யோவேல் 2:1-32

2  “சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+ என் பரிசுத்த மலையில் போர் முழக்கம் செய்யுங்கள். தேசத்து ஜனங்கள்* எல்லாரும் நடுங்கட்டும்.யெகோவாவின் நாள் வருகிறது!+ அது நெருங்கிவிட்டது!   அந்த நாள் வெளிச்சமே இல்லாத நாள்.+கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+மலைமேல் படரும் விடியற்கால வெளிச்சத்தைப் போல மங்கலாக இருக்கும் நாள். பலம்படைத்த வெட்டுக்கிளிகளின்* கூட்டம் வருகிறது.+அதைப் போன்ற ஒரு கூட்டம் இதற்குமுன் வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.எத்தனை தலைமுறை வந்தாலும் வரப்போவதில்லை.   அதன் முன்னால் இருப்பதையெல்லாம் நெருப்பு பொசுக்கும்.அதன் பின்னால் இருப்பதையெல்லாம் தீ ஜுவாலை எரிக்கும்.+ அது வருவதற்குமுன் தேசமெல்லாம் ஏதேன் தோட்டம்+ போல இருக்கும்.வந்த பின்போ பொட்டல் காடாக மாறிவிடும்.எதுவுமே தப்பாது.   அவை பார்ப்பதற்குக் குதிரைகள்போல் இருக்கும்.போர்க்குதிரைகள்போல் ஓடும்.+   அவை மலைகள்மேல் துள்ளிவருகிற சத்தம் ரதங்களின் சத்தம் போலவும்,+வைக்கோல் பற்றியெரிகிற சத்தம் போலவும், போருக்கு அணிவகுத்துச் செல்கிற வீரர்களின் சத்தம் போலவும் இருக்கும்.+   அவற்றால் ஜனங்கள் கதிகலங்கிப்போவார்கள். எல்லாருடைய முகமும் வெளுத்துப்போகும்.   அவை படைவீரர்கள் போலப் பாயும்.ராணுவ வீரர்கள் போல மதிலைத் தாண்டும்.ஒவ்வொன்றும் அதனதன் வரிசையில் போகும்.பாதை மாறாமல் போகும்.   ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல் போகும்.ஒவ்வொன்றும் முன்னேறிக்கொண்டே போகும். அவற்றில் சில, ஆயுதங்களுக்குப் பலியாகும்.ஆனாலும், மற்றவை தளராமல் செல்லும்.   அவை நகரத்துக்குள் பாயும், மதில்மேல் ஓடும். வீடுகள்மேல் ஏறும், திருடனைப் போல ஜன்னல்கள் வழியாக நுழையும். 10  அவற்றைப் பார்த்து தேசம் நடுங்கும், வானம் அதிரும், சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்,+நட்சத்திரங்கள் ஒளி இழந்துவிடும். 11  யெகோவாவின் படை மாபெரும் படை,+ அதன் முன்னால் அவர் முழங்குவார்.+ அவர் சொன்னதை நிறைவேற்றுகிறவர் பலம்படைத்தவர்.யெகோவாவின் மகா நாள் படுபயங்கரமானது.+ யாரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும்?”+ 12  யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள். 13  உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.*ஏனென்றால், அவர் கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ 14  ஒருவேளை அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு,*+உங்களுக்கு ஆசீர்வாதங்களைத் தரலாம்.பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக் கொண்டுவரலாம். 15  சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்! விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு+ அழைப்பு கொடுங்கள். 16  ஜனங்களை ஒன்றுகூட்டுங்கள்; சபையைப் புனிதப்படுத்துங்கள்.+ பெரியோர்களை அழையுங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்.+ மணமகன் உள்ளறையிலிருந்து புறப்பட்டு வரட்டும், மணமகளும் தன் அறையிலிருந்து வெளியே வரட்டும். 17  யெகோவாவின் ஊழியர்களான குருமார்கள், ஆலய வாசலுக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் நிற்கட்டும்.+அழுதுகொண்டே இப்படிச் சொல்லட்டும்: ‘யெகோவாவே, உங்கள் ஜனங்கள்மேல் தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள்.அவர்கள் உங்களுடைய சொத்து, மற்றவர்கள் பார்த்து சிரிக்குமளவுக்கு விட்டுவிடாதீர்கள்.மற்ற தேசங்கள் அவர்களை அடக்கி ஆள அனுமதிக்காதீர்கள். “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?”+ என்று யாரும் கேட்டுவிடக் கூடாதே.’ 18  யெகோவா அவருடைய தேசத்துக்கு உதவி செய்ய வைராக்கியமாக இருப்பார்.அவருடைய ஜனங்கள்மேல் கரிசனை காட்டுவார்.+ 19  யெகோவா அவருடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்வார்: ‘நான் தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் தருவேன்.அதைச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+மற்றவர்கள் உங்களைப் பழித்துப் பேசுவதற்கு இனி நான் விடமாட்டேன்.+ 20  வடதிசைப் படையை உங்களைவிட்டுத் தூரமாக விரட்டியடிப்பேன்.வறண்ட வனாந்தரத்துக்கு அதைத் துரத்துவேன்.அதன் முன்னணியைக் கிழக்குக் கடல்* பக்கமாகத் துரத்துவேன்.அதன் பின்னணியை மேற்குக் கடல்* பக்கமாகத் துரத்துவேன். அதனிடமிருந்து கெட்ட வாடை வீசும்.துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.+ஏனென்றால், கடவுள் பெரிய காரியங்களைச் செய்வார்.’ 21  தேசமே, பயப்படாதே! யெகோவா பெரிய காரியங்களைச் செய்யப்போவதால் சந்தோஷப்படு. 22  காட்டு மிருகங்களே, கவலைப்பட வேண்டாம்!வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் பச்சைப்பசேலென்று மாறும்.+மரங்கள் காய்த்துக் குலுங்கும்.+அத்தி மரமும் திராட்சைக் கொடியும் அமோக விளைச்சல் தரும்.+ 23  சீயோன் ஜனங்களே, சந்தோஷப்படுங்கள்; உங்கள் கடவுளாகிய யெகோவாவை நினைத்து ஆனந்தப்படுங்கள்.+அவர் பயிர்களுக்குத் தேவையான முதல் பருவ மழையைத் தருவார்.நன்றாக மழை பெய்யும்படி செய்வார்.முன்பு போலவே முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருவார்.+ 24  களத்துமேடுகளில் தானியம் நிரம்பி வழியும்.ஆலைகளில் புதிய திராட்சமதுவும் எண்ணெயும் வழிந்தோடும்.+ 25  முன்பு என்னுடைய பெரிய வெட்டுக்கிளிப் படையை அனுப்பினேன்.+நான்கு வகையான வெட்டுக்கிளிகள்* வந்து எல்லாவற்றையும் தின்றுதீர்த்தன.அத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன். 26  நீங்கள் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்.+உங்களுக்காக அற்புதங்கள் செய்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்வீர்கள்.+என்னுடைய ஜனங்கள் இனி ஒருபோதும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள்.+ 27  நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறேன்+ என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.நான்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா,+ வேறு யாரும் இல்லை. என்னுடைய ஜனங்கள் இனி ஒருபோதும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள். 28  அதற்குப் பின்பு, பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்.+உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள்.+ 29  அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும்என் சக்தியைப் பொழிவேன். 30  வானத்திலும் பூமியிலும் அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகைக் காடாகவும் இருக்கும்.+ 31  யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள்+ வருவதற்குமுன்சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும்.+ 32  யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.+அவர்கள் யெகோவா சொன்னபடியே சீயோன் மலையிலும் எருசலேமிலும் இருப்பார்கள்.+அவர்கள் யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்கள்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “பூமியில் வாழ்கிறவர்கள்.”
நே.மொ., “ஒரு ஜனத்தின்.”
வே.வா., “உங்களுக்குத் தண்டனை கொடுக்க நினைத்ததைக் குறித்து மனம் வருந்துவார்.”
வே.வா., “கனிவும்.”
வே.வா., “அவர் மனம் வருந்தி.”
அதாவது, “சவக் கடல்.”
அதாவது, “மத்தியதரைக் கடல்.”
நே.மொ., “கூட்டம்கூட்டமான வெட்டுக்கிளிகளும், சிறகில்லாத வெட்டுக்கிளிகளும், அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளும், கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளிகளும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா