யோபு 39:1-30
39 பின்பு அவர்,
“வரையாடுகள் எப்போது குட்டிபோடும் என்று உனக்குத் தெரியுமா?+
மான்கள் குட்டிபோடுவதை நீ பார்த்திருக்கிறாயா?+
2 அவை எத்தனை மாதங்கள் குட்டிகளைச் சுமக்கும் என்று தெரியுமா?
எப்போது குட்டிபோடும் என்று தெரியுமா?
3 அவை குனிந்து, கால்களை மடக்கி, குட்டிகளைப் போடுகின்றன.பின்பு வலியை மறந்துவிடுகின்றன.
4 அந்தக் குட்டிகள் வெட்டவெளியில் வளர்ந்து, புஷ்டியாகின்றன.தாயைவிட்டுப் பிரிந்து போகின்றன, திரும்பி வருவதே இல்லை.
5 காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டது யார்?+அதன் கயிறுகளை அவிழ்த்துவிட்டது யார்?
6 நான்தான் பாலைநிலத்தை அதற்கு வீடாகக் கொடுத்தேன்.உப்புநிலத்தில் அதைத் தங்க வைத்தேன்.
7 நகரத்தின் சந்தடியை அது வெறுக்கிறது.மனுஷன் அதட்டுவதைக் காதில் வாங்க மறுக்கிறது.
8 மேய்ச்சலுக்காக மலைகளில் திரிகிறது.எல்லா விதமான புல்பூண்டுகளையும் தேடுகிறது.
9 காட்டு எருது உனக்கு வேலை செய்யுமா?+
ராத்திரியில் அது உன்னுடைய தொழுவத்தில் தங்குமா?
10 அதைக் கயிற்றால் கட்டி உழுவதற்காகக் கொண்டுபோக உன்னால் முடியுமா?பள்ளத்தாக்கை உழுவதற்காக* அது உன் பின்னால் வருமா?
11 அதற்கு இருக்கும் அபார பலத்தை நம்பி,கடினமான வேலைகளை அதற்குக் கொடுப்பாயா?
12 நீ அறுவடை செய்ததை அது சுமந்துவரும் என்று எதிர்பார்ப்பாயா?களத்துமேட்டுக்கு அவற்றை எடுத்துக்கொண்டு வரும் என்று காத்திருப்பாயா?
13 நெருப்புக்கோழி சந்தோஷமாகச் சிறகுகளை அடிக்கிறது.ஆனால், நாரையின் சிறகுகளோடும் இறகுகளோடும் அவற்றை ஒப்பிட முடியுமா?+
14 நெருப்புக்கோழி மண்ணைத் தோண்டி முட்டையிடுகிறது.அங்கே அடைகாக்கிறது.
15 மனுஷனின் கால்பட்டு அது உடைந்துபோகுமே என்று கவலைப்படுவதில்லை.மிருகங்களால் மிதிபட்டு நொறுங்குமே என்றும் நினைப்பதில்லை.
16 இரக்கமே இல்லாமல் குஞ்சுகளை விட்டுவிட்டுப் போய்விடுகிறது.அவை தன் குஞ்சுகள் என்பதையே மறந்துவிடுகிறது;+முட்டை போட்டதும் அடைகாத்ததும் வீணாகிவிடுமே என்று அது கவலைப்படுவது இல்லை.
17 கடவுள் அதற்கு ஞானம் கொடுக்கவில்லை.புத்தியை* தரவில்லை.
18 ஆனால் அது எழுந்து, சிறகுகளை அடித்துக்கொண்டு ஓடும்போது,குதிரையையும் குதிரைவீரனையும் பார்த்து சிரிக்கிறது.
19 அந்தக் குதிரைக்கு நீயா பலம் கொடுத்தாய்?+
அதன் கழுத்தில் நீயா பிடரிமயிரை வளர வைத்தாய்?
20 அதை வெட்டுக்கிளிபோல் துள்ள வைக்க உன்னால் முடியுமா?
அதனுடைய கம்பீரமான சத்தம் நடுநடுங்க வைக்கிறது.+
21 அது மண்ணைக் கிளறிக்கொண்டு, எகிறித் துள்ளி ஓடுகிறது.+போர்க்களத்துக்கு வெறித்தனமாக ஓடுகிறது.+
22 பயம் என்றாலே அது அலட்சியமாகச் சிரிக்கிறது; எதற்குமே பயப்படுவது இல்லை.+
வாளைப் பார்த்துக்கூட பின்வாங்குவது இல்லை.
23 அது ஓடும் வேகத்தில் வீரனின் அம்புகள் கலகலக்கின்றன.அவனுடைய ஈட்டிகள் பளபளக்கின்றன.
24 அது துள்ளிக்கொண்டு, வெறித்தனமாகத் தாவி ஓடுகிறது.ஊதுகொம்பை ஊதிவிட்டால் அதை யாரும் பிடித்து நிறுத்த முடியாது.*
25 ஊதுகொம்பின் சத்தம் கேட்டதும், சந்தோஷத்தில் கனைக்கிறது.தூரத்திலிருந்தே போரை மோப்பம் பிடிக்கிறது.
படைத் தளபதிகள் கட்டளையிடும் சத்தத்தையும் போர் முழக்கத்தையும் கேட்கிறது.+
26 உன்னுடைய புத்தியால்தான்* வல்லூறு மேலே எழும்பி,தெற்கே சிறகுகளை விரித்துப் பறக்கிறதா?
27 நீ கட்டளை கொடுத்ததால்தான் கழுகு மேலே பறக்கிறதா?+நீ சொன்னதால்தான் அது உயரத்தில் கூடு கட்டுகிறதா?+
28 அல்லது, பாறை உச்சியில் இரவைக் கழிக்கிறதா?மலைமேல் இருக்கிற அதன் கோட்டையில் தங்குகிறதா?
29 அவ்வளவு தூரத்திலிருந்து அது இரை தேடுகிறது.+அவ்வளவு தொலைவிலிருந்து அதன் கண்கள் நோட்டமிடுகின்றன.
30 அதன் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்.பிணம் எங்கேயோ அங்கே அது இருக்கும்”+ என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “உழுது சமப்படுத்துவதற்காக.”
^ வே.வா., “புரிந்துகொள்ளும் திறனை.”
^ அல்லது, “ஊதுகொம்பின் சத்தத்தை அது நம்புவதில்லை.”
^ வே.வா., “புரிந்துகொள்ளும் திறனால்தான்.”