10. 58  அல்கூல், பெத்-சூர், கேதோர், 59  மகாராத், பெத்-ஆனோத் மற்றும் எல்தெகோன். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 6. 60  கீரியாத்-பாகால், அதாவது கீரியாத்-யெயாரீம்,+ மற்றும் ரப்பா. கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 2. 61  வனாந்தரத்திலுள்ள நகரங்கள்: பெத்-அரபா,+ மித்தீன், செக்காக்கா, 62  உப்பு நகரமாகிய நிப்சான் மற்றும் என்-கேதி.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 6. 63  எருசலேமில்+ குடியிருந்த எபூசியர்களை+ யூதா வம்சத்தாரால் விரட்டியடிக்க முடியவில்லை.+ அதனால், எபூசியர்கள் இன்றுவரை யூதா வம்சத்தாரோடு சேர்ந்து எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்ட.”
அதாவது, “சவக் கடலின்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குவரை.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “பெருங்கடலில்; மத்தியதரைக் கடலில்.”
அதாவது, “கடலோடு ஆறு கலக்கும் இடம்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
அர்த்தம், “இன்னோம் மகனின்.”
அதாவது, “மத்தியதரைக் கடலும்.”
அல்லது, “கழுதையின் மேல் இருந்தபடி தன் கைகளைத் தட்டியபோது.”
வே.வா., “நெகேபில்.”
நே.மொ., “குல்லோத்-மாயிமையும்.” இந்தப் பெயரின் அர்த்தம், “தண்ணீர்க் குளங்கள்.”
அல்லது, “கெதேரா மற்றும் அதன் ஆட்டுத் தொழுவங்கள்.”
வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா