யோபு 25:1-6
25 அதற்கு சுவாகியனான பில்தாத்,+
2 “கடவுளிடம் அரசாட்சியும் மகா சக்தியும் இருக்கிறது.அவர் பரலோகத்தில் சமாதானத்தை ஏற்படுத்துகிறார்.
3 அவருடைய படைகளை எண்ண முடியுமா?
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4 அப்பேர்ப்பட்ட கடவுளுக்குமுன் அற்ப மனுஷன் நீதிமானாக இருக்க முடியுமா?+பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் குற்றமற்றவனாக* இருக்க முடியுமா?+
5 அவருடைய கண்களுக்கு நிலவுகூட பிரகாசமாக இல்லை.நட்சத்திரங்களும் தூய்மையாக இல்லை.
6 அப்படியிருக்கும்போது, சாதாரண மனுஷன் எந்த மூலைக்கு!அவன் அவருக்குமுன் ஒரு சின்ன புழுவைப் போலத்தானே இருக்கிறான்!” என்று சொன்னான்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “சுத்தமானவனாக.”