யோனா 3:1-10

3  அதன்பின், யெகோவா இரண்டாவது தடவையாக யோனாவிடம்,+  “நினிவே மாநகரத்துக்குப்+ புறப்பட்டுப் போ. நான் சொல்கிற செய்தியை அங்கே இருக்கிற ஜனங்களுக்குச் சொல்” என்றார்.  யோனாவும் யெகோவாவின் பேச்சுக்குக் கீழ்ப்படிந்து+ நினிவேக்குப்+ போனார். அது மிகப் பெரிய நகரம், அதைச் சுற்றிவருவதற்கு மூன்று நாள் ஆகும்.  யோனா அங்கே போய் ஒருநாள் முழுவதும் நடந்தபடி,* “இன்னும் நாற்பதே நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று எல்லாருக்கும் சொன்னார்.  அதைக் கேட்டதும் நினிவே ஜனங்கள் கடவுள்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+ சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் விரதமிருக்க முடிவுசெய்து, துக்கத் துணியை* போட்டுக்கொண்டார்கள்.  இந்த விஷயம் ராஜாவின் காதுக்கு எட்டியது. உடனே, அவர் சிம்மாசனத்திலிருந்து எழுந்து, ராஜ உடையைக் கழற்றிவிட்டு, துக்கத் துணியைப் போட்டுக்கொண்டார். பின்பு, சாம்பலில் உட்கார்ந்தார்.  அதுமட்டுமல்ல, நினிவே நகரமெங்கும் ஆட்களை அனுப்பி,“ராஜாவும் அவருடைய மந்திரிகளும் கட்டளையிடுவது என்னவென்றால், மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி எதையுமே சாப்பிடக் கூடாது. யாரும் ஆடுமாடுகளுக்குத் தீனி போடக் கூடாது. பச்சைத்தண்ணீர்கூட யார் பல்லிலும் படக் கூடாது.  எல்லாரும் துக்கத் துணியைப் போட்டுக்கொள்ள வேண்டும்; மிருகங்களுக்கும் துக்கத் துணியைப் போர்த்த வேண்டும். எல்லாரும் கடவுளிடம் உருக்கமாக வேண்டிக்கொள்ள வேண்டும். வன்முறையையும் மோசமான வழிகளையும் விட்டுவிட வேண்டும்.  அப்போது, கடவுள் ஒருவேளை அவருடைய முடிவை மாற்றிக்கொள்ளலாம்.* அவருடைய கோபத்தை விட்டுவிட்டு, நமக்கு உயிர்ப்பிச்சை தரலாம்” என்று அறிவிப்பு செய்தார். 10  உடனே ஜனங்கள் தங்களுடைய மோசமான வழிகளைவிட்டுத் திருந்தினார்கள்;+ அதை உண்மைக் கடவுள் பார்த்தார். அதனால், தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு* அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “நடந்த பின்பு.”
வே.வா., “அவர் செய்ய நினைத்ததைப் பற்றி மனம் வருந்தலாம்.”
வே.வா., “அவர் செய்ய நினைத்ததைப் பற்றி மனம் வருந்தி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா