யோவேல் 3:1-21
3 “அந்த நாட்களில், சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களுக்கு விடுதலை தருவேன்.அவர்களை யூதாவுக்கும் எருசலேமுக்கும் மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
2 அப்போது, எல்லா தேசத்து ஜனங்களையும் ஒன்றுகூட்டுவேன்.யோசபாத்தின்* பள்ளத்தாக்குக்குக் கொண்டுவருவேன்.
அங்கே அவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன்.+என் சொத்தாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன்.
ஏனென்றால், என் ஜனங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்தியடித்தார்கள்.என் தேசத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.+
3 என் ஜனங்களுக்காகக் குலுக்கல் போட்டார்கள்.+விபச்சாரிக்குக் கூலி கொடுப்பதற்காகச் சிறுவனை விற்றார்கள்.திராட்சமதுவை வாங்கிக் குடிப்பதற்காகச் சிறுமியை விற்றார்கள்.
4 தீரு, சீதோன், பெலிஸ்தியா பகுதிகளில் வாழ்கிறவர்களே,என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நடந்துகொள்வீர்கள்?
என்னைப் பழிவாங்க நினைக்கிறீர்களோ?
நீங்கள் என்னைப் பழிவாங்க நினைத்தால்,நான் சீக்கிரமாகவும் வேகமாகவும் வந்து உங்களைப் பழிவாங்குவேன்.+
5 என்னுடைய வெள்ளியையும் தங்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்.+என்னுடைய விலைமதிப்புள்ள பொருள்களை உங்கள் கோயில்களுக்குக் கொண்டுபோனீர்கள்.
6 யூதா ஜனங்களையும் எருசலேம் ஜனங்களையும் கிரேக்கர்களிடம் விற்றீர்கள்.+தேசத்தைவிட்டு ரொம்பத் தூரத்துக்குத் துரத்தியடித்தீர்கள்.
7 நீங்கள் விற்றுப்போட்ட இடத்திலிருந்து அவர்களை வரவழைப்பேன்.+என்னைப் பழிவாங்க நினைத்த உங்களை நான் பழிவாங்குவேன்.
8 உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா ஜனங்களிடம் விற்றுவிடுவேன்.+அவர்கள் உங்கள் பிள்ளைகளைத் தொலைதூரத்திலுள்ள சேபா தேசத்தாரிடம் விற்றுவிடுவார்கள்.யெகோவாவாகிய நான் இதைச் சொல்கிறேன்.
9 எல்லா தேசங்களிலும் இதை அறிவியுங்கள்:+
‘போருக்குத் தயாராகுங்கள்!* மாவீரர்களே, கிளம்புங்கள்!
படைகளே, ஒன்றாக அணிவகுத்து வாருங்கள்!+
10 மண்வெட்டிகளை வாள்களாகவும், அரிவாள்களை ஈட்டிகளாகவும் மாற்றுங்கள்.
பலவீனமானவன், “நான் பலசாலி” என்று சொல்லட்டும்.
11 அக்கம்பக்கத்திலுள்ள தேசங்களே, ஒன்றுகூடி வந்து+ உதவுங்கள்!’”
யெகோவாவே, உங்கள் மாவீரர்களை அங்கே அனுப்புங்கள்.
12 “தேசங்களே, யோசபாத்தின் பள்ளத்தாக்குக்குச் சீக்கிரமாக வாருங்கள்.நான் அங்கே உட்கார்ந்து, சுற்றியுள்ள எல்லா தேசங்களுக்கும் தீர்ப்பு கொடுப்பேன்.+
13 பயிர் முற்றிவிட்டது, அரிவாளை எடுத்து அறுங்கள்.
ஆலையில் திராட்சைப் பழம் கொட்டிக்கிடக்கிறது, வந்து மிதியுங்கள்.+
திராட்சரசத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன; ஏனென்றால், தேசங்களின் அக்கிரமங்கள் பெருகிவிட்டன.
14 யெகோவா தீர்ப்பு கொடுக்கப்போகும் பள்ளத்தாக்கில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருக்கிறார்கள்.அவருடைய நாள் நெருங்கிவிட்டது.+
15 அப்போது, சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்.நட்சத்திரங்கள் ஒளி இழந்துவிடும்.
16 சீயோனிலிருந்து யெகோவா கர்ஜிப்பார்.எருசலேமிலிருந்து சத்தமிடுவார்.
வானமும் பூமியும் அதிரும்.யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு அடைக்கலமாக இருப்பார்.+இஸ்ரவேல் ஜனங்களைக் கோட்டைபோல் பாதுகாப்பார்.
17 உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள்.
பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+
அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+
18 அந்த நாளில் மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+குன்றுகளில் பால் வழிந்தோடும்.யூதாவின் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும்.
யெகோவாவின் வீட்டிலிருந்து நீரூற்று புறப்படும்.+சித்தீம்* பள்ளத்தாக்கில்* அது பாய்ந்தோடும்.
19 எகிப்து பாழ்நிலமாகும்.+ஏதோம் வெறுமையான வனாந்தரமாகும்.+ஏனென்றால், அவை யூதாவிலுள்ள ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.+அப்பாவிகளைக் கொன்று குவித்தன.+
20 ஆனால், யூதாவில் ஜனங்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.எருசலேமில் தலைமுறை தலைமுறையாக வாழ்வார்கள்.+
21 அவர்கள்மேல் இருக்கும் கொலைப்பழியை* நான் நீக்குவேன்.+யெகோவா சீயோனில் குடியிருப்பார்.”+
அடிக்குறிப்புகள்
^ இந்தப் பெயரின் அர்த்தம், “யெகோவாவே நீதிபதி.”
^ நே.மொ., “போரைப் புனிதப்படுத்துங்கள்.”
^ அர்த்தம், “வேல மரங்கள்.”
^ அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”
^ வே.வா., “இரத்தப்பழியை.”