யோபு 22:1-30

22  அதற்கு தேமானியனான எலிப்பாஸ்,+   “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா? ஒருவன் விவேகமாக* இருப்பதால் அவருக்கு என்ன பயன்?+   நீ நீதிமானாக இருப்பதைப் பார்த்து சர்வவல்லமையுள்ளவர் சந்தோஷப்படுகிறாரா?நீ உத்தமமாக இருப்பதால் அவருக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா?+   கடவுள் ஏன் உனக்குக் கஷ்டம் கொடுத்தார் என்று நினைக்கிறாய்?அவருக்குப் பயந்து நடப்பதாலா உனக்குத் தண்டனை கொடுத்தார்?   நீ நிறைய கெட்ட காரியங்கள் செய்ததால்தானே?அளவே இல்லாமல் அக்கிரமங்கள் செய்ததால்தானே?+   உன் சகோதரர்களிடம் அநியாயமாக அடமானம் வாங்கினாய்,ஏழைகளின் துணிமணிகளைப் பிடுங்கிக்கொண்டாய்.+   தவித்த வாய்க்கு நீ தண்ணீர் தரவில்லை.பசித்த வயிறுக்கு சோறு போடவில்லை.+   உன்னைப் போன்ற செல்வாக்குள்ள ஆட்கள் நிலங்களைப் பறித்துக்கொண்டார்கள்.+அப்படிப்பட்டவர்கள்தான் அங்கே குடியிருக்கிறார்கள்.   விதவைகளை நீ வெறுங்கையோடு விரட்டிவிட்டாய்.அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு* அநியாயம் செய்தாய். 10  அதனால்தான் சுற்றிவர ஆபத்துகளில்* சிக்கியிருக்கிறாய்.+எதிர்பாராத சம்பவங்களால் ஆடிப்போயிருக்கிறாய். 11  அதனால்தான் பயங்கரமான இருட்டுக்குள் கண் தெரியாமல் கிடக்கிறாய்.வெள்ளத்தில் தத்தளிக்கிறாய். 12  நட்சத்திரங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதென்று பார். கடவுள் அதைவிட உயரத்தில்தானே இருக்கிறார்? 13  ஆனால் நீ, ‘கடவுளுக்கு என்ன தெரியும்? இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து அவரால் தீர்ப்பு சொல்ல முடியுமா?’ என்று கேட்கிறாய். 14  ‘அவர் வானத்தில்* நடக்கிறார்,மேகங்கள் அவர் கண்களை மறைக்கின்றன’ என்று சொல்கிறாய். 15  முன்பு வாழ்ந்த கெட்டவர்களை நீ பின்பற்றுவாயா?அவர்கள் போன பாதையில் நீயும் போவாயா? 16  வாழ வேண்டிய காலத்தில் அவர்கள் அழிந்துபோனார்களே.வெள்ளம் அடித்துக்கொண்டு போவதுபோல் அடித்துக்கொண்டு போகப்பட்டார்களே.+ 17  அவர்கள் உண்மைக் கடவுளை நினைக்கவே இல்லை. ‘சர்வவல்லமையுள்ளவர் எங்களுக்கு என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்டார்கள். 18  ஆனால், அவர்களுடைய வீட்டை நல்ல பொருள்களால் நிரப்பியது அவர்தான். (அப்படிப்பட்ட கெட்ட எண்ணம் எனக்கு இல்லவே இல்லை.) 19  நீதிமான்கள் அவர்களுடைய அழிவைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள்.நேர்மையானவர்கள் அதைப் பார்த்து சிரிப்பார்கள். 20  ‘நம் எதிரிகள் அழிந்துபோனார்கள்.அவர்கள் விட்டுவிட்டுப் போனதெல்லாம் நெருப்பில் அழிக்கப்படும்’ என்று சொல்வார்கள். 21  கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள், அப்போது நிம்மதியாக இருப்பாய்.நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பாய். 22  அவருடைய சட்டதிட்டங்களை ஏற்றுக்கொள்.அவருடைய வார்த்தைகளை இதயத்தில் வைத்துக்கொள்.+ 23  சர்வவல்லமையுள்ளவரின் பேச்சைக் கேள்; அப்போது பழைய நிலைமைக்கு வந்துவிடுவாய்.+அநியாயம் செய்வதை விட்டுவிடு. 24  நீ சேர்த்து வைத்திருக்கிற தங்கக்கட்டிகளைத் தூக்கியெறி.ஓப்பீரின்* தங்கத்தைப்+ பள்ளத்தாக்கிலே வீசிவிடு. 25  அப்போது, சர்வவல்லமையுள்ளவர் உனக்குத் தங்கக்கட்டிபோல் இருப்பார்.விலைமதிப்புள்ள வெள்ளி போலவும் இருப்பார். 26  சர்வவல்லமையுள்ளவரை வணங்குவதில்* நீ ரொம்பவே சந்தோஷப்படுவாய்.தலைநிமிர்ந்து அவரைப் பார்ப்பாய். 27  அவரிடம் வேண்டிக்கொள்வாய், அவர் அதைக் கேட்பார்.நீ உன்னுடைய நேர்த்திக்கடன்களைச் செலுத்துவாய். 28  நீ நினைப்பதெல்லாம் நடக்கும்.உன் வாழ்க்கை பிரகாசமாகும். 29  அகம்பாவத்துடன் பேசினால் உனக்கு அவமானம்தான் வரும்.தாழ்மையுள்ள ஆட்களைத்தான் அவர் பாதுகாப்பார். 30  அப்பாவிகளை அவர் விடுவிப்பார். உன் கைகள் சுத்தமாக இருந்தால் நிச்சயம் உன்னைக் காப்பாற்றுவார்” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒருவனுக்கு ஆழமான புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “அநாதைகளுக்கு.”
வே.வா., “கண்ணிகளில்.”
நே.மொ., “வானத்தின் வட்டத்தில்.”
ஓப்பீர் என்ற இடம், உயர்தரமான தங்கத்துக்குப் பேர்போனது.
வே.வா., “சர்வவல்லமையுள்ளவரில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா