யோசுவா 21:1-45

21  லேவியர்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் கானான் தேசத்திலுள்ள சீலோவில்,+ குருவாகிய எலெயாசாரிடமும்+ நூனின் மகனாகிய யோசுவாவிடமும் இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களிடமும் வந்து,  “நாங்கள் குடியிருப்பதற்கு நகரங்களும், எங்கள் மிருகங்களுக்கு மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கச் சொல்லி மோசே மூலம் யெகோவா கட்டளை கொடுத்திருந்தாரே”+ என்று சொன்னார்கள்.  அதனால் யெகோவாவின் கட்டளைப்படி, இஸ்ரவேலர்கள் தங்களுக்குக் கிடைத்த பங்கிலிருந்து லேவியர்களுக்கு நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள்.+  கோகாத்தியர்களின் வம்சத்தாருக்கு+ முதல் குலுக்கல் விழுந்தது. குருவாகிய ஆரோனின் வம்சத்தாராகிய லேவியர்களுக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன. யூதா கோத்திரத்தார், சிமியோன் கோத்திரத்தார், பென்யமீன் கோத்திரத்தார் ஆகியவர்களுடைய பங்கிலிருந்து இவை கொடுக்கப்பட்டன.+  கோகாத்தியர்களின் வம்சத்தாராகிய மற்றவர்களுக்கு 10 நகரங்கள் கொடுக்கப்பட்டன.* எப்பிராயீம் கோத்திரத்தார், தாண் கோத்திரத்தார், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் ஆகியவர்களுடைய குடும்பங்களின் பங்கிலிருந்து இவை கொடுக்கப்பட்டன.+  கெர்சோனியர்களுக்கு+ 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன. இசக்கார் கோத்திரத்தார், ஆசேர் கோத்திரத்தார், நப்தலி கோத்திரத்தார், பாசானிலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் ஆகியவர்களுடைய குடும்பங்களின் பங்கிலிருந்து இவை கொடுக்கப்பட்டன.+  மெராரியர்களின்+ குடும்பங்களுக்கு 12 நகரங்கள் கொடுக்கப்பட்டன. ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், செபுலோன் கோத்திரத்தார் ஆகியவர்களுடைய பங்கிலிருந்து இவை கொடுக்கப்பட்டன.+  மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+  லேவியர்களான கோகாத்தியர்களின் வம்சத்தில் வந்த ஆரோனின் மகன்களுக்கு முதல் குலுக்கல் விழுந்ததால், 10  யூதா கோத்திரத்தாரின் பங்கிலிருந்தும் சிமியோன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்தும் அவர்களுக்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. அந்த நகரங்களுடைய பெயர்களின் பட்டியல் இதுதான்.+ 11  யூதா மலைப்பகுதியிலுள்ள கீரியாத்-அர்பாவும்+ (அர்பா என்பவன் ஏனாக்கின் தகப்பன்), அதாவது எப்ரோனும்,+ அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. 12  ஆனால், அந்த நகரத்தைச் சேர்ந்த காட்டுவெளிகளும் அதன் கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொத்தாகக் கொடுக்கப்பட்டன.+ 13  குருவாகிய ஆரோனின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய+ எப்ரோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், லிப்னாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 14  யாத்தீரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், எஸ்தெமொவாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 15  ஓலோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், தெபீரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 16  ஆயினும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யுத்தாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெத்-ஷிமேசும் அதன் மேய்ச்சல் நிலங்களும். இந்த இரண்டு கோத்திரத்தாரின் பங்கிலிருந்து மொத்தம் ஒன்பது நகரங்கள் கொடுக்கப்பட்டன. 17  பென்யமீன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கிபியோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், கெபாவும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 18  ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அல்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 19  ஆரோனின் வழிவந்த குருமார்களுக்கு 13 நகரங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.+ 20  லேவியர்களான மற்ற கோகாத்தியர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து குலுக்கல் முறையில் நகரங்கள் கொடுக்கப்பட்டன. 21  கொலையாளிக்கு அடைக்கல நகரமாக+ இருந்த சீகேமும்+ எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள அதன் மேய்ச்சல் நிலங்களும், கேசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 22  கிப்சாயீமும் அதன் மேய்ச்சல் நிலங்களும், பெத்-ஓரோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 23  தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: எல்தேக்கேயும் அதன் மேய்ச்சல் நிலங்களும், கிபெத்தோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், 24  ஆயலோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், காத்-ரிம்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 25  மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருடைய பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: தானாக்கும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், காத்-ரிம்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், இரண்டு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 26  கோகாத்தியர்களில் மற்ற குடும்பங்களுக்கு 10 நகரங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. 27  லேவியின் வம்சத்தில் வந்த கெர்சோனியர்களுக்கு+ மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருடைய பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய பாசானிலுள்ள கோலானும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெயேஸ்திராவும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், இரண்டு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 28  இசக்கார் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கிஷியோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், தாபராத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 29  யர்மூத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், என்-கன்னீமும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 30  ஆசேர் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: மிஷயாலும் அதன் மேய்ச்சல் நிலங்களும், அப்தோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், 31  எல்காத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், ரேகோபும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 32  நப்தலி கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய+ கலிலேயாவிலுள்ள கேதேசும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அம்மோத்-தோரும் அதன் மேய்ச்சல் நிலங்களும், கர்தானும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், மூன்று நகரங்கள் கொடுக்கப்பட்டன. 33  கெர்சோனியர்களின் குடும்பங்களுக்கு 13 நகரங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. 34  மற்ற லேவியர்களான மெராரியர்களுக்கு+ செபுலோன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள்+ இவைதான்: யொக்னியாமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், கர்தாவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், 35  திம்னாகுவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், நகலாலும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 36  ரூபன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: பேசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாகாசும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 37  கெதெமோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், மேபாகாத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 38  காத் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய கீலேயாத்திலுள்ள ராமோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 39  எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன. 40  மற்ற லேவியர்களான மெராரியர்களுக்கு மொத்தம் 12 நகரங்கள் கொடுக்கப்பட்டன. 41  இஸ்ரவேலர்களின் பகுதியில் லேவியர்களுக்கு மொத்தம் 48 நகரங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.+ 42  அந்த நகரங்கள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. எல்லா நகரங்களுக்குமே அப்படி மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. 43  இஸ்ரவேலர்களின் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த+ எல்லா தேசத்தையும் யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அங்கே குடியிருந்தார்கள்.+ 44  அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+ 45  இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதிகூட* நிறைவேறாமல் போகவில்லை. அவை எல்லாமே நிறைவேறின.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டன.”
வே.வா., “வார்த்தைகூட.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா