யோபு 25:1-6

25  அதற்கு சுவாகியனான பில்தாத்,+   “கடவுளிடம் அரசாட்சியும் மகா சக்தியும் இருக்கிறது.அவர் பரலோகத்தில் சமாதானத்தை ஏற்படுத்துகிறார்.   அவருடைய படைகளை எண்ண முடியுமா? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?   அப்பேர்ப்பட்ட கடவுளுக்குமுன் அற்ப மனுஷன் நீதிமானாக இருக்க முடியுமா?+பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் குற்றமற்றவனாக* இருக்க முடியுமா?+   அவருடைய கண்களுக்கு நிலவுகூட பிரகாசமாக இல்லை.நட்சத்திரங்களும் தூய்மையாக இல்லை.   அப்படியிருக்கும்போது, சாதாரண மனுஷன் எந்த மூலைக்கு!அவன் அவருக்குமுன் ஒரு சின்ன புழுவைப் போலத்தானே இருக்கிறான்!” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சுத்தமானவனாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா